தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 21-11-2022

” உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம் , அடிக்கப்படும் ஆடுகளைப் போல எண்ணப்படுகிறோம். “

ரோமர் 8 : 35

மேற்கண்ட வசனம், உண்மையான விசுவாசிகள் சவால்கள் இல்லாமல் வாழவே முடியாது என்று கூறுகிறது. கர்த்தரை விசுவசிக்கிற ஒவ்வொருவரும் பலவிதமான குழப்பங்களை சவால்களை தங்களுடைய வாழ்க்கையில் எதிர் கொள்கின்றனர். கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது என்பது , உங்களுடைய சிலுவையை சுமந்து கொண்டு இயேசுவுக்கு பின்னால் செல்வதாகும்.

லூக்கா 9 : 23 சொல்கிறது ” ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக் கடவன். ” இதன் அர்த்தம் உங்களை நீங்கள் தியாகம் செய்வதாகும்.

 நமக்கு முன்பாக இரண்டு வழிகள் இருக்கின்றன.

மத்தேயு 7 : 13 – 14  சொல்கிறது ” இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசியுங்கள் , கேட்டுக்குப் போகிற வாசல்விரிவும் , வழி விசாலமுமாயிருக்கிறது. அதன் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் , வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். “

இடுக்கமான பாதையே வாழ்க்கையை  வழிநடத்துகின்ற பாதை. இடுக்கமான பாதை நடப்பதற்கு கடினமான பாதை.    இது மக்களை மன்னிக்க  கோருகிறது.  மக்களுடன் பழகும் போது, பல விஷயங்களை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நமக்கு பொறுமை தேவைப்படுகிறது. நாம் மக்களை அன்பு செய்வது அவசியமாக  இருக்கிறது.  சுயநலமில்லாமல் அவர்களுக்கு உதவி செய்வதும் , அவர்களை ஆசீர்வதிப்பதும் அவசியமாயிருக்கிறது. இதுவே நாம் ஒவ்வொரு சூழ்நிலையிலும் விசுவாசத்தோடு நடக்க வேண்டிய விசுவாசிகளின் பாதையாகும் . கர்த்தரின் அன்பால் நாம்,  மக்களை மன்னிப்பதற்கும், அவர்களை அன்பு செய்வதற்கும், நமக்கு உண்மையில் கர்த்தரின் கிருபை தேவை.

அகலமான பாதை நடப்பதற்கு எளிதான பாதையாகும்.  அதற்கு கர்த்தரின் பலமோ கிருபையோ நமக்கு தேவையில்லை. இது மிகவும் வசதியான பாதை. நாம் என்ன பாதையை தெரிந்தெடுக்க வேண்டும் என்பது முற்றிலுமாக நமது முடிவு. மிகச் சிலரே இந்த முடிவை தெரிந்தெடுக்கிறார்கள். யாரெல்லாம் குறுகலான பாதையை தெரிந்தெடுக்கிறார்களோ  அவர்கள் சாந்தகுணம் உள்ளவர்களாகவும்,  கனிவானவர்களாகவும் இயேசுவை பின்பற்ற சிலுவை சுமப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

கர்த்தருக்கு எந்த நிபந்தனையுமில்லாமல் கீழ்படிய வேண்டும்.  அவர்கள் கர்த்தருடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேட முயற்சிக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ,துன்புறுத்தப்பட்டாலும் கர்த்தர்மீதுள்ள அன்பிற்கு, அது ஒரு பொருட்டே அல்ல.

ஜெபம்

அன்பு தகப்பனே , உமது பாதையில் நடக்கவும் உமக்கு கீழ்படியவும் எங்களுக்கு உதவி செய்யும். உமது விருப்பத்தின்படியே எங்களது வாழ்க்கையில் நடக்கட்டும். பொறுமையுடன்  ஒவ்வொருவருக்கும் அன்பு காட்டவும் , எப்போதும் விசுவாசத்துடன் இருக்கவும்

இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. மல்கீத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *