தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 22-11-2022

” இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் ”

சங்கீதம் 127 : 4 

நாம் எப்பொழுதெல்லாம் இந்த உலகத்தின் ரீதியில்  பரம்பரைச் சொத்தைப் பற்றி  நினைக்கிறோமோ , அப்பொழுது நமக்கு நினைவில் வருவது நிலம், ஒருசில பொருள் ஈட்டக்கூடிய  சொத்துக்கள் , நகைகள் மற்றும் பணம். நாம் பரம்பரை சொத்தாக எதைப் பெறுகின்றோமோ அவை சம்பாதித்தோ அல்லது  உழைத்தோ பெற்றவை அல்ல.  நாம் வாரிசுதாரராக இருப்பதனால் தான் அவற்றைப் பெறுகிறோம்.  இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் , நம் அப்பாக்களும் தாத்தாக்களும் உழைத்து , வியர்வை சிந்தி சம்பாதித்த சொத்துக்கள் , அவற்றிற்கான  நேரம் வரும்போது நம்மிடம் வந்து நாம் அதற்குரிய வாரிசுதாரர்களாவோம். இது ஒரு சிறந்த பரிசு, உடைமை. நமக்கு என்ன இருக்கிறதோ, நாம் ஏற்கெனவே என்ன சம்பாதித்து வைத்திருக்கிறோமோ,  அதனுடைய மதிப்பை அதிகப்படுத்துவதற்கு மட்டுமே இவை நிற்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை முன்னேற்றமான ஒரு நிலைக்கு கொண்டு சென்று நம்முடைய சுமைகளை குறைக்க சாத்தியமாகிறது.

இப்போது நாம்  இந்த பரம்பரை சொத்தின்  சூழலை பயன்படுத்தும் போது  சங்கீதம் 127 : 4 ல்  நமது குழந்தைகளின் முக்கியத்துவத்தை இது  மாற்றுகிறது. 

நான் இந்த வசனத்தை தியானிக்கும்போது கர்த்தர் ஒரு அற்புதமான உணர்தலை கொடுத்தார்.  கர்த்தர் பரலோகத்திலிருந்து நேரடியாக தந்த உங்களது பிள்ளைகள்,   தொடவும் உணரவும் கூடியதுமான பரிசு என்பதை உணர்ந்தீர்களா? நீங்கள் பரலோகத்திலிருந்து நேரடியாக  தங்கத்தையோ வெள்ளியையோ பெறவில்லை என்றாலும் கர்த்தர் தம்முடைய படைப்புகளின் வழியாக அவற்றை வழங்குகிறார். ஆனால் குழந்தைகள் தாயின் கருவயிற்றில் உருவாகுமுன்னரே கர்த்தரால் தெரிந்து கொள்ளப்படுகின்றனர். அவர்கள் நேரடியாக கர்த்தரிடமிருந்து வந்தார்கள் என்பதை இது நிரூபிக்கிறது.

நாம் இப்போது, நமது பிள்ளைகள் எல்லாம் நமது பரம்பரை சொத்து , அதாவது அவர்களைப் பெற நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நாம் இதை மனதில் நிறுத்தி , நான் உங்களுக்கு , நமது பிள்ளைகளுக்கு விதைக்க வேண்டிய  3 அணுகுமுறை அல்லது சிந்தனைகளை முன்வைக்கிறேன்.

1 .  பிள்ளைகள் எல்லாரும் பரம்பரை சொத்து. எனவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்:

பரம்பரைச் சொத்து எப்போதும்  நமது முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட  செல்வமாக இருக்கிறது. இது எப்போதும் ஆசீர்வாதம் தான். நம்  ஒவ்வொருவருடைய மனதும், நமது பரம்பரைச் சொத்து நமது ஆசீர்வாதம் தான் என்பதை மகழ்வுடன் ஏற்றுக் கொள்கிறது. நாம் அதை வெறுக்கவோ , தூர எறியவோ செய்யமாட்டோம்.

