நாள்: 01-11-2022
நமது விசுவாசம் மலைகளை பெயர்க்கும்.

நாம் அனைவரும் நமது வாழ்க்கையில் ஏமாற்றம் அளிக்கக்கூடிய, மன அழுத்தம் ஏற்படக்கூடிய பல சூழ்நிலைகளை அனுபவித்திருப்போம்.அவை, வேலை இழப்பாக இருக்கலாம், நாம் நேசித்த ஒருவர் இறந்திருக்கலாம், நம் வாழ்க்கை எங்கே செல்கிறது என்ற குழப்பம் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் உத்வேகம் அளிக்கக்கூடிய வேத வசனங்கள வாசிப்பது, நம்மை கடினமான நிலைகளிலும் ஆவிக்குரிய வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும். கர்த்தரின் வார்த்தைகள் அதனை வாசிப்பவர்களுக்கு பலமும் , கொந்தளிப்பான சூழ்நிலைகளின் மத்தியில் தைரியம் உள்ளவர்களாகவும் இருக்க , ஆழமாக உற்சாகப்படுத்தும் வழிகளையும் கொண்டுள்ளது. இந்த உத்வேகம் தரும் மேற்கோள்கள் நமது காலை நேர ஜெபங்களுக்கு தொடக்கப்புள்ளியாகவும் நமது உரையாடல்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது.
ரோமர் 8 : 38,39
மரணமானாலும் , ஜீவனானாலும்,தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டுப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
2 கொரிந்தியர் 4 : 16 – 18
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை.எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனிதனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது.மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு , அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் , மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது.ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள் , காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
எபேசியர் 3 : 20
” நாம் வேண்டிக் கொள்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள் கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்கிற வல்லவராகிய அவருக்கு,பயம் வேண்டாம் ,
இந்த வல்லமையான வேத வசனங்கள் , நம்முடைய பயங்களை விலக்கவும், பலமாகவும் தைரியமாகவும் இருக்க நமக்கு தேவை. கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கை , நாம் பயனுள்ளவர்களாகவும், பிறருக்காக தியாகம் செய்வதற்கும் தூண்டுகிறது. அன்பு பயத்திலிருந்து நம்மை காத்து பலமிக்கவர்களாக மாற்றுகிறது. இந்த வேத வசனங்களை , நம் காலை ஜெபத்திலும் , நாம் படுக்கைக்கு செல்லும் முன்பும் , சென்ற பின்பும் நமது கடினமான நாளிலும் உபயோகிக்க வேண்டும்.
எல்லாமே சாத்தியம்
நாம் சோர்வாகவோ , நம்பிக்கையின்மையாகவோ உணரும்போது கர்த்தருடன் தொடர்பு கொள்வது நம்மை உற்சாகப்படுத்தும். மாற்கும் மத்தேயுவும் நாம் கர்த்தருடன் இருந்தால் எதுவும் சாத்தியமே என்று அறிவித்தார்கள். நாம் என்ன செய்தாலும் கர்த்தர் பலத்தை தருகிறார்.
மாற்கு 10 : 27
இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான் , தேவனால் இது கூடாததல்ல, தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
மத்தேயு 19 : 26
” இயேசு, அவர்களைப் பார்த்து, மனுஷரால் இது கூடாததுதான் , தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
பிலிப்பியர் 4 : 13
” என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலனுண்டு.
மேற்கூறிய இந்த வசனங்கள் எல்லாம் நம்முடைய விசுவாசம் மலைகளை பெயர்க்கும் என்று கூறுகிறது. அதாவது எந்த சூழ்நிலை என்றாலும் , எந்த வித பிரச்சனைகளை சந்தித்தாலும் , நாம் வேத வசனங்களை விசுவசித்தால் அல்லது வேதத்தை வாசித்தால் அல்லது கர்த்தருடைய வார்த்தைகளை தியானித்தால் , எல்லாமே கர்த்தரால் சாத்தியமாகும். விசுவாசத்தோடு நம் தேவைகளுக்காக ஜெபித்தால் நமக்காக எல்லாவற்றையும் அவரால் செய்ய முடியும்.
முடிவுரை
விசுவாத்தின் முக்கியம்
அப்போஸ்தலராகிய பவுல் 1 பேதுரு 1 : 7 ல் விசுவாசத்தைப்பற்றி குறிப்படும்போது “ பொன்னைப் பார்க்கிலும் உங்கள் விசுவாசம் அதிக விலையேறப்பெற்றதாக இருக்கிறது ” என்று சொல்கிறார். நமது வாழ்க்கையில் நாம் எதைப் பெறுவோம் என்று நம்பினாலும், கர்த்தர்மேல் வைத்துள்ள விசுவாசத்தைவிட எதுவுமே முக்கியம் அல்ல.நாம் விசுவாசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நினைவுகூறும் போது கீழ்கண்ட வேதவசனங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
எபிரேயர் 11 : 6 விசுவாசம் தேவனை பிரியப்படுத்துகிறது
ரோமர் 5 : 1 விசுவாசம் நம்மை நீதிமான்களாக ஆக்குகிறது.
கலாத்தியர் 3 : 26 விசுவாசம் நம்மை கர்த்தருடைய புத்திரர்களாக்குகிறது.
எபேசியர் 3 : 17 விசுவாசம் கர்த்தர் நம்முடைய இருதயங்களில் வாசமாயிருக்கச் செய்கிறது.
எபிரேயர் 11 : 3 விசுவாசம் நமக்கு புரிதலை தருகிறது.
2 கொரிந்தியர் 5 : 7 விசுவாசம் நம் வாழ்க்கைத் தரமாக இருக்கிறது.
கொலோசியர் 2 : 7 விசுவாசம் உறுதியை நமக்கு தருகிறது.
எபேசியர் 6 : 16 விசுவாசம் நம்மை பாதுகாக்கும் கேடகமாகிறது.
1 யோவான் 5 : 4 விசுவாசம் நம்மை இந்த உலகத்தை ஜெயிக்க வைக்கிறது.
1 பேதுரு 1 : 9 விசுவாசம் நம்மை பாதுகாக்கிறது.
முடிவாக, இந்த உலகத்தில் நமது முடிவு காலம் நெருங்கி வருகையில் , அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 4 : 7 ல் சொன்னதைப்போல ” நல்ல போராட்டத்தை போராடினேன் , ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன் ” என்று சொன்ன அதே வாக்குறுதியை நம்மால் சொல்ல முடியுமா? நாம் விசுவாசத்தை காத்துக் கொண்டால் 2 தீமோத்தேயு 4 : 8 ல் சொன்னபடி நீதியின் கிரீடத்தை பரிசாக பெற முடியும்.
வெளிப்படுத்துதல் 2 : 10 ல் சொன்னபடி மரணபரியந்தம் வரை உண்மையாக இருந்தால் ஜீவகிரீடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். எனவே கர்த்தர் தரும் இந்த பரிசினை ஒருநாளும் தவறவிடக் கூடாது.
Sol. திருமதி. சர்கம்
