தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 27-11-2022

கர்த்தரின் ராஜ்யம் உங்கள் மத்தியில் இருக்கிறது.

லூக்கா 17 : 21 ” இதோ, இங்கே என்றும் , அதோ அங்கே என்று சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது , இதோ தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே. “

தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வரும் என்று பரிசேயர் இயேசுவிடத்தில் கேட்ட பொழுது  இயேசு மேற்கண்டவாறு கூறினார்.

கதை

ஒரு கிராமத்தில் ஒரு தச்சன் இருந்தான். ஒரு நாள் ஒரு தேவதை வந்து அவனிடம் உன் காலம் முடிந்துவிட்டது. வா நாம் போகலாம் என்று கூறியது. அதற்கு அந்த தச்சன்  , தயவு செய்து எனக்கு கொஞ்ச காலம் கொடு. எனக்கு  கலப்பைகளை  சரிபார்த்து அமைக்க வேண்டியிருக்கிறது. அப்படியானால் தான் இந்த பருவகாலத்தில் உழவர்கள் தங்கள் வயல்களில் உழவு செய்ய முடியும். மேலும் விதைகளை விதைக்க தயாராக முடியும் என்று கூறினான்.

அடுத்த முறை அந்த தேவதை  திரும்பவும் வந்து தச்சனிடம் காலம் முடிந்துவிட்டது செல்லலாம் வா என்று கூறியது. அதற்கு தச்சன்,  இந்த முறையும் எனக்கு கொஞ்ச  காலம் கொடு. மழைக்காலம் வரப்போவதால் வீட்டிலுள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு வீட்டை சரிபார்க்க வேண்டும் என்று அந்த தேவதையிடம் மன்றாடினான்.

திரும்பவும் சில காலம் கழித்து  அந்த தேவதை தச்சனை எடுப்பதற்காக வந்தது. திரும்பவும் அந்த தச்சன் தேவதையிடம் என்னுடைய குடும்பத்திற்கு என் உதவி தேவைப்படுவதால் இன்னும் கொஞ்சம் காலம் வேண்டும் என்று கேட்டான். இது சில வருடங்களாக தொடர்ந்தது. அந்த தச்சன் வயதான பொழுது , இனி மக்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் , அந்த தேவதையை அழைத்து நீ என்னை எடுத்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு அந்த தேவதை நீ இப்போது எங்கே இருப்பதாக நினைக்கிறாய் ?  நீ ஏற்கெனவே பரலோகத்தில் தான் இருக்கிறாய் என்று சொன்னது.

கர்த்தருடைய ராஜ்யம் நம் மத்தியில்தான் இருக்கிறது.

கர்த்தரின் ராஜ்யம் என்றால் என்ன?  எந்த இடத்திலும் கர்த்தருடைய ராஜ்யத்தை காணலாம். ஆனால் இயேசு கர்த்தருடைய ராஜ்யம் நமக்குள்ளே இருக்கிறது என்று சொல்கிறார்.  ஒவ்வொரு நேரமும்  அன்பு , சேவை, நீதி , அமைதி ,பொறுமை, மென்மை,இரக்கம் , நன்மை, பரிசுத்தம் மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் இருக்கும் இடத்தில் கர்த்தரின் ராஜ்யம் இருப்பதைக் காணலாம்.

இயேசு கிறிஸ்து இருக்குமிடமே  கர்த்தரின் ராஜ்யம்.

பரலோக ராஜ்யம் நம்முடைய இருதயத்திலே இருக்கிறது.

1 .  கர்த்தரின் ராஜ்யம் அடிப்படையில் உள்நோக்கி, அதாவது மனிதனின் இருதயத்திற்குள்ளே இருக்கிறது .

2 . கர்த்தரின் ராஜ்யம் , நீங்கள்  சரியான தேர்வுகளை  உருவாக்கினால் உங்களுக்குள்ளே வந்தடையும் .

3 . கர்த்தரின் ராஜ்யம்,  உங்கள் நடுவிலே , மனிதர்களுக்குள்ளே , இயேசு இருக்குமிடத்திலே இருக்கிறது.

ஜெபம்

பரலோகத் தந்தையே, நீர் எங்களுக்குள்ளே வாசம் செய்வதற்காக நன்றி செலுத்துகிறோம். எங்கள் வாழ்வின் எல்லா நேரத்திலும் உம்முடைய உடனிருப்பை உணர்ந்து கொள்ள உதவி செய்யும். எங்களை முன்னின்று வழிநடத்தும். 

இயேசுவின் நாமத்தின் பெயரால் ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. அன்னபு ரெட்டி பாலா ரெட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *