தானியேல் – II

17-02-2022 – தேவ செய்தி

புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்

லூக் 19:13.

நாம் அனைவரும் இந்த உலகில் ஒரு நோக்கத்திற்காக இருக்கிறோம். நாம் பிறந்திருக்கும் குடும்பம் அல்லது வசித்துவரும் நாடு எல்லாமே ஒரு குறிக்கோளோடுதான் அமைந்துள்ளது, நம் ஆண்டவராகிய இயேசு திரும்பி வரும் மட்டும் ஒரு நோக்கத்திற்காக சேவை செய்துகொண்டிருக்க வேண்டும்.
லூக்கா 19:13


நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம் பண்ணுங்கள். – இதுதான் நம்முடைய தேவனின் கட்டளை, அவருடைய ஊழியகாரர்களாகிய நாம பின்பற்ற வேண்டிய ஒரு கட்டளை.
நாம் இயேசு கிறிஸ்துவின் சேவகர்கள். நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிய வேண்டும். அவருடைய இரகசிய வருகைவரை நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பரலோக ராஜ்யத்தின் காரியங்களை செய்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால் நாம் வேறு இடத்தில் நமக்கு கொடுக்கப்படாத காரியத்தில் பிஸியாக இருக்கிறோம். இதனால் தேவையில்லாத பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய திறமையின் காவலாளி நாமே. ஒரு நாள் நம்முடைய திறமை, கொடுக்கப்பட்ட காரியங்கள் இவைகளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். நம்முடைய வேலை நற்செய்தியை அறிவிப்பது மற்றும் சீடராக்குவது. இந்த வேலையை நாம் செய்துகொண்டு வந்தால் அவர் நம்மை பார்த்து, “நல்லது உத்தம ஊழியனே” என்று சொல்லுவார். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகள் (திறமைகள்) அவர் நமக்கு கொடுத்திருக்கும் வேலையை நிறைவு செய்யத்தான். நாம் உண்மையில் நம் திறமைகளை பரலோகராஜ்யத்தின் காரியத்தில் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோமா? நாம் உத்தம உழியர்களா? நாம் நேர்மையான ஊழியர்களா?

உங்களோடு ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கட்ந்த 27 ஆண்டுகளாக திருமணமான ஒரு முஸ்லீம் சகோதரியை சந்தித்தேன். அவர் மிகவும் மனம் உடைந்து போயிருந்தார் ஏனென்றால் 17 ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய கணவர் அவரை கைவிட்டுவிட்டார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிறப்பப்பட்டு நான் அவருக்காக டிசம்பர் 18 தேதியிலிருந்து ஜெபித்து வந்தேன். பிப்ரவரி 2ஆம் தேதி அந்த சகோதரியின் கணவர் தொலைபேசியில் அவரை அழைத்தார் இதோ நான் திரும்பி வருகிறேன் உன்னிடம் என்று சொன்னார். அவர்கள் இருவரும் சொன்ன ஒரே சாட்சி என்னவென்றால் இயேசு கிறிஸ்துதான் எங்களை ஒன்று சேர்த்தார் எல்லா மகிமையும் அவருக்கே.
உங்களுக்கும் எனக்கும் இருக்கின்ற கேள்வி இன்று என்னவென்றால் பரலோக ராஜ்யத்தின் காரியங்களில் நாம் முழுமனதுடன் அல்லது அரை மனதுடன் அல்லது முற்றிலும் ஈடுபடாமல் இருக்கின்றோமா? ஆராய்ந்து பார்ப்போம்.


நமக்குள் குறை இருப்பதாக நாம் உணர்ந்தால் உடனே மனம்வருந்தி மன்னிப்பு கேட்போம். நம்முடைய முதலாளியின் புத்தகத்தில் நமது பெயர் இல்லாமல் போக கூடாது,
ஜெபம்:
அப்பா பிதாவே, நான் மீண்டுமாக உமக்கு சேவை செய்ய விரும்புகிறேன், எனக்குள் இருக்கும் நெருப்பை அனலாக்கும். இயேசு கிறிஸ்துவே எனக்கு கிருபைதாரும் நான் முற்றிலும் புதுப்பிக்கப்படுவேன். பரிசுத்த ஆவியானவரே என்னை முற்றிலும் உம்முடைய கட்டுபாட்டின் கீழ் வையும்,, உம்முடைய மகிமைக்காக என்னை பயன்படுத்தும், YESHUA HAMASHIACH நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமேன்.

Sol.Theresa Cabral.(AOJ)

தானியேல் – II
16-02-2022 – தேவ செய்தி

யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபாதொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப்போய்,….

2நாளா 19:4


ராஜா யோசபாத் தலைநகரில் வசித்து வந்தான்.
எந்த இடத்தில் நீங்கள் வாசம் செய்கிறீர்களோ அதுதான் கர்த்தர் வேலை செய்ய விரும்பும் தலைநகரம்.


அங்கிருந்து நீங்கள் உங்களுடைய தொகுதியின் தற்போதைய நிலையை காண அதை சுற்றிபார்க்க செல்ல வேண்டும்.
தீர்க்கதரிசி எசேக்கியேல் தன்னுடைய அனுபவத்தைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்,


எசேக் 37:1,2 – கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க்கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது.
நீங்கள் உங்கள் தொகுதியை நேரடியாகவோ அல்லது தினசரி ஜெபத்தில், கிராமம் கிராமமாக, நகரங்கள், குடும்பங்கள் என சுற்றி நடக்கும்போது அங்கு செய்யப்பட்ட ஆனால் மறைக்கப்பட்ட பாவங்கள் உங்களுக்கு தெரியவரும்.


மாந்திரீகம், நரபலிம் மத மூட நம்பிக்கைகள், பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றின் பெயரால் செய்யப்படும் அட்டூழியங்கள் மேலும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இவைகளையும் பற்றி தெரிந்துகொள்வீர்கள்.


இப்படிப்பட்ட எத்தனை எத்தனை உலர்ந்த எலும்புகள் உங்கள் தொகுதியில் இருக்கின்றன?


பல்வேறு காரணங்களால் மூச்சு திணறலுக்கு ஆளான அவல நிலையில் வாழும் மக்களை சென்று பாருங்கள்
விவசாயிகள்? குழந்தைகள்? மாணவர்கள்? தாய்மார்கள்? தகப்பன்மார்கள்? ஆசிரியர்கள்? இளைஞர்கள்? அரசு அதிகாரிகள்? தொழில்துறை தொழிலாளர்கள்? ஊடக் ஊழியர்கள்? பத்திரிகையாளர்கள்? அரசியல் வாதிகள்? படைவீரர்கள்? வணிகர்கள்? காவலர்கள்? இவர்களை யெல்லாம் நாம் பார்க்கலாமா?

யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபாதொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப்போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான்.


நீங்களும் உங்கள் தொகுதியில் பலமுறை பிரயாணம் செய்யவேண்டும், அங்கிருக்கும் மக்களையும் அவர்களுடைய இருதயங்களையும் இயேசு கிறிஸ்வின் பக்கம் திருப்பவேண்டும்.


எசேக்கியல் சொல்லுகிறார், உலந்த எலும்புகளை அவைகளுடை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்காக, கர்த்தர் என்னை அவைகளைச் சுற்றி வரச்சொன்னார்.
கர்த்தர் அவனுடைய வாயில் வைத்த வார்த்தைகளால் அவன் தீர்க்க்தரிசனம் சொன்னான்.
அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள். நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.

எசே 37:4-6.
எசேக்கியேல் கர்த்தர் சொன்னபடியே அனைத்தையும் செய்தார்.
எனக்கு கற்பிக்கப்பட்ட படியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன். அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து காலூன்றி மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
நீங்கள் உங்கள் தொகுதியில் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது மகாபெரிய சேனை எழுந்துநிற்கும். அவர்கள் கர்த்தருக்காக நிற்பார்கள், அவருக்காக யுத்தம் செய்வார்கள்.

Sol. Benovin Samuel AOJ.

தானியேல்
15-02-2022 – தேவ செய்தி

இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

லூக் 18:22

இங்கு சொல்லப்படும் மனிதன் மிகவும் செல்வந்தன். அவன் கர்த்தரை பின்பற்றினான், அவன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய கட்டளைகளை அவனுக்கு புரிந்த மத அடிப்படையில் பின்பற்றினான். இந்த செல்வந்தன் மத கற்பனைகளை பின்பற்றினானே ஒழிய கர்த்தரோடும் மற்றவர்களோடும் நல்ல உறுதியான உறவை அவன் ஏற்படுத்த வில்லை. அவனுடைய வாழ்வு எவ்வளவு குறைகள் நிறைந்தது என்பதை இயேசு அவனுக்கு காட்டினார். அவனுடைய எண்ணங்கள் எப்படி சுயநலம் மிகுந்தவை மற்றும் உலகபிரகாரமானவை என்பதையும் சுட்டிகாட்டினார்.


மத் 19:21 – அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
நீங்கள் அதிகம் நேசிக்கும் அனைத்தையும் விற்று, அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, சிலுவையை எடுத்துக்கொள்ளுங்கள்.


செல்வம் கர்த்தரின் அங்கீகாரத்தின் அடையாளம் என்று அவன் நினைத்தார். ஆனாலும் அவர் திருப்தியடையவில்லை, ஏதோ ஒன்று அவரை மேலும் தேட வைத்தது.

அவரது கவனம் முழுவதும் செல்வத்தின் மீதும் சில நேரம் சமுதாயத்தின் மீதும் சமுதாயம் அவனை எப்படி பார்கிறது என்பதைப்பற்றியும்தான் இருந்தது. அதனால்தான் இயேசு உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்றுவிடு என்றார்.


அநேக வேளைகளில் நாம் இயேசுவை பின்பற்றுகிறோம், மேலும், ஜெபம், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற எல்லா நல்ல காரியங்களை செய்கிறோம், கர்த்தர் நம்மை செல்வத்தால் ஆசீர்வதிக்கிறார். கர்த்தர் நம்மை அங்கீகரிக்கிறார் என்று நினைத்து நாம் செல்வத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகிறோம்.


நமது வேலை, வியாபாரம், குடும்பம் போன்றவற்றில் நாம் சிக்கிகொள்கிறோம். ஆனால் நாம்முடைய வாழ்வில் சந்தோஷம், திருப்தி, மற்றும் போதும் என்ற மனம் இல்லாம இருக்கிறோம்.


என்னை கீழே இழுப்பது எது?


மத் 6:19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.


பூமியில் பொக்கீஷங்களை சேர்த்து வைப்பதிலும், வேறுஒருவராக வாழ முயற்சிப்பதிலும், பல போட்டிகளிலும் மக்கள் இன்று ஈடுபட்டிருக்கிறார்கள்.


