தானியேல் – II
நாள் 27-05-2022 – தேவ செய்தி

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

பிலிப் 4:13.

எல்லாவிதமான சூழ்நிலையிலும் நாம் இருந்தாலும் போதுமென்ற மனதுடன் நாம் இருக்க வேண்டும் பவுல் சொல்லுகிறார். மற்றவர்கள் நமக்கு உதவி செய்ய முற்பட்டாலும், நாம் கர்த்தரையே சார்ந்திருக்க வேண்டும். நம்மை முழுமையாக கர்த்தரிடம் ஒப்புகொடுக்க வேண்டும், கர்த்தர் நம்மில் வித்தியாசமாக கிரியை செய்வார். அவர் நமக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார், “நம்மை ஒருபோது கைவிடமாட்டார், நம்மை விட்டு விலகமாட்டார்”. எபி 12:1விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; நம்மை உள்ளிருந்து திடப்படுத்துகிறார், எல்லாவற்றையும் செய்ய நமக்கு பலன் அளிக்கிறார். நமக்கு விசுவாசம், நம்பிக்கை, ஞானம், தைரியம், மோசேவுக்கு கொடுத்ததுபோல அறிவு மற்றும் திறமை நமக்கு கொடுக்கிறார்.

தான் ஒரு திக்குவாயன் என்பதால் தன்னால் செய்ய இயலாது என்று கர்த்தரிடம் சொல்லுகிறான் மோசே. ஆனால் தேவன் அவனுடைய சகோதரனான ஆரோன் அவனுக்கு பேச்சாளனாக இருக்க அவனை கூட அழைத்துச் செல்லும்படி சொல்லுகிறார். நாம் தயாராக இருந்தால் போது கர்த்தர் எல்லாவற்றையும் நமக்காக செய்து கொடுப்பார்.

வரங்களும், திறமைகளும் எல்லா மக்களிடமும் நாம் காண்பதில்லை. ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கிறவர்கள் என்றால் தேவன் நம்மில் தன்னுடைய வல்லமை, பலம் மற்றும் கிருபையை வெளிப்படுத்துவார். திக்குவாயை கொண்ட மோசேதான் தைரியமாக ராஜாவை பார்த்து உரக்கச் சொன்னான், “என் ஜனங்களை போக விடு.” கர்த்தருடைய ராஜ்யத்திற்கு நாம் தேவை என்றால் தேவன் அதற்கான தகுதியை நமக்கு கொடுப்பார், நமக்கு பயிற்சி அளிப்பார், நம்மை ஊக்கப்படுத்துவார். அவருக்காக நாம் அநேக காரியங்கள் செய்ய முடியும், சிறைப்பட்டோரை விடுதலை செய்ய முடியும், வியாதியில் இருப்பவர்களை சுகமாக்கவும், துக்கப்படுபவர்களை ஆறுதல் படுத்தவும் முடியும். தானியேல் மற்றும் அவரது நண்பர்களைப்போல நம்மை எங்கு போட்டாலும் நாம் சாட்சியாக திகழ்வோம். அனைத்து சோதனைகளையும், துயரங்களையும் சந்திக்க நம்மில் தேவன் தைரியத்தை கொடுப்பார்.

தன்னுடைய அன்றாட தேவைகள் இருந்தபோதும், தன்னை மிகமோசமாக நடத்தியபோதும் கூட பவுல் சந்தோஷமாகச் சொன்ன விஷயம் என்னவென்றால், எதையும் தாங்க என் தேவன் என்னை அனுமதித்திருக்கிறார். பவுலின் வார்த்தைகள், கர்த்தரால் முடியாதது எதுவுமே இல்லை என்ற நற்செய்தியைத்தான் நமக்கு நினைவுபடுத்துகிறது. மத் 19:26, மாற்கு 10:27, லூக் 1:37.

இல் பவுல் சொல்லுகிறார் தேவன் நம்மோடு இருக்கையில் நமக்கு எதிராக நிற்பவன் யார். 

ரோமர் 8:31

பவுலின் தைரியத்தை அவருடைய எல்லா நிருபங்களிலும் காண முடிகிறது. சோர்ந்து போனவர்களை திடப்படுத்தவும், இன்னல் சூழ்ந்த நிலையில் இருப்பவர்களை உற்சாகப்படுத்தவும்தான் இது எழுதப்பட்டுள்ளது.

கிறிஸ்துவில் நிலைத்தும், அவரோடு இணைந்தும், மேலும் பிதாவினுடை ஐக்கியத்திலும் ஒருவன் இருந்தால் எல்லாவிதமான துன்பங்களையும் நம்மால் சந்திக்க முடியும் என்பதுதான் பவுல் கண்டுபிடித்தது.

..பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

சக 4:6.

சாட்சிகர்த்தர் நல்லவர், அவருடைய வார்த்தை உண்மையுள்ளது. என்னுடைய உடல் இயலாமையால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன், அநேக காரியங்களில் போராட்டத்தையே கண்டேன். மேற்கண்ட வசனத்தை நான் அநேகமுறை உரக்க சொல்லிகொண்டே இருப்பேன். சமையல் செய்வது, சுத்தம் செய்வது, வாகனம் ஓட்டுவது, வீடுகளில் பொருட்களை கொண்டு சேர்ப்பது மற்றும் வெளிநாட்டில் உள்ள உணவகத்தை நிர்வாகம் செய்வதிலிருந்து, சாதாரண வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற எல்லாவற்றிலும் கர்த்தர் என்னை பலப்படுத்தியுள்ளார். எனக்கு உதவியே இயேசுவே, உமக்கு கோடி நன்றிகள் ஐயா.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே எங்கள் வாழ்வில் துன்ப துயரங்களை சந்திக்க எங்களுக்கு கிருபைதாரும். நீரே எங்கள் பலம், உம்முடைய வார்த்தைதான் எங்களை தாங்குகிறது.

ஆமேன்.

Sol.Anju

தானியேல் – II

நாள் : 26-05-2022 – தேவ செய்தி

ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்”.

2நாளா 14:11-12.

பத்து இலட்ச்சம் மக்களோடும், 300 இரதங்களோடும் எத்தியோப்பியர் ஆசாவுக்கு எதிராக் யுத்தம் செய்ய வந்தபோது அவன் தேவனாகிய கர்த்தரை நோக்கி கூப்பிட்டான். பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது கர்த்தருக்கு லேசான காரியம் என்று ஆசா தன் நாவினால் அறிக்கையிட்டான். கர்த்தாவே எங்களுக்கு துணைநில்லும், இந்த ஏராளமான் கூட்டத்திற்கு எதிராக நாங்கள் போரிட வந்துள்ளோம். நாங்கள் உம்மீதும் உம்முடைய இரக்கத்தையும் சார்ந்துள்ளோம்.

கர்த்தர் எத்தியோப்பியர்களுக்கு எதிராக ஆசாவுக்கு வெற்றி தந்தார், எத்தியோப்பியர்கள் ஆசாவுக்கு முன்பாக ஓடிப்போனார்கள். ஆசாவோடு இருந்த இராணுவ வீரர்கள் 5,80,000 பேர் ஆகும். சேராவோடு 10 இலட்ச்சம் போர் வீரர்கள் மற்றும் 300 இரதங்களோடு இருந்தனர். எனவே எத்தியோப்பியர்களிடம் இருந்த இராணுவமே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது. ஆனாலும் ஆசா கர்த்தர் மீது நம்பிக்கை வைத்தான். கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய புறப்பட்டான். எத்தியோப்பியரிடம் ஆசா செய்த யுத்தத்தில் நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், எதிரி பலமுள்ளவனாகிலும், பலனற்றவனாகிலும் கர்த்தர் மீது நாம் நம்பிக்கை வைத்தால் நாம் வெற்றிபெறலாம் என்பதே.

நமக்கு எதிராக வருபவர்களை வெல்வது நம்முடைய பலத்திற்கு அப்பாற்பட்டு இருக்கலாம். அவர்களை எதிர்த்துநிற்க கூட திராணி இல்லாமல் இருக்காலாம். ஆனால் கர்த்தரை மட்டுமே நம்பி அவரை மட்டுமே சார்ந்திருக்கும் போது அவர் நமக்கு வெற்றியை தருவார்.

சாட்சி

தாவீது ஆராதனை பயிற்சி பள்ளியின் மூலம் நான் அநேக காரியங்களை கற்றுக்கொண்டேன். அளவில்லாத அபிஷேகத்தை கர்த்தர் என் மீது ஊற்றினார் மேலும் என்னுடைய நாவில் புதுபாடலை வைத்தார்.

பாடல்

  1. அதிகாலையில் எழுந்து நாம் கர்த்தரை துதிப்போம்.
  2. இருளில் வாழும் மக்களை இயேசுவின் வியத்தகு ஒளிக்குள் கொண்டுவருவோம்.
  3. தேசங்களுக்காக ஜெபித்து, அதை கர்த்தருக்கு சொந்தமாக்குவோம். ஆனந்த சத்தத்தோடு நாம் கர்த்தரில் களிகூறுவோம்.

நாம் அவருடைய சேனையின் வீரர்கள்

நாம் அவருடைய சேனையின் வீரர்கள்

எல்லா மகிமையும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுவுக்கே.

ஜெபம்

பரிசுத்த தேவனே, எங்களுடைய எதிரிகளிடமிருந்தும் அவர்களுடைய தந்திரங்களிலிருந்தும் எங்களை காப்பாற்றும். நாங்கள் எங்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் உம்மையே சார்ந்திருக்கிறோம்.

ஆமேன்.

Sol.Manimegalai

தானியேல் – II

நாள்: 25-5-2022-தேவ செய்தி

இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.  

வெளி 19:13.

ராஜாதி ராஜாவாகவும், வெல்லும் ராஜாவாகவும் இயேசு திரும்ப வருகிறதை நாம் காணாலாம். யோவான் சொல்லுகிறார், அவருடைய வஸ்திரம்  சிலுவையில் நம்முடைய பாவத்திற்காக சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தில் தோய்த்தெடுக்கப்படிருந்தது,  ஏசா 63:2-3 ஒரு கேள்வி மற்றும் பதிலை நமக்குமுன் வைக்கிறது.  உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள்போலவும் இருக்கிறதென்னநான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்

அவர்களின் இரத்தம் என் வஸ்திரங்களை கரைபடுத்தியது. இயேசுவின் முதலாவது வருகையில் தேவ ஆட்டுகுட்டியாக இருந்து தன்னுடைய இரத்தத்தை நம்முடைய பாவங்களுக்காக சிந்தினார். ஆனால் அவரது இரண்டாம் வருகையில் யூதகுல சிங்கமாக அவர் வருவார் மேலும் எதிரிகளின் பாவத்தின் நிமித்தம் அவர்களை கொன்று போடுவார்.

அவருடைய நாமம் ”தேவனுடைய வார்த்தை” என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. வெள்ளை குதிரையின் மீது ஏறிவருபவர் இயேசு என்று தெளிவாகிறது, அவர் முதல் முறையில் மனித உருவில் தேவனாக வந்தார் ஆனால் உலகத்தால் நிராகரிக்கப்பட்டார். (யோவா 1:1-2,10-11,14). அவர் உலகத்தின் இரட்சிப்புக்காக வந்தார், அதனால்தான் மக்களோடு அவர் பேசிய அவருடைய வார்த்தைகள் ஆவியாய் இருந்தது, ஆவிதான் உயிரை கொடுக்கும் என்றும் சொன்னார். வார்த்தை உயிருடனும் ஆற்றலுடனும் இருக்கிறது.

பிதா அனுப்பாவிட்டால் ஒருவனும் என்னிடம் வரமுடியாது என்று சொன்னபின் அநேகர் அவரை விட்டு விலகினர். தன்னுடைய 12 சீடர்களைப் பார்த்து இயேசு கேட்டார், நீங்களும் என்னை விட்டு விலக சித்தமாய் இருக்கிறீர்களா? அதற்கு பேதுரு பதில் சொன்னார்,

“ ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.”

யோவா 6:68

இயேசுவிடம் உயிருள்ள வார்த்தை உள்ளது என்றும் அவரே கர்த்தருடைய வார்த்தையாய் இருக்கிறார் என்பது அவருக்கு தெரியவில்லை.  உலகபிரகாரமான மனிதர்கள் மற்றும் சாத்தானிடமிருந்து இயேசுவின் அழைப்பை ஏற்க ஏற்படும் எதிர்ப்பு எவ்வளவு பெரியது என்பது அவருடைய துன்பம், போர், நிராகரிப்பின் மூலம் அது தீர்மானிக்கப்பட்டது.

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்.

யோவா 1:1,14

தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்.

எபே 5:26.

நான் உங்களோடு பேசிய வார்த்தையினாலே நீங்கள் சுத்தமாய் இருக்கிறீர்கள் என இயேசு தம் சீடர்களுக்குச் சொன்னார்.

இயேசு உயிருடன் இருக்கிறார். உயிர்ப்பும் உயிரும் அவரே. தன்னில் விசுவசிப்பவர்களுக்கு அவர் நித்திய ஜீவனை அளிக்கிறார். உலகில் நாம் காணும் அனைத்தும் வார்த்தை (இயேசு) யால் உருவாக்கப்பட்டது. ஜீவன் அளிக்க கூடிய வல்லமை வார்த்தையில் உள்ளது.

உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து,  

சங் 119:130.

சாட்சி

கர்த்தருடைய வார்த்தை என்னுடைய சகோதரனை குணப்படுத்தியதை நான் பார்த்தும் அனுபவித்தும் இருக்கிறேன். சகோதரனுடைய வீட்டிற்கு சென்ற போது நான் அவனுடைய நணபர்கள்  மற்றும் உறவினர்கள் அனைவரையும் ஜெபிப்பதற்காக அழைத்தேன். ஆனால் என் சகோதரன் இதை ஏற்கவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு நான் மீண்டும் என் வீட்டிற்குச் சென்றேன். அவனுடைய ஒரு கண்ணின் பர்வையை அவன் இழந்துவிட்டான் என்று நான் கேள்விப்பட்டேன். பரிசுத்த ஆவியானவர் அவனுக்காக ஜெபிக்கவும், மன்னிப்பு கேட்கவும் வேண்டும் என என்னைத்தூண்டினார்.

மன பாரத்தோடு நான் அவனுக்காக ஜெபித்தேன் மேலும் கர்த்தருடைய சுகமளிக்கும் வார்த்தைகளை சொல்லி ஜெபித்தேன். அதிசயமான முறையில் அவன் சுகம் பெற்றான். ஆனாலும் அவன் கர்த்தருக்கு மகிமையை கொடுக்க வில்லை. அதனால் அவனுடைய இதயம் வீங்கியது, சிறு நீரகத்திலிருந்து இரத்தம் கசிந்து  மிகவும் வியாதிப்பட்டான். மீண்டும் கண்ணீரோடு நான் அவனுக்காக ஜெபித்தேன், கர்த்தர் அவனை சுகமாக்கினார். இப்போது அவன் தவறு செய்துவிட்டோம் என்ற குற்றமனப்பான்மை உள்ளது, மனந்திரும்புதலும் உள்ளது. எல்லா மகிமையும் கர்த்தருக்கே உண்டாகட்டும்.

ஜெபம்

நித்திய ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் மரணத்திலிருந்து எங்களை காப்பாற்றுவதற்காக மாமிசத்தில் வார்த்தையாக வந்தத தேவனே உமக்கு நன்றி.  

ஆமேன்.

Sol.Noreen Francis

தானியேல் – II

நாள்: 24-05-2022 – தேவ செய்தி

நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.

யாத் 23:22

இன்று ‘எதிரிகளுக்கு’ ஒரு வித்தியாசமான வரையறையை  வேதத்தில் கண்டேன்.

எதிரிகள் கர்த்தரால் நமக்கு அனுப்பப்படும் தூதுவர்கள். மனிதர்களாகவோ, வியாதி, சுனாமி, வெள்ளம், தோல்வி, வேலையில்லாமை, மன உளைச்சல், பாகுபாடு, பஞ்சம், எதிர்ப்பு என  அவர்கள் எந்த உருவில் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் மூலமாக கர்த்தர் நமக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார். செய்தியை பெற்றுக்கொள்ளாமல் நாம் அதை எதிர்த்தால் நாம் தோல்வி அடைவோம்.  அது வேறு ரூபமாக கூட மாறும்.

வேதத்திலிருந்து இன்னும் அதிகமாக கற்ப்போம்.

ஆதாம் ஏவாளை தேவன் உருவாக்கியபின் அனைத்தும் அவனோடு சமாதானமாய் இருந்தது. கால நிலை, இயற்கை எல்லாமே அவனுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் அவர்கள் பாவம் செய்தபின் அனைத்தும் அவர்களுக்கு எதிரானது. வெறுப்பு, காட்டிகொடுத்தல், குற்றம் சுமத்துதல், பொய், பயம், மறைந்துகொள்வது போன்றவை பாவத்தோடு வந்தது.

நாம் கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்போமானால் அவர் நமக்காக நம்முடைய எதிரிகளோடு யுத்தம் செய்து எல்லாவற்றையும் நம் வாழ்வில் சீராக்குவார்.

அதேவேளையில் அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்படியாவிட்டால் கர்த்தர் நமக்கு எதிராக எதிரிகளை எழுப்புவார். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் கர்த்தரே நம்முடைய எதிரியாக மாறிவிடுவார்.

அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடையதூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார்.

எண் 22:22

இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தது, மனிதகுலத்தின் மீது இருக்கும் முடிவில்லாத கர்த்தருடைய கோபத்தை நீக்கிவிட்டு நம்மை பிதாவோடு ஒப்புறவாக்கத்தான். கர்த்தருடைய கோபத்தை எப்படி தனிப்பது என்பதற்கான ஒரு உதாரணத்தை இயேசு நமக்கு கொடுத்திருக்கிறார்.

அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.

லூக் 23:34

பரலோக பிதாவகிய தேவன் இயேசுவின் இந்த ஜெபத்தை கேட்டார் மேலும் முழு மனித ஜாதியையும் தன்னோடு ஒப்புறவாக்கிக் கொண்டார்.

நம்முடைய நண்பர்களிலிருந்து கூட நாம் எதிரிகளை சம்பாதிக்க முடியும் என்ற முடிவுக்கு நாம் இங்கு வருகிறோம். இது கர்த்தருடைய சித்தமும் கூட. நம்முடைய எதிரிகளை பிதாவோடு ஒப்புறவாக்குகிற மிகப்பெரிய பொருப்பு நம்மிடம் உள்ளது. இதை நாம் எப்படி செய்யலாம்.

எதிரியானவன், கர்த்தரால் நம்மிடம் அனுப்பப்பட்டிருக்கிறான் என்பதை நாம் புரிந்துகொள்வோம்.

  1. எதிரி கர்த்தரிடமிருந்து என்ன செய்தியை கொண்டுவருகிறான் என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.
  2. நம்மை தாழ்த்தி அதை ஏற்றுக்கொள்வோம். நம்முடைய பாவங்களுக்காக மன்னிப்பு கேட்ப்போம்.
  3. ஒரு உண்மையான தேடுதலை மேற்கொண்டு எங்கு, எப்படி நான் தவறு செய்தேன் என்பதை கண்டுபிடிப்போம். பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடுவோம்.

நம்முடைய எதிரி நம் மீது குற்றம் சாட்டியிருக்கலாம். அதுதான் கர்த்தரின் செய்தியாக இருக்கலாம்.

நீங்கள் ஒருவருக்கு பணம் கடனாக கொடுத்திருக்கிறீர்கள் அவரோ பணத்தை திரும்ப தராமல் உங்களை ஏமாற்றிவிட்டார். அவர் உங்களுடைய எதிரியாகிவிட்டார்.

இதில் கர்த்தர் நமக்கு கொடுக்கும் செய்தி என்ன?

  1. பணத்தை திரும்பி கொடுக்க ஆவலாய் இருக்கலாம் ஆனால் கொடுப்பதற்கு அவரிடம் பணம் இல்லை. பணத்தை திருப்பித்தர கர்த்தர் அவரை அனுமதிக்க வில்லை. நம்முடைய முன்னோர்கள் யாரிடமிருந்தாவது பணத்தை திருடியிருக்கலாம், அந்த பணத்தை தேவன் நம் மூலமாக திரும்ப கொடுக்க வைக்கலாம். இப்போழுது நம் எதிரியோடு நாம் கோபம் கொள்வதை தவிற்த்து, அதற்காக கர்த்தருக்கு நன்றி சொல்ல வேண்டும் ஏனென்றால் சாபத்திலிருந்து வெளிவர இது நமக்கு உதவியது.
  2. நம்முடைய பதவி உயர்வுக்காக, , நாம்  கீழ்கண்ட இந்த வசனத்தோடு ஒத்துபோகிறோமா  என்று கர்த்தர் கொடுக்கும் ஒரு சோதனையாகவும் இருக்கலாம்,

உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.

