தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 05-11-2022

எசாயா 49 : 24 ” பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப் பொருளை பறிக்கக் கூடுமோ? அல்லது நீதியாய் சிறைப் பட்டுப் போனவர்களை விடுவிக்கக் கூடுமோ?”

 அன்பான சகோதர சகோதரிகளே, மேற்கூறிய வசனத்தில் வலிமையானவனிடமிருந்து கொள்ளைப் பொருளை எடுக்க முடியுமா என்று எழுதப்பட்டிருக்கிறது. நான் உங்களிடம் இந்த கேள்வியைக் கேட்கிறேன். உங்களுடைய பதில் என்ன?  ஆம் என்பதே இதற்குப் பதில்.  சர்வவல்லவர் இந்த உலகத்தை ஆளுகை செய்வதற்கான அதிகாரத்தை நம்மிடம் கொடுத்திருக்கிறார். நம்முடைய வழிகள் கர்த்தருடைய வழிகளாக இருந்தால் நாம் திகிலடையத் தேவையில்லை.

இதற்கு பழைய ஏற்பாட்டில் இருந்து மூன்று உதாரணங்களை நாம் கானலாம்

1 . ஆபிரகாமின் வெற்றி

ஆதியாகமம் 14 : 16  ” சகல பொருட்களையும் திருப்பி கொண்டு வந்தான். தன் சகோதரனாகிய லோத்தையும் அவனுடைய பொருட்களையும், ஸ்திரீகளையும் ஜனங்களையும் திருப்பி கொண்டுவந்தான்.”

 இந்த 14 ம் அதிகாரத்திற்குள் சென்றோமேயானால் சித்திம் பள்ளத்தாக்கில்  ராஜாக்களுக்கிடையில் போர் நடந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் தப்பியோடினார்கள். அவர்களுடைய எதிரிகள் எல்லோரையும் சிறைபிடித்து எல்லா பொருட்களையும் கொண்டு சென்றார்கள். அவர்கள் ஆபிரகாமின் சகோதரர் லோத்தையும் அவனுடைய பொருட்களையும் கொண்டு சென்றார்கள். என்ன ஒரு கடினமான சூழ்நிலை? ஆபிரகாம் இதைப்பற்றி கேள்விப்பட்ட போது , அந்த ராஜாக்களை முறியடித்து அவர்களால் பிடிக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் திருப்பிக் கொண்டுவந்தார். அவர் தன்னுடைய 318  ஆட்களையும் கொண்டு எல்லாவற்றையும் மீட்டுக் கொண்டுவந்தார். போர் முடிந்து திரும்பிய பிறகு மெல்கிசதேக்கிடமிருந்து பரலோக ஆசீர்வாதங்களைப் பெற்றார். என்ன ஒரு அதிசயமான கடவுள் நமக்கு இருக்கிறார். சர்வவல்லமையுள்ள கர்த்தர் நமக்காக போராடுவார். அவர் நமக்கு சூழ்நிலைகளை கடந்து வெற்றியையும் பரலோக ஆசீர்வாதங்களையும் தருவார்.

2 . தாவீதும் கோலியாத்தும்

1 சாமுவேல் 17 : 51 ” ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று , அவன் பட்டயத்தை எடுத்து , அதை அவன் உறையிலிருந்து உருவி , அவனைக் கொன்று , அதினாலே அவன் தலையை வெட்டிப் போட்டான். அபாபொழுது தங்கள் வீரன் செத்துப் போனான் என்று பெலிஸ்தர் கண்டு ஓடிப்போனார்கள். ”

இந்த பகுதியில் பெலிஸ்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் ஏலா பள்ளத்தாக்கில் நடந்த யுத்தத்தை பற்றி கூறியுள்ளது.பெலிஸ்தியர்கள் சார்பாக நின்ற கோலியாத் மிகவும் பலசாலி.  அவன்  இஸ்ரவேலர்களின் நம்பிக்கையை அழிக்கும்படியாக அவதூறான வார்த்தைகளை பேசினான். கடைசியில் தாவீது அந்த பள்ளத்தாக்கை அடைந்த போது , கோலியாத் உச்சரித்த வார்த்தைகளை கேட்டான். தேவ மனிதனாக அபிஷேகம் பண்ணப்பட்டவனாக,  தன்னைத்தானே பலப்படுத்திக் கொண்டு, இஸ்ரவேலருக்காக போரிட்டு வெற்றியும் பெற்றான்.

3. சிக்லாகில் தாவீது

1 சாமுவேல் 30: 18,19  ” அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்.

 இங்கு அமலேக்கியர்கள் சிக்லாக்பள்ளத்தாக்கை அழித்து எல்லா மனிதர்களையும் அவர்களுக்குள்ள பொருட்களையும் சிறைபிடித்தார்கள். தாவீது மற்றொரு போருக்கு சென்றிருந்தார். தாவீது திரும்பிய போது தான் மிகவும் நெருக்கடியில் இருப்பதை அறிந்து கொண்டார்.  அவர் தன்னைத்தானே கர்த்தருக்குள் திடப்படுத்திக் கொண்டு கர்த்தரிடம் கேட்டான். கர்த்தரிடமிருந்து வந்த தெளிவான வழிநடத்துதலின் பேரில் , எதிரிகளை தோற்கடித்து தன்னிடமிருந்து களவு செய்யப்பட்ட எல்லாவற்றையும் திரும்பக் கொண்டுவந்தார். தன் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

சகோதர, சகோதரிகளே பிரச்சனைகளிலிருந்து , நம்மை பாதுகாக்கின்ற வல்லமையான கர்த்தரை நாம் சேவிக்கின்றோம். நம்மிடமிருந்து திருடப்பட்ட எல்லாவற்றையும் நாம் திரும்ப பெறும் பொருட்டு , நம்மை நாமே பலப்படுத்திக்கொண்டு போருக்கு செல்ல வேண்டும்.  இதைத்தான் கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். சாத்தான்   நம்முடைய ஆராதனை நேரத்தை, வேத வாசிப்பு நேரத்தை,  தியானிக்கும் நேரத்தை திருடலாம். நமக்கு பயத்தையும் ,அவநம்பிக்கையையும் தரலாம்.

எச்சரிக்கையாயிருக்க வேண்டும். கர்த்தருக்குள் நாம் நம்மை பலப்படுத்த வேண்டும். ஒரு நாளும் இதை கைவிடக்கூடாது. மேலும் யுத்தத்திற்கு செல்ல கர்த்தரிடமிருந்து வார்த்தையை பெற வேண்டும். நிறைய  நேரங்களில் நாம் தோற்கடிக்கப்படுகிறோம். காரணம், குறிப்பிட்ட சூழ்நிலையில் கர்த்தருக்கு முன்பாக நேரம் செலவழிப்பதில்லை.

பரலோகத் தந்தையே , உமக்கு முன்பாக வருகிறோம் . எங்களால் முடியாது என்ற எண்ணங்களுக்காக எங்களை மன்னிக்க வேண்டுகிறோம். மேற்கூறியவற்றிலிருந்து  , நீர் எங்களோடு இருந்தால் எல்லாம் முடியும் என்று புரிந்து கொள்கிறோம். எங்களுடைய சூழ்நிலைகளை  களையவும், அவைகளை கடந்து செல்லவும் , எங்களை பலப்படுத்துவதற்கு இந்த நாளில் புதிய அபிஷேகத்தால் நிரப்பும். எங்களுடைய  எதிர்மறையான சிந்தனைகளையும், தவறான நம்பிக்கைகளையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கண்டிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் வழியாக எங்கள் சூழ்நிலைகளின் மீது நாங்கள் வெற்றி பெறவும், நீர் எங்களுக்காக செய்த எல்லாவற்றையும் உம்முடைய நாமத்தின் பெயரால் ஏற்றுக் கொள்கிறோம். 
ஆமென்.

 Sol. Dr. கமலின் விஜி.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 04-11-2022

அப்போஸ்தலர் 2 : 38  ” பேதுரு அவர்களை நோக்கி , நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.”

2 கொரிந்தியர் 3 : 17   “கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ, அங்கே விடுதலையுண்டு. “

அப்போஸ்தலர் 5 : 32  “இந்த சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்கு கீழ்படிகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.”

நாம் நமது பாவங்களுக்காக வருந்தி , கர்த்தரிடம் அவைகளுக்காக மன்னிப்பு கேட்டு, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். பிறகு கர்த்தர் நம் பாவங்களை எல்லாம் மன்னித்து பரிசுத்த ஆவியானவர் வழியாக நம்மை ஆசீர்வதிப்பார்.

யாரெல்லாம் கர்த்தருக்கு கீழ்படிந்து அவருடைய  வார்த்தையின்படி வாழ்கிறார்களோ அவர்களுக்கே பரிசுத்த ஆவியானவர் அருளப்படுவார்.

கர்த்தரால் நமக்கு கொடுக்கப்பட்ட  பரிசுத்த ஆவியானவர் நமது நண்பர் , துணையானவர், நமக்காக வாதாடுபவர். அவர் நமக்கு உதவி செய்வார். நம்மோடு இருப்பார்.

பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துவார், எல்லாவற்றையும் நமக்கு கற்றுக் கொடுப்பார். ஒவ்வொன்றையும் நமக்கு நினைவூட்டுவார்.

நாம் , நம்மை முழுவதுமாக பிரிசுத்த ஆவியானவருக்கு  அர்ப்பணித்து , அவர் நம்மை பற்றிக் கொள்ளும்படியாக ஜெபிக்க வேண்டும்.

நாம் அவருடன் நல்ல வலுவான உறவை ஏற்படுத்திக் கொண்டால் , நாம் என்ன செய்யவேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் , என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது என்பதைப்பற்றி சொல்லிக் கொடுப்பார்.

சங்கீதம் 143 : 10  ” உமக்கு பிரியமானதைச் செய்ய எனக்கு போதித்தருளும் , நீரே என் தேவன்,உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையிலே வழி நடத்துவாராக. “

பரிசுத்த ஆவியானவர் நமது வாழ்க்கையை பொறுப்பெடுத்துக் கொள்ளும்போது , அன்பு, சந்தோஷம், பொறுமை, இரக்கம், நற்குணம், விசுவாசம் , சாந்தம் , இச்சையடக்கம்  போன்ற நற்கனிகளை நம் வாழ்க்கையில் நமக்கு தருவார்.

நாம் கர்த்தராகிய ஆவியானவரிடம் நம்மை அர்ப்பணிக்கும் போது , கர்த்தருடைய விருப்பத்தினை  நிறைவேற்ற வேண்டும்  என்று ஜெபிக்க வேண்டும். அப்போது கர்த்தர் நம்முடைய வாழ்க்கையின் பாதையை செம்மைப்படுத்தி, நம்முடைய இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவார்.

பரிசுத்த ஆவியானவர் நம்மை  வழிநடத்துவதனால்,நாம் கர்த்தருக்கு உண்மையும் விசுவாசம் உள்ளவர்களாகவும் இருந்து  , நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருக்காக,  அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக இருப்போம்.

ஜெபம்:

பரலோகத் தந்தையே, இந்த செய்தியை வாசிக்கின்ற யாராக இருந்தாலும்,  அவர்கள் தங்களையும்,  தங்களுடைய விருப்பத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணித்து   வாழ , அவர்களோடு இருந்து அவர்களுக்கு உதவி செய்யும்படியாக ஜெபிக்கிறேன். இதன்மூலம் அவர்களை வல்லமையாக பயன்படுத்தி , ஏராளமாக ஆசீர்வதிக்கும்படி
இயேசுவின்  நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.
ஆமென்

Sol.Dr.Himakshi

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 03-11-2022

யோவான் 14 : 21  ” என் கற்பனைகளை பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான். என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான். நானும் அவனில் அன்பாயிருந்து , அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.”  என்று கூறுகிறது. 

இந்த வசனங்கள் , இயேசு, தம்மை நமக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் விரும்பினால்,  அவரைப் பின்பற்றி அவரது வார்த்தைகளுக்கு நாம் கீழ்படிய வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. இப்போது நாம்,கர்த்தர்  தம்முடைய வார்த்தைகளின் வழியாக என்ன கட்டளைகளை கொடுத்திருக்கிறார் என்பதைக் காணலாம். முதல் கட்டளை நமக்குத் தெரியும்  மாற்கு 12… 29 – 32 வசனங்களில், ” இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன்முழு ஆத்துமாவோடும்   முழு இருதயத்தோடும் அன்பு கூறுவாயாக “. என்று கூறப்பட்டுள்ளது. 

வேதத்தில் , இயேசுகிறிஸ்து தம்மையே முழுமையாக பிதாவாகிய கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்து அவருக்கு கீழ்படிந்தார். அதன் பலனாக  கர்த்தர், தங்கள் கடைசி மூச்சுவரை  கீழ்படிந்திருக்கிற 12 சீடர்களை அவருக்கு கொடுத்து ஆசீர்வதித்தார். இயேசு தன்னுடைய வாழ்க்கையை பிதாவாகிய கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்ததைப் போலவே, அதே வழியில் அவருடைய சீடர்களும் இயேசுவுக்காக எதையும் செய்யும் தைரியத்தைப் பெற முடிந்தது.

இயேசு மக்களிடம் பரலோக ராஜ்ஜியம் பற்றி ,   கர்த்தருடைய வார்த்தைகள்  வழியாகப் பேசும் போதும் அறிவை உணர்த்தும் வசந்தின் வழிகாய பேசி தன்னை முழுவதுமாக தாழ்த்தியதை நாம் வேதத்தில் காண்கிறோம். அவர் எப்பொழுதும் பரிசேயர்களிடமும் அறிஞர்களிடமும் கர்த்தரின் வார்த்தைகள் வழியாகவே பேசினார். அவர் நிகழ்த்திக் கொண்டிருந்த அற்புதங்களையும் அதிசயங்களயும் , அவர் தானே செய்வதாக பெருமை பேசுவதை ஒருபோதும் காணவில்லை.

அவர் எப்பொழுதும் ,  கர்த்தருடைய வார்த்தைகளுக்கு  கீழ்படிய வேண்டும், கர்த்தருடைய வழிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் , நம்முடைய சொந்த வழிகளை அல்ல என்று நம்மை வலியுறுத்தினார். இயேசு எப்போதுமே , தன்னுடைய ஆற்றலை  கீழ்படிதலிலும் கர்த்தர் மீதுள்ள பக்தியிலுமே காட்டினார். அவருடைய பக்தியையும் அர்ப்பணிப்பையும் தன்னுடைய ஒரே பிதாவின்  மேலேயே வைத்திருந்தார். அவர்கள் ஒருவராகவே இருந்தனர். இன்னும் ஒருவராகவே இருக்கின்றனர்.  அவருடைய அந்த கீழ்படிதலும் அர்ப்பணிப்பும் அவர் மூலமாக அவருடைய சீடர்களிடமும் இருந்ததால் கர்த்தருக்கு நாம் நன்றி செலுத்துவோம்.

யோவான் 14 : 12  ” என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய காரியங்களைச் செய்வான். என்று சொல்கிறது.

யோவான்  14 : 23  ” இயேசு அவனுக்கு பிரதியுத்திரமாக , ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் , அவன் என் வசனத்தைக் கைக் கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து வாசம் பண்ணுவோம்.” என்று சொல்கிறது.

நமது வாழ்க்கை, நமது நம்பிக்கை , நமது அமைதி, நமது சந்தோஷம் எல்லாம் கிறிஸ்துவுக்கு  கீழ்படிந்து  நடந்தால் மட்டுமே, புகழப்படும். நமது  சுயபுத்தியினால் நடந்தால்  அல்ல.

 பிதாவே, என் கர்த்தாவே உமது வல்லமை மிக்க கரங்களில் என்னை ஒப்படைக்கிறேன். உமக்கு உகந்த வழிகளில் நடக்கவும்  என்னுடைய வாழ்க்கையின் முடிவுகளை என் சுய புத்தியினால் எடுக்காமல்   உம்மையும் பரிசுத்த ஆவியானவரையும் சார்ந்து எடுக்கவும் உதவி செய்யும்.
ஆமென்.

Sol. குஷி.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 02-11-2022


லூக்கா 14 : 26, 27
” யாதொருவன் என்னிடத்தில் வந்து , தன் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்.
தன் சிலுவையை சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான். “


கர்த்தர் இந்த வசனங்களின் வழியாக பேசும்பொழுது , ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் அவர் சுமந்த பெரிய சிலுவையை எனக்கு காண்பித்தார். எல்லா மனித உறவுகளும் இந்த பூமியில் இருக்கும்வரை மட்டுமே. சிலுவையின் உண்மையான ஆழத்தை புரிந்து கொள்ள எனக்கு சில ஆண்டுகள் ஆனது. என்னுடைய இதயத்தின் ஆலயத்தில் உள்ள கர்த்தரின் பாதத்தில் இதை நான் முணுமுணுத்தபோது அவருடைய காலடியில் ஒரு தூசியாக என் இருதயம் இருந்தது. அந்த உண்மையான வெளிப்பாடு என்மீது பலமாக தோன்றியது.

நான் என்னுடைய சுய த்தை(” நான்” ) சிலுவையில் ஆணி அடித்தேன். ஒவ்வொரு நாள் காலையிலும் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு சுவாசத்திலும் நன்றியுடனும் பணிவுடனும் நம்மை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
(ரோமர் 12. 1) ” .
என் சிலுவையை மத்தேயு 11 : 28 – 30 சொல்லப்பட்டபடி செய்யமால் என் சிலுவையை சுமக்க முடியாது. 24X7 கர்த்தருடைய இளைப்பாறுதலில் நிலைத்திருக்க என்னுடைய பாரத்தையும்(அப்பாவை, அம்மாவை, மகனை மகளை, என் பெருமையை, என் சுய நீதியை, விக்ரகங்களாய் நம் வாழ்வில் இருக்கிற மனிதர்களை அல்லது அபிஷேகம் பெற்ற தேவ ஊழியர்கள்(ரோமர் 1 : 22, 23) , நம் பொறாமை, மன்னியாமை, நம்முடைய பணம் அல்லது பதவி) எல்லாவற்றையும் அவரிடத்தில்ஒப்புக்கொடுக்க அல்லது சரணடைய வேண்டும்.

யாத்ராகமம் 20 : 4,5
மேலே வானத்திலும் , கீழே பூமியிலும் பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து என்னை பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தை மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கறவனாயிருக்கிறேன்.”


கலாத்தியர் 5 : 1 ஆனபடியினாலே நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்கு உட்படாமல் , கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையில் நிலை கொண்டிருங்கள்.


கலாத்தியர் 5 : 24 “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாமிசத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.”

அவரது விருப்பத்தை மட்டுமே தேடவும் கண்டுபிடிக்கவும் கீழ்படியவும் செய்யவேண்டும்.


2022 அக்டோபர் மாதம் 19ம் தேதி கர்த்தர் ஒரு வெளிப்பாட்டைத் தந்தார். காலை ஆராதனை தேவ செய்தியின் போது Sol. அமரஜித் கவுர் மூலமாக என்னோடு பேசினார். கர்த்தர் அதை தன் சிலுவையோடு ஒப்பிட்டு எல்லா ஆத்துமாக்களுக்காக அவர் கொண்ட பாரமும் அன்பும் அவர் இந்த உலகத்திற்கு வருவதற்கான நோக்கமாக இருந்தது.

நன்றி ஆண்டவரே காணாமல் போன ஆடுகளை நீர் தேடி வந்ததற்காக.உமக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

Sol.Jasmine James

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 01-11-2022

நமது விசுவாசம் மலைகளை பெயர்க்கும்.

நாம் அனைவரும் நமது வாழ்க்கையில் ஏமாற்றம் அளிக்கக்கூடிய, மன அழுத்தம் ஏற்படக்கூடிய பல சூழ்நிலைகளை அனுபவித்திருப்போம்.அவை, வேலை இழப்பாக இருக்கலாம், நாம் நேசித்த ஒருவர் இறந்திருக்கலாம், நம் வாழ்க்கை எங்கே செல்கிறது என்ற குழப்பம் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் உத்வேகம் அளிக்கக்கூடிய வேத வசனங்கள வாசிப்பது, நம்மை கடினமான நிலைகளிலும் ஆவிக்குரிய வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும். கர்த்தரின் வார்த்தைகள் அதனை வாசிப்பவர்களுக்கு பலமும் ,  கொந்தளிப்பான சூழ்நிலைகளின் மத்தியில் தைரியம் உள்ளவர்களாகவும் இருக்க , ஆழமாக உற்சாகப்படுத்தும் வழிகளையும் கொண்டுள்ளது. இந்த உத்வேகம் தரும் மேற்கோள்கள் நமது காலை நேர ஜெபங்களுக்கு தொடக்கப்புள்ளியாகவும் நமது உரையாடல்களுக்கு நம்பிக்கை  அளிப்பதாகவும் இருக்கிறது.

ரோமர் 8 : 38,39

மரணமானாலும் , ஜீவனானாலும்,தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டுப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

2 கொரிந்தியர் 4 : 16 – 18

ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை.எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனிதனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது.மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு , அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் , மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது.ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள் , காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

எபேசியர் 3 : 20

” நாம் வேண்டிக் கொள்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள் கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்கிற வல்லவராகிய அவருக்கு,பயம் வேண்டாம் ,

இந்த வல்லமையான வேத வசனங்கள் , நம்முடைய பயங்களை விலக்கவும், பலமாகவும் தைரியமாகவும் இருக்க நமக்கு தேவை. கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கை , நாம் பயனுள்ளவர்களாகவும், பிறருக்காக தியாகம் செய்வதற்கும் தூண்டுகிறது. அன்பு பயத்திலிருந்து நம்மை காத்து பலமிக்கவர்களாக மாற்றுகிறது. இந்த வேத வசனங்களை , நம் காலை ஜெபத்திலும் , நாம் படுக்கைக்கு செல்லும் முன்பும் , சென்ற பின்பும் நமது கடினமான நாளிலும் உபயோகிக்க வேண்டும்.

எல்லாமே சாத்தியம்

நாம் சோர்வாகவோ , நம்பிக்கையின்மையாகவோ உணரும்போது கர்த்தருடன் தொடர்பு கொள்வது நம்மை உற்சாகப்படுத்தும். மாற்கும் மத்தேயுவும் நாம் கர்த்தருடன் இருந்தால் எதுவும் சாத்தியமே  என்று அறிவித்தார்கள். நாம் என்ன செய்தாலும் கர்த்தர் பலத்தை தருகிறார்.

மாற்கு 10 : 27

இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான் , தேவனால் இது கூடாததல்ல, தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

மத்தேயு 19 : 26

” இயேசு, அவர்களைப் பார்த்து, மனுஷரால் இது கூடாததுதான் , தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

பிலிப்பியர் 4 : 13

” என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலனுண்டு.

மேற்கூறிய இந்த வசனங்கள் எல்லாம் நம்முடைய விசுவாசம் மலைகளை பெயர்க்கும் என்று கூறுகிறது.  அதாவது எந்த சூழ்நிலை என்றாலும் , எந்த வித பிரச்சனைகளை சந்தித்தாலும் , நாம் வேத வசனங்களை விசுவசித்தால் அல்லது வேதத்தை வாசித்தால் அல்லது கர்த்தருடைய வார்த்தைகளை தியானித்தால் , எல்லாமே கர்த்தரால் சாத்தியமாகும்.  விசுவாசத்தோடு நம் தேவைகளுக்காக  ஜெபித்தால் நமக்காக  எல்லாவற்றையும் அவரால் செய்ய முடியும்.

முடிவுரை

விசுவாத்தின் முக்கியம்

அப்போஸ்தலராகிய பவுல்  1 பேதுரு 1 : 7 ல் விசுவாசத்தைப்பற்றி குறிப்படும்போது “ பொன்னைப் பார்க்கிலும் உங்கள் விசுவாசம் அதிக விலையேறப்பெற்றதாக இருக்கிறது ” என்று சொல்கிறார்.  நமது வாழ்க்கையில் நாம் எதைப் பெறுவோம் என்று நம்பினாலும், கர்த்தர்மேல் வைத்துள்ள விசுவாசத்தைவிட எதுவுமே முக்கியம் அல்ல.நாம் விசுவாசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நினைவுகூறும் போது கீழ்கண்ட வேதவசனங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

எபிரேயர் 11 : 6 விசுவாசம் தேவனை பிரியப்படுத்துகிறது

ரோமர் 5 : 1 விசுவாசம் நம்மை நீதிமான்களாக ஆக்குகிறது.

கலாத்தியர் 3 : 26 விசுவாசம் நம்மை கர்த்தருடைய புத்திரர்களாக்குகிறது.

எபேசியர் 3 : 17 விசுவாசம் கர்த்தர் நம்முடைய இருதயங்களில் வாசமாயிருக்கச் செய்கிறது.

எபிரேயர் 11 : 3 விசுவாசம் நமக்கு புரிதலை தருகிறது.

2  கொரிந்தியர் 5 : 7 விசுவாசம்  நம் வாழ்க்கைத் தரமாக இருக்கிறது.

கொலோசியர் 2 : 7 விசுவாசம் உறுதியை நமக்கு தருகிறது.

எபேசியர் 6 : 16 விசுவாசம் நம்மை பாதுகாக்கும் கேடகமாகிறது.

1 யோவான் 5 : 4 விசுவாசம் நம்மை இந்த உலகத்தை ஜெயிக்க வைக்கிறது.

1 பேதுரு 1 : 9 விசுவாசம் நம்மை பாதுகாக்கிறது.

முடிவாக, இந்த உலகத்தில் நமது முடிவு காலம் நெருங்கி வருகையில் , அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 4 : 7 ல் சொன்னதைப்போல ” நல்ல போராட்டத்தை போராடினேன் , ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன் ” என்று சொன்ன அதே  வாக்குறுதியை  நம்மால் சொல்ல முடியுமா? நாம் விசுவாசத்தை காத்துக் கொண்டால் 2 தீமோத்தேயு 4 : 8 ல் சொன்னபடி நீதியின் கிரீடத்தை பரிசாக பெற முடியும். 

வெளிப்படுத்துதல் 2 : 10 ல் சொன்னபடி  மரணபரியந்தம் வரை உண்மையாக இருந்தால் ஜீவகிரீடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.  எனவே கர்த்தர் தரும் இந்த பரிசினை ஒருநாளும் தவறவிடக் கூடாது.

Sol. திருமதி. சர்கம்