தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 28-11-2022

மாற்கு 9 : 38 – 41 ” அப்பொழுது யோவான் அவரை நோக்கி , போதகரே நம்மை பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம். அவன் நம்மை பின்பற்றாதவன் ஆனதால் அவனைத் தடுத்தோம். என்றான். அதற்கு இயேசு அவனைத் தடுக்க வேண்டாம் என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாய் என்னைக் குறித்து தீங்கு சொல்லமாட்டான். நமக்கு விரொதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான். நீங்கள் கிறிஸ்துவனுடையவர்கள் ஆகியிருக்கிறபடியினாலே என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன்பலனை அடையாமல் போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

இதே அர்த்தமுள்ள வசனங்கள் மாற்கு 9 : 40 ல் ” நமக்கு விரோதமாயிராதவன் நமக்கு பட்சத்திலிருக்கிறான் என்றார் ” என்றும்,  லூக்கா 9 : 50 ல் ” அதற்கு இயேசு, தடுக்க வேண்டாம் , நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நாம் , யாரெல்லாம்  தங்களுடைய சொந்த வழிகளில்  இயேசுவினுடைய நாமத்தை பிரசங்கிக்கிறார்களோ, அவருடைய வார்த்தைகளை போதிக்கிறார்களோ சரியோ அல்லது தவறோ  அவர்கள் எல்லோரும் அறுவடை செய்பவர்களாகவோ , இயேசுவினுடைய அறுவடையின் பணியாளர்களாகவோ அழைக்கப்படுவார்கள். கர்த்தர் அவருடைய நேரத்தில் அவர்களை சரிபண்ணுவார். அப்போஸ்தலராகிய பவுல் , பிலிப்பியருக்கு எழுதிய கடிததம்  1 : 15 – 18  ல் குறைந்தபட்சம்  எப்படியோ கிறிஸ்து பிரசங்கிக்கப்படுவதற்காக நாம்  மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று குறிப்பிடுகிறார். 

இதேபோல் நாம் மத்தேயு 12 : 30 ல் ” என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான் , என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் ” என்று காணலாம். இது மேலும் குறிப்பது ,இயேசுவை பின்பற்றாதவர்,  எதிரியின் வல்லமையில் வேர்விடுவதால்  கர்த்தரின் ராஜ்யத்தில் நிற்கவும் முடியாது, அவரை பின்பற்றவும் முடியாது.

நான் காலை ஆராதனைக் குழுவில் இந்த வசனங்களைக் குறித்து தியானிக்கையில் இந்த வசனங்களை பலவித வழிகளில் புரிந்து சிலிர்த்துவிட்டேன். பரிசுத்த ஆவியானவர் மத்தேயு 5 ம் அதிகாரத்தை நினைவூட்டினார்.இயேசு மலையின்மீது பிரசங்கம் பண்ணுகையில் யாரெல்லாம்  உண்மையான, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் என்று கூறுகிறார். ஒருவர் கர்த்தருடன் நிமிர்ந்து நடந்தால் அவர்கள் இயேசுவினுடைய நாமத்தை மறுக்க மாட்டார்கள். மேலும் அவருடைய நாமத்தில்  பயபக்தியை  காட்டுபவர்கள் அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெறுவார்கள்.

சங்கீதக்காரன் சங்கீதம் 15 : 1- 2 ல் சொல்கிறான். ” கர்த்தாவே யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான் ? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான். உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து மனதாரச் சத்தியத்தை பேசுகிறவன்தானே. “

சங்கீதம்  92 : 12 ” நீதிமான் பனையைப்போல் செழித்து லீபனோனிலுள்ள கேதுருவைப் போல வளருவான். “

நான் இந்தியாவைக் குறித்த என்னுடைய விஷனை என் நிறுவன சபையில் பகிர்ந்த போது அவர்களுடைய பொறுப்பின்மையால் பின்னடைந்து அந்த நிறுவன சபையை விட்டு வெளியே வந்துவிட்டேன். ஏனென்றால் ,  வேதவசனங்களுக்கு உடன்படாமல் தங்களுடைய பாரம்பரிய வழிகளை  தொடர்ந்ததன் முலம் கர்த்தரை தேடுவதில் சரியான வழியை தேர்ந்தெடுக்கவில்லை. எப்படியிருப்பினும் ஒருவர் என்னிடம் மேற்கூறிய வசனங்களை பகிர்ந்த போது, நான் அந்த சபையை , எப்படியோ  இயேசுவை பிரசங்கிக்கிறார்கள் என்று ஆசீர்வதித்தேன்.  கர்த்தர் அவர்களுக்கு அறிவுறுத்தி, அவர்களை சரிபடுத்துவார். நான் ” இயேசுவின் பணையணி ” என்னும்  ஊழியத்தை எனக்குத் தந்ததற்காக கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.

ஜெபம்

தந்தையே, உம்முடைய ராஜ்யத்தை விரிவு படுத்துவதற்கும் உம்முடைய நாமத்தை பயபக்தியுடன் சொல்பவர்களை ஆசீர்வதிப்பதற்கும் ,உம்மை மறுக்காமலிருப்பதற்கும் நன்றி செலுத்துகிறேன். நீர் ஒரு நல்ல மேய்ப்பன் இயேசுவே ,உம்மைவிட்டு தொலைந்து போன ஆட்டினை கூட்டி வரவும் அதனால் நாங்கள் எல்லோரும் பாதுகாக்கப்படவும் 

இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. நேகா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 27-11-2022

கர்த்தரின் ராஜ்யம் உங்கள் மத்தியில் இருக்கிறது.

லூக்கா 17 : 21 ” இதோ, இங்கே என்றும் , அதோ அங்கே என்று சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது , இதோ தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே. “

தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வரும் என்று பரிசேயர் இயேசுவிடத்தில் கேட்ட பொழுது  இயேசு மேற்கண்டவாறு கூறினார்.

கதை

ஒரு கிராமத்தில் ஒரு தச்சன் இருந்தான். ஒரு நாள் ஒரு தேவதை வந்து அவனிடம் உன் காலம் முடிந்துவிட்டது. வா நாம் போகலாம் என்று கூறியது. அதற்கு அந்த தச்சன்  , தயவு செய்து எனக்கு கொஞ்ச காலம் கொடு. எனக்கு  கலப்பைகளை  சரிபார்த்து அமைக்க வேண்டியிருக்கிறது. அப்படியானால் தான் இந்த பருவகாலத்தில் உழவர்கள் தங்கள் வயல்களில் உழவு செய்ய முடியும். மேலும் விதைகளை விதைக்க தயாராக முடியும் என்று கூறினான்.

அடுத்த முறை அந்த தேவதை  திரும்பவும் வந்து தச்சனிடம் காலம் முடிந்துவிட்டது செல்லலாம் வா என்று கூறியது. அதற்கு தச்சன்,  இந்த முறையும் எனக்கு கொஞ்ச  காலம் கொடு. மழைக்காலம் வரப்போவதால் வீட்டிலுள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு வீட்டை சரிபார்க்க வேண்டும் என்று அந்த தேவதையிடம் மன்றாடினான்.