நீதிமொழிகள் 10 : 22 சொல்கிறது ” கர்த்தரின் ஆசீர்வாதமே ஐஸ்வரியத்தை தரும், அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். “. எனவே நமது பிள்ளைகள் மீதான நமது அணுகுமுறை எப்போதும்,  அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ,

அவர்கள் துன்பங்களை கூட்டமாட்டார்கள் என்பதை நோக்கியே இருக்க வேண்டும்.   தற்போதைய நிதிநிலைமையினாலோ, சமூக கட்டுப்பாடுகளினாலோ அல்லது பாலின ரீதியாலோ நமது பிள்ளைகளை நாம்  வெறுக்கக் கூடாது.  அவர்கள் விலை மதிப்பற்றவர்கள் , வெறுக்கப்படக்கூடியவர்கள் அல்ல.

 2 . நம்முடைய பரம்பரை சொத்து  பாதுகாக்கப்படவேண்டும்:

நம்முடைய முன்னோர்கள் முதன்மையான ஒரு இடத்தில் சிறிது நிலம் தந்ததாக கற்பனை செய்து கொள்வோம். யாராவது ஒருத்தர் ஆந்த நிலத்தில் சில சென்டிமீட்டர் இடத்தை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?

இஸ்ரேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நிலத்தை சொந்தமாக்கவும் , மாசுபாட்டிலிருந்து அல்லது ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கவும்  அதற்குரிய வழியை கர்த்தரிடம் கேட்டார்கள். கர்த்தர் அவர்களுடைய எதிரிகளை அவர்களுடைய நிலத்திலே  முற்றிலுமாக அழித்து ஒழிக்க   வேலை செய்யும்படி  கேட்டார். இந்த அணுகுமுறை தான், என்ன விலை கொடுத்தாகிலும் உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் எதிரிகளை முற்றிலுமாக அழித்து நிர்மூலமாக்க வேண்டும்.  என்னால் எப்படி முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.  அவற்றை கர்த்தரின் கவசத்தின்  மேல் வைத்து பரிசுத்த ஆவியையும் கர்த்தருடைய வார்த்தையையும் வாளாக பயன்படுத்த வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார்.

3 . பரம்பரைச் சொத்து முதலீடாக மாறுவது அவசியம்:

நமது பரம்பரைச் சொத்து வளரவிலலையென்றால் அது பயனற்றதாகிவிடும். திரும்பவும் கற்பனை செய்யலாம். உங்களுடைய அப்பா உங்களுக்கு ஒரு லட்சம் அமெரிக்கன் டாலர் தருகிறார் . அவற்றை நீங்கள் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டால்  அது பயனற்றதாகிவிடும்.  ( தற்போதைய பண வீக்கத்தை கருத்தில் கொண்டால் )  பணத்தின் மதிப்பு காலப்போக்கில் குறைந்து விடும். அதை நீங்கள் வங்கியில் செலுத்தினால் கூட  சிறிதளவு வட்டியாவது சம்பாதிக்கலாம். அதுபோலவே உங்கள் பிள்ளைகளும் பரலோக ராஜ்யத்தின் முதலீடாக மாறவேண்டும்.  கர்த்தருடைய வழிகாட்டுதலோடு முதலீடு செய்யுங்கள். எந்த செல்வாக்கு மிக்க களமாக  இருப்பினும் , அவர்கள் உற்பத்தி செய்பவர்களாக , பலனளிப்பவர்களாக மாற, அவர்களுக்குத் தேவையான எல்லா வாய்ப்புகளையும், கருவிகளையும், அதிகாரங்களையும் கர்த்தர் அவர்களுக்காக நியமிப்பார். இதன்படி தியானிக்கும் போது கர்த்தர் எனக்கு திறமையைக் குறித்த உவமையை நினைவுபடுத்தினார். பெற்றோர்களாகிய  நாம் பிள்ளைகளுக்கு பணிப்பெண்ணாகவே இருக்க வேண்டும் என்று இந்த உவமை சொல்கிறது. நம் பிள்ளைகளின் உற்பத்தி திறனை 10 மடங்கு அல்லது 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அவர்களுக்கு திறமைகளை புகுத்தி , அவர்களுடைய களத்தில் அவர்கள்  சிறந்தவர்களாகவும் , மதிப்புமிக்க சொத்தாகவும்  உருவாக்க வேண்டும். அவர்கள்  தேவனுடைய ராஜ்யத்திற்காக சுரண்டல்களை செய்து  திரும்பக் கொண்டுவந்து கர்த்தருக்குத் தருவார்கள். ஏனென்றால் அவர்கள் கர்த்தரால் நமக்கு பரம்பரைச் சொத்தாக தரப்பட்டவர்கள். ஆனால் நாம் இதைச் செய்யாவிட்டால் மத்தேயு 25 : 27 ல் சொல்லப்பட்டபடி வங்கியில் செலுத்த வேண்டும். வங்கிகளெல்லாம் நிர்வகிப்பதற்கும் சொத்துக்களை அதிகரிப்பதற்கும் , சொத்துக்களை பாதுகாப்பாக வைப்பதற்கு உள்கட்டமைப்பு வசதி கொண்டுள்ள , பொதுவான  அதிகாரமுள்ள நிறுவனங்கள் ஆகும்.