நீதி 6:19 – ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.
பல வருடங்களுக்கு முன், எனக்கு தெரிந்த சில நண்பர்கள் தவறான பாதையில் சென்று ஏராளமான செல்வத்தைசேர்த்தனர். ஒருவர் மிகவும் செல்வந்தர். போன வருடம் இள வயதில் அவர் மரித்துபோனார், தன்னுடைய குடும்பத்திற்காக எதையும் வைக்க வில்லை.


வாழ்வில் நாம் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ வேண்டும்.
கடந்த ஆண்டு முடிவில் நான் சந்தோஷமாக இல்லை, ஏதோ ஒன்றை நான் கைவிட வேண்டும் என்று உணர்ந்தேன். அதற்குபின் உடனடியாக எனக்குள் இதற்குமுன்னாள் அனுபவிக்காத அமைதியும், மகிழ்ச்சியும் என்னை நிறப்பிற்று, பாடல் இல்லாமல் நடனமாடினேன், காற்றில் மிதப்பது போல் இருந்தது.


மற்றவர்களுக்கு உதவி செய்வதன்மூலம் தியாகம் செய்வது அழிக்கமுடியாத பொக்கீஷத்தை தருகிறது.


Sol. Arvind Dias AOJ

தானியேல் – II
14-02-2022 – இன்றைய தேவ செய்தி

ஒரு நற்செய்தி – பல வழிமுறைகள்

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.

கலா 1:6-7

சமீபத்தில் நான் கேட்ட கதைஒன்று இந்த வசனத்தை எனக்கு நினைவுபடுத்தியது. தாமஸ் ஆல்வா எடிசன் ஒருமுறை இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் அவர் வேதாகமத்தை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர் இருந்த அதே இரயில் பெட்டியில் இவர் எடிசன் என்று தெரியாத மற்றொரு விஞ்ஞானியும் பயணம் செய்தார், அவர் ஒரு நாத்தீகர்.
பயணத்தின் போது எடிசன் பைபிளைப் படித்துக் கொண்டிருந்தபோது, ​​மற்ற விஞ்ஞானி எடிசன் என்று தெரியாமல் அவரிடம் கேட்டார். “நீங்கள் படித்த இளைஞனாகத் தெரிகிறீர்கள், இந்த அறிவியல் யுகத்தில் கடவுள், மதம் மற்றும் அனைத்தையும் எப்படி நம்புகிறீர்கள்?. ‘உங்களைப் போன்ற இளைஞர்கள் கடவுளைத் தேடினால், சிறந்த உலகத்தை உருவாக்கப் போவது யார்? அவர் கேட்டார்.


எடிசன் அமைதியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார், மற்ற விஞ்ஞானி அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்கள் ஒரு சுருக்கமான உரையாடலுக்குச் சென்றனர், மற்ற விஞ்ஞானி எடிசனைப் பற்றி மேலும் அறிய அவரது வீட்டிற்குச் செல்ல விரும்பினார். எடிசன் அவரை தனது வீட்டிற்கு அழைத்தார், விஞ்ஞானி எடிசனின் புதிய கண்டுபிடிப்பைப் பார்த்தபோது அவர் அதை எப்படி கண்டுபிடித்தார் என்று கேட்டார்.
அதற்கு எடிசன், “நான் ஒன்றும் செய்யவில்லை; ஒரு நாள் நான் கண்விழித்த போது நீ பார்க்கிற மாதிரி இருந்தது”.


மற்ற விஞ்ஞானி, “நீ உருவாக்காமல் எப்படி வரும்” என்றார். எடிசன் அதே பதிலை மீண்டும் மீண்டும் பலமுறை கொடுத்தார், மற்ற விஞ்ஞானி வழக்கம் போல் அதை நம்பவில்லை. எடிசன் இறுதியாக அவரிடம், “அது அப்படித்தான் வந்தது என்று நீங்கள் நம்பவில்லை என்றால், பூமி, கேலக்ஸி மற்றும் காஸ்மோஸ் அனைத்தும் ஒரு நாள் தானாக உருவானது என்று எப்படி நம்புவீர்கள். ஒரு படைப்பு இருந்தால், ஒரு படைப்பாளர் இருக்கிறார், சத்தியம் பைபிளில் எழுதப்பட்டுள்ளது.

நாத்திகராக இருந்த மற்ற விஞ்ஞானி கர்த்தரை நம்புவதற்கு எடிசனில் உள்ள பரிசுத்த ஆவியின் வழிநடத்தல்தான் இது.


அப்போ 17:24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கிய தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆணவராயிருக்கிறபடியால் …..


நான் சென்னையில் ஒரு ஜெராக்ஸ் கடிக்குச் சென்றேன். கிறிஸ்தவ குடும்பத்தால் அந்த கடை நடத்தப்படுகிறது, சுவாமி விவேகானந்தர் இயேசுவைப் பற்றி பின்வரும் வரியில் சாட்சியமளிக்கும் பலகையைப் பார்த்தேன்: “உங்களுக்கு விடுதலை தேவைப்பட்டால் இயேசுவிடம் வாருங்கள், யாரையும் ஒப்பிடும்போது அவரே உயர்ந்த கடவுள். உங்களுக்குத் தெரியும், அவர் உங்களை விடுவிப்பார்.”


கடைக்கு வரும் ஒவ்வொரு அவிசுவாசியும் அதைப் படிக்கும்படி கடையில் தெரியும் பலகையை வைக்க பரிசுத்த ஆவியானவர் கடை உரிமையாளருக்கு இந்த அறிவைக் கொடுத்தார். மரியாதைக்குரியவர் என்று இந்தச் சமூகம் நம்பும் சுவாமி விவேகானந்தர் சாட்சியமளித்துள்ளார். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தை இது வாசகர்களுக்கு அதிகரிக்கும்.
மரியாதைக்குரியவர் என்று இந்தச் சமூகம் நம்பும் சுவாமி விவேகானந்தர் சாட்சியமளித்துள்ளார். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தை இது வாசகர்களுக்கு அதிகரிக்கும்.


அப்போஸ் 17 இல் சிலை வழிபாட்டால் நிறைந்த நகரமாகிய அத்தேனேவில் நற்செய்தியை ஒரு தனிபட்ட முறையில் அறிவிக்க வழிநடத்துவதை நாம் காண்கிறோம். அங்கே ஒரு பலிபீடத்தை அவர் கண்டார், “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருந்தது. “நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்- அவர்தான் இயேசு.


ஏசா 45:18 – வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானேகர்த்தர், வேறொருவர் இல்லை.
நற்செய்தியை நாம் எப்படி அறிவிப்பது என்றும், இயேசுவுக்கு சாட்சி பகர்வது எப்படி என்றும் அறியாமல் திகைக்கும் தருணங்கள் நம்முடைய வாழ்வில் நிச்சயம் வரும். ஆனால் எப்பொழுதும் நம்பிக்கையுடன் இருப்போம், மேலும் பரிசுத்த ஆவியின் ஞானத்திற்காக ஜெபிப்போம். அப்பொழுது எந்த மனித எண்ணத்தாலும் நினைத்துபார்க்க முடியாத அளவுக்கு வித்தியாசமாக நற்செய்தியை அறிவிக்கவும் இயேசுவுக்கு சாட்சியளிக்கவும் பரிசுத்த ஆவியானவர் நம்மை வழி நடத்துவார்.


ஒரே நற்செய்திதான், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு உண்டு ஆனால் இந்த நற்செய்தியை அறிவிக்க பல வழிகள் உள்ளன.


Sol. Leo

தானியேல் –
13-02-2022 – தேவ செய்தி

ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான் –

லூக் 18:36

திரளான ஜனங்கள் தங்கள் வருடாந்திர பாஸ்காவிழாவை கொண்டாடுவதற்கு இறுதி பயணமாக எருசலேமுக்கு இந்த வழியாக வருவார்கள் என்று அறிந்து பர்திமேயு என்கிற ஒரு குருடன் எரிகோவின் சாலையோரம் அமர்ந்திருக்கிறான்.


அவனால் பார்க்க முடியாது, ஆனால் காதுகள் கேட்கும். ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான், நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். உடனடியாக பத்து குஷ்டரோகமுள்ள மனிஷரை போல (லூக் 17:13), “இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.” இங்கு இயேசுவை மேசியா என்று அழைத்தான்.
இது ஒரு விசுவாச அறிக்கையாகும். பர்திமேயு இயேசுவைப் பற்றி போதுமான அளவு கேள்விப்ப்ட்டிருக்கிறான், நாசரேத்திலிருந்து வரும் ஒரு சாதாரண மனிதர் அல்ல அதற்கும் மேலானவர் என்று. மக்கள் அவனை பேசாமலிருக்கும்படி அதட்டுகிறார்கள் ஆனால் அவன் நிறுத்தவில்லை, ஆயிரகணக்கான மக்கள் மத்தியில் இயேசுவின் கவனத்தை ஈர்பதற்காக அவன் இன்னும் உரத்த குரலில் கத்துகிறான். அவ்வளவு பெரிய கூட்டத்திலும் நம்பிக்கையிழந்த அவனது அழுகுரலை இயேசு கேட்டார் அவனுக்கு பார்வை தந்தார்.

என்னுடைய தோழிகளில் ஒருவர் கத்தோலிக்க மதத்திலிருந்து வெளியே வந்த Catholic nuns (AOJ) சகோதரிகளை பார்க்க ஆசைப்பட்டார். நானும் ஒரு கத்தோலிக்கர் எனவே இந்த சர்ந்தர்ப்பதை பயன்படுத்திக்கொண்டு என் தோழியோடு சேர்ந்து அவர்களை சந்திக்கச் சென்றேன். என்னுடைய சில சந்தேகங்களை அவர்கள் முன் வைத்தேன், அவர்கள் தந்த பதில் கேட்டு என்னுடைய மன கண்கள் திறக்கப்பட்டது. இது நமக்கு லூக் 19:3 இல் வரும் விடாப்பிடியான மனிதனை நினைவூட்டுகிறது. என்னுடைய தேவை இதுதான் என்று மற்றவர்களுக்கு தோன்றினாலும் அது உண்மையில் நான் விரும்புவதாக இல்லாமல்கூட இருக்கலாம். அவன் பிச்சைதான் (பணம்) கேட்டுக்கொண்டிருந்தான் மக்களிடம் ஆனால் உண்மையில் அவனுக்கு தேவைப்பட்டது பணம் அல்லஉண்மையில் உலகில் நடந்துகொண்டிருக்கும் காரியங்களை விசேஷமாக இந்த கடைசி நாட்களைப் பற்றி வேதத்தில் எழுதப்பட்டுள்ளதை நாம் அறிந்திருக்க வேண்டும். லூக் 24:18 – எம்மாவுக்கு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு சீடர்களில் ஒருவன் இயேசுவை பார்த்து கேட்டான், “இந்நாட்களில் எருசலேமில் நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறேரோ என்றான்.” அவன் இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததைப் பற்றி குறிப்பிட்டான், அந்நாட்களில் அது அனைவரின் விவாதப் பொருளாகவும் இருந்தது.
நம்முடைய ஆண்டவர் சொல்லுகிறார் (மத் 24:42) உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் “விழித்திருங்கள்”. விழிப்பாக இருந்து விசுவாசத்தில் கிரியை செய்ய இந்நாட்களில் ஆண்டவர் பர்திமேயுக்களை தேடுகிறார். நிறைய காரியங்கள் மற்றும் முடிவுகள் இந்த நேரத்தில் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் ஒருபோதும் செய்யப்படாது. ஊமையும் செவிடுமான அசுத்த ஆவியின் பிடியிலிருந்து நாம் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜெபிப்போம் அப்போதுதான் சரியான வேளையிலே கேட்கவும் பேசவும் முடியும்.