திரும்பவும் சில காலம் கழித்து  அந்த தேவதை தச்சனை எடுப்பதற்காக வந்தது. திரும்பவும் அந்த தச்சன் தேவதையிடம் என்னுடைய குடும்பத்திற்கு என் உதவி தேவைப்படுவதால் இன்னும் கொஞ்சம் காலம் வேண்டும் என்று கேட்டான். இது சில வருடங்களாக தொடர்ந்தது. அந்த தச்சன் வயதான பொழுது , இனி மக்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் , அந்த தேவதையை அழைத்து நீ என்னை எடுத்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு அந்த தேவதை நீ இப்போது எங்கே இருப்பதாக நினைக்கிறாய் ?  நீ ஏற்கெனவே பரலோகத்தில் தான் இருக்கிறாய் என்று சொன்னது.

கர்த்தருடைய ராஜ்யம் நம் மத்தியில்தான் இருக்கிறது.

கர்த்தரின் ராஜ்யம் என்றால் என்ன?  எந்த இடத்திலும் கர்த்தருடைய ராஜ்யத்தை காணலாம். ஆனால் இயேசு கர்த்தருடைய ராஜ்யம் நமக்குள்ளே இருக்கிறது என்று சொல்கிறார்.  ஒவ்வொரு நேரமும்  அன்பு , சேவை, நீதி , அமைதி ,பொறுமை, மென்மை,இரக்கம் , நன்மை, பரிசுத்தம் மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் இருக்கும் இடத்தில் கர்த்தரின் ராஜ்யம் இருப்பதைக் காணலாம்.

இயேசு கிறிஸ்து இருக்குமிடமே  கர்த்தரின் ராஜ்யம்.

பரலோக ராஜ்யம் நம்முடைய இருதயத்திலே இருக்கிறது.

1 .  கர்த்தரின் ராஜ்யம் அடிப்படையில் உள்நோக்கி, அதாவது மனிதனின் இருதயத்திற்குள்ளே இருக்கிறது .

2 . கர்த்தரின் ராஜ்யம் , நீங்கள்  சரியான தேர்வுகளை  உருவாக்கினால் உங்களுக்குள்ளே வந்தடையும் .

3 . கர்த்தரின் ராஜ்யம்,  உங்கள் நடுவிலே , மனிதர்களுக்குள்ளே , இயேசு இருக்குமிடத்திலே இருக்கிறது.

ஜெபம்

பரலோகத் தந்தையே, நீர் எங்களுக்குள்ளே வாசம் செய்வதற்காக நன்றி செலுத்துகிறோம். எங்கள் வாழ்வின் எல்லா நேரத்திலும் உம்முடைய உடனிருப்பை உணர்ந்து கொள்ள உதவி செய்யும். எங்களை முன்னின்று வழிநடத்தும். 

இயேசுவின் நாமத்தின் பெயரால் ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. அன்னபு ரெட்டி பாலா ரெட்டி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 26-11-2022

சங்கீதம் 127 : 1 ” கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் , அதைக் கட்டுகறவர்களின் பிரயாசை விருதா. “


எபிரேயர் 3 : 4 ” ஏனெனில் எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும். எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.”


இன்று , பாதுகாப்பாக வாழ்வதற்கும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கும் , ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு அவசியம். மக்கள் எல்லோரும் தங்களுக்கு ஒரு வீடு கட்டுவதற்கு மற்ற எல்லா வழிகளையும் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். கட்டுமானப் பணியாளர்கள் கட்டுமானப் பணியை செய்து வீட்டை உருவாக்குகிறார்கள். ஆனால் கர்த்தர் அவரே கட்டினால் மட்டுமே வீடு கட்டப்படும். நம்மை உண்டாக்கிய கர்த்தர் தான் நமது வீட்டின் திடமான அஸ்திவாரமாயிருக்கிறார்.
நீதிமொழிகள் 24 : 3 – 4 ” வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு , விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவித பொருள்கள்களும் நிறைந்திருக்கும்.
எசாயா 65 : 21 ” வீடுகளைக் கட்டி , அவைகளில் குடியிருப்பார்கள் , திராட்சைத் தோட்டங்களை நாட்டி , அவைகளின் கனியைப் புசிப்பார்கள். “
யார் ஒருவர் முழு இருதயத்தோடு கர்த்தரை நம்புகிறார்களோ , கர்த்தரை மட்டுமே சார்ந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு தன் சொந்த வீட்டைக் கட்டுவதற்குரிய ஞானத்தையும் , புரிதலையும் , அறிவையும் தந்து அவர்கள் அதில் வசிக்கும்படி ஆசீர்வதிப்பார். அவர்கள் தன் சொந்த உழைப்பின் பலனை உண்பார்கள்.
எசாயா 32 : 16 ” வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும். செழிப்பான வயல்வழியிலே நீதி தங்கித் தரிக்கும். “
1 சாமுவேல் 25 : 6 ” உமக்குச் சமாதானமும் , உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும் உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானம் உண்டாவதாக “

கர்த்தர் நமக்கு தரக்கூடிய வீடு அமைதி நிரம்பியதாகவும் எந்த பிரச்சனைகளும் இடையூறும் இல்லாததாக இருக்கும். அங்கே சந்தோஷமும் மகிழ்ச்சியும் எல்லா இடத்திலும் இருக்கும். கர்த்தர் உங்கள் வீட்டை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பார். அவரே உங்கள் வீட்டை கவனித்து, பாதுகாப்பார். ஏனென்றால் நீங்கள் உங்கள் வீட்டை, உண்மையான வாழும் கர்த்தராகிய பாறை மீது உருவாக்கியிருக்கிறீர்கள். கர்த்தரே நமது உண்மையான வீடு. அங்கே அமைதி காணப்படும். மகிழ்வுடன் ஓய்வெடுக்க முடியும் .

ஜெபம்


பரலோகத் தந்தையே, கர்த்தரே கட்டுபவராக இருக்கும்படியான வீட்டைக் கொடுக்கும்படி எல்லா மக்களையும் ஆசீர்வதியும் . அங்கே அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் உம்மையே சேவிக்கவும் உம்மை மட்டுமே ஆராதிக்கவும் ஜெபிக்கிறேன். கர்த்தரிடமிருந்து வரக்கூடிய ஞானத்தினாலும் புரிதலினாலும் பாறையாகிய உமது மீது வீட்டைக் கட்டுவதற்கு எல்லோரையும் ஆசீர்வதிக்கும்படியாக

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. ஹிமாக்ஷி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 24-11-2022

” அப்பொழுது இயேசு , பிதாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே “

லூக்கா 23 : 24

எபிரேயர் 10 : 7 ல் அவர் மேலும் சொன்னது ” தேவனே உம்முடைய சித்தத்தின்படி செய்ய இதோ வருகிறேன். புத்தகச் சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன்  என்றார் “

இந்த வழியில் இயேசு இரண்டாவதை நிறுவுவதற்காக முதலாவதை தொலைக்கிறார்.

முதலில் சொன்னது என்ன?  ஆதியாகமம் புத்தகத்தில் கர்த்தர் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கினார். சில காலத்திற்குப்  பிறகு அவர்களுடைய கீழ்படியாமையினால் , அவர்களை உண்டாக்கின தேவன் , தெய்வீக பிரசன்னத்திலிருந்து அவர்களை பிரித்தார் என்பதை அறிகிறோம். மேலும்  ஆதாம்,  கர்த்தருடைய பிரசன்னத்தில்  நிலைத்திருந்ததால் கிடைத்த  கர்த்தரின் தெய்வீகத் தன்மையை   விட்டு பிரிக்கப்பட்டார் . நாம் வேதாகமத்தை வாசிக்கும் போது  மனித குலத்தை மன்னிக்கும் தெய்வீகத் தன்மையைப் பார்க்கலாம். ஆதாமும் ஏவாளும் எப்போது நன்மை தீமை அறியக்கூடிய பழத்தை உண்டார்களோ , அவர்களுடைய நடத்தை ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் அளவிற்கு சென்றது.

அவர்கள் தங்களுடைய தவறினை ஒத்துக் கொள்ள தயாரில்லை. மேலும் கர்த்தருடைய தெய்வீக மன்னிப்பு  அவர்களிடத்தில் காணப்படவேயில்லை. கர்த்தர் இந்த சுயநலத்தையும் , மனித குலத்தின்  உடல்ரீதியான நடத்தைகளையும்  கவனித்தார் . இது அவர்களது வரவிருக்கும் தலைமுறைகளில் தொடர்ந்தது . ஆனால் கர்த்தர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த  , மனித குலத்தின் தெய்வீக தன்மையை  திரும்பவும்  கொண்டு வர முடியாமல் , அவர்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும்படி வைத்தார்.

காயீன் , ஆபேலிலிருந்து இன்று வரை , தன்னுடைய படைப்புகளிடமிருந்து எதிர்பார்த்த இத்தகைய தெய்வீகத்தன்மையை யாரிடமிருந்தும் பெறுவது கடினமாகவே இருந்தது. நோவா நீதியுள்ள மனிதன். ஆனால் ஒரு சிறிய பிரச்சனைக்காக தன்னுடைய மகனை மன்னிக்கத் தவறி அவனுக்கு சாபமிட்டார். நோவா மதுபானத்தினால்  நிர்வாணமாக கிடந்தார். அவருடைய மகன் காம் அந்த நிலையில் தன்னை பார்த்ததை விரும்பவில்லை. அதன் விளைவாக அவனை மன்னிப்பதற்கு பதிலாக சாபமிட்டார்.

இஸ்ரவேல் மக்கள்

கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களை யாராலும் சாபம் கொடுக்க முடியாது என்பதை  பாலாக்கின் விஷயத்தில் நாம் காணலாம். பாலாக் ராஜா பிலயாம் என்ற தீர்க்கத்தரிசியை அழைத்து , என்னுடைய ராஜ்யத்தின் வழியாக கடந்து செல்கின்ற இஸ்ரவேலர்களை சபிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் கர்த்தர் அவ்வாறு செய்யக்கூடாது என்று பிலயாமை எச்சரித்தார்.

எண்ணாகமம் 22 : 12 ” அதற்கு தேவன் பிலயாமை நோக்கி நீ அவர்களோடே போக வேண்டாம் , அந்த ஜனங்களை சபிக்கவும் வேண்டாம். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார் “. அதன் விளைவாக பிலயாம் தீர்க்கத்தரிசி இஸ்ரவேலர்களை சபிக்க மறுத்தார்.  இதன் அர்த்தம்  கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எல்லாம் வல்ல கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். யாரெல்லாம்  கிறிஸ்துவுக்குள் இருக்கிறார்களோ அவர்களுக்கு   தண்டனை இல்லை, அவர்கள் முழுவதுமாக மன்னிக்கப்பட்டவர்கள்.  கர்த்தராகிய இயேசு தன்னுடைய எல்லா பிள்ளைகளுக்காகவும், அதாவது நாம் மன்னிக்கப்பட வேண்டும் என்றும் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்றும் பிதாவாகிய தந்தையிடம்  மன்றாடுகிறார் . போதகர்கள் நமக்கு எதிராக நின்றாலும் கூட  நம்முடைய கர்த்தர் ,அவருடைய பிள்ளைகளுக்கு சாதகமாக இருப்பார்.

இயேசு சிலுவையில் செய்த தியாகத்தினால் பழைய உடன்படிக்கையை நிராகரித்து  தன்னுடைய சிலுவை மரணத்தினால் நம்முடைய எல்லா சாபங்களையும் தானே எடுத்துக் கொண்டார்.

மத்தேயு 26 : 39 சொல்கிறது”  சற்று அப்புறம் போய் முகங்குப்புற விழுந்து : என் பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும். ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல , உம்முடைய சித்தத்தின் படியை ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்.

 தெய்வீக அன்பை, இரக்கத்தை , மன்னிப்பை நமக்கு காண்பித்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே நமது ஆசீர்வாதம்.

ஜெபம்

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே ,இந்த பூமியில் நாங்கள் இருக்கின்ற  ஒவ்வொரு நொடியையும் உம்முடைய பரிசுத்த பிரசன்னத்தோடு செலவழிக்க கிருபை தாரும். நீர் உம்மையே தியாகம் செய்து, எங்கள் தவறுகளை மன்னித்து நித்திய வாழ்விற்கு எங்களை ஆசீர்வதித்தீர். எங்களிடம் அத்துமீறுகின்ற ஒவ்வொரு நபரையும் நாங்கள் மன்னிக்கும்படி உதவி செய்ய 

இயேசுகிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. குஷி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 23-11-2022

உண்மையான நன்றி செலுத்தல்.


சங்கீதம் 116 : 12 , 13
“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் , அவருக்கு என்னத்தை செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு , கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுவேன். “

நன்றியை வெளிப்படுத்த மிகச் சிறந்த முறை , கலிலேயாவிலுள்ள மரிய மதலேனாள் வாழ்க்கையின் வழியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
மாற்கு 16 : 9 ” வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு , மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.” அதற்குப் பிறகு , இயேசு உயிர்த்தெழுந்ததைப் பார்க்கும் வரை அவரை நிழல் போல் பின் தொடர்ந்தாள். விசுவாசிகளாகிய நாம் கர்த்தரிடமிருந்து நிறைய ஆசீர்வாதங்களை பெற்றிருக்கிறோம். நாமும் அதைப் போலவே செய்ய, எதிர்பார்க்கப்படுகிறோம். இப்போது அவளுடைய உன்னதமான செயல்களை கண்டுபிடிப்போம்.


இயேசு நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக பயணம் செய்து நற்செய்தியை பரப்பினார். அவருடைய 12 சீடர்களும் அவருடன் இருந்தார்கள். அவர்களோடு பெண்களும் இருந்தனர். அவர்களில் மரிய மகதலேனாள், கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும் , சூசன்னாவும் குறிப்பிடத் தக்கவர்கள். இந்தப் பெண்கள் தங்கள் சொந்தக் காரியங்களை விட்டு இயேசுவுக்கு ஊழியம் செய்ய உதவினார்கள். லூக்கா 8 : 1 – 3 ல் காணலாம்.


சில பெண்கள் கலிலேயாவிலிருந்து அவருக்கு ஊழியம் செய்வததற்காக பின் தொடர்ந்து வந்தார்கள். மரிய மதலேனாள் , யாக்கோபின் தாய் மரியாள், செபதேயுவின் மனைவி ஆகியோராவார்.


மத்தேயு 27 : 55 ” மேலும் இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோட வந்திருந்து அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். “
மாற்கு 15 : 41 ” அவருடனே கூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள் “


இயேசு சிலுவையில் அறையப்படுவதை பார்த்துக்கொண்டிருந்த அநேக பெண்களில் மரிய மதலேனாளும் ஒருத்தி.
மரிய மதலேனாள் , சிலுவைக்கு அடியில் நின்று கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி. தவிர, இயேசுவின் தாய் , அவருடைய தாயின் சகோதரி, கிளியோபாஸின் மனைவி மரியா இவர்களும் உண்டு. சிலுவையின் அருகில் இருந்த அவருடைய ஒரே ஒரு சீடர் யோவான்.


மத்தேயு 28 : 1 ” ஓய்வு நாள் முடிந்து , வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் , மகதலேனா மரியாளும் கல்லறையை பார்க்க வந்தார்கள் “
மத்தேயு 28 : 6 ல் தேவதூதர்கள் , பயப்படாதீர்கள் அவர் சொன்னபடியே உயிர்த்துவிட்டார். சீக்கிரமாய் போய் மரித்தோரிடமிருந்து எழுந்தார் , அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்கு போகிறார்” என்று சொல்வதைக்கேட்டார்கள் .
என்று சொல்லப்பட்டிருக்கிறது.


யோவான் 20 : 11 – 16 வரையுள்ள வசனங்களில் மரிய மதலேனாள் அழுவதைக் காண்கிறோம். அவள் திரும்பிப் பார்த்தபோது இயேசுவைக் கண்டாள். அவரை தோட்டக்காரர் என்று நினைத்து , ஐயா அவரை நீர் எடுத்துக் கொண்டு போனது உண்டானால் அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக் கொள்வேன் என்று சொன்னாள். இயேசு உடனே அவளை நோக்கி மரியாளே என்றார். உடனே அவள் ” ரபூனி” என்றாள். அதற்கு இயேசு ,நான் என் பிதாவினிடத்திற்கு திரும்பி போகிறேன் என்று என் சகோதரரிடத்தில் போய் சொல் என்றார்.


அவர்கள் மட்டுமே இயேசுவின் சீடர்களிடம் அவரின் உயிர்ப்பை பற்றி சொல்ல மகிழ்ச்சியுடன் ஓடியவர்கள். மத்தேயு 28 : 8

சாட்சி


கர்த்தர் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயங்களையும் அற்புதங்களையும் செய்துள்ளார். ஆனாலும் நான் அவருக்காக செய்தது கடுகளவு தான்.

ஜெபம்


இரக்கமுள்ள தந்தையே, மரியமகதலேனாளைப் போல உம்மை பின்பற்றவும் , எங்களது சிலுவைகளை சுமக்கவும் , நீரே எங்கள் மீட்பர் , உயிருள்ள கர்த்தர் என்று மற்றவர்களுக்குச் சொல்லவும் உதவி செய்யும் .
ஆமென்.

Sol. விக்டி மிதிலா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 22-11-2022

” இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் ”

சங்கீதம் 127 : 4 

நாம் எப்பொழுதெல்லாம் இந்த உலகத்தின் ரீதியில்  பரம்பரைச் சொத்தைப் பற்றி  நினைக்கிறோமோ , அப்பொழுது நமக்கு நினைவில் வருவது நிலம், ஒருசில பொருள் ஈட்டக்கூடிய  சொத்துக்கள் , நகைகள் மற்றும் பணம். நாம் பரம்பரை சொத்தாக எதைப் பெறுகின்றோமோ அவை சம்பாதித்தோ அல்லது  உழைத்தோ பெற்றவை அல்ல.  நாம் வாரிசுதாரராக இருப்பதனால் தான் அவற்றைப் பெறுகிறோம்.  இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் , நம் அப்பாக்களும் தாத்தாக்களும் உழைத்து , வியர்வை சிந்தி சம்பாதித்த சொத்துக்கள் , அவற்றிற்கான  நேரம் வரும்போது நம்மிடம் வந்து நாம் அதற்குரிய வாரிசுதாரர்களாவோம். இது ஒரு சிறந்த பரிசு, உடைமை. நமக்கு என்ன இருக்கிறதோ, நாம் ஏற்கெனவே என்ன சம்பாதித்து வைத்திருக்கிறோமோ,  அதனுடைய மதிப்பை அதிகப்படுத்துவதற்கு மட்டுமே இவை நிற்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை முன்னேற்றமான ஒரு நிலைக்கு கொண்டு சென்று நம்முடைய சுமைகளை குறைக்க சாத்தியமாகிறது.

இப்போது நாம்  இந்த பரம்பரை சொத்தின்  சூழலை பயன்படுத்தும் போது  சங்கீதம் 127 : 4 ல்  நமது குழந்தைகளின் முக்கியத்துவத்தை இது  மாற்றுகிறது. 

நான் இந்த வசனத்தை தியானிக்கும்போது கர்த்தர் ஒரு அற்புதமான உணர்தலை கொடுத்தார்.  கர்த்தர் பரலோகத்திலிருந்து நேரடியாக தந்த உங்களது பிள்ளைகள்,   தொடவும் உணரவும் கூடியதுமான பரிசு என்பதை உணர்ந்தீர்களா? நீங்கள் பரலோகத்திலிருந்து நேரடியாக  தங்கத்தையோ வெள்ளியையோ பெறவில்லை என்றாலும் கர்த்தர் தம்முடைய படைப்புகளின் வழியாக அவற்றை வழங்குகிறார். ஆனால் குழந்தைகள் தாயின் கருவயிற்றில் உருவாகுமுன்னரே கர்த்தரால் தெரிந்து கொள்ளப்படுகின்றனர். அவர்கள் நேரடியாக கர்த்தரிடமிருந்து வந்தார்கள் என்பதை இது நிரூபிக்கிறது.

நாம் இப்போது, நமது பிள்ளைகள் எல்லாம் நமது பரம்பரை சொத்து , அதாவது அவர்களைப் பெற நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நாம் இதை மனதில் நிறுத்தி , நான் உங்களுக்கு , நமது பிள்ளைகளுக்கு விதைக்க வேண்டிய  3 அணுகுமுறை அல்லது சிந்தனைகளை முன்வைக்கிறேன்.

1 .  பிள்ளைகள் எல்லாரும் பரம்பரை சொத்து. எனவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்:

பரம்பரைச் சொத்து எப்போதும்  நமது முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட  செல்வமாக இருக்கிறது. இது எப்போதும் ஆசீர்வாதம் தான். நம்  ஒவ்வொருவருடைய மனதும், நமது பரம்பரைச் சொத்து நமது ஆசீர்வாதம் தான் என்பதை மகழ்வுடன் ஏற்றுக் கொள்கிறது. நாம் அதை வெறுக்கவோ , தூர எறியவோ செய்யமாட்டோம்.

நீதிமொழிகள் 10 : 22 சொல்கிறது ” கர்த்தரின் ஆசீர்வாதமே ஐஸ்வரியத்தை தரும், அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். “. எனவே நமது பிள்ளைகள் மீதான நமது அணுகுமுறை எப்போதும்,  அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ,

அவர்கள் துன்பங்களை கூட்டமாட்டார்கள் என்பதை நோக்கியே இருக்க வேண்டும்.   தற்போதைய நிதிநிலைமையினாலோ, சமூக கட்டுப்பாடுகளினாலோ அல்லது பாலின ரீதியாலோ நமது பிள்ளைகளை நாம்  வெறுக்கக் கூடாது.  அவர்கள் விலை மதிப்பற்றவர்கள் , வெறுக்கப்படக்கூடியவர்கள் அல்ல.

 2 . நம்முடைய பரம்பரை சொத்து  பாதுகாக்கப்படவேண்டும்:

நம்முடைய முன்னோர்கள் முதன்மையான ஒரு இடத்தில் சிறிது நிலம் தந்ததாக கற்பனை செய்து கொள்வோம். யாராவது ஒருத்தர் ஆந்த நிலத்தில் சில சென்டிமீட்டர் இடத்தை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?

இஸ்ரேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நிலத்தை சொந்தமாக்கவும் , மாசுபாட்டிலிருந்து அல்லது ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கவும்  அதற்குரிய வழியை கர்த்தரிடம் கேட்டார்கள். கர்த்தர் அவர்களுடைய எதிரிகளை அவர்களுடைய நிலத்திலே  முற்றிலுமாக அழித்து ஒழிக்க   வேலை செய்யும்படி  கேட்டார். இந்த அணுகுமுறை தான், என்ன விலை கொடுத்தாகிலும் உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் எதிரிகளை முற்றிலுமாக அழித்து நிர்மூலமாக்க வேண்டும்.  என்னால் எப்படி முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.  அவற்றை கர்த்தரின் கவசத்தின்  மேல் வைத்து பரிசுத்த ஆவியையும் கர்த்தருடைய வார்த்தையையும் வாளாக பயன்படுத்த வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார்.

3 . பரம்பரைச் சொத்து முதலீடாக மாறுவது அவசியம்:

நமது பரம்பரைச் சொத்து வளரவிலலையென்றால் அது பயனற்றதாகிவிடும். திரும்பவும் கற்பனை செய்யலாம். உங்களுடைய அப்பா உங்களுக்கு ஒரு லட்சம் அமெரிக்கன் டாலர் தருகிறார் . அவற்றை நீங்கள் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டால்  அது பயனற்றதாகிவிடும்.  ( தற்போதைய பண வீக்கத்தை கருத்தில் கொண்டால் )  பணத்தின் மதிப்பு காலப்போக்கில் குறைந்து விடும். அதை நீங்கள் வங்கியில் செலுத்தினால் கூட  சிறிதளவு வட்டியாவது சம்பாதிக்கலாம். அதுபோலவே உங்கள் பிள்ளைகளும் பரலோக ராஜ்யத்தின் முதலீடாக மாறவேண்டும்.  கர்த்தருடைய வழிகாட்டுதலோடு முதலீடு செய்யுங்கள். எந்த செல்வாக்கு மிக்க களமாக  இருப்பினும் , அவர்கள் உற்பத்தி செய்பவர்களாக , பலனளிப்பவர்களாக மாற, அவர்களுக்குத் தேவையான எல்லா வாய்ப்புகளையும், கருவிகளையும், அதிகாரங்களையும் கர்த்தர் அவர்களுக்காக நியமிப்பார். இதன்படி தியானிக்கும் போது கர்த்தர் எனக்கு திறமையைக் குறித்த உவமையை நினைவுபடுத்தினார். பெற்றோர்களாகிய  நாம் பிள்ளைகளுக்கு பணிப்பெண்ணாகவே இருக்க வேண்டும் என்று இந்த உவமை சொல்கிறது. நம் பிள்ளைகளின் உற்பத்தி திறனை 10 மடங்கு அல்லது 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அவர்களுக்கு திறமைகளை புகுத்தி , அவர்களுடைய களத்தில் அவர்கள்  சிறந்தவர்களாகவும் , மதிப்புமிக்க சொத்தாகவும்  உருவாக்க வேண்டும். அவர்கள்  தேவனுடைய ராஜ்யத்திற்காக சுரண்டல்களை செய்து  திரும்பக் கொண்டுவந்து கர்த்தருக்குத் தருவார்கள். ஏனென்றால் அவர்கள் கர்த்தரால் நமக்கு பரம்பரைச் சொத்தாக தரப்பட்டவர்கள். ஆனால் நாம் இதைச் செய்யாவிட்டால் மத்தேயு 25 : 27 ல் சொல்லப்பட்டபடி வங்கியில் செலுத்த வேண்டும். வங்கிகளெல்லாம் நிர்வகிப்பதற்கும் சொத்துக்களை அதிகரிப்பதற்கும் , சொத்துக்களை பாதுகாப்பாக வைப்பதற்கு உள்கட்டமைப்பு வசதி கொண்டுள்ள , பொதுவான  அதிகாரமுள்ள நிறுவனங்கள் ஆகும்.

கர்த்தரின் உடலாகிய சபையும் ஆவிக்குரிய தலைவர்களும் வங்கிகளாகும்.  குறைந்தது நீங்கள் செய்யக்கூடியது , சபையால் பாதுகாக்கப்பட்ட ஆவிக்குரிய அதிகாரத்தின் கீழ் அவர்களைக் கொண்டு வருவது தான் .  கண்டிப்பாக இவர்கள் வட்டி தருவார்கள்.

இந்த அணுகுமுறை நம் மனதில் வந்தால் , நம் பிள்ளைகள் கர்த்தரிடமிருந்து வந்த பரம்பரைச் சொத்து என்பதை பார்க்கலாம்.

கடைசியாக சங்கீதம் 127 : 4 , 5 ல் உள்ள வசனங்கள் பிள்ளைகளை அம்புக்கு ஒப்பிடுகின்றன. ஏன் அம்புகள்? கர்த்தர் இதற்கும் என் கண்களை திறந்தார்.

எபேசியர்  6 : 10 – 18 ல் கர்த்தருடைய கவசத்தின் விளக்கங்களை காணலாம். ஆனால் நம்முடைய தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும் , நம்முடைய ஆவிக்குரிய போராட்டத்திற்காகவும் தான்  இவையெல்லாம் என்பதை கவனிக்க வேண்டும்.  கர்த்தர் பெருக்கத்தின் தேவன்.

அவர் எப்போதும் நம் பிரதேசங்களையும் எல்லைகளையும் விரிவுபடுத்த விரும்புகிறார். ஆனால் ஒரே நேரத்தில் நம்மால் எல்லா வாயில்களிலும் , நிலைகளிலும் பணியமர்த்த முடியாது. நம்மால் ஒரு வாளிலுள்ள ஒரு ஆரத்தால் மட்டுமே நம் எதிரியை தாக்க முடியும். ஆனால் நம்மிடம் அம்பு இருக்குமேயானால் தூரத்தில் நின்றால் கூட  எதிரியை தாக்க அதை பயன்படுத்தலாம்.  தூரத்தில் உள்ள நம் எல்லைகளை பாதுகாக்க ஆயுதங்கள் தேவைப்படும் போது அம்புகளே சரியான ஆயுதமாகும். அம்புகள் புறக்காவல் நிலையமாக மாறும். மேலும் கர்த்தர் நியமித்த திசையில் கர்த்தருடைய ராஜ்யத்தை விரிவாக்கும்.

Sol. பால்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 21-11-2022

” உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம் , அடிக்கப்படும் ஆடுகளைப் போல எண்ணப்படுகிறோம். “

ரோமர் 8 : 35

மேற்கண்ட வசனம், உண்மையான விசுவாசிகள் சவால்கள் இல்லாமல் வாழவே முடியாது என்று கூறுகிறது. கர்த்தரை விசுவசிக்கிற ஒவ்வொருவரும் பலவிதமான குழப்பங்களை சவால்களை தங்களுடைய வாழ்க்கையில் எதிர் கொள்கின்றனர். கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது என்பது , உங்களுடைய சிலுவையை சுமந்து கொண்டு இயேசுவுக்கு பின்னால் செல்வதாகும்.

லூக்கா 9 : 23 சொல்கிறது ” ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக் கடவன். ” இதன் அர்த்தம் உங்களை நீங்கள் தியாகம் செய்வதாகும்.

 நமக்கு முன்பாக இரண்டு வழிகள் இருக்கின்றன.

மத்தேயு 7 : 13 – 14  சொல்கிறது ” இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசியுங்கள் , கேட்டுக்குப் போகிற வாசல்விரிவும் , வழி விசாலமுமாயிருக்கிறது. அதன் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் , வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். “

இடுக்கமான பாதையே வாழ்க்கையை  வழிநடத்துகின்ற பாதை. இடுக்கமான பாதை நடப்பதற்கு கடினமான பாதை.    இது மக்களை மன்னிக்க  கோருகிறது.  மக்களுடன் பழகும் போது, பல விஷயங்களை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நமக்கு பொறுமை தேவைப்படுகிறது. நாம் மக்களை அன்பு செய்வது அவசியமாக  இருக்கிறது.  சுயநலமில்லாமல் அவர்களுக்கு உதவி செய்வதும் , அவர்களை ஆசீர்வதிப்பதும் அவசியமாயிருக்கிறது. இதுவே நாம் ஒவ்வொரு சூழ்நிலையிலும் விசுவாசத்தோடு நடக்க வேண்டிய விசுவாசிகளின் பாதையாகும் . கர்த்தரின் அன்பால் நாம்,  மக்களை மன்னிப்பதற்கும், அவர்களை அன்பு செய்வதற்கும், நமக்கு உண்மையில் கர்த்தரின் கிருபை தேவை.

அகலமான பாதை நடப்பதற்கு எளிதான பாதையாகும்.  அதற்கு கர்த்தரின் பலமோ கிருபையோ நமக்கு தேவையில்லை. இது மிகவும் வசதியான பாதை. நாம் என்ன பாதையை தெரிந்தெடுக்க வேண்டும் என்பது முற்றிலுமாக நமது முடிவு. மிகச் சிலரே இந்த முடிவை தெரிந்தெடுக்கிறார்கள். யாரெல்லாம் குறுகலான பாதையை தெரிந்தெடுக்கிறார்களோ  அவர்கள் சாந்தகுணம் உள்ளவர்களாகவும்,  கனிவானவர்களாகவும் இயேசுவை பின்பற்ற சிலுவை சுமப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

கர்த்தருக்கு எந்த நிபந்தனையுமில்லாமல் கீழ்படிய வேண்டும்.  அவர்கள் கர்த்தருடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேட முயற்சிக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ,துன்புறுத்தப்பட்டாலும் கர்த்தர்மீதுள்ள அன்பிற்கு, அது ஒரு பொருட்டே அல்ல.

ஜெபம்

அன்பு தகப்பனே , உமது பாதையில் நடக்கவும் உமக்கு கீழ்படியவும் எங்களுக்கு உதவி செய்யும். உமது விருப்பத்தின்படியே எங்களது வாழ்க்கையில் நடக்கட்டும். பொறுமையுடன்  ஒவ்வொருவருக்கும் அன்பு காட்டவும் , எப்போதும் விசுவாசத்துடன் இருக்கவும்

இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. மல்கீத்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 20-11-2022

” கர்த்தருக்கு காத்திரு , அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். திடமனதாயிருந்து , கர்த்தருக்கே காத்திரு. “

சங்கீதம் 27 : 14

மேற்கூறிய வசனம் தாவீதின் சாட்சியம்.  அவரது அனுபவங்களுக்குப் பிறகு நமக்கு ” கர்த்தருக்காக காத்திருங்கள் ” என்று உறுதியளிக்கிறார். ஆம்  தாவீது தன்னுடைய பிர்ச்சனைகளில் நீடிய பொறுமையுடன் சகித்த பிறகு , கர்த்தரிடமிருந்து பலத்தை பெற்றார்.  கர்த்தருக்காக காத்திருத்தல் என்பது , நாம் கர்த்தருடைய வாசலில்  நம்முடைய ஜெபங்களால் அவருடைய  காலடியில் பணிவுடன் காத்திருக்க வேண்டும் என்பதாகும். நாம் அப்படி காத்திருக்கும்போது அவர் நம்மை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்புவார்.  நம்முடைய விசுவாசம், பொறுமை,பணிவு, சாந்தம், நீடியபொறுமை, அவருடைய கட்களைகளை பின்பற்றுதல், இறுதிவரை சகித்தருத்தல் போன்றவற்றை கர்த்தர் வேண்டுகிறார்.  தன்னுடைய வாக்குறுதிகளை ஒருபோதும்  தவறவிட மாட்டார்.

இந்த வசனம் மேலும் நமக்கு சொல்லி  உபதேசிப்பது ,  “நல்ல தைரியத்துடன் இருங்கள்” என்பதாகும். நாம் இயேசுராஜாவின் படை வீரர்கள். எனவே அவர் நம் இருதயத்தை பலப்படுத்துவார். நாம் கர்த்தருக்கு காத்திருந்தால் நாம் கண்ணால் காண முடியாத , அவர் நமக்காக வைத்திருந்த  நிறைய  அனுகூலமானவைகளை  ஆசீர்வாதங்களை , அவருக்காக காத்திருக்கிறவர்கள்  பெற முடியும்.

1 கொரிந்தியர் 2 : 9 ” தேவன் தம்மில் அன்புகூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை , அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. “

 நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் உலகில் இருப்பவர்களைக் காட்டிலும் பெரியவர். நாம் கர்த்தருடைய முழு கவசத்தினால் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம்.

கர்த்தர் யோசுவாவிடம், தன்னுடைய எதிரியின்  முகத்திற்கு முன்  பலமாகவும் தைரியமாகும் இருக்கும்படி கட்டளையிட்டார்.

யோசுவா 1 : 6

”  பலங்கொண்டு திடமனதாயிரு . இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்கு பங்கிடுவாய். “

பலத்துடனும் தைரியத்துடனும் இருக்க வேண்டும் என்பதற்கு அர்த்தம்,  நம் உண்மையான பலத்தின் ஆதாரமே கர்த்தரில் நம்பிக்கை வைப்பதுதான். நம்முடைய விசுவாசம், கர்த்தரிடத்தல் நமக்குள்ள தனிப்பட்ட உறவு , நமக்கு நம்பிக்கையையும், முழுமையான உணர்வையும்  தருகிறது. பாதுகாப்பு, சகிப்புத்தன்மையும் இருந்தால் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை பொருட்படுத்தாமல் இறுதியில் வெற்றி நமக்குத்தான் என்பதை தெரிந்து கொள்வோம். நாம் வெற்றியாளர்களாக நம்மை பார்க்க முடியும். நாம் நம்முடைய கஷ்டத்தைக் குறித்து முணுமணுக்க மாட்டோம். ஏனென்றால்  நீதிமொழிகள் 4 : 23 சொல்கிறது ” எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள் , அதனிடத்திலிருந்து ஜீவ ஊற்று புறப்படும்.”

நமது இருதயம் இயற்கையிலே வஞ்சிக்கபட்டு  , ஏமாற்றப்படுகிறது.  எனவே கர்த்தருடைய ஆவியானவரால் அது விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். இந்த உலகமும் அதன் பாவ காரியங்களும் நம்முடைய இருதயத்திலிருந்து பிரிக்கப்பட வேண்டும். நாம் கர்த்தருடைய  வார்த்தைகளினால் நம்மை  நிரப்புவதாலும் , அவருடைய வார்த்தைகளை  தியானிப்பதாலும் மட்டுமே இது சாத்தியமாகும். பிறகு நம்முடைய பழைய இயற்கையான சுபாவமான கெட்ட கனிகள், புதிய சுபாவத்தால் மாற்றப்படுகின்றன. அதுதான் பரிசுத்த ஆவியின் கனிகள்.

கர்த்தர் விசுவாசிகளின் இருதயத்தை தயார்படுத்துவார். கர்த்தர் நம் இருதயத்தை பலப்படுத்தி நமக்கு தைரியத்தை தருவார். உலகம் ,நாம் கீழ விழவேண்டும் என்று எதிர்பார்க்கும் போது , ஒரு காலத்தில்  சிறகை இழந்த கழுகு மீண்டும் தன்னுடைய சிறகுகளை வளர்த்தது போல , கர்த்தர் நாம் மீண்டும் உயர்வதற்கு காரணமாக இருப்பார். நம்முடைய அதிகமான பயங்கள் விலகிவிடும். நம்முடைய இருதயம் மகிழ்ச்சியினால் வளர்வதை உணரலாம். ” ஆனால் கர்த்தருக்காக அவர்கள் காத்திருந்தால் மட்டுமே அவர்களுடைய பலத்தை புதுப்பிப்பார். கழுகுகளைப் போல தன் சிறகுகளுடன் உயரத்தில் பறப்பார்கள். அவர்கள் ஓடுவார்கள். சோர்வடைய மாட்டார்கள். நடப்பார்கள். மயக்கமடைய மாட்டார்கள்.

ஜெபம்

பரலோகத் தந்தையே, தாவீதைப் போல துன்பங்களின் முகத்தைப் பார்க்கும் வேளையில் உம்முடைய நேரத்திற்காக  காத்திருக்கும் பொறுமையைத் தாரும். எங்களுடைய நம்பிக்கையை வளர்க்கவும் , உம்மில் விசுவாசம் கொள்ளவும் , உம்முடைய கட்டளைகளை பின்பற்றவும் எங்களுக்கு உதவி செய்யுமாறு

இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. ஜிஜி ஜேக்கப்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-11-2022

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாக இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.”(ஆதியாகமம் 1 : 1 – 4)

இந்த வசனத்தை நீங்கள் வாசிக்கும் போது எப்படி உணருகிறீர்கள்? ஏதாவது ஒன்று உங்கள் இதயத்தின் ஆழத்தில் செல்கிறதா? ஆம். என்னைப் பொறுத்தவரை  நான் இந்த வசனத்தை வாசிக்கும்போது எனக்கு இதிலிருந்து நிறைய பதில்கள் கிடைத்தன. கர்த்தர் உண்டாக்கினார். இவர் எல்லாவற்றையும் உருவாக்கின தேவன். நீங்கள் நம்புகிறீர்கள்  எனக்குத் தெரியும். சரிதானே? ஆனால் இங்கு நீங்கள் , கர்த்தர் தன் வார்த்தையை பயன்படுத்தி எவ்வாறு உண்டாக்கினார் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம். அவர் தன்னுடைய வார்த்தையை பயன்படுத்தி அதை உருவாக்கினார்.  இங்கு அவருடைய வார்த்தையின் வல்லமையை பார்க்க முடியும்.

யோவான் 1 : 1 “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது.”

இப்போது இந்த வசனத்தில்  வார்த்தை தேவனாக இருந்ததை காணலாம். வேதவசனங்களை கவனமாக வாசிக்கும்போது ,  கர்த்தருடைய  மக்கள் அவருடைய  பலவிதமான சந்திப்புக்களை காணலாம். விசுவாசத்தின் தந்தையான ஆபிரகாமைக் காணும் போது , ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைகளை கேட்டார். மோசே கர்த்தரை எரியும் புதரின் வடிவத்தில் சந்திக்கிறான். யாக்கோபிற்கு தேவதூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமான கனவு வந்தது. சாமுவேல், கர்த்தர் அவனுடைய பெயரைச் சொல்லி அழைத்ததைக் கேட்டான். இதைப் போல இன்னும் நிறையவற்றைப் பார்க்கலாம்.

ஆனால் இங்கே உங்களுக்காக ஒரு கேள்வி. கர்த்தருடனான சந்திப்பு உங்களுக்கு எப்படி இருந்தது?

நாம் பழைய ஏற்பாட்டை பார்க்கும்போது, மக்கள் மோசேயுடன் இருந்த நாட்களில் இடி முழக்கத்தின் வழியாகவும்  எக்காளச் சத்ததின் வழியாகவும்  கர்த்தருடைய வார்த்தையைக்  கேட்டு பயந்தார்கள். புதிய ஏற்பாட்டில் நாம் வாழும் வார்த்தையை பார்க்கிறோம். அவருடைய பெயர் இயேசு. இயேசுவின் பெயர், எல்லா நாமத்திற்கு மேலாக உயர்ந்தது.

நாம் ஜெபிப்பதற்கும், ஆராதிப்பதற்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை போலவே கர்த்தருடைய வார்த்தையை வாசிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நம்பில் எத்தனை பேர் நம்புகிறோம்?

2 திமோத்தேயு 3 : 16 – 17 ” வேத வாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினாலே அருளப்பட்டிருக்கிறது.தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக , அவைகள் உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும் நீதியை படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது. ”  இந்த வசனங்களில் ,  கர்த்தர் மனிதனை  உண்டாக்கியபோது கர்த்தர் தன்னுடைய ஆவியை அவனுக்குள் கொடுத்ததைப் போலவே , எல்லா வேத வசனங்களும் கர்த்தருடைய ஆவியினாலே எழுதப்பட்டது.

ஆதியாகமம் 2 : 7

” தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமா ஆனான். “

கர்த்தருடைய வார்த்தையை நாம் வாசிப்பது எல்லா விசுவாசிகளுக்கும் மிகவும் முக்கியமானது.  நீங்கள் அதிகமாக  வாசிக்கும்போது  நீங்கள் உங்கள் ஆத்துமாவுக்கு அதிகமாக உணவளிக்கிறீர்கள். உங்கள் எண்ணங்களை கர்த்தரின் வார்த்தையால் நிரப்புங்கள். அதை உங்கள் இருதத்தின் ஆழத்தில் பதியுங்கள். அப்போது உங்களது வாழ்க்கை எவ்வளவு மாற்றப்படுகிறது, உங்களது சிந்தனைகள் எவ்வளவு புதிப்பிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். உங்களிடம் வாள் இல்லாவிட்டால் போர்க்களத்தில் உங்கள் எதிரியை எப்படி தாக்க முடியும்? இன்று நீங்கள்  போர் தொடுக்க  முடிவு செய்து  , கர்த்தரின் வார்த்தையைக் கொண்டு உங்கள் எதிரியை வீழ்த்த தொடங்குங்கள். கர்த்ருடைய வார்த்தையை வாசிப்பதற்கு சோர்வடையாமல் , அதை தியானியுங்கள்.

ரோமர்  8 : 37  “இவையெல்லாற்றிலேயும் நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.”

இப்போது வேதவசனங்களை பயன்படுத்தி அற்புதங்களையும், சுகமளித்தலையும், விடுதலையையும் பெறுவீர்கள். கர்த்தரின் வார்த்தை வளரும் பெருகும்.

கர்த்தரின் வார்த்தைகளை நீங்கள் அதிகமாக பேசும்போது

நம்முடைய விசுவாசம் விருத்தியடைவதை பார்க்கலாம்

Sol. மெர்சி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 18-11-2022

இதுவரை செலுத்தப்பட்ட  மிகப்பெரிய விலை சிலுவையின் மேல் உள்ளது.

கர்த்தர் நம்மை சொந்தமாக்குகிறார். நம் ஒவ்வொருவருக்காகவும் மிகப் பெரிய விலையைச் செலுத்தினார். அவர் சிலுவை சுமந்து கொண்டிருந்த போதும் நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். நம்மை மீட்பதற்காக , அவர் விருப்பத்துடனே அந்த விலையை செலுத்தினார்.

1 பேதுரு 2 : 9  சொல்கிறது  “நீங்களோ , உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும் , பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

கர்த்தர் உங்களையும் என்னையும் ஒரு தனித்துவமிக்க ஆளுமையாக உருவாக்கினார்.  பாவம் அவரிடமிருந்து உங்களை பிரித்த போது அவர் உங்களிடம்  வந்தார் . அவர் உங்களை நிபந்தனையின்றி அன்பு செய்கிறார். உங்களை சொந்தமாக்கிக் கொள்ள ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை.

நீங்கள்  கர்த்தருடைய சிறப்பான உடைமைகளாக இருப்பது எவ்வளவு பெரிய சலுகை.  மக்கள் உங்களை மறுத்தாலும் கவலைப்படாதீர்கள். உங்களுடைய கர்த்தர் உங்களுடன் கூடவே இன்னும்  இருக்கிறார்.

ஆனால் அவருக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? இயேசுவோடு நாம் இருப்பது, நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றுகிறது. அவரோடு அதிகமதிகமாக நேரம் செலவழிக்கும் போது , நீங்கள் ஒரே மாதிரி ஒருபோதும் இருக்க மாட்டீர்கள்.உங்களிடம் இருப்பவைகளிலிருந்து ஒரு போதும் தைரியம் வராது. உங்களுக்குத் தெரிந்தவைகளிடமிருந்து ஒரு போதும் தைரியம் வராது. உங்களுடைய எதிரியின் பலவீனத்தை தெரிந்து கொள்வதிலிருந்து ஒருபோதும் தைரியம் வராது.  கர்த்தருடன் நீங்கள் நேரம் செலவழிக்கும்போது மட்டுமே தைரியம் வரும்.  நீங்கள் வெளியே போகும்போது முதலில் அவருடன் பேசுங்கள். உங்கள் எதிரிகள் குழப்பமடைவார்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள்   ஆச்சரியப்படுவார்கள். நீங்கள் கர்த்தரோடு இருப்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

அப்போஸ்தலர் 4 : 13  “பேதுருவும்  யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள்  கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு , அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள். “

ஜெபம்

அப்பா,நீர் இறங்கி வந்து எங்கள் பாவங்களிலிருந்து எங்களை இரட்சித்தீர். முழு மனித குலத்திற்காகவும் சிலுவையை சுமந்தீர். உம்முடைய சந்நிதியில் நாங்கள் நிற்பதனால் வரும் தைரியத்தை எங்களுக்குத் தரும்படியாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

 Sol. ஆரோக்யா