நாள்: 05-11-2022
எசாயா 49 : 24 ” பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப் பொருளை பறிக்கக் கூடுமோ? அல்லது நீதியாய் சிறைப் பட்டுப் போனவர்களை விடுவிக்கக் கூடுமோ?”
அன்பான சகோதர சகோதரிகளே, மேற்கூறிய வசனத்தில் வலிமையானவனிடமிருந்து கொள்ளைப் பொருளை எடுக்க முடியுமா என்று எழுதப்பட்டிருக்கிறது. நான் உங்களிடம் இந்த கேள்வியைக் கேட்கிறேன். உங்களுடைய பதில் என்ன? ஆம் என்பதே இதற்குப் பதில். சர்வவல்லவர் இந்த உலகத்தை ஆளுகை செய்வதற்கான அதிகாரத்தை நம்மிடம் கொடுத்திருக்கிறார். நம்முடைய வழிகள் கர்த்தருடைய வழிகளாக இருந்தால் நாம் திகிலடையத் தேவையில்லை.

இதற்கு பழைய ஏற்பாட்டில் இருந்து மூன்று உதாரணங்களை நாம் கானலாம்
1 . ஆபிரகாமின் வெற்றி
ஆதியாகமம் 14 : 16 ” சகல பொருட்களையும் திருப்பி கொண்டு வந்தான். தன் சகோதரனாகிய லோத்தையும் அவனுடைய பொருட்களையும், ஸ்திரீகளையும் ஜனங்களையும் திருப்பி கொண்டுவந்தான்.”
இந்த 14 ம் அதிகாரத்திற்குள் சென்றோமேயானால் சித்திம் பள்ளத்தாக்கில் ராஜாக்களுக்கிடையில் போர் நடந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் தப்பியோடினார்கள். அவர்களுடைய எதிரிகள் எல்லோரையும் சிறைபிடித்து எல்லா பொருட்களையும் கொண்டு சென்றார்கள். அவர்கள் ஆபிரகாமின் சகோதரர் லோத்தையும் அவனுடைய பொருட்களையும் கொண்டு சென்றார்கள். என்ன ஒரு கடினமான சூழ்நிலை? ஆபிரகாம் இதைப்பற்றி கேள்விப்பட்ட போது , அந்த ராஜாக்களை முறியடித்து அவர்களால் பிடிக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் திருப்பிக் கொண்டுவந்தார். அவர் தன்னுடைய 318 ஆட்களையும் கொண்டு எல்லாவற்றையும் மீட்டுக் கொண்டுவந்தார். போர் முடிந்து திரும்பிய பிறகு மெல்கிசதேக்கிடமிருந்து பரலோக ஆசீர்வாதங்களைப் பெற்றார். என்ன ஒரு அதிசயமான கடவுள் நமக்கு இருக்கிறார். சர்வவல்லமையுள்ள கர்த்தர் நமக்காக போராடுவார். அவர் நமக்கு சூழ்நிலைகளை கடந்து வெற்றியையும் பரலோக ஆசீர்வாதங்களையும் தருவார்.
2 . தாவீதும் கோலியாத்தும்
1 சாமுவேல் 17 : 51 ” ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று , அவன் பட்டயத்தை எடுத்து , அதை அவன் உறையிலிருந்து உருவி , அவனைக் கொன்று , அதினாலே அவன் தலையை வெட்டிப் போட்டான். அபாபொழுது தங்கள் வீரன் செத்துப் போனான் என்று பெலிஸ்தர் கண்டு ஓடிப்போனார்கள். ”
இந்த பகுதியில் பெலிஸ்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் ஏலா பள்ளத்தாக்கில் நடந்த யுத்தத்தை பற்றி கூறியுள்ளது.பெலிஸ்தியர்கள் சார்பாக நின்ற கோலியாத் மிகவும் பலசாலி. அவன் இஸ்ரவேலர்களின் நம்பிக்கையை அழிக்கும்படியாக அவதூறான வார்த்தைகளை பேசினான். கடைசியில் தாவீது அந்த பள்ளத்தாக்கை அடைந்த போது , கோலியாத் உச்சரித்த வார்த்தைகளை கேட்டான். தேவ மனிதனாக அபிஷேகம் பண்ணப்பட்டவனாக, தன்னைத்தானே பலப்படுத்திக் கொண்டு, இஸ்ரவேலருக்காக போரிட்டு வெற்றியும் பெற்றான்.
3. சிக்லாகில் தாவீது
1 சாமுவேல் 30: 18,19 ” அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்.
இங்கு அமலேக்கியர்கள் சிக்லாக்பள்ளத்தாக்கை அழித்து எல்லா மனிதர்களையும் அவர்களுக்குள்ள பொருட்களையும் சிறைபிடித்தார்கள். தாவீது மற்றொரு போருக்கு சென்றிருந்தார். தாவீது திரும்பிய போது தான் மிகவும் நெருக்கடியில் இருப்பதை அறிந்து கொண்டார். அவர் தன்னைத்தானே கர்த்தருக்குள் திடப்படுத்திக் கொண்டு கர்த்தரிடம் கேட்டான். கர்த்தரிடமிருந்து வந்த தெளிவான வழிநடத்துதலின் பேரில் , எதிரிகளை தோற்கடித்து தன்னிடமிருந்து களவு செய்யப்பட்ட எல்லாவற்றையும் திரும்பக் கொண்டுவந்தார். தன் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
சகோதர, சகோதரிகளே பிரச்சனைகளிலிருந்து , நம்மை பாதுகாக்கின்ற வல்லமையான கர்த்தரை நாம் சேவிக்கின்றோம். நம்மிடமிருந்து திருடப்பட்ட எல்லாவற்றையும் நாம் திரும்ப பெறும் பொருட்டு , நம்மை நாமே பலப்படுத்திக்கொண்டு போருக்கு செல்ல வேண்டும். இதைத்தான் கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். சாத்தான் நம்முடைய ஆராதனை நேரத்தை, வேத வாசிப்பு நேரத்தை, தியானிக்கும் நேரத்தை திருடலாம். நமக்கு பயத்தையும் ,அவநம்பிக்கையையும் தரலாம்.
எச்சரிக்கையாயிருக்க வேண்டும். கர்த்தருக்குள் நாம் நம்மை பலப்படுத்த வேண்டும். ஒரு நாளும் இதை கைவிடக்கூடாது. மேலும் யுத்தத்திற்கு செல்ல கர்த்தரிடமிருந்து வார்த்தையை பெற வேண்டும். நிறைய நேரங்களில் நாம் தோற்கடிக்கப்படுகிறோம். காரணம், குறிப்பிட்ட சூழ்நிலையில் கர்த்தருக்கு முன்பாக நேரம் செலவழிப்பதில்லை.
பரலோகத் தந்தையே , உமக்கு முன்பாக வருகிறோம் . எங்களால் முடியாது என்ற எண்ணங்களுக்காக எங்களை மன்னிக்க வேண்டுகிறோம். மேற்கூறியவற்றிலிருந்து , நீர் எங்களோடு இருந்தால் எல்லாம் முடியும் என்று புரிந்து கொள்கிறோம். எங்களுடைய சூழ்நிலைகளை களையவும், அவைகளை கடந்து செல்லவும் , எங்களை பலப்படுத்துவதற்கு இந்த நாளில் புதிய அபிஷேகத்தால் நிரப்பும். எங்களுடைய எதிர்மறையான சிந்தனைகளையும், தவறான நம்பிக்கைகளையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கண்டிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் வழியாக எங்கள் சூழ்நிலைகளின் மீது நாங்கள் வெற்றி பெறவும், நீர் எங்களுக்காக செய்த எல்லாவற்றையும் உம்முடைய நாமத்தின் பெயரால் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆமென்.
Sol. Dr. கமலின் விஜி.