லூக் 6:30

Sr. Angelica AOJ

தானியேல் – II

நாள் 23-05-2022 – தேவ செய்தி

அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

யாக் 5:15-16.

என்னுடைய சாட்சி

2013 ஆம் ஆண்டு, எங்களுடைய உறவினர் ஒருவர் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க எங்கள் வீட்டிற்கு வந்தனர். ஆச்சரியமான ஒரு விஷயத்தை அவர்கள் சொன்னார்கள், இப்போது நாங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கின்றோம், திருமணத்திற்கு ஒருநாள் முன் அந்நிய தேவதைகளுக்கு அல்ல மாறாக இயேசு கிறிஸ்துவிற்கு ஆராதனை வைத்திருக்கிறோம். நற்செய்தியைப் பற்றியும், அநேக சாட்சிகளையும் எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள். எல்லாவற்றையும் ஆச்சரியத்தோடு நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். ஜெப நாள் அன்று நாங்கள் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றோம். அங்கு நடந்த உண்மையான ஆராதனை, ஜெபம் இவைகளை கண்டு என் கண்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது. ஆராதனை முடிந்தபின் சிலர் தனிப்பட்ட முறையில் ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அனைவரும் அமர்த்தப்பட்டனர். என்னுடைய காலில் வலி இருப்பதால் என்னால் தரையில் உட்கார முடியாது என்று நான் சொன்னேன். என்னுடைய பெயர் கேட்டனர், பின்னர் என்னை தரையில் உட்கார உதவினர்.  அந்த சகோதரி எனக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். பல விஷயங்கள் எனக்கு புரியவில்லை ஆனாலும் விசுவாசத்தோடு நான் கேட்டுக்கொண்டிருந்தேன். என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பரிசுத்த ஆவியானவர் என்னை தொட்டுகொண்டிருக்கிறார் என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருந்தனர். ஜெபம் முடிந்த உடன் அனைவரும் எழுந்து நின்றனர், நானும் எவருடைய உதவியும் இல்லாமல் எழுந்து நின்றேன். வலியிருந்த என்னுடைய முட்டியை யாரோ எண்ணெய் தேய்த்து விட்டது போல உணர்ந்தேன்.

அதற்கு பின் நான் அவர்களிடம் சொன்னேன், எனக்கு கடந்த 18 வருடங்களாக முட்டி வலி இருக்கிறது என்று. ஹோமியோபதி, ஆயூர்வேதா, அலோபதி என எல்லா வகை சிகிச்சைகளியும் பயன்படுத்தி விட்டேன். என்னுடைய வீடு எக்ஸ்ரே மற்றும் மருந்துகளால் நிறம்பி உள்ளது. ஆனாலும் எனக்கு விடுதலை இல்லை. மருத்துவர் ஆலோசனை சொன்னார், என்னுடைய முட்டியை மாற்ற வேண்டும், ரூபாய் 500,000 த்தை தயார் செய்யவும் என்று.

எனக்காக மக்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அனைவரும் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னை முற்றிலுமாக சுகமாக்கிவிட்டார். ஒரு நிமிட ஜெபத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்னை சுகமாக்கினார், என்னால் நம்பவே முடிய வில்லை.

2-4களில் என்னுடைய காலில் சக்கரம் கட்டியிருப்பதுபோல நான ஓட ஆரம்பித்தேன். கர்த்தர் எனக்கு புது வாழ்வு தந்தார். நான் பூரண சுகமானேன், இப்படியாக என்னுடைய அறுவை சிகிச்சைக்கு தேவை இல்லாமல் போனது. நடக்கவோ, ஓடவோ, கீழே உட்காரவோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

கர்த்தர் என்னை சுகப்படுத்தினார், மேலும் என்னை டேபிள் டென்னீஸ் விளையாட்டு போட்டியில் பங்கேற்க செய்தார். மிகப்பெரிய அற்புதம் நடந்தது அன்று. கர்த்தர் வசனத்தின் மூலமாக என்னோடு பேசினார்.

அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

மாற்கு 5:34

பரிசுத்த ஆவியின் உதவியால் இந்த வார்த்தை என் வாழ்வில் உண்மையானதை என்னால் காண முடிந்தது.  நானும் கர்த்தருடைய உயிருள்ள வார்த்தைகளை வியாதிய்ஸ்தர்கள் மீது பேசினேன்.  ஜெபத்தின் வல்லமையை என்னால் உணர முடிந்தது.

ஒரு நிமிட ஜெபத்தை கர்த்தர் கேட்டு மிகப்பெரிய காரியங்களை கர்த்தர் செய்கிறார் அதனால் மற்றவருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.

கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.

எரே 17:14

இவ்வுலகில் நமக்கிருக்கும் அனைத்து வியாதிகளையும், துயரங்களை கர்த்தர் தன் மீது சுமந்து தீர்த்துவிட்டார். வலியிலும், தேவையிலும் இருப்பவருக்கு அவர் ஆறுதல் அளிக்கிறார்.

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

சங் 30:2

தேவன் நம்முடைய சரீர நலத்திற்கு மட்டும் அல்ல, நமது சமூக, பொருளாதார, மன, உணர்ச்சி, ஆன்மீக குணங்களுக்கும் கூட இருக்கிறார். அவருடைய உதவிக்காக நாம் அழ வேண்டும்.

2020 ஆம் ஆண்டு, லாக்டவுன் இருந்த நாட்களில் நான் “இயேசுவின் படை அணி” (AOJ) வில் சேர்ந்தேன். சுகமளித்தல் வரத்தின் பள்ளியில் பயிற்சிபெற்றபின், டாக்டர் ஆல்பர்ட் ஜோன்ஸ் மூலமாக சுகமாக்கும் பயிற்சி பள்ளியின் ஒருங்கிணைப்பாளராக நிமிக்கப்பட்டேன். அதுமட்டுமல்லாமல், ஆசிரியராகவும் மாறி பணியாற்றினேன். அதன்பின்னர் தேசிய ஒருங்கிணைப்பாளராக தேவன் என்னை நியமித்தார்,6 மாதமாக நான் பணிபுரிந்தேன். அதற்குபின்னர், தேசிய சுகமளித்தல் பள்ளியின் தலைவராக கர்த்தர் என்னை நியமித்தார்.

இந்த பயிற்சியை அனைத்து மாநிலங்களிலும் துவங்குவதற்கு தேவன் திறந்த வாசல்களை நமக்கு முன்பாக வைக்கிறார்.

என்னை சுகமாக்கிய கர்த்தருக்கு நான் நன்றி சொல்கிறேன். அதுமட்டுமல்லாது, அவர் எனக்கு சுகமளிக்கும் வரத்தை கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி அநேகருக்கு கர்த்தருடைய வல்லமையால் சுகமளிக்க முடிகிறது.

நீங்கள் உடலில் வலிமையாகவும், உள்ளத்தில் தைரியமாகவும் வலியில் பொறுமையாகவும் இருங்கள்.

நம்முடைய உடல் கர்த்தர் வாழும் தேவ ஆலயம் எனவே இதில் நோய் மற்றும் விரக்திக்கு இடம் இல்லை.

அனைவரும் இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படவும், பரிசுத்தமாக்கப்படுவார்களாக. உம்முடைய காயங்களால் நாங்கள் சுகமானோம் என்று இயேசுவே நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம். எல்லா மகிமையும் உமக்கே உண்டாகட்டும், ஆமேன்,

SOL. POONAM BATRA, AOJ

தானியேல் – II

நாள்:20-05-2022 – தேவ செய்தி

என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன். நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று. என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன்.

யோபு 19:15-17.

என்னுடைய சுவாசம் என் மனைவியினால் வெறுக்கப்படுகிறது, மேலும் என்னுடைய தாயின் வற்றிலிருந்து பிறந்தவர்களிடம் நான் கெஞ்ச வேண்டியுள்ளது.

இங்கு யோபு தன்னுடைய தற்போதைய நிலையை விளக்குகிறான். இவ்வுலகில் அநேக வயதான மூத்தவர்கள் இப்படிப்பட்ட நிலையில் தான் வாழ்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு சகோதரி, ஓய்வு பெற்றதிலிருந்து தனியாகத்தான் வசித்துவருகிறார். வாழ்நாள் முழுவதும் குடும்ப செலவிற்கு அவருடைய கணவன் அவருக்கு ஒரு பைசா கூட கொடுக்க வில்லை. அவர் எப்படி எங்கே தன் சம்பாத்தியத்தை செலவுசெய்தார் என்கிறுகூட மனைவிக்கு தெரியாது.

கணவன் மனைவி இருவருக்கு இடையில் இருக்கும் தவறான புரிதலின் காரணமாக அவர்களுடைய குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய மகள், பெற்றோர் இருவரையும் வெறுக்கிறாள். சில வேளைகளில் தாய் மகளை பார்க்கச் சென்றாலும் அவர்களை அவள் துரத்திவிடுகிறாள். பேரப்பிள்ளையோடு தனக்கு இருக்கும் அளவுகடந்த அன்பு இரண்டு நாள் தங்க வைக்கிறது. அப்பொழுதுகூட மகள் தாயை ஒரு அடிமையைவிட கேவலமாக நடத்துகிறாள்.

யோபு ஏன் தன்னுடைய வாழ்வில் இப்படிப்பட்ட மோசமான ஒரு நிலையில் இருந்தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது அவனுக்காக வைக்கப்பட்ட பரீட்ச்சையாகும். இது போன்று நம் வாழ்வில் நடந்தால் நாம் ஏன் இது நடக்கிறது என்று கேட்ப்போம்.

யோபு நம் அனைவருக்கும் ஒரு மாதிரி. யோபுவின் காலத்தில்  மனிதர்கள் சம்பந்தப்பட்ட கர்த்தருடைய வழிகளை விளக்கிச்சொல்ல ஒருவரும் இல்லை.

ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்வில் நடக்கும் அனைத்தையும் நமக்குள் வாழும் இயேசு, பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்கு சொல்லிகொடுக்கிறார், வழிநடத்துகிறார்.

நமக்கு காதுகள் இருந்தால் கேட்க கடவோம்.

 மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரே 17:5

கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

எரே 17:7

நம்முடைய வாழ்வில் நமது நம்பிக்கையின் ஊற்றாக இருப்பவர் நம் தேவன் மட்டுமே. நம் வாழ்வில் நாம் காணும் இவ்வனைத்தும் ஒரு நாள், ஒரு நேரத்தில் நம்மை விட்டு விலகி போகலாம். குடும்பத்தில் பிறந்த குழந்தை எல்லாவற்றிற்கும் தன் பெற்றோரை நம்புகிறது. சமுதாயத்தில் அவன் பார்க்கும் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் மேலும் மற்றவர்களை அவன் சார்ந்து வாழ்கிறான்.

ஆனால் எந்த நேரத்திலும் வாழ்க்கையில், யாராலும் சொல்ல முடியாத நேரத்தில் மனிதர்கள் மீது அந்த குழந்தை வைத்த அனைத்து நம்பிக்கைகளும் உடைந்து போகும். அது நடப்பதற்கு முன்பாக அந்த குழந்தைக்கு தெரிய வேண்டிய உண்மை ஒன்று உள்ளது – எல்லா நம்பிக்கைக்கும் ஊற்றாகவும், எல்லாவற்றையும் வாழ்வில் நமக்கு கொடுக்கவல்லவராக இருப்பவர் கர்த்தர் மட்டுமே.  அதனுடைய பெற்றோரோ, நண்பர்களோ, உறவினர்களோ, படிப்பு, புத்திசாலித்தனம், செல்வங்கள், பதவி, மற்ற அனைத்துமே கர்த்தர் கொடுக்கும் ஒரு கொடையாகும். அவனுடைய வாழ்க்கைகூட கர்த்தர்கொடுத்ததால் அவன் கர்த்தருக்கு கடமைப் பட்டிருக்கிறான்.

பெற்றோரின் பராமரிப்பில் அவன் இருக்கும் அந்த 18 வயதிற்குள் மக்களின் மீதிருக்கும் அவனது நம்பிக்கையானது கர்த்தர் மேல் மாற நாம் சொல்லி கொடுக்க வேண்டும். இதைப் பற்றி அவர்களுக்கு தெளிவாக சொல்லி கொடுக்கப்பட வேண்டும்.  பெற்றோர்கள் இப்படி சொல்லி கொடுத்து வளர்த்த குழந்தைகள் மெதுவாகவும், சீராகவும், சரியான நேரத்தில் தங்கள் வாழ்வின் இலட்சியத்தை நிச்சயம் அடைகிறார்கள்.

ஜெபம்

அனைத்து ஆத்துமாக்களும் கர்த்தர் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பார்களாக, கர்த்தருடைய மகிமை நிறைந்த சிங்காசனம் அவரை நம்புகிறவர்களுக்கு ஒரு பாதுகாப்பான கோட்டையாக இருக்கிறது. கர்த்தருடைய திட்டத்திற்கும் கிருபைக்கும் முன்பாக நாம் எல்லாவற்றையும் எல்லாரையும் ஒப்புகொடுப்போம், ஆமேன்.

–Sr. Angelica AOJ

தானியேல் – II

நாள் 19-05-2022 – தேவ செய்தி


பரலோக நாணயம்
பரலோகத்தின் பொக்கீஷங்களை நாம் எப்படி சம்பாதிக்கலாம்?


ஒவ்வொரு நாட்டிலும்/ராஜ்யத்திலும் நாணயம் உள்ளது. நம்முடைய பிதாவின் பரலோக ராஜ்யத்திலும் நாணயம் உள்ளது. அது என்ன என்று உங்களால் கணிக்க முடியுமா? பரலோகத்தின் நாணயம் ‘அன்பு’. பரலோகத்தில் வசிப்பவர்கள் அன்பு என்னும் நாணயத்தின் மூலமாகத்தான் கொடுக்கல் வாங்கல் செய்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் விலையேறப்பெற்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் வாங்கப்பட்டனர் மேலும் இரட்சிப்பு என்னும் பரிபூரண அன்பளிப்பை பெற்றனர். பரலோகத்தில் கொடுக்கல், வாங்கல் அன்பினால் நிறைவேற்றப்படுகிறது.
ஒரு விசுவாசி தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு பரலோக பொக்கீஷத்தை சம்பாதிக்க முடியும்?
பூமியின் இருக்கும் ராஜ்யத்தில் கூட உண்மையான கிறிஸ்தவர்கள் இந்த நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு இந்த உலகத்தின் பொருட்செல்வம் பயனற்றது.


இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

மத் 6:24.


பரிசேயர்கள் இயேசுவை எப்படியாவது மடக்கலாம் என நினைத்து அவரிடம் கேட்டனர், “இராயனுக்கு வரி கொடுப்பது நியாயமா இல்லையா? அவர்களுடைய கெட்ட எண்ணத்தை புரிந்துகொண்ட இயேசு அவர்களுக்கு பதில் சொன்னார்,


இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

மத் 22:21.


இவ்வுலகில் வசிக்கும் ஒரு நல்ல விசுவாசிக்கு எல்லாவற்றிற்கும் மேலான ஒரு பொருளாக பணம் இருக்கது. கர்த்தர் என்ன கொடுத்திருக்கிறாரோ அதில் திருப்தியாய் இருக்க அவன் அறிந்திருப்பான். உலகபிரகாரமாக செல்வந்தர்களாக இருப்பவர்களைப் பார்த்து அவன் பொறாமைபடுவதும் இல்லை.

கர்த்தர் தங்களுக்கு நியமித்ததை நிறைவேற்றுவது மற்றும் ஆத்தும ஆதாயம் செய்வதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

சங் 37:16.


அழிந்து போகும் இந்த உலகத்தின் செல்வங்களை சம்பாதிப்பது எப்படி என்று இவ்வுலகத்தார் கவலைப் பட்ட்டுகொண்டிருக்கிறார்கள். சாத்தான் அவர்களுடைய கண்களை குருடாக்கிவிட்டான், மேலும் இவ்வுலக செல்வத்தை அடைவதுதான் மகிழ்ச்சியின் மந்திரம் என அவர்களை ஏமாற்றியும் இருக்கிறான்.


இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,

1திமோ 6:17.


உண்மையான விசுவாசிகள் வேதத்தை வாசிப்பது அதன்படி நடப்பது இதுவே அவர்கள் சேர்த்து வைக்கும் பரலோக பொக்கீஷம். அன்பிலும் ஒற்றுமையிலும் ஒருமித்து அவர்கள் வாழ்கிறார்கள், மேலும் தங்களுடைய ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற பரலோக பொக்கீஷத்தின் மீது அவர்கள் கண்கள் நிலைத்திருக்கிறது.


பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்,

1திமோ 6:10.


பரலோக ராஜ்ய பணத்தின் மதிப்பு
அன்பின் வல்லமை அதிகம் அதை தெரிந்தவர்களுக்கே அதன் உண்மை தெரியும். அதன் மூலம் உங்களுடைய குழந்தைகளின் கீழ்படிதலை வாங்க முடியும், கணவருடைய நம்பகத்தன்மையை வாங்க முடியும், உனது மனைவியின் கரிசனையை வாங்க முடியும், உன்னுடைய பெற்றோர்களின் அமைதி, எஜமானனின் கிருபை, உங்களுடைய வேலைகாரனின் விசுவாசம், ஒரு புதிய மனிதனின் நம்பிக்கையைக் கூட நம்மால் வெல்ல முடியும் இந்த அன்பால்.

அன்புக்கு ஒரு காந்த சக்தி உள்ளது, அது அவர்களின் ஆவி மற்றும் அதன் விளைவாக அவர்களின் மனசாட்சியை உயிருடன் வைத்திருப்பவர்களிடம் மட்டுமெ அது செயல்படும்.அதனால் தான் கர்த்தரின் சித்தத்தின்படி அழைக்கப்பட்டவர்களை அவருடைய அன்பு ஈர்க்கிறது. உலக பிரகாரமாக வாழ்ந்து தங்கள் மனசாட்சியை சாகடித்துவிட்ட மக்களின் மீது அன்பு வேலை செய்யாது.


அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மத் 19:21.


ஆனால் விசுவாசிகளாகய நாம் கர்த்தருடைய வருகைக்காக ஆவலோடு காத்திருக்கும் வேளையிலே அன்பின் நாணயத்தை கொண்டு கொடுக்கல் வாங்கல் செய்வோம், இந்த உலக செல்வத்தால் அல்ல.

ஜெபம்


ரலோக பிதாவே, நாங்கள் எப்போதும் பரலோக நாணயத்தைக் கொண்டு பரிவர்த்தனை செய்ய எங்கள் வாழ்வை மாற்றும். பரிசுத்த ஆவியின் வல்லமையை எங்களுக்குள் பொழிந்தருளும். துன்ப துயரத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக இருந்து அவர்களுடைய ஆத்துமாவை கர்த்தருக்காக ஆதாயம் செய்ய கிருபைத்தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.


Sol. Neelam Sharma

தானியேல் – II

நாள் – 18-05-2022 – தேவ செய்தி

அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறார்.

2 சாமு 22:49.

அநேக எதிரிகளை தாவீது தன் வாழ்வில் சந்திக்க நேர்ந்தது. தனக்கு எதிராக எதிரிகள் ஏன் எழுந்திருக்கிறார்கள் எனபது அவனுக்கு தெரியும். அவன் பாவம் செய்த போது தேவன் அறிவித்த தண்டனைகளில் ஒன்று, இவ்வாறாக இருந்தது,

இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி,

2 சாமு 12:10,11

தாவீதின் மகன் அவனுக்கு எதிராக எழுந்த அவனுக்கு பகைவன் ஆனான். தாவீதின் படையை அப்சலோம் திரட்டினான்,  அரண்மனையை விட்டு தாவீதை விரட்டினான், மேலும் தன்னையே ராஜாவாக அறிவித்தும் கொண்டான். தாவீது ராஜா தன் பாவங்களுக்காக மனம் வருந்தி கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்டிருந்தாலும் இஸ்ரவேல் மக்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் வரை அப்சலோமின் அரசாட்சியின் கீழ் இருந்தனர். தாவீதின் அனைத்து பாவங்களையும் தேவன் மன்னித்தார். ஆனால் பாவத்திற்கான தண்டனை அவன் மேல் இருந்தது. தண்டனை காலத்தில் கூட தாவீது கர்த்தரை நாடினான், அவரோ அவனோடு இருந்து அவனுக்கு சகாயம் செய்தார்.

சில காலத்திற்கு பிறகு ராஜ்யபாரம் அவன் கைக்கு வந்தது, இஸ்ரவேலர்கள் மீண்டுமாய் அவன் அரசாட்சிக்கு கீழ் வந்தனர்.

இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து,

2 சாமு 19:41.

அவர்கள் தாவீதின் மேல் உரிமை கொண்டாட தொடங்கினர்.

தாவீதின் திரும்பி வருவதற்கான அழைப்பு பத்து கோத்திரங்களில் இருந்து வந்தது ஆனால் சில தவறான நிர்வாகத்தால், உண்மையான வரவேற்பு யூதாவல் வழங்கப் பட்டது. இது ஒரு புதிய வெளிப்பாட்டிற்கு வழி வகுத்தது, அதாவது நீண்ட காலமாக ராஜ்யத்தில் பிளவை கொண்டு வந்தது. ஆகவே, “பட்டயம் என்றும் உன் வீட்டை விட்டு விலகாதிருக்கும்” என்னும் தீர்க்கதரிசன் வார்த்தை நடைமுறைக்கு வந்தது.

இன்றும் கூட அநேக விசுவாசிகள் சோதனைகள் மற்றும் உபத்திரவங்களுக்கு உள்ளாகிறார்கள், அதன் மீது அவர்களால் வெற்றிகொள்ள முடிவதில்லை, அதற்கான காரணங்களையும் அவர்களுக்கு தெரியாது.

ஒரு தேசமாக இந்தியா பல ஆண்டுகளாக சாத்தானின் அடிமைதனத்தின் மீழ் இருந்து வருகிறது. ஆனால் இப்போது தண்டனையின் காலம் முடிவுக்கு வருகிறது. இயேசு கிறிஸ்து மெதுவாக இந்த தேசத்தை கைப்பற்றுகிறார்.

இது நடக்கும் நேரத்தை கவனியுங்கள்.  இயேசுவின் அரசை உங்கள் பகுதிகளில் நிறுவுவது உங்களின் கடமையாகும். எந்தெந்த அடிமைதனத்தின் கீழ் உங்களுடைய மக்கள் இருக்கிறார்கள்? ஒவ்வொன்றாக அவைகளை துரத்துங்கள்.

தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்;

கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.

2 சாமு 21:1.

உங்கள் தொகுதிகளில் ஏதேனும் வியாதியோ, வரட்ச்சி (கர்த்தருடைய வார்த்தைக்காக) அல்லது மக்களை தொடர்ந்து சித்திரவதைச் செய்கிறதா? அதற்கான காரணத்தை கர்த்தரிடம் கேளுங்கள். அதற்கான பதிலையும் அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்.

2சாமு 21:14.

உங்கள் தேசத்திற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஏதாவது இன்னும் இருக்கிறதா?

கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்குமுன்பாகப் பாடின பாட்டு.

2 சாமு 22:1

இந்தியா விடுதலையின் பாடலை வெகுவிரைவில் பாட போகிறது. அதன் அடிமைத்தனம் முடிவுக்கு வருகிறது. இந்த தேசத்தை ஆண்ட – பாவங்கள், சாபங்கள், பொய் தேவர்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக இந்த தேசத்தை விட்டு ஓடுகிறார்கள். இதிய தேசமே! நீ கட்டப்படுகிறாய், நீ உன் அணிகலன்களை மீண்டும் அணிந்து கொண்டு மகிழ்ந்து நடனமாடுபவர்களோடு நீ நடனமாடுவாய்.

ஆமேன்.

–Sr. Angelica AOJ

தானியேல் – II

நாள்: 15-05-2022 – தேவ செய்தி

நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்: (யோவா 15:16)

நாம் அல்ல அவரே நம்மை தெரிந்து கொண்டார் என்று இந்த வசனத்தின் மூலம் தேவன் சொல்லுகிறார். இந்த உலகத்தின் அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்னரே தேவன் நம்மை தெர்ந்து கொண்டார்.

எபே 1:4 – அவர் நம்மை மட்டும் அல்ல நம்முடைய பெற்றோர்களையும், சகோதர சகோதரிகள், கணவன், மனைவி பிள்ளைகள் என அனைவரையும் தெரிந்து கொண்டார். இப்பொழுது நம்மிடம் இருப்பதெல்லாம் தேவனால் ஏற்கனவே திட்டமிடப்பட்டது. கர்த்தரிடமிருந்து நமக்கு கொடுக்கப்பட்ட கொடைகள் என்று அவைகளை சொல்லலாம். நம்முடைய வாழ்வில் என்ன நடந்தது என்ன நடக்கப்போகிறது என்பதை நம்மை உருவாக்குவதற்கு முன்னமே திட்டம் போட்டு வைத்திருக்கிறார்.

தங்களுடைய கடந்த அனுப்வத்தினால் அநேகம்பேர் மிகவும் கசப்படைகிறார்கள். தேவனோடு அவர்களுடைய உறவு சாதரணமானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட மக்கள் சாத்தானுடைய தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

ஆவியில் மறுபிறப்படைந்த அநேக விசுவாசிகள் கூட இவ்வாறாக பின்வாங்கி போய் விடுகிறார்கள்.

நான் உங்களுக்கு என்னுடைய சாட்சியை சொல்லுகிறேன்.

நான் ஒரு இந்து குடும்பதிலிருந்து வருகிறேன். 26 ஆண்டுகளுக்கு முன் ஒரு சந்தைக்கு போய் இருந்தேன். அது மாலை வேலையாய் இருந்தது. சில கிராமத்து இளைஞர்கள் என்னை நோக்கி தவறான வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்தனர். நான் அங்கிருந்து உடனே வெளியேற நினைத்து, வெளியே செல்லும் வழியை தேடினேன் அது எனக்கு தெரியவில்லை. அங்கிருந்த சில இளைஞர்களை நான் வழி கேட்டேன். வேண்டுமென்றே அவர்கள் எனக்கு தவறான வழியை காட்டினார்கள். நான் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஒரு குரல் கேட்டது, இந்த இளைஞர்களை ஒருபோதும் நம்பாதே, என்று. ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் நான் பின்நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அந்த இளைஞர்கள் என்னை பின் தொடர்ந்து வந்தனர், நான் அங்கிருந்து ஒரு பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்தேன். இயேசுவை நான் ஏற்றுக்கொண்ட பின் அவருடைய கிருபையால் தான் நான் காப்பாற்றப்பட்டேன் எனென்றால் அவர் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த நிகழ்வு நடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நான் நண்பர்கள் மூலமாக இயேசுவைப் பற்றி தெரிந்து கொண்டேன். மூன்று ஆண்டுகள் இயேசுவோடு நான் நடந்த பின், முன்பு கேட்ட அதே குரலை நான் மீண்டும் கேட்டேன். யோவான் 15:16 இல் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு உணமி என்பதை நான் அறிந்து கொண்டேன் – அதாவது இந்த உலகின் அடித்தளம் போடுவதற்கு முன்பாகவே தேவன் நம்மை தெரிந்து கொண்டார், ஆனால் நமக்குத்தான் அது தெரிய வில்லை.

கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் அழைத்திருக்கிறார், மேலும் தேர்ந்தெடுத்திருக்கிறார், எரே 1:5 சொன்னது போல, நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.

எனவே சோதனைகள் வரும்போது ஏமாற்றமடையாதீர்கள் அல்லது நம்பிக்கையை இழக்காதீர்கள் அல்லது மனச்சோர்வடையாதீர்கள் ஏனென்றால் நற்செய்தி  என்னவென்றால் நமது அனைத்தும் கர்த்தருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

ஒரு நாள் உள்ளூர் சந்தையில் பல ஆண்டுகளுக்கு முன் நான் கேட்ட அந்த குரலைப்பற்றி வெளிப்படுத்துமாறு ஜெபித்தேன்.  தேவன் அதற்கு பதிலாக எரே 1:5 மூலமாக என்னிடம் பேசினார்.

என்னுடைய அனுபவத்திலிருந்து நான் சொல்ல விரும்புவது, என்ன நடந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இயேசுவோடு முன்னேறுவோம்.  அவர் நம்மை வழிநடத்துவார். பரலோகத்திற்கு நாம் செல்வதற்கு முன்பாக தேவன் எதை செய்யுமாறு நம்மை பணித்திருக்கிறாரோ அவைகளை செய்து முடிப்போம்.

எங்கள் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து, உம்முடைய வார்த்தையை புரிந்துகொள்ள எங்கள் மனகண்களையும் திறந்துவிட்டதற்காக நன்றி. ஆமேன்.

SOL. RICHA JAIN, AOJ

தானியேல் – II

நாள் 14:05-2022 – தேவ செய்தி

அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு:நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.

லூக் 17:10

நாம் அனைவரும் ஊழியகாரராக இருந்திருக்கலாம் அல்லது ஊழியகாரரை நியமித்த அனுபவம் நமக்கு இருக்கலாம். மற்றவர்களுக்கு ஊழியம் செய்பவன் தான் ஊழியகாரன். ஊழிய காரனுக்கு போதிய சுதந்திரம் கிடையாது, மிக குறைந்த அளவே அவன் தன் சுதந்திரத்தை பயன்படுத்த முடியும். அவர்களுடைய பெயருக்கு ஏற்றாற்போல மற்றவர்களுக்கு அவர்கள் ஊழியம் செய்ய வேண்டும்.

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணத்தின் மூலமாக இயேசு சொல்லுகிறார், ஒவ்வொரு விசுவாசியும் ஒரு ஊழியகாரன் என்று, மேலும் அந்த ஊழியகாரனுக்கு யாரையும், எப்போதும் ஏன் என்று கேட்கும் அதிகாரம் இல்லை மாறாக தன்னுடைய எஜமானன் சொல்வதை தாழ்மையுடன் கேட்டு அதற்கு கீழ்படிய வேண்டும். தன்னுடைய கூலியை தவிற வேறு எதன் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை.

ஆனால் கர்த்தருடைய ஊழியத்தில், ஒரு விசுவாசியானவன் தான் பெற்ற அதிகாரத்தை பயன்படுத்தி பேய்களை ஓட்ட வேண்டும் நோய்களை சுகமாக்க வேண்டும். ஆனால் அந்த அதிகாரத்தை தனக்காக எப்பொழுதும் பயன்படுத்தக் கூடாது.

ஊழியத்திற்கு பிறகு மிகவும் களைப்பாக வீடு திரும்பும் போது நிறை பொருட்கள் அலங்கோலமாக வைக்கப்பட்டிருக்கலாம் ஆனால் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

அநேக அசுத்த ஆவிகளை விரட்டியப்பின் நாம் வீடுவருவோம், வீட்டிலும் சிலர் அசுத்த ஆவி பிடித்தவர்கள் போல செயல்பட்டால் அவர்கள் மீது கோபப் பட நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஒரு ஊழியகாரனின் கடமை எல்லாம்  தன் எஜமானனுக்கு சேவை, சேவை, சேவை மட்டுமே.

தன்னுடைய மரணம் மற்றும் உயிர்ப்பால் இயேசுகிறிஸ்து நம் அனைவரையும் பிதாவின் உண்மையான பிள்ளைகளாக மாற்றியிருக்கிறார். ஆனால் நம்முடைய எஜமானனுக்கு சேவை செய்யும் தாழ்மையான மனம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.  ஒரு எஜமானன் மற்றும் சேவகன் மூலமாக இயேசு நமக்கு ஒரு உதாரணம் கொடுக்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் ஊழியகாரன் அவருடைய எல்லா கட்டளைகளுக்கு கீழ்படிய வேண்டும். புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை பின்பற்றியபின் நாம் ஒரு அபிரயோஜனமான ஊழியகாரர் என்று சொல்ல வேண்டும். உங்களுடைய அடிப்படை தேவையான உணவும் நீர், இருப்பிடம் போன்றவற்றிற்கும் பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சேவகர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் என்று வாசிக்கின்றோம்.

ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.

மாற்கு 13:34

அந்த எஜமானனுடைய வீட்டை கட்டி காப்பதில் இந்த அதிகாரத்தை அவன் பயன்படுத்த வேண்டும். ஆனால் எஜமானனிடம் நம்முடைய நடத்தை எப்பொழுதுமே லூக் 17:10 போல இருக்க வேண்டும்

.

ஒரு முறை ஜெபிப்பதற்காக ஒரு அரசு ஊழியரின் வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அந்த ஓட்டுநர் தனது எஜமானன் மீது கொண்டிருந்த மதிப்பு மரியாதையை கண்டு நான் வியந்தேன். காரின் என் ஜினை நிறுத்திவிட்டு காரின் கதவை திறக்க வந்த விதம், நாங்கள் அவருடைய விருந்தினராக இருந்ததால் அவர் எங்களுக்கும் அவ்வாறே செய்தார். நமக்கு எல்லாவற்றையும் கொடுத்த, நம்முடைய வாழ்க்கையையும் கொடுத்த எல்லாம்வல்ல தேவனுக்கு முன்பாக நாம் எப்படி தாழ்மையுடன் இருக்க வேண்டும். இந்த வாழ்வில் நம்மிடம் இருப்பதெல்லாம் அவர் நமக்கு கொடுத்தவை. நம்முடைய சுவாச காற்றைகூட அவர் எப்பொழுதும் நிறுத்திவிடலாம்.

ஜெபம்

பரலோக பிதாவே, உமக்கு சேவை செய்வதில் பணிவுடனும் மனத்தாழ்மையுடனும் இருக்க எங்களுக்கு கிருபைதாரும். வருடங்கள் கடக்கும்போதும், ஊழியத்தில் அனுபவம் பெருகும்போது உம்மீதுள்ள பயபக்தியை ஒருபோதும் நாங்கள் இழந்துவிடக்கூடாது. எப்போதும் “பிரயோஜனமற்ற வேலையாட்களாக” நாங்கள் இருப்போம்.

SR. ANGELICA AOJ