என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
பிலிப் 4:13.

எல்லாவிதமான சூழ்நிலையிலும் நாம் இருந்தாலும் போதுமென்ற மனதுடன் நாம் இருக்க வேண்டும் பவுல் சொல்லுகிறார். மற்றவர்கள் நமக்கு உதவி செய்ய முற்பட்டாலும், நாம் கர்த்தரையே சார்ந்திருக்க வேண்டும். நம்மை முழுமையாக கர்த்தரிடம் ஒப்புகொடுக்க வேண்டும், கர்த்தர் நம்மில் வித்தியாசமாக கிரியை செய்வார். அவர் நமக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார், “நம்மை ஒருபோது கைவிடமாட்டார், நம்மை விட்டு விலகமாட்டார்”. எபி 12:1விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; நம்மை உள்ளிருந்து திடப்படுத்துகிறார், எல்லாவற்றையும் செய்ய நமக்கு பலன் அளிக்கிறார். நமக்கு விசுவாசம், நம்பிக்கை, ஞானம், தைரியம், மோசேவுக்கு கொடுத்ததுபோல அறிவு மற்றும் திறமை நமக்கு கொடுக்கிறார்.
தான் ஒரு திக்குவாயன் என்பதால் தன்னால் செய்ய இயலாது என்று கர்த்தரிடம் சொல்லுகிறான் மோசே. ஆனால் தேவன் அவனுடைய சகோதரனான ஆரோன் அவனுக்கு பேச்சாளனாக இருக்க அவனை கூட அழைத்துச் செல்லும்படி சொல்லுகிறார். நாம் தயாராக இருந்தால் போது கர்த்தர் எல்லாவற்றையும் நமக்காக செய்து கொடுப்பார்.
வரங்களும், திறமைகளும் எல்லா மக்களிடமும் நாம் காண்பதில்லை. ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கிறவர்கள் என்றால் தேவன் நம்மில் தன்னுடைய வல்லமை, பலம் மற்றும் கிருபையை வெளிப்படுத்துவார். திக்குவாயை கொண்ட மோசேதான் தைரியமாக ராஜாவை பார்த்து உரக்கச் சொன்னான், “என் ஜனங்களை போக விடு.” கர்த்தருடைய ராஜ்யத்திற்கு நாம் தேவை என்றால் தேவன் அதற்கான தகுதியை நமக்கு கொடுப்பார், நமக்கு பயிற்சி அளிப்பார், நம்மை ஊக்கப்படுத்துவார். அவருக்காக நாம் அநேக காரியங்கள் செய்ய முடியும், சிறைப்பட்டோரை விடுதலை செய்ய முடியும், வியாதியில் இருப்பவர்களை சுகமாக்கவும், துக்கப்படுபவர்களை ஆறுதல் படுத்தவும் முடியும். தானியேல் மற்றும் அவரது நண்பர்களைப்போல நம்மை எங்கு போட்டாலும் நாம் சாட்சியாக திகழ்வோம். அனைத்து சோதனைகளையும், துயரங்களையும் சந்திக்க நம்மில் தேவன் தைரியத்தை கொடுப்பார்.
தன்னுடைய அன்றாட தேவைகள் இருந்தபோதும், தன்னை மிகமோசமாக நடத்தியபோதும் கூட பவுல் சந்தோஷமாகச் சொன்ன விஷயம் என்னவென்றால், எதையும் தாங்க என் தேவன் என்னை அனுமதித்திருக்கிறார். பவுலின் வார்த்தைகள், கர்த்தரால் முடியாதது எதுவுமே இல்லை என்ற நற்செய்தியைத்தான் நமக்கு நினைவுபடுத்துகிறது. மத் 19:26, மாற்கு 10:27, லூக் 1:37.
இல் பவுல் சொல்லுகிறார் தேவன் நம்மோடு இருக்கையில் நமக்கு எதிராக நிற்பவன் யார். ரோமர் 8:31
பவுலின் தைரியத்தை அவருடைய எல்லா நிருபங்களிலும் காண முடிகிறது. சோர்ந்து போனவர்களை திடப்படுத்தவும், இன்னல் சூழ்ந்த நிலையில் இருப்பவர்களை உற்சாகப்படுத்தவும்தான் இது எழுதப்பட்டுள்ளது.
கிறிஸ்துவில் நிலைத்தும், அவரோடு இணைந்தும், மேலும் பிதாவினுடை ஐக்கியத்திலும் ஒருவன் இருந்தால் எல்லாவிதமான துன்பங்களையும் நம்மால் சந்திக்க முடியும் என்பதுதான் பவுல் கண்டுபிடித்தது.
..பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
சக 4:6.
சாட்சிகர்த்தர் நல்லவர், அவருடைய வார்த்தை உண்மையுள்ளது. என்னுடைய உடல் இயலாமையால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன், அநேக காரியங்களில் போராட்டத்தையே கண்டேன். மேற்கண்ட வசனத்தை நான் அநேகமுறை உரக்க சொல்லிகொண்டே இருப்பேன். சமையல் செய்வது, சுத்தம் செய்வது, வாகனம் ஓட்டுவது, வீடுகளில் பொருட்களை கொண்டு சேர்ப்பது மற்றும் வெளிநாட்டில் உள்ள உணவகத்தை நிர்வாகம் செய்வதிலிருந்து, சாதாரண வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற எல்லாவற்றிலும் கர்த்தர் என்னை பலப்படுத்தியுள்ளார். எனக்கு உதவியே இயேசுவே, உமக்கு கோடி நன்றிகள் ஐயா.
ஜெபம்
அன்பின் பரலோக பிதாவே எங்கள் வாழ்வில் துன்ப துயரங்களை சந்திக்க எங்களுக்கு கிருபைதாரும். நீரே எங்கள் பலம், உம்முடைய வார்த்தைதான் எங்களை தாங்குகிறது.
ஆமேன்.
Sol.Anju
