தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 11-11-2022

யோவான் 3 : 30 ” அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். ” 

இந்த வசனம் ,  தாழ்மையான  திருமுழுக்கு யோவானால் பேசப்பட்ட சில வல்லமையான வார்த்தைகள்.தன்னை  அல்ல , இயேசுவை பின்பற்றுமாறு மற்றவர்களிடம் சொல்லும்படி அவர் கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டார் என்பதை அவர் அறிந்திருந்தார். அதைச்செய்வதற்காக , தன்னை பணியாளராக தாழ்த்தி, மற்றவர்களிடம் இயேசுவை பின்பற்ற சொன்னார். மாறாக தன்னுடைய சொந்த ஊழியத்திற்காக அல்ல. கிறிஸ்துவை பின்பற்றுபவர்களுக்கும், தலைவர்களுக்கும் இதுவே உண்மை. எதிரி எப்போதுமே நம்முடைய கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வான். மற்றவர்கள் நம்மை கேலி செய்யலாம். நம்மை  வேடிக்கையாக்கலாம். பயப்பட வேண்டாம்.

2 திமோத்தேயு 1 : 7  ” தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல் , பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்துள்ளார்.

யோவான் கர்த்தருக்கு முன்னோடியான தீர்க்கத்தரிசியாக இருந்தார். தூய. யோவானுடைய நற்செய்தியில் ,  ” இயேசு என்னும் ஒளியைப் பற்றி சாட்சியமளிக்க  சாட்சியாக அவர் வந்தார்.ஏனென்றால் எல்லாரும் ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து ஏற்று கொள்ள வேண்டும் என்பதற்காக

எசாயா 40 : 3 ” கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் , அவாந்தர வெளியிலே நம்முடைய தேவனுக்கு பாதையை செவ்வைபண்ணுங்கள் “

யோவான் 1 : 23  ” அதற்கு அவன் , கர்த்தருக்கு வழியைச் செவ்வை பண்ணுங்கள் என்று எசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே , நான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.”

யோவான் இயேசுவை, அபிஷேகம் செய்யப்பட்ட மெசியாவாக , பிதாவாகிய தந்தைக்கு இணையாக  அவரை அடையாளம் காட்டினார்.

யோவான் 1 : 29 ” மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வரக்கண்டு, இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி  என்றார். இரண்டாவது முறையாக யோவான் 1 : 36 ல் இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றார். திருமுழுக்கு யோவான் மேலும் இயேசுவினுடைய பாத ரட்சையை அவிழ்ப்பதற்குக் கூட நான் தகுதியற்றவன் என்று சொன்னார். யோவான்  மக்களுக்கு தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தால் இயேசு பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுப்பார் என்பது அவருக்குத் தெரியும். நமது சொந்த திறமைகளும் ஞானமும் குறைந்த அளவே நம் வாழ்வில் பங்கெடுக்க அனுமதிக்க வேண்டும். கர்த்தருடைய ஞானமும் கிருபையும் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்த நாம் அனுமதிக்க வேண்டும். யோவான் தன்னுடைய தலைமைத்துவத்தை இயேசுவுக்கு அர்ப்பணித்தார். நாமும் நம்முடைய வாழ்க்கையின்  தலைமைத்துவத்தையும் செல்வாக்கினையும் இயேசுவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவின் மீதான விசுவாசத்தோடு நாம் வளரும்போது  நாம்  உலக வழிகளிலிருந்து நம்மை வெறுமையாக்கலாம். ஒவ்வொரு நிலையிலும் கிறிஸ்துவுக்குள்  வளர்வதை நாம் தொடர வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் கண்டிப்பாக நாம் சிறுகவும் இயேசு பெருகவும்  வேண்டும். அவருடைய வார்த்தைகளும் தன்மையும், நம்முடைய   எண்ணங்கள் சொற்கள் செயல்கள் எல்வாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இயேசு நம்முடைய வாழ்க்கையில் செய்த அற்புதங்களை பார்த்து அவர்மீது நாம் வைத்துள்ள விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பை அதிகரிக்க வேண்டும். விசுவாசத்தில் முதிர்ச்சி அடையும் போது, பவுல் அறிக்கையிடுவதைப் போல வாழ்வது நானல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார் என்று நாமும்  அறிக்கையிட வேண்டும்.

கலாத்தியர் 2 : 20  “கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன். ஆயினும் நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ ,என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

நம்முடைய சொந்த பலன் சிறுகும். ஆனால் நம்முள் செயல்படும்  இயேசுவுடைய வலிமையும் சக்தியும் பெருகும். களிமண் பாத்திரங்களாய் இருந்த நம்மை மரியாதைக்குரிய பாத்திரங்களாய் , மீட்டதற்குரிய புகழுக்கும் மகிமைக்கும் தகுதியானவர் அவரே. நம்முடைய விசுவாசம் வளர்வதால் பயங்கள் மறையும்.  நாம் தாழ்த்தும்போது அவர் இல்லாமல் நாம் ஒன்றுமே இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

பிலிப்பியர் 4 : 13 ” என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலனுண்டு. ” பரிசுத்த ஆவியின் கனிகள் நம்மில்  பெருகும் போது , நாம் சிறுகி அவர் நம்மில் பெருகுவார். நம்முடைய பெருமை, ஆணவம் , மன்னியாமை, தற்பெருமை  ஆகியவை குறைக்கப்பட்டு   கிறிஸ்துவுக்கான வார்த்தையும் செயலும் பெருகும்.

ஜெபம்.

பரலோகத் தந்தையே, திருமுழுக்கு யோவானின் சாட்சிக்கும் , முன்மாதிரியான அவருடைய  பணிவுக்கும் கருணைக்கும் நன்றி. என் வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் உமக்கு முன்பாக பணிவுடன் நடக்கவும் ,  இயேசுவே இந்த உலகின் மீட்பர்  என்று சாட்சி சொல்ல தயாராக இருக்கவும், அவர் கண்டிப்பாக பெருகவும் நான் கண்டிப்பாக  சிறுகவும்   இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. ஜிஜி ஜேக்கப்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 09-11-2022

கிருபை வரங்கள்

நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே ரோமர் 12:6

இங்கே அப்போஸ்தலன் பவுல் ரோமர் 12-6-8 இல் அவருடைய கிருபையின்படி நமக்கு வழங்கப்பட்ட வரங்களை பற்றி பேசுகிறார். இந்த வரங்கள் 1 கொரி 12ல் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் வரங்களுக்கு வித்தியாசமானவை. இவை அனைத்தும் அவருடைய சித்தத்தின்படி வாழவும் கடவுளை மகிமைப்படுத்தவும் தனித்தனியாக கொடுக்கப்பட்ட தனித்துவமான வரங்கள்.

ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன். ரோமர் 12:7-8

நான் என் வீட்டிற்கு அருகிலுள்ள ஓவியம் சம்பந்தமான கடைக்கு  சென்றேன். அங்கு நிறைய வரைவதற்கு கருவிகள் இருந்தன. நான் அங்கு இருந்தபோது, ​​தற்போதைய காலங்களில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி வரைந்து, அதனுடன் தொடர்புடைய பைபிள் வசனத்தைச் சேர்க்கும் ஒரு போதகரை கடவுள் எனக்கு நினைவுபடுத்தினார். “1000 வார்த்தைகளை விட ஒரு படம் சக்தி வாய்ந்தது” என்பது பழமொழி. இந்தியாவில் உள்ள ஒரு கார்ட்டூனிஸ்ட் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வரைந்தார். அவர் தனது வரைபடத்தின் மூலம் மக்களிடையே ஒரு பெரிய சிந்தனையையும் விழிப்புணர்வையும் தூண்டினார். அதன் பிறகு உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார், மேலும் அவர்  இனி வரைவதையும்  தடுத்து நிறுத்தினார். அவர் வரைந்தவை மக்களை சென்றடைந்ததால் அவர் நிறுத்தப்பட்டார். ஒரு ஓவியம் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் போதகர் வரைந்த வல்லமையும் ஜீவனும் கொண்ட  கொண்ட ஓவியம் அநேகரை உயிரூட்டியது. இது அவருக்கு கொடுக்கப்பட்ட கிருபை வரம் (ஓவியம் வரைதல்)அதை அவர் ஆண்டவரின்  மகிமைக்காக பயன்படுத்துகிறார்.

முகநூலில் ஒரு பதிவு முன்பு படித்தேன். இங்கிலாந்தில் போதைக்கு அடிமையான ஒரு தம்பதியினர் இருந்தனர். போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதால் அவர்களுக்குப் பிறந்த குழந்தை பார்வை இல்லாமல் பிறந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, போதைப் பழக்கத்தால் பெற்றோர் இறந்துவிட்டனர். மறைந்த தாயின் இளைய சகோதரி குழந்தையை அழைத்துச் சென்றார். குழந்தை அவர்களுடன் வளர்ந்தது. அவர்கள் நல்ல விசுவாசிகள்  மற்றும் அவர்கள் குழந்தையை மிகவும் நேசித்தார்கள். அவர்கள் அந்த குழந்தைக்கு இசையையும் பாடவும் கற்று கொடுத்தார்கள் . அன்பும் அக்கறையும் அந்த குழந்தையை தொட்டது. அவர்கள் குழந்தையை இரட்சிப்பிற்குள்  வழிநடத்தினர். அந்த குழந்தை  வளரும்போது பார்வையற்றவராக இருப்பதால், கிறிஸ்துவின் அன்பை பலருக்குப் பகிர்ந்து கொள்ள மக்களை அணுக முடியவில்லை என்றும் தனது  பெற்றோரை போல் யாரும் தங்கள் வாழ்க்கையை இழந்து விட கூடாது என்ற கவலை அந்த குழந்தைக்கு இருந்தது. தனது பார்வை இல்லாமையை வாழ்க்கையில் ஒரு பெரிய தடையாக உணர்ந்து அதை பற்றி எப்போதும் கவலை பட்டது. ஒரு நாள் அவருடைய  ஜெபத்தின் போது கர்த்தர் உன்னிடம் இல்லாததை பற்றி ஏன் கவலை படுகிறாய். என்னை வெளிப்படுத்த உன்னிடம் ஒரு கிருபையை கொடுத்து இருக்கிறேன் (பாடல் பாடுவது). இதைக் கேட்டதும் விழித்து கொண்டு கர்த்தருக்காக  பாடத் தொடங்கினார். அவருடைய பாடலும் அவருடைய சாட்சியமும் பலரைச் சென்றடைந்தது. மேலும் அவர் பல இளம் வாலிபர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார்.

ரோமர் 12:8-ல் வேதம் கூறுகிறது, ” இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.

“. அன்னை தெரசா மற்றவர்களுக்கு உதவவும் அன்பு செய்யவும்  இந்த வரத்தை பெற்றிருந்தார். அவர் சுவிஷேசத்தை பிரசங்கிக்கவில்லை, ஆனால் கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிக்கும் ஒரு முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார். விசுவாசிகள் அல்லாதவர்களும் கிறிஸ்துவின் அன்பை அறிந்து கொள்ள செய்தது மட்டும் அல்லாமல் நம்மையும் அப்படி பட்ட அன்பை வெளிப்படுத்தும் மாதிரியாக மாறவும் உணர்த்தினார்.

ஜனவரி 2022 இல் நான் DA2 மீட்டிங்கில்  இருந்தபோது, ​​நான் ஏன் அங்கு இருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் நன்கு ஆண்டவருடைய  வார்த்தையை  சொல்லவோ எழுதுகிறவனோ இல்லை. ஆனால் எழுதுவதற்கான வாய்ப்பு வந்த போது ஆண்டவர் எழுதுவதற்கான கிருபை வரத்தை எனக்கு கொடுத்தார். அது முதல் புதிய வெளிப்பாடுகளை  எழுத அவருடைய நாமத்தை மகிமை படுத்த உதவினார்.

கிறிஸ்துவின் சரீரத்தில் நாமெல்லாருக்கும்  பல்வேறு கிருபை வரங்கள் கொடுக்கப்பட்டுஇருக்கிறது. அது நிர்வாகத்திலோ, சேவை செய்தல், ஏழைகளுக்கு கொடுப்பது என இருக்கலாம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தவும், கிறிஸ்துவிடம் மக்களை வழிநடத்தவும் அவருடைய நறுமணத்தைப் பரப்பவும் இந்த வரங்களைப் பயன்படுத்துவோம். ஆமென்.

Sol.Leo

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 09-11-2022

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கை


கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைக்கு விசுவாசம் ஒரு முக்கியமான காரணியாகும்.


மத்தேயு 21: 12 ” மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்.”