Sol. Amala Arunachalam(AOJ)

தானியேல் –
12-02-2022 – தேவ செய்தி

மாசற்றதன்மை மற்றும் பரிசுத்தம்

ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்.

லூக் 19:2

மேற்கண்ட வசனம் கல்லூரியில் நான் புதிதாக சென்ற ஆரம்ப நாட்களை எனக்கு நினைவுபடுத்துகிறது. நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். கர்த்தரை காணவும், அவர் அன்பை அனுபவிக்கவும் நான் மிகவும் ஆசைப்பட்டேன். என்னுடைய சகோதரி மூலமாக நான் புதிய ஐக்கியத்திற்கு கொண்டுவரப்பட்டேன், அங்கே கிறிஸ்துவை இன்னும் ஆழமாக அறிந்து கொண்டேன். இயேசு எவ்வளவு நல்லவர் என்றும் அவர் என்னை எவ்வளவு அன்பு செய்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன். இதற்கு பின்னரே நான் ஞானஸ்ஞானம் எடுக்க முடிவு செய்தேன், அதன் மூலம் நான் அவருடைய கிருபையால் இரட்சிப்பைப் பெற்றேன். இதற்கு பின் நான் SHUATS இல் இடம் கிடைக்கும் என்று எனக்கு தெரியாது. கர்த்தர் என்னை SHUATS க்கு கொண்டுபோக முன்கூட்டியே நியமித்து வைத்திருந்தார். அங்கு நான் மகிழ்ச்சியாகவும், மன நிறைவோடும் இருந்தேன்.
ஒரு நாள் என் சகோதரி ஒரு ஜெப கூட்டத்திற்கு அழைத்துச் சென்றாள், அங்கே விசுவாசிகள் கர்த்தரை ஆவியிலும் உண்மையிலும் ஆழமாக ஆராதித்துக் கொண்டிருந்தார்கள், மேலும் அங்கு பகிரப்பட்ட கர்த்தருடைய வார்த்தை வல்லமையானதாகவும், அற்புதமான வெளிப்பாடுகளுடனும் இருந்தது. கர்த்தரை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள இது எனக்கு உதவியது. கர்த்தரை அறிந்து கொள்ளும் தாகம் எனக்குள் இன்னும் அதிகமானது.
சகேயு வரிவசூலிப்பவனாகவும் மிகவும் செல்வந்தவனாகவும் இருந்தான். இயேசு அந்த வழியாக வருகிறார் என்று கேள்விப்பட்டவுடன் அவரை காண ஆசைப்பட்டான், குள்ளமாக இருந்த காரணத்தால் அவன் ஒரு காட்டத்திமரத்தில் ஏறினான். சகேயுவின் இருதயத்தில் இருந்த இயேசுவை அறியும் ஆசையை இயேசு அறிந்திருந்தார்.
லூக் 19:8-10 சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
இயேசுவை அறியக்கூடிய அதிகமான ஆசை உங்களுடைய இருதயத்தில் வளர வேண்டும் என்று உங்களை ஊக்குவிக்கிறேன்.


பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். யோவா 14:8


கர்த்தர் மட்டும் உங்களிடத்தில் இருந்தால், உனக்கு தேவையான அனைத்தும் உங்களிடம் உள்ளது.
நீங்கள் எதைச் சந்தித்தாலும், அது நோய், நிதி நெருக்கடி அல்லது சிக்கலான உறவுகளாக இருந்தாலும் கர்த்தரை தேடுவதை நிறுத்தாதீர்கள். அற்புத அடையாளங்களுக்காக அல்ல மாறாக அவரை இன்னும் அறிந்து கொள்ளவும், அவருக்கு சேவை செய்யவும் அவரை தேடுங்கள். உங்கள் இருதயத்தில் வாசம் செய்ய அவரை அழையுங்கள், அவர் நமக்கு எதிரானவர் அல்ல நமக்கு சாதகமானவர்,
சங் 37:4 – கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.


கர்த்தர் இல்லாமல் நாம் ஒன்றும் இல்லை.


ஜெபம்: பிதாவே நாங்கள் உம்மை அன்பு செய்கிறோம், உம்மையை நாங்கள் வாஞ்சிக்கிறோம், உம்மையல்லாமல் எங்களுக்கு யாரும் இல்லை.. உம்மை இன்னும் அறிய எங்களுக்கு உதவும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமேன்.


Sol. Mercy AOJ,

தானியேல் – II 11-02-2022 – இன்றைய தேவ செய்தி

ஒரு உண்மையான ஆசை

இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,

(லூக் 19:3).

சில சமயங்களில் நமது பல்வேறு உடல், மன, சமூக, தொழில் மற்றும் நிதி வரம்புகள் கர்த்தரை சரியான முறையில் தேடுவதற்கு தடையாக இருக்கிறது. பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட (ரோம 8:14) உண்மையில் ஆசைப்படும் போது, நம்முடைய சரீரமும், எல்லா அவயவங்களும் பரிசுத்த ஆவியானவரை பின்பற்ற துவங்கி விடுகின்றன.


லூக் 19:3இன் படி இயேசுவை சக்கேயு பார்க்க ஆசைப்பட்டாலும் அவன் குள்ளனானபடியால் அவரை காண முடியாமல் தவித்தான். இது அவனுக்கு சாதகமான ஒரு காரியத்தை செய்தது. இயேசு அவனை பெயர் சொல்லி அழைத்தது மட்டும் அல்லாமல் அவனுடைய வீட்டிற்கும் சென்றார்.


1996 ஆம் ஆண்டு விசுவாசத்தின் ஆரம்ப நாட்களில் இருந்த நானும் கர்த்தருக்காக எவ்வளவு தாகமாய் இருந்தேன் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் நான் பணம் சேமித்து வைத்து ஆன்மீக புத்தகங்களை வாங்கிபடிப்பேன் மேலும் விவிலிய கருத்தரங்களில் பங்கேற்க பணம் சேமித்து வைத்தேன். நான் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவனாக இருந்ததால் எனது பொருளாதாரம் அவ்வளவு உயர்ந்ததாக இல்லை மாறாக குறைவாகவே இருந்தது ஆனால் இயேசுவை தேடும் என் ஆசையோ மிகவும் உயரமாக இருந்தது, இதுவே என் வாழ்கையில் அநேக வசதிகளை தியாகம் செய்ய வைத்தது.


மத் 13:44 – அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான். எப்படியோ, அந்த விலைமதிப்பற்ற வயலை வாங்குவதற்காக அனைத்தையும் விற்கத் தயாராக இருந்த இந்த மனிதனைப் போல நான் என்னைக் கண்டேன்.


மத் 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

என்று இயேசு சொன்னது போல என்னுடைய பொருளாதாரம் இன்று நன்றாக இருக்கிறது மேலும் நான் பல துறைகளில் வெற்றியும் பெற்றுள்ளேன்.
இதை வாசிக்கும் நீங்களும் உங்கள் தற்போதைய இக்கட்டுகளை பொருட்படுத்தாமல் முதலாவதாக கர்த்தரை தேடும்படி ஊக்குவிக்கிறேன். கர்த்தர் நிச்சயமாக உங்கள் ஆசையை மதித்து சக்கேயுக்கு இயேசு செய்தது போல, உங்களையும், உங்கள் வீட்டாரையும் அவர் காப்பாற்றுவார், ஆமேன்.

In CHRIST,
Sol. Rahul Davis AOJ

தானியேல் – II 10-02-2022 – தேவ செய்தி

அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

லூக் 18:38

வேதத்தில் வரும் இந்த நிகழ்வில் ஒரு பர்வை அற்ற மனிதன் ஒருவரை “தாவீதின் குமாரனே” என்று கூப்பிட்டான், ஏனென்றால் மேசியா இந்த வழியாக கடக்க இருக்கிறார் என்று அவனுக்கு சொல்லப்பட்டது. இந்த வாய்ப்பை அவன் இழக்க விரும்பவில்லை, எனவே அவன் இன்னும் சத்தமாக கூவி அழைத்தான், “இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் “


எனக்கு ஒரு சாட்சி ஞாபகத்திற்கு வருகிறது, இந்த நிகழ்வை என்னால் ஒருபோதும் மறக்க இயலாது. நான் வேலைக்காக பட்டணத்திற்கு வெளியில் இருந்தேன். என் மனைவி (பப்பிதா) மூன்று மாத கர்பிணியாக இருந்தாள். ஒரு நாள் என் மனைவியின் உடல்நிலை சரியில்லை யென்றும் நான் உடனடியாக வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் எனக்கு தொலைபேசியில் தகவல் தெறிவிக்கப்பட்டது. உடனடியாக நான் வீட்டிற்கு திரும்பினேன். கரு கலைந்து விட்டது என்று என்னிடம் சொன்னார்கள், மேலும் துயரத்தில் மனைவி மிகவும் அழுதுகொண்டிருந்தாள், உடனடியாக மருத்துவ மனைக்கு சென்றேன், அவள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடிய வில்லை. நான் என்ன தவறு செய்தேன், ஏன் இது எனக்கு நடந்தது? என்ற அவள் கேட்ட இந்த கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை நானும் சோகத்தில் உரைந்து போயிருந்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு மாமா வீட்டிற்கு திரும்பினோம். அப்போது பரிசுத்த ஆவியானவர் எனக்கு புதிய பாடலை கொடுத்தார், நான் பாடலை பாடி கர்த்தரை ஸ்தோத்தரித்தேன். அப்போது நான் பரலோக அமைதியால் நிறப்பபட்டேன்.


சில நாட்களுக்கு பிறகு, என்னுடைய பட்டணத்தில் ஊழியம் செய்ய சில ஊழியகாரர்கள் வந்திருந்தார்கள். அதிர்ஷ்டவசமாக, அவர்கள் காலை உணவிற்கு என் வீட்டிற்கு வந்தார்கள். உணவு அறிந்தியபின் என் குடும்பத்திற்காக அவர்கள் ஜெபித்தார்கள், ஒரு தீர்க்கதரிசன செய்தியையும் எங்களுக்கு கொடுத்தார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் நாங்கள் வரும்போது உங்கள் கையில் ஒரு குழந்தை இருக்கும் என்று அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். இதை கேட்டபின் நானும் என் மனைவியும் சந்தோஷத்தால் நிறப்பப் பட்டோம். உண்மையில் அடுத்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்பாகவே சர்வவல்ல கர்த்தர் ஒரு ஆண் குழந்தையை கொடுத்து எங்களை ஆசீர்வதித்தார். எல்லா மகிமையும் அவருக்கே உண்டாகட்டும்.
இது முற்றிலும் உண்மை. நாம் துன்பத்தில் இருந்து அவரை கூப்பிடும் போது அவர் நமக்கு செவி கொடுக்கிறார். என் இதயம் மகிழ்ச்சியால் நிறம்பியது, நான் கர்த்தருக்கு நன்றி சொன்னேன். பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு என் மகனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டோம்.


நீதிமொழிகள் 8:34 என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
வாசற்படியில் விழித்திருந்து கதவு நிலையருகே காத்திருப்பது, ஜெபத்தையும், கர்த்தருடைய வார்த்தையின் மீது தியானத்தையும் குறிக்கிறது.


கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு;

சங் 37:5

அதற்குபின் என்ன நடந்தது, பார்போமா? இயேசுவின் நாமத்தை சொல்லி கூவி அவன் அழைத்துக் கொண்டிருக்கும்போது, இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார் அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். லூக் 18:40-42).
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று இங்கு இயேசு அவனுக்கு பதிலளித்தால் அவனுடைய விசுவாசத்தை அவர் எல்லாருக்கும் முன்பாக புகழ்ந்தார்.

ஜெபம்:

பரலோக பிதாவே சில வேளைகளில் நான் எளிதாக சோர்வடைந்துவிடுகிறேன். மலையானது மிகவும் உயரமாக இருப்பதால் நான் உற்சாகம் இழந்துவிடுகிறேன். நானே எனக்கு சாக்குப்போக்குகளை சொல்லி கொள்கிறேன். என்னுடைய அவநம்பிக்கைகாக என்னை மன்னியும். அசைக்க முடியாத வகையில் என் நம்பிக்கையைப் புதுப்பிய்யும். நான் உம்மை உடனே ஸ்தோதரிக்கவும், உம்மை நெருக்கமாக பின்பற்றவும் கிருபைதாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமேன்.


Shalom!!!
Sol. Binesh AOJ

தனியேல் –09-02-2022 –தேவ செய்தி

இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.

(லூக் 18:40).

இந்த வசனம் என் வாழ்வில நடந்த ஒரு சாட்சியை நினைவுபடுத்துகிறது. 12ஆம் வகுப்பு படித்த பின்னர் என்னுடைய எதிர்கால படிப்பைப் பற்றி ஒன்றும் தெரியாதவளாக இருந்தேன். பல கேள்விகள் என் மனதில் எழுந்தன மேலும் இவைகள் என் நம்பிக்கையை இழக்கச் செய்தன.


கடைசியாக SHUATS அலகாபாத் பல்கலை கழகத்தில் B.Sc (Hons) உணவு தொழில்நுட்பத்தில் அனுமதி பெற்றேன் ஆனால் நான் விரும்பியதோ B.Sc (Hons) விவசாயம், எனவே நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். என்னுடைய இந்த மோசமான நிலையை கண்டு என் பெற்றோர் மிகவும் வருத்தப்பட்டனர். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாக தெரிந்தது, நான் ஜெபித்தால் கர்த்தர் நிச்சயம் கேட்ப்பார். ஒவ்வொரு இரவும் நான் கண்ணீர் விட்டு கதறி அழுதேன். ஒரு நாள் எரேமியா 29:11 என்ற வசனம் கிடைத்தது – நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்;

அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இந்த வசனத்தைப் படித்தபின், கர்த்தர் எனக்கு செவி கொடுப்பார் என்று அறிந்து நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். ஆனால் பதில் ஏதும் கிடைக்க வில்லை, நம்பிக்கைக்கு வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் நான் இன்னும் இயேசுவை நம்பி கர்த்தரை நோக்கி அழுதேன். இறுதியாக அவர் என் கூக்குரலை கேட்டார், நான் விரும்பியது போல எனக்கு BSc. (Hons) விவசாயத்தை கொடுத்து ஆசீர்வதித்தார். கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் அன்று சுவைத்துப் பார்த்தேன். இன்றும் கூட அவருடைய நன்மையை சுவைக்க நான் ஆவலாய் இருக்கிறேன்.
கர்த்தரிடம் கூக்குரல் இடுங்கள் அவர் உங்கள் அழுகையை கேட்ப்பார் என்று உங்களுக்கு ஊக்கம் அளிக்க இன்று விரும்புகிறேன். இயேசுவிடம் நீங்கள் அழ தீர்மானித்தபின் எந்த மனிதனோ, சூழ்நிலையோ உங்களை தடை செய்யாது.


எபி 8:12ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


இயேசுவிடம் நீங்கள் செல்வதை எது தடுக்கிறது? உங்களுடைய அநீதியா அல்லது உங்கள் பாவமா? மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனத்தைப் பாருங்கள். வசனம் சொல்லுகிறது கர்த்தர் கிருபை உள்ளவர் என்று.