கர்த்தரின் உடலாகிய சபையும் ஆவிக்குரிய தலைவர்களும் வங்கிகளாகும்.  குறைந்தது நீங்கள் செய்யக்கூடியது , சபையால் பாதுகாக்கப்பட்ட ஆவிக்குரிய அதிகாரத்தின் கீழ் அவர்களைக் கொண்டு வருவது தான் .  கண்டிப்பாக இவர்கள் வட்டி தருவார்கள்.

இந்த அணுகுமுறை நம் மனதில் வந்தால் , நம் பிள்ளைகள் கர்த்தரிடமிருந்து வந்த பரம்பரைச் சொத்து என்பதை பார்க்கலாம்.

கடைசியாக சங்கீதம் 127 : 4 , 5 ல் உள்ள வசனங்கள் பிள்ளைகளை அம்புக்கு ஒப்பிடுகின்றன. ஏன் அம்புகள்? கர்த்தர் இதற்கும் என் கண்களை திறந்தார்.

எபேசியர்  6 : 10 – 18 ல் கர்த்தருடைய கவசத்தின் விளக்கங்களை காணலாம். ஆனால் நம்முடைய தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும் , நம்முடைய ஆவிக்குரிய போராட்டத்திற்காகவும் தான்  இவையெல்லாம் என்பதை கவனிக்க வேண்டும்.  கர்த்தர் பெருக்கத்தின் தேவன்.

அவர் எப்போதும் நம் பிரதேசங்களையும் எல்லைகளையும் விரிவுபடுத்த விரும்புகிறார். ஆனால் ஒரே நேரத்தில் நம்மால் எல்லா வாயில்களிலும் , நிலைகளிலும் பணியமர்த்த முடியாது. நம்மால் ஒரு வாளிலுள்ள ஒரு ஆரத்தால் மட்டுமே நம் எதிரியை தாக்க முடியும். ஆனால் நம்மிடம் அம்பு இருக்குமேயானால் தூரத்தில் நின்றால் கூட  எதிரியை தாக்க அதை பயன்படுத்தலாம்.  தூரத்தில் உள்ள நம் எல்லைகளை பாதுகாக்க ஆயுதங்கள் தேவைப்படும் போது அம்புகளே சரியான ஆயுதமாகும். அம்புகள் புறக்காவல் நிலையமாக மாறும். மேலும் கர்த்தர் நியமித்த திசையில் கர்த்தருடைய ராஜ்யத்தை விரிவாக்கும்.

Sol. பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *