தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 11-11-2022

யோவான் 3 : 30 ” அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். ” 

இந்த வசனம் ,  தாழ்மையான  திருமுழுக்கு யோவானால் பேசப்பட்ட சில வல்லமையான வார்த்தைகள்.தன்னை  அல்ல , இயேசுவை பின்பற்றுமாறு மற்றவர்களிடம் சொல்லும்படி அவர் கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டார் என்பதை அவர் அறிந்திருந்தார். அதைச்செய்வதற்காக , தன்னை பணியாளராக தாழ்த்தி, மற்றவர்களிடம் இயேசுவை பின்பற்ற சொன்னார். மாறாக தன்னுடைய சொந்த ஊழியத்திற்காக அல்ல. கிறிஸ்துவை பின்பற்றுபவர்களுக்கும், தலைவர்களுக்கும் இதுவே உண்மை. எதிரி எப்போதுமே நம்முடைய கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வான். மற்றவர்கள் நம்மை கேலி செய்யலாம். நம்மை  வேடிக்கையாக்கலாம். பயப்பட வேண்டாம்.

2 திமோத்தேயு 1 : 7  ” தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல் , பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்துள்ளார்.

யோவான் கர்த்தருக்கு முன்னோடியான தீர்க்கத்தரிசியாக இருந்தார். தூய. யோவானுடைய நற்செய்தியில் ,  ” இயேசு என்னும் ஒளியைப் பற்றி சாட்சியமளிக்க  சாட்சியாக அவர் வந்தார்.ஏனென்றால் எல்லாரும் ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து ஏற்று கொள்ள வேண்டும் என்பதற்காக

எசாயா 40 : 3 ” கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் , அவாந்தர வெளியிலே நம்முடைய தேவனுக்கு பாதையை செவ்வைபண்ணுங்கள் “

யோவான் 1 : 23  ” அதற்கு அவன் , கர்த்தருக்கு வழியைச் செவ்வை பண்ணுங்கள் என்று எசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே , நான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.”

யோவான் இயேசுவை, அபிஷேகம் செய்யப்பட்ட மெசியாவாக , பிதாவாகிய தந்தைக்கு இணையாக  அவரை அடையாளம் காட்டினார்.

யோவான் 1 : 29 ” மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வரக்கண்டு, இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி  என்றார். இரண்டாவது முறையாக யோவான் 1 : 36 ல் இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றார். திருமுழுக்கு யோவான் மேலும் இயேசுவினுடைய பாத ரட்சையை அவிழ்ப்பதற்குக் கூட நான் தகுதியற்றவன் என்று சொன்னார். யோவான்  மக்களுக்கு தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தால் இயேசு பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுப்பார் என்பது அவருக்குத் தெரியும். நமது சொந்த திறமைகளும் ஞானமும் குறைந்த அளவே நம் வாழ்வில் பங்கெடுக்க அனுமதிக்க வேண்டும். கர்த்தருடைய ஞானமும் கிருபையும் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்த நாம் அனுமதிக்க வேண்டும். யோவான் தன்னுடைய தலைமைத்துவத்தை இயேசுவுக்கு அர்ப்பணித்தார். நாமும் நம்முடைய வாழ்க்கையின்  தலைமைத்துவத்தையும் செல்வாக்கினையும் இயேசுவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவின் மீதான விசுவாசத்தோடு நாம் வளரும்போது  நாம்  உலக வழிகளிலிருந்து நம்மை வெறுமையாக்கலாம். ஒவ்வொரு நிலையிலும் கிறிஸ்துவுக்குள்  வளர்வதை நாம் தொடர வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் கண்டிப்பாக நாம் சிறுகவும் இயேசு பெருகவும்  வேண்டும். அவருடைய வார்த்தைகளும் தன்மையும், நம்முடைய   எண்ணங்கள் சொற்கள் செயல்கள் எல்வாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இயேசு நம்முடைய வாழ்க்கையில் செய்த அற்புதங்களை பார்த்து அவர்மீது நாம் வைத்துள்ள விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பை அதிகரிக்க வேண்டும். விசுவாசத்தில் முதிர்ச்சி அடையும் போது, பவுல் அறிக்கையிடுவதைப் போல வாழ்வது நானல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார் என்று நாமும்  அறிக்கையிட வேண்டும்.

கலாத்தியர் 2 : 20  “கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன். ஆயினும் நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ ,என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

நம்முடைய சொந்த பலன் சிறுகும். ஆனால் நம்முள் செயல்படும்  இயேசுவுடைய வலிமையும் சக்தியும் பெருகும். களிமண் பாத்திரங்களாய் இருந்த நம்மை மரியாதைக்குரிய பாத்திரங்களாய் , மீட்டதற்குரிய புகழுக்கும் மகிமைக்கும் தகுதியானவர் அவரே. நம்முடைய விசுவாசம் வளர்வதால் பயங்கள் மறையும்.  நாம் தாழ்த்தும்போது அவர் இல்லாமல் நாம் ஒன்றுமே இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

பிலிப்பியர் 4 : 13 ” என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலனுண்டு. ” பரிசுத்த ஆவியின் கனிகள் நம்மில்  பெருகும் போது , நாம் சிறுகி அவர் நம்மில் பெருகுவார். நம்முடைய பெருமை, ஆணவம் , மன்னியாமை, தற்பெருமை  ஆகியவை குறைக்கப்பட்டு   கிறிஸ்துவுக்கான வார்த்தையும் செயலும் பெருகும்.

ஜெபம்.

பரலோகத் தந்தையே, திருமுழுக்கு யோவானின் சாட்சிக்கும் , முன்மாதிரியான அவருடைய  பணிவுக்கும் கருணைக்கும் நன்றி. என் வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் உமக்கு முன்பாக பணிவுடன் நடக்கவும் ,  இயேசுவே இந்த உலகின் மீட்பர்  என்று சாட்சி சொல்ல தயாராக இருக்கவும், அவர் கண்டிப்பாக பெருகவும் நான் கண்டிப்பாக  சிறுகவும்   இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. ஜிஜி ஜேக்கப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *