ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான் –
லூக் 18:36
திரளான ஜனங்கள் தங்கள் வருடாந்திர பாஸ்காவிழாவை கொண்டாடுவதற்கு இறுதி பயணமாக எருசலேமுக்கு இந்த வழியாக வருவார்கள் என்று அறிந்து பர்திமேயு என்கிற ஒரு குருடன் எரிகோவின் சாலையோரம் அமர்ந்திருக்கிறான்.
அவனால் பார்க்க முடியாது, ஆனால் காதுகள் கேட்கும். ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான், நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். உடனடியாக பத்து குஷ்டரோகமுள்ள மனிஷரை போல (லூக் 17:13), “இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.” இங்கு இயேசுவை மேசியா என்று அழைத்தான்.
இது ஒரு விசுவாச அறிக்கையாகும். பர்திமேயு இயேசுவைப் பற்றி போதுமான அளவு கேள்விப்ப்ட்டிருக்கிறான், நாசரேத்திலிருந்து வரும் ஒரு சாதாரண மனிதர் அல்ல அதற்கும் மேலானவர் என்று. மக்கள் அவனை பேசாமலிருக்கும்படி அதட்டுகிறார்கள் ஆனால் அவன் நிறுத்தவில்லை, ஆயிரகணக்கான மக்கள் மத்தியில் இயேசுவின் கவனத்தை ஈர்பதற்காக அவன் இன்னும் உரத்த குரலில் கத்துகிறான். அவ்வளவு பெரிய கூட்டத்திலும் நம்பிக்கையிழந்த அவனது அழுகுரலை இயேசு கேட்டார் அவனுக்கு பார்வை தந்தார்.
என்னுடைய தோழிகளில் ஒருவர் கத்தோலிக்க மதத்திலிருந்து வெளியே வந்த Catholic nuns (AOJ) சகோதரிகளை பார்க்க ஆசைப்பட்டார். நானும் ஒரு கத்தோலிக்கர் எனவே இந்த சர்ந்தர்ப்பதை பயன்படுத்திக்கொண்டு என் தோழியோடு சேர்ந்து அவர்களை சந்திக்கச் சென்றேன். என்னுடைய சில சந்தேகங்களை அவர்கள் முன் வைத்தேன், அவர்கள் தந்த பதில் கேட்டு என்னுடைய மன கண்கள் திறக்கப்பட்டது. இது நமக்கு லூக் 19:3 இல் வரும் விடாப்பிடியான மனிதனை நினைவூட்டுகிறது. என்னுடைய தேவை இதுதான் என்று மற்றவர்களுக்கு தோன்றினாலும் அது உண்மையில் நான் விரும்புவதாக இல்லாமல்கூட இருக்கலாம். அவன் பிச்சைதான் (பணம்) கேட்டுக்கொண்டிருந்தான் மக்களிடம் ஆனால் உண்மையில் அவனுக்கு தேவைப்பட்டது பணம் அல்லஉண்மையில் உலகில் நடந்துகொண்டிருக்கