நாள்: 02-11-2022
லூக்கா 14 : 26, 27
” யாதொருவன் என்னிடத்தில் வந்து , தன் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்.
தன் சிலுவையை சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான். “

கர்த்தர் இந்த வசனங்களின் வழியாக பேசும்பொழுது , ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் அவர் சுமந்த பெரிய சிலுவையை எனக்கு காண்பித்தார். எல்லா மனித உறவுகளும் இந்த பூமியில் இருக்கும்வரை மட்டுமே. சிலுவையின் உண்மையான ஆழத்தை புரிந்து கொள்ள எனக்கு சில ஆண்டுகள் ஆனது. என்னுடைய இதயத்தின் ஆலயத்தில் உள்ள கர்த்தரின் பாதத்தில் இதை நான் முணுமுணுத்தபோது அவருடைய காலடியில் ஒரு தூசியாக என் இருதயம் இருந்தது. அந்த உண்மையான வெளிப்பாடு என்மீது பலமாக தோன்றியது.
நான் என்னுடைய சுய த்தை(” நான்” ) சிலுவையில் ஆணி அடித்தேன். ஒவ்வொரு நாள் காலையிலும் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு சுவாசத்திலும் நன்றியுடனும் பணிவுடனும் நம்மை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
(ரோமர் 12. 1) ” .
என் சிலுவையை மத்தேயு 11 : 28 – 30 சொல்லப்பட்டபடி செய்யமால் என் சிலுவையை சுமக்க முடியாது. 24X7 கர்த்தருடைய இளைப்பாறுதலில் நிலைத்திருக்க என்னுடைய பாரத்தையும்(அப்பாவை, அம்மாவை, மகனை மகளை, என் பெருமையை, என் சுய நீதியை, விக்ரகங்களாய் நம் வாழ்வில் இருக்கிற மனிதர்களை அல்லது அபிஷேகம் பெற்ற தேவ ஊழியர்கள்(ரோமர் 1 : 22, 23) , நம் பொறாமை, மன்னியாமை, நம்முடைய பணம் அல்லது பதவி) எல்லாவற்றையும் அவரிடத்தில்ஒப்புக்கொடுக்க அல்லது சரணடைய வேண்டும்.
யாத்ராகமம் 20 : 4,5
“ மேலே வானத்திலும் , கீழே பூமியிலும் பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து என்னை பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தை மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கறவனாயிருக்கிறேன்.”
கலாத்தியர் 5 : 1 ஆனபடியினாலே நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்கு உட்படாமல் , கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையில் நிலை கொண்டிருங்கள்.
கலாத்தியர் 5 : 24 “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாமிசத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.”
அவரது விருப்பத்தை மட்டுமே தேடவும் கண்டுபிடிக்கவும் கீழ்படியவும் செய்யவேண்டும்.
2022 அக்டோபர் மாதம் 19ம் தேதி கர்த்தர் ஒரு வெளிப்பாட்டைத் தந்தார். காலை ஆராதனை தேவ செய்தியின் போது Sol. அமரஜித் கவுர் மூலமாக என்னோடு பேசினார். கர்த்தர் அதை தன் சிலுவையோடு ஒப்பிட்டு எல்லா ஆத்துமாக்களுக்காக அவர் கொண்ட பாரமும் அன்பும் அவர் இந்த உலகத்திற்கு வருவதற்கான நோக்கமாக இருந்தது.
நன்றி ஆண்டவரே காணாமல் போன ஆடுகளை நீர் தேடி வந்ததற்காக.உமக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
Sol.Jasmine James