யாகோபு 4:8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.
எழுந்திருங்கள்! தூசுகளை தட்டிவிட்டு பிரகாசியுங்கள். ஏனெனில் கர்த்தருடைய கிருபை உங்கள் மேல் எழும்பியுள்ளது.
கர்த்தர் இன்று உங்களை அவர் அருகில் அழைக்கிறார். உங்களுடைய எல்லா கவலைகளையும் அவரிடம் கொடுத்து விடுங்கள்.


சங் 34:4 – நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.


கர்த்தர் உங்களுடைய ஜெபத்தை கேட்கிறார் மேலும் உங்களை விடுவிக்கிறார். ஆமேன்.


ஜெபம்:

எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் எங்கள் வாழ்வில் வந்தாலும் உம்மை நோக்கி குரலை உயர்த்தி அழுவதற்கு எங்களுக்கு கிருபைதாரும். உம்மை காண கண்களை தாரும், உம் குரலை கேட்பதற்கு காதுகள் தாரும், உம்முடைய கற்பனைகளுக்கு கீழ்படிய இதயம் தாரும். உம்முடைய அமைதி எங்கள் இதயத்தை ஆட்சி செய்வதாக, இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமென்.


Sol. Blessy AOJ

தானியேல் 08-02-2022 – தேவ செய்தி

முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

(லூக் 18:38)

வேதத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பல பெயர்கள் உள்ளன ஆனால் இந்த பார்வையற்றவர் ஏன் இயேசுவை “தாவீதின் குமாரனே” என்று ஏன் கூப்பிட்டார்?

எனக்கு இரங்கும் என்று அவன் அதிகமாய் கூப்பிட்டான். மனதாழ்ச்சியுடனும், மனந்திரும்பி கர்த்தரிடம் அணுகும் எவருக்கும் அவருடைய கிருபை கிடைப்பதை யாராலும் தடை செய்ய முடியாது. இந்த குருடன்  இயேசுவை குணப்படுத்துபவராக மட்டும் அல்ல மேலும் அவரை மேசியா என்றும் தெரிந்து வைத்திருக்கிறான் ஏனென்றால்  இஸ்ரவேலின் மீட்பர் தாவீது ராஜாவின் வம்சத்திலிருந்துதான் வருவார். எனவே இந்த குருடன் பிரதான ஆசாரியருக்கோ அல்லது நடைமுறையில் இருந்த யூதமதத்திற்கோ பயப்படாமல் அனைவருக்கும் முன்பாக இயேசுவை மேசியாவாக ஒப்புக்கொண்டார்.

பாவம், சாபம் மற்றும் அடிமைத்தனங்களிலிருந்து நம்மை மீட்க வந்த ஒரே இரட்சகர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்பதை நாம் அழுத்தம் திருத்தமாகவும், சத்தமாகவும் அனைவருக்கும் முன்பாக சொல்ல வேண்டும். அவர் ஒருவரே நம்மை இருளிலிருந்து காப்பாற்றி அவருடைய வியத்தகு ஒளிக்கு நம்மை கொண்டுசெல்ல முடியும் . அவரால் மட்டும்தான் அசுத்த ஆவியின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்க முடியும் என்று நாம் சொல்ல வேண்டும்.

வாழ்க்கை நமக்கு முன்பாக பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த தருணங்களை தருகிறது அவைகளில் சில இனிமையானவைகள் அல்ல, சில வெளிப்படையான தோல்விகள் ஏமாற்றங்கள் மற்றும் பின்னடைவுகள். ஆனாலும் நாம் ஒருபோதும் தனியாக இல்லை, நம்முடைய கர்த்தரும், இரட்சகரும்  ஆன இயேசு கிறிஸ்து எப்போதும் நமது வலது பக்கத்தில் இருக்கிறார் (சங் 16:8). நமது தோல்விகளை அவர் வெற்றியாக மாற்றுவார் அல்லது பின்னடைவு/தோல்விகளை சரியான நேரத்தில் நமக்கு சாதகமாக மாற்றித்தருவார். பல நேரங்களில் வாழ்க்கையில் நாம் சந்தித்த பின்னடைவு பேரழிவை ஏற்படுத்தியது, ஆனால்  இந்த பேரழிவுதான் நம் வாழ்க்கையில் நடந்த மிகச் சிறந்த விஷயம் என்று நாம் சொல்லும்  அளவிற்கு கர்த்தர்  அதை மாற்றிப் போடுகிறார்.

மருத்துவ படிப்பிற்காக எனக்கு சீட் கிடைக்காதபோது, எல்லாம் முடிந்துவிட்டது என்று நான் நினைத்தேன். ஆனால் கர்த்தர் என்னுடைய அகந்தையை உடைத்து, என்னை வலிமையாக்கி ஆவியின் பட்டயத்தை திறம்பட கையாளக் கற்றுக்கொண்டால் பெரிய காரியங்களை செய்ய முடியும் என்பதை  கர்த்தருடைய வார்த்தையாகிய வேதத்தின் மூலம் எனக்கு வெளிப்படுத்தினார்.

தாவீதின் குமாரனாகிய இயேசுவே என்மேல் இரக்கமாயிரும், உமது இரக்கம் எனக்காக பேசட்டும், உமது கிருபை எனக்காக பேசட்டும். ஆமென்.

கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. (சங் 118:1)

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. (புலம்பல் 3:22-23).

Sol Michael Roby P.