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் யாரெல்லாம் விசுவாசம் வைக்கிறீர்களோ, அவர்களது வாழ்க்கை மாற்றப்படும்.

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினால் அவர்களது வாழ்க்கையிலுள்ள எல்லா பிரச்சனைகளையும் களைய முடியும்.இயேசு , கடுகளவு விசுவாசம் இருந்தால் கூட , நம்முடைய வாழ்க்கையில் அதிசயங்கள் நடப்பதை காணலாம் என்று சொல்கிறார்.ஆனால் இயேசுகிறிஸ்து உயிருள்ள தேவன். இன்றும் கூட அவரை விசுவசிப்பவர்களுடைய வாழ்க்கையில் அற்புதங்களும் குணமடைதலும் பகிரங்கமாக நடக்கின்றன.


எபிரேயர் 11 : 6 ” விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் . ஏனென்றால் , தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் , அவர் தம்மை தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.”.


நம் கர்த்தராகிய , நம்மீட்பராகிய இயேசுகிறிஸ்துவின் மீது விசுவாசம் இருந்தால் , நித்திய வாழ்விற்கான பரலோக ஆசீர்வாதங்களை பெறலாம்.

சாட்சி


என்னுடைய மகன் 7 மாதக் குழந்தையாக இருந்த போது, வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தான். மருத்துவர்கள் எல்லா நம்பிக்கையையும் இழந்து விட்டார்கள். இயேசுகிறிஸ்து என் மகனை முழுவதும் குணமாக்கி அவனது வாழ்க்கையை காப்பாற்றினார்.


ரோமர் 10 : 17 ” ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும் , கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். “

நாம் தினம்தோறும் வேதாகமத்தை வாசிக்கவும் ஜெபிக்கவும் தகுந்த நேரத்தை செலவழிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதனால் கர்த்தருடைய விருப்பத்தை அறியவும், நம்முடைய வாழ்க்கையில் அதன்படி நடக்கவும் முடியும். நாம் இயேசுகிறிஸ்துவோடு நேரம் செலவழிக்கும் போது , நம்மை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிரப்புவார்.
அப்போஸ்தலர் 2 : 17 ” கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மீதும் என் ஆவியை ஊற்றுவேன்”


எசாயா 41 : 10 ” நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன் , திகையாதே , நான் உன் தேவன்.

அவரை விசுவாசிப்பவர்கள் ஒரு நாளும் திகிலடைவதில்லை


எசாயா 59 : 1, 2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது , உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது .

நாம் நம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்தி அறிக்கையிட்டு ஒருவரை ஒருவர் மன்னிக்க வேண்டும்


மிகுந்த இரக்கமும் கோபத்துக்கு தாமதிக்கிறவருமாகிய கர்த்தர் நம்மை மன்னித்து ஆசீர்வதிப்பார்.

ஜெபம்


அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய வார்த்தையின் வழியாகப் பேசும்.எங்களை பாதுகாத்து வழிநடத்தும். உம்முடைய ஞானத்தை தாரும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் இதைக் கேட்கிறோம்.
ஆமென்.


Sol. சுஸ்மிதா ராகா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 08-11-2022

இயேசுவிடமிருந்து வல்லமையும் அதிகாரமும்.

யோவான் 8 : 32 ” சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”

இந்த உண்மையை அறிவதன் மூலம் பரிசுத்த ஆவியின் வரங்கள் செயல்படுத்தப்படும். இது நமக்குள்ளே உள்ள தேவையற்றவைகளை நீக்கி, நமக்கு என்ன தேவையோ அதை கற்றுக் கொடுக்கும்.

மத்தேயு 16 : 19 மற்றும் மத்தேயு 18 : 18 ல் “பரலோகத்தின் திறவுகோலை உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.


சத்தியம் நமக்குள் செல்லும் போது வல்லமை தானாகவே செயல்படுத்தப்படும்.


லூக்கா 10 : 19 ” இதோ , சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும் , சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன். ஒன்றும் உங்களைச் சேதப்படுத்த மாட்டாது.”

லூக்கா 11 : 20 ல் ” நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளை துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே ” என்று இயேசு சொல்கிறார்.


பழைய ஏற்பாட்டு புத்தகத்திலிருந்து “தேவனுடைய விரல் ” எவ்வளவு வல்லமையானது என்பதை அறியலாம்.


யாத்ராகமம் 8 : 18,19 ல் மந்திரவாதிகள் தங்களுடைய மந்திரவித்தைகளால் பேன்களை பிறப்பிக்கும்படி பிரயதாதனம் செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியாமற் போயிற்று. பேன்கள் மனிதர்மேலும் மிருக ஜீவன்கள் மேலும் இருந்தன. பின்பு மந்திரவாதிகள் பாரவோனைப் பார்த்து இது தேவனுடைய விரல் என்றார்கள்.

மத்தேயு 12 : 28 ” நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால் , தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே”


எவரொருவர் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெறுகிறார்களோ அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்வார்கள்.

மத்தேயு 3 : 16 ” இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறியவுடனே இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது. தேவ ஆவி புறாவைப்போல இறங்கி தம்மேல் வருவதைக் கண்டார்.

அப்போஸ்தலர் 2 : 38 ” பேதுரு அவர்களை நோக்கி, நீங்கள் மனந்திரும்பி , ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் , அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். “

மோசேக்கு உள்ள வல்லமை நமக்கும் இருக்கிறது.
பழைய ஏற்பாட்டில் ஒரு மோசே. புதிய ஏற்பாட்டில் லட்சக்கணக்கான மோசேக்கள்.
மத்தேயு 28: 28 – 20 ல் ” வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீசராக்கி, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து , நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கின்றேன். ” என்று இயேசு சொன்னார்.

இது ஒரு சர்வ வல்லமையுள்ள சக்தி. ஒவ்வொருவரும் இதை அனுபவிக்க முடியும். இந்த வல்லமையை நாம் சிலுவையின் வழியாக பெற முடியும்.
யோவான் 1 : 12 ல் ” அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்கள் அனைவருக்கும் , கர்த்தருடைய பிள்ளைகளாகும் உரிமையை கொடுத்திருக்கிறார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பழைய ஏற்பாட்டில், எல்லா சிறந்த தீர்க்கத்தரிசிகளும் பணியாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
புதிய ஏற்பாட்டில் பிதாவின் குமாரனுடைய பிள்ளைகளாக அழைக்கப்படுகிறோம்.
ஏற்கெனவே வல்லமையும் அதிகாரமும் வழங்கப்பட்டுவிட்டதால் யாரும் இனி நமக்கு கொடுக்கவேண்டியதில்லை.

எண்ணாகமம் 12 : 8 ல் மோசே என் தாசன் என்றும்,
1 ராஜாக்கள்11 : 32 ல் என் தாசனாகிய தாவீது என் இருதயத்திற்கு நெருக்கமானவன் என்றும் கர்த்தர் கூறுகிறார்.

இந்த வல்லமையின் எல்லைகள் என்ன?
யோவான் 14 : 12 ல் ” மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னை விசுவசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான் ” என்று இயேசு சொல்கிறார்.

தனிப்பட்ட சாட்சியம்


நாங்கள் ஒரு பிசிக்கல் ஹீலிங் பள்ளியில் சேரவிருந்தோம். மிகவும் அதிகமாக மழை பெய்து கொண்டிருந்தது. நாங்கள் , மழைய நிறுத்த வேண்டி அதிகாரத்துடன் கட்டளையிட்டு ஜெபித்தோம்.
அதிசயிக்கும் விதமாக , மழை நின்று சூரிய வெளிச்சமும் வந்தது. கர்த்தருக்கே மகிமை.

ஜெபம்.

எங்களை உமது மகனாக , மகளாக , பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டதற்காகவும் பரலோகத்திலிருந்து வல்லமையையும் அதிகாரத்தையும் தந்ததற்காகவும் அப்பா உமக்கு நன்றி செலுத்துகிறோம். எல்லா மக்களும் இதை கர்த்தராகிய இயேசுவுக்குள் விசுவசிக்கவும் , அதே வல்லமையால் எல்லோரும் நிரப்பப்படவும் ஜெபிக்கிறோம். ஆமென்.

Sol. தியோடர் மொகந்தி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 07-11-2022

சீடத்துவம்

” மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.”

மத்தேயு 16 : 18

யோவான் 1 ம் அதிகாரம் 40 முதல் 42 வரையுள்ள வசனங்களில் சீமோனுடைய சகோதரன் ஒரு இரவு இயேசுவோடு தங்கியிருந்த பின் அவர் சீமோனைப் பார்த்து ” நான் மெசியாவை கண்டேன் ” என்று சொன்னார். அடுத்த நாள் அவர் சீமோனை இயேசுவினிடத்தில் கூட்டி வந்தார். அப்போது இயேசு அவரைப் பார்த்து, “உன்னுடைய பெயர் சீமோன். ஆனால் நீ கேபா அல்லது பேதுரு என்று அழைக்கப்படுவாய் ” என்று சொன்னார். பேதுரு என்பதற்கு பாறை என்று அர்த்தம். என எழுதப்பட்டிருப்பதை காண்கிறோம்.

மத்தேயு 16 ம் அதிகாரம் 12 முதல் 20 வரையுள்ள வசனங்களில் , இயேசு தன் சீடர்களைப் பார்த்து , மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.அதற்கு பேதுரு ” நீர் மெசியா, உயிருள்ள தேவனுடைய குமாரன் மகன் என்று சொன்னார். இயேசு அவனை நோக்கி ” இந்த உண்மை மனிதர்களிடமிருந்து உனக்கு வரவில்லை. பரலோகத்திலுள்ள என் தந்தையால் உனக்கு வெளிப்படுத்தப்பட்டது ” என்றார். மேலும் ” நீ பாறை , இந்த பாறையின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. உனக்கு பரலோக ராஜ்யத்தின் திறவுகோலைத் தருவேன். பூலோகத்தில் நீ எதைக் கட்டுகிறாயோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்தில் நீ எதை கட்டவிழ்ப்பாயோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.” என்று சொல்லப்பட்டிருப்பதை காண்கிறோம்.

இயேசுவினுடைய சீடர்களில் மூத்தவரான பேதுருவின் இந்த விசுவாச வார்த்தைகள் , அவருடைய ராஜ்யம், அவருக்குப் பின் தொடர்ந்து கட்டமைக்கப்படும் என்ற நம்பிக்கையை இயேசுவுக்கு கொடுத்தன. இயேசு என்ற பாறை மீது விசுவாசிகளால் அமைக்கப்பட்ட அடித்தளம் கர்த்தரின் சபையாக வளரும். நிறுவப்படவிருக்கின்ற அவருடைய ராஜ்யத்திற்கு இயேசுவே தலைக்கல்லாக இருக்கிறார்.


பேதுருவின் ஆவிக்குரிய பதில் இயேசுவை மகிழ்ச்சியாக்கிற்று. இயேசுவே பாறை. மெசியா மீதுள்ள விசுவாசத்தால் பேதுரு , கர்த்தரின் ராஜ்யத்தை கட்டி எழுப்ப உதவுகின்ற அடித்தளத்தை அமைத்தார்.
இயேசு பரலோகத்திற்கு எழுந்தருளிய பிறகு, பேதுரு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, நற்செய்தியை பிரசங்கித்து , மிகுந்த வல்லமையோடு நோய்களை குணமாக்கினார். ஆயிரக்கணக்கான மக்களை இயேசுவை பின்பற்ற செய்து , அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
இயேசு பரலோகம் செல்வதற்கு முன்னால் , ” உலகம் முழுவதும் சென்று எல்லா மனிதர்களுக்கும் நற்செய்தியை அறிவியுங்கள். யாரெல்லாம் விசுவசிக்கிறார்களோ அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள், அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். எல்லா விசுவாசிகளுக்கும் அதே வல்லமை கொடுக்கப்படும். என்னுடைய நாமத்தின் பெயரால் பேய்களை ஓட்டுவார்கள். பலவிதமான பாஷைகளை பேசுவார்கள். நோயாளிகள் மீது கை வைத்தால் குணமடைவார்கள்” என்று சொன்னார்.


யோவான் 14 : 12 ” என்னை விசுவசிக்கிறவன் , நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான் , இவைகளை பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான் ஏனென்றால் நான் பரலோகம் செல்கிறேன்.” என்று கூறுகிறது.

அவருடைய விசுவாசிகள் ஒவ்வொருவரும் அவருடைய பணியை செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அவருடைய கிருபையினால் கர்த்தர் நமக்குத் தந்த திறமைகளுடன் நாம் இந்த பணியை செய்ய வேண்டும். நம்முடைய முழு பெலத்தோடும் ஆற்றலோடும் நாம் எல்லோரும் இதைச் செய்வோம். இதனால் கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக.
ஆமென்.

Sol.பாபு செபாஸ்டியன்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 06-11-2022

விசுவாசிகளின் ஐக்கியம்:


” ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும் , அன்பினாலே யாதொரு தேறுதலும் , ஆவியின் யாதொரு ஐக்கியமும் , யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால் , நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து , என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.” பிலிப்பியர் 2…1- 2


இந்த வசனங்கள் ஆவிக்குரிய ஐக்கியம் என்பது என்ன என்பதை அழகாக விளக்குகிறது. அன்பு, இரக்கம், மற்றவர்களின் மீது அக்கறை போன்ற ஒரே மனநிலையோடு இருப்பதுதான் ஐக்கியத்தின் குணாதிசயங்கள். எல்லா விஷயத்திலும் ஒருவருக்கொருவரை ஏற்றுக் கொள்வது என்பது ஒரே மனநிலை ஆகாது. ஆனால் சகிப்புத் தன்மையுடன் மற்றவர்களின் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதுதான் ஒரே மனநிலை. இவையெல்லாம் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படுவதற்கும், ஒருவர் மற்றவருடன் ஐக்கியமாக இருப்பதற்கும் நம்முடைய கிறிஸ்தவ சமுதாயத்தில் அத்தியாவசியமான குணங்கள். இயேசுகிறிஸ்துவை தங்கள் தெய்வமாக எஜமானனாக ஏற்றுக் கொண்டவர்கள், தங்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் கர்த்தரை ஆராதிப்பதற்கும் , கர்த்தருடைய வார்த்தைகளையும் , தங்களுடைய சாட்சிகளையும் பகிர்ந்து கொள்வதற்கும் கூடினார்கள். இதை ஐக்கியத்தின் தருணமாக எதிர்நோக்கியிருந்தார்கள்.

அப்போஸ்தலர் 2 : 42 ” அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோன்யத்திலும் , அப்பம் பிட்குதலிலும் , ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.


கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியம் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும் , கிறிஸ்தவ கோட்பாடுகளை அவர்களுக்கு நினைவுபடுத்தவும் செய்தது. அப்போது அவர்களுக்கு எழுதப்பட்ட எந்த புத்தகமும் இல்லை. அதனால் கர்த்தருடைய போதனைகளை நினைவுபடுத்த கூடுகை அவசியமாக இருந்தது. பின்னர் முதலாம் நூற்றாண்டில் சுவிசேஷங்களும், நிருபங்களும் எழுதப்பட்டன. ஆனால் கையால் எழுதப்பட்ட கடிதங்களும் பிரதிகளும் அப்போது எல்லாருக்கும் கிடைக்கவில்லை. காலங்கள் செல்லச் செல்ல, நிறைய தவறான போதனைகள் , விளக்கங்கள் , சட்டங்களும் சபைகளை சிதைத்தன. புதிய ஏற்பாட்டு புத்தகங்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளை பிரகடனப்படுத்தும் கூடுகைகள் இன்றும் இருக்கின்றன. எபிரேயர் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கூட கிறிஸ்தவர்களின் கூடுகையைப் பற்றி நினைவுபடுத்தியுள்ளார்.


எபிரேயர் 10…24 – 25 மேலும் , அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து , சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல் , ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம். நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய் பார்க்கிறீர்களோ அவ்வளவாய் புத்தி சொல்ல வேண்டும்.”


பின்னாளில் , அப்போஸ்தலனாகிய பவுலின் காலத்தில் சீடர்களின் இந்த ஐக்கியம் , அந்தியோக்கியாவில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டது.


1யோவான் 1: 7 ” அவர் ஒளியில் இருக்கிறதைப் போல நாமும் ஒளியிலே நடந்தால் , ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். “


கிறிஸ்துவுக்குள் நமது ஐக்கியமும், அவருடைய இரத்தமும் நம்மை இரட்சிக்கும்.


சங்கீதம் 133 : 1 ” இதோ , சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?”


நம்முடைய சபையாகிய சரீரத்தில் கிறிஸ்து தலையாக இருக்கிறார். நம்முடைய பிரதான ஆசாரியரான கிறிஸ்துவின் தலையிலிருந்து அபிஷேக எண்ணெய் பாயும். இந்த அபிஷேகம் நமது உடலில் பாய்ந்து நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். நாம் ஒரே ஆவியினால் ஐக்கியப்பட்டு, ஆவியினால் வழிநடத்தப்படும் போது அங்கே அபரிமிதமான மகிழ்ச்சி இருக்கிறது. இதுதான் கிறிஸ்தவ ஐக்கியத்தின் அழகும் நன்மையும் ஆகும்.

சாட்சி


கொரோனா காலத்திற்கு முன் அணி சபை என்பது நல்ல ஒரு ஐக்கியமாக இருந்தது. அதை நாம் மகிழ்வுடன் அனுபவித்தோம். ஒருவருக்கொருவர் வெவ்வேறு வீடுகளில் சந்திப்பை மேற்கொண்டோம். நிகழ்வுகளில் ஆராதனை, கர்த்தருடைய வார்த்தைகளை பகிர்ந்து கொள்வது, சாட்சி சொல்வது , ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்பது போன்றவற்றை மகிழ்வுடன் அனுபவித்தோம்.


ஜெபம்


எங்கள் அன்புள்ள பரலோகத் தந்தையே நாங்கள் ஒருவர் ஒருவருடன் ஐக்கியமாக இருக்கும் சந்தோஷத்தை தாரும். அதன்மூலம் ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் , உற்சாகப்படுத்தவும் உம்முடைய விலைமதிப்பில்லாத அன்பிலும் பாதுகாப்பிலும் பலப்படுத்தவும் வல்லமையான இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம்.

ஆமென்.


Sol. சலோமி குரியன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 05-11-2022

எசாயா 49 : 24 ” பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப் பொருளை பறிக்கக் கூடுமோ? அல்லது நீதியாய் சிறைப் பட்டுப் போனவர்களை விடுவிக்கக் கூடுமோ?”

 அன்பான சகோதர சகோதரிகளே, மேற்கூறிய வசனத்தில் வலிமையானவனிடமிருந்து கொள்ளைப் பொருளை எடுக்க முடியுமா என்று எழுதப்பட்டிருக்கிறது. நான் உங்களிடம் இந்த கேள்வியைக் கேட்கிறேன். உங்களுடைய பதில் என்ன?  ஆம் என்பதே இதற்குப் பதில்.  சர்வவல்லவர் இந்த உலகத்தை ஆளுகை செய்வதற்கான அதிகாரத்தை நம்மிடம் கொடுத்திருக்கிறார். நம்முடைய வழிகள் கர்த்தருடைய வழிகளாக இருந்தால் நாம் திகிலடையத் தேவையில்லை.

இதற்கு பழைய ஏற்பாட்டில் இருந்து மூன்று உதாரணங்களை நாம் கானலாம்

1 . ஆபிரகாமின் வெற்றி

ஆதியாகமம் 14 : 16  ” சகல பொருட்களையும் திருப்பி கொண்டு வந்தான். தன் சகோதரனாகிய லோத்தையும் அவனுடைய பொருட்களையும், ஸ்திரீகளையும் ஜனங்களையும் திருப்பி கொண்டுவந்தான்.”

 இந்த 14 ம் அதிகாரத்திற்குள் சென்றோமேயானால் சித்திம் பள்ளத்தாக்கில்  ராஜாக்களுக்கிடையில் போர் நடந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் தப்பியோடினார்கள். அவர்களுடைய எதிரிகள் எல்லோரையும் சிறைபிடித்து எல்லா பொருட்களையும் கொண்டு சென்றார்கள். அவர்கள் ஆபிரகாமின் சகோதரர் லோத்தையும் அவனுடைய பொருட்களையும் கொண்டு சென்றார்கள். என்ன ஒரு கடினமான சூழ்நிலை? ஆபிரகாம் இதைப்பற்றி கேள்விப்பட்ட போது , அந்த ராஜாக்களை முறியடித்து அவர்களால் பிடிக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் திருப்பிக் கொண்டுவந்தார். அவர் தன்னுடைய 318  ஆட்களையும் கொண்டு எல்லாவற்றையும் மீட்டுக் கொண்டுவந்தார். போர் முடிந்து திரும்பிய பிறகு மெல்கிசதேக்கிடமிருந்து பரலோக ஆசீர்வாதங்களைப் பெற்றார். என்ன ஒரு அதிசயமான கடவுள் நமக்கு இருக்கிறார். சர்வவல்லமையுள்ள கர்த்தர் நமக்காக போராடுவார். அவர் நமக்கு சூழ்நிலைகளை கடந்து வெற்றியையும் பரலோக ஆசீர்வாதங்களையும் தருவார்.

2 . தாவீதும் கோலியாத்தும்

1 சாமுவேல் 17 : 51 ” ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று , அவன் பட்டயத்தை எடுத்து , அதை அவன் உறையிலிருந்து உருவி , அவனைக் கொன்று , அதினாலே அவன் தலையை வெட்டிப் போட்டான். அபாபொழுது தங்கள் வீரன் செத்துப் போனான் என்று பெலிஸ்தர் கண்டு ஓடிப்போனார்கள். ”

இந்த பகுதியில் பெலிஸ்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் ஏலா பள்ளத்தாக்கில் நடந்த யுத்தத்தை பற்றி கூறியுள்ளது.பெலிஸ்தியர்கள் சார்பாக நின்ற கோலியாத் மிகவும் பலசாலி.  அவன்  இஸ்ரவேலர்களின் நம்பிக்கையை அழிக்கும்படியாக அவதூறான வார்த்தைகளை பேசினான். கடைசியில் தாவீது அந்த பள்ளத்தாக்கை அடைந்த போது , கோலியாத் உச்சரித்த வார்த்தைகளை கேட்டான். தேவ மனிதனாக அபிஷேகம் பண்ணப்பட்டவனாக,  தன்னைத்தானே பலப்படுத்திக் கொண்டு, இஸ்ரவேலருக்காக போரிட்டு வெற்றியும் பெற்றான்.

3. சிக்லாகில் தாவீது

1 சாமுவேல் 30: 18,19  ” அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்.

 இங்கு அமலேக்கியர்கள் சிக்லாக்பள்ளத்தாக்கை அழித்து எல்லா மனிதர்களையும் அவர்களுக்குள்ள பொருட்களையும் சிறைபிடித்தார்கள். தாவீது மற்றொரு போருக்கு சென்றிருந்தார். தாவீது திரும்பிய போது தான் மிகவும் நெருக்கடியில் இருப்பதை அறிந்து கொண்டார்.  அவர் தன்னைத்தானே கர்த்தருக்குள் திடப்படுத்திக் கொண்டு கர்த்தரிடம் கேட்டான். கர்த்தரிடமிருந்து வந்த தெளிவான வழிநடத்துதலின் பேரில் , எதிரிகளை தோற்கடித்து தன்னிடமிருந்து களவு செய்யப்பட்ட எல்லாவற்றையும் திரும்பக் கொண்டுவந்தார். தன் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

சகோதர, சகோதரிகளே பிரச்சனைகளிலிருந்து , நம்மை பாதுகாக்கின்ற வல்லமையான கர்த்தரை நாம் சேவிக்கின்றோம். நம்மிடமிருந்து திருடப்பட்ட எல்லாவற்றையும் நாம் திரும்ப பெறும் பொருட்டு , நம்மை நாமே பலப்படுத்திக்கொண்டு போருக்கு செல்ல வேண்டும்.  இதைத்தான் கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். சாத்தான்   நம்முடைய ஆராதனை நேரத்தை, வேத வாசிப்பு நேரத்தை,  தியானிக்கும் நேரத்தை திருடலாம். நமக்கு பயத்தையும் ,அவநம்பிக்கையையும் தரலாம்.

எச்சரிக்கையாயிருக்க வேண்டும். கர்த்தருக்குள் நாம் நம்மை பலப்படுத்த வேண்டும். ஒரு நாளும் இதை கைவிடக்கூடாது. மேலும் யுத்தத்திற்கு செல்ல கர்த்தரிடமிருந்து வார்த்தையை பெற வேண்டும். நிறைய  நேரங்களில் நாம் தோற்கடிக்கப்படுகிறோம். காரணம், குறிப்பிட்ட சூழ்நிலையில் கர்த்தருக்கு முன்பாக நேரம் செலவழிப்பதில்லை.

பரலோகத் தந்தையே , உமக்கு முன்பாக வருகிறோம் . எங்களால் முடியாது என்ற எண்ணங்களுக்காக எங்களை மன்னிக்க வேண்டுகிறோம். மேற்கூறியவற்றிலிருந்து  , நீர் எங்களோடு இருந்தால் எல்லாம் முடியும் என்று புரிந்து கொள்கிறோம். எங்களுடைய சூழ்நிலைகளை  களையவும், அவைகளை கடந்து செல்லவும் , எங்களை பலப்படுத்துவதற்கு இந்த நாளில் புதிய அபிஷேகத்தால் நிரப்பும். எங்களுடைய  எதிர்மறையான சிந்தனைகளையும், தவறான நம்பிக்கைகளையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கண்டிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் வழியாக எங்கள் சூழ்நிலைகளின் மீது நாங்கள் வெற்றி பெறவும், நீர் எங்களுக்காக செய்த எல்லாவற்றையும் உம்முடைய நாமத்தின் பெயரால் ஏற்றுக் கொள்கிறோம். 
ஆமென்.

 Sol. Dr. கமலின் விஜி.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 04-11-2022

அப்போஸ்தலர் 2 : 38  ” பேதுரு அவர்களை நோக்கி , நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.”

2 கொரிந்தியர் 3 : 17   “கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ, அங்கே விடுதலையுண்டு. “

அப்போஸ்தலர் 5 : 32  “இந்த சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்கு கீழ்படிகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.”

நாம் நமது பாவங்களுக்காக வருந்தி , கர்த்தரிடம் அவைகளுக்காக மன்னிப்பு கேட்டு, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். பிறகு கர்த்தர் நம் பாவங்களை எல்லாம் மன்னித்து பரிசுத்த ஆவியானவர் வழியாக நம்மை ஆசீர்வதிப்பார்.

யாரெல்லாம் கர்த்தருக்கு கீழ்படிந்து அவருடைய  வார்த்தையின்படி வாழ்கிறார்களோ அவர்களுக்கே பரிசுத்த ஆவியானவர் அருளப்படுவார்.

கர்த்தரால் நமக்கு கொடுக்கப்பட்ட  பரிசுத்த ஆவியானவர் நமது நண்பர் , துணையானவர், நமக்காக வாதாடுபவர். அவர் நமக்கு உதவி செய்வார். நம்மோடு இருப்பார்.

பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துவார், எல்லாவற்றையும் நமக்கு கற்றுக் கொடுப்பார். ஒவ்வொன்றையும் நமக்கு நினைவூட்டுவார்.

நாம் , நம்மை முழுவதுமாக பிரிசுத்த ஆவியானவருக்கு  அர்ப்பணித்து , அவர் நம்மை பற்றிக் கொள்ளும்படியாக ஜெபிக்க வேண்டும்.

நாம் அவருடன் நல்ல வலுவான உறவை ஏற்படுத்திக் கொண்டால் , நாம் என்ன செய்யவேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் , என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது என்பதைப்பற்றி சொல்லிக் கொடுப்பார்.

சங்கீதம் 143 : 10  ” உமக்கு பிரியமானதைச் செய்ய எனக்கு போதித்தருளும் , நீரே என் தேவன்,உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையிலே வழி நடத்துவாராக. “

பரிசுத்த ஆவியானவர் நமது வாழ்க்கையை பொறுப்பெடுத்துக் கொள்ளும்போது , அன்பு, சந்தோஷம், பொறுமை, இரக்கம், நற்குணம், விசுவாசம் , சாந்தம் , இச்சையடக்கம்  போன்ற நற்கனிகளை நம் வாழ்க்கையில் நமக்கு தருவார்.

நாம் கர்த்தராகிய ஆவியானவரிடம் நம்மை அர்ப்பணிக்கும் போது , கர்த்தருடைய விருப்பத்தினை  நிறைவேற்ற வேண்டும்  என்று ஜெபிக்க வேண்டும். அப்போது கர்த்தர் நம்முடைய வாழ்க்கையின் பாதையை செம்மைப்படுத்தி, நம்முடைய இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவார்.

பரிசுத்த ஆவியானவர் நம்மை  வழிநடத்துவதனால்,நாம் கர்த்தருக்கு உண்மையும் விசுவாசம் உள்ளவர்களாகவும் இருந்து  , நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருக்காக,  அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக இருப்போம்.

ஜெபம்:

பரலோகத் தந்தையே, இந்த செய்தியை வாசிக்கின்ற யாராக இருந்தாலும்,  அவர்கள் தங்களையும்,  தங்களுடைய விருப்பத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணித்து   வாழ , அவர்களோடு இருந்து அவர்களுக்கு உதவி செய்யும்படியாக ஜெபிக்கிறேன். இதன்மூலம் அவர்களை வல்லமையாக பயன்படுத்தி , ஏராளமாக ஆசீர்வதிக்கும்படி
இயேசுவின்  நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.
ஆமென்

Sol.Dr.Himakshi

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 03-11-2022

யோவான் 14 : 21  ” என் கற்பனைகளை பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான். என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான். நானும் அவனில் அன்பாயிருந்து , அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.”  என்று கூறுகிறது. 

இந்த வசனங்கள் , இயேசு, தம்மை நமக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் விரும்பினால்,  அவரைப் பின்பற்றி அவரது வார்த்தைகளுக்கு நாம் கீழ்படிய வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. இப்போது நாம்,கர்த்தர்  தம்முடைய வார்த்தைகளின் வழியாக என்ன கட்டளைகளை கொடுத்திருக்கிறார் என்பதைக் காணலாம். முதல் கட்டளை நமக்குத் தெரியும்  மாற்கு 12… 29 – 32 வசனங்களில், ” இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன்முழு ஆத்துமாவோடும்   முழு இருதயத்தோடும் அன்பு கூறுவாயாக “. என்று கூறப்பட்டுள்ளது. 

வேதத்தில் , இயேசுகிறிஸ்து தம்மையே முழுமையாக பிதாவாகிய கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்து அவருக்கு கீழ்படிந்தார். அதன் பலனாக  கர்த்தர், தங்கள் கடைசி மூச்சுவரை  கீழ்படிந்திருக்கிற 12 சீடர்களை அவருக்கு கொடுத்து ஆசீர்வதித்தார். இயேசு தன்னுடைய வாழ்க்கையை பிதாவாகிய கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்ததைப் போலவே, அதே வழியில் அவருடைய சீடர்களும் இயேசுவுக்காக எதையும் செய்யும் தைரியத்தைப் பெற முடிந்தது.

இயேசு மக்களிடம் பரலோக ராஜ்ஜியம் பற்றி ,   கர்த்தருடைய வார்த்தைகள்  வழியாகப் பேசும் போதும் அறிவை உணர்த்தும் வசந்தின் வழிகாய பேசி தன்னை முழுவதுமாக தாழ்த்தியதை நாம் வேதத்தில் காண்கிறோம். அவர் எப்பொழுதும் பரிசேயர்களிடமும் அறிஞர்களிடமும் கர்த்தரின் வார்த்தைகள் வழியாகவே பேசினார். அவர் நிகழ்த்திக் கொண்டிருந்த அற்புதங்களையும் அதிசயங்களயும் , அவர் தானே செய்வதாக பெருமை பேசுவதை ஒருபோதும் காணவில்லை.

அவர் எப்பொழுதும் ,  கர்த்தருடைய வார்த்தைகளுக்கு  கீழ்படிய வேண்டும், கர்த்தருடைய வழிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் , நம்முடைய சொந்த வழிகளை அல்ல என்று நம்மை வலியுறுத்தினார். இயேசு எப்போதுமே , தன்னுடைய ஆற்றலை  கீழ்படிதலிலும் கர்த்தர் மீதுள்ள பக்தியிலுமே காட்டினார். அவருடைய பக்தியையும் அர்ப்பணிப்பையும் தன்னுடைய ஒரே பிதாவின்  மேலேயே வைத்திருந்தார். அவர்கள் ஒருவராகவே இருந்தனர். இன்னும் ஒருவராகவே இருக்கின்றனர்.  அவருடைய அந்த கீழ்படிதலும் அர்ப்பணிப்பும் அவர் மூலமாக அவருடைய சீடர்களிடமும் இருந்ததால் கர்த்தருக்கு நாம் நன்றி செலுத்துவோம்.

யோவான் 14 : 12  ” என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய காரியங்களைச் செய்வான். என்று சொல்கிறது.

யோவான்  14 : 23  ” இயேசு அவனுக்கு பிரதியுத்திரமாக , ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் , அவன் என் வசனத்தைக் கைக் கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து வாசம் பண்ணுவோம்.” என்று சொல்கிறது.

நமது வாழ்க்கை, நமது நம்பிக்கை , நமது அமைதி, நமது சந்தோஷம் எல்லாம் கிறிஸ்துவுக்கு  கீழ்படிந்து  நடந்தால் மட்டுமே, புகழப்படும். நமது  சுயபுத்தியினால் நடந்தால்  அல்ல.

 பிதாவே, என் கர்த்தாவே உமது வல்லமை மிக்க கரங்களில் என்னை ஒப்படைக்கிறேன். உமக்கு உகந்த வழிகளில் நடக்கவும்  என்னுடைய வாழ்க்கையின் முடிவுகளை என் சுய புத்தியினால் எடுக்காமல்   உம்மையும் பரிசுத்த ஆவியானவரையும் சார்ந்து எடுக்கவும் உதவி செய்யும்.
ஆமென்.

Sol. குஷி.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 02-11-2022


லூக்கா 14 : 26, 27
” யாதொருவன் என்னிடத்தில் வந்து , தன் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்.
தன் சிலுவையை சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான். “


கர்த்தர் இந்த வசனங்களின் வழியாக பேசும்பொழுது , ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் அவர் சுமந்த பெரிய சிலுவையை எனக்கு காண்பித்தார். எல்லா மனித உறவுகளும் இந்த பூமியில் இருக்கும்வரை மட்டுமே. சிலுவையின் உண்மையான ஆழத்தை புரிந்து கொள்ள எனக்கு சில ஆண்டுகள் ஆனது. என்னுடைய இதயத்தின் ஆலயத்தில் உள்ள கர்த்தரின் பாதத்தில் இதை நான் முணுமுணுத்தபோது அவருடைய காலடியில் ஒரு தூசியாக என் இருதயம் இருந்தது. அந்த உண்மையான வெளிப்பாடு என்மீது பலமாக தோன்றியது.

நான் என்னுடைய சுய த்தை(” நான்” ) சிலுவையில் ஆணி அடித்தேன். ஒவ்வொரு நாள் காலையிலும் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு சுவாசத்திலும் நன்றியுடனும் பணிவுடனும் நம்மை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
(ரோமர் 12. 1) ” .
என் சிலுவையை மத்தேயு 11 : 28 – 30 சொல்லப்பட்டபடி செய்யமால் என் சிலுவையை சுமக்க முடியாது. 24X7 கர்த்தருடைய இளைப்பாறுதலில் நிலைத்திருக்க என்னுடைய பாரத்தையும்(அப்பாவை, அம்மாவை, மகனை மகளை, என் பெருமையை, என் சுய நீதியை, விக்ரகங்களாய் நம் வாழ்வில் இருக்கிற மனிதர்களை அல்லது அபிஷேகம் பெற்ற தேவ ஊழியர்கள்(ரோமர் 1 : 22, 23) , நம் பொறாமை, மன்னியாமை, நம்முடைய பணம் அல்லது பதவி) எல்லாவற்றையும் அவரிடத்தில்ஒப்புக்கொடுக்க அல்லது சரணடைய வேண்டும்.

யாத்ராகமம் 20 : 4,5
மேலே வானத்திலும் , கீழே பூமியிலும் பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து என்னை பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தை மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கறவனாயிருக்கிறேன்.”


கலாத்தியர் 5 : 1 ஆனபடியினாலே நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்கு உட்படாமல் , கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையில் நிலை கொண்டிருங்கள்.


கலாத்தியர் 5 : 24 “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாமிசத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.”

அவரது விருப்பத்தை மட்டுமே தேடவும் கண்டுபிடிக்கவும் கீழ்படியவும் செய்யவேண்டும்.


2022 அக்டோபர் மாதம் 19ம் தேதி கர்த்தர் ஒரு வெளிப்பாட்டைத் தந்தார். காலை ஆராதனை தேவ செய்தியின் போது Sol. அமரஜித் கவுர் மூலமாக என்னோடு பேசினார். கர்த்தர் அதை தன் சிலுவையோடு ஒப்பிட்டு எல்லா ஆத்துமாக்களுக்காக அவர் கொண்ட பாரமும் அன்பும் அவர் இந்த உலகத்திற்கு வருவதற்கான நோக்கமாக இருந்தது.

நன்றி ஆண்டவரே காணாமல் போன ஆடுகளை நீர் தேடி வந்ததற்காக.உமக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

Sol.Jasmine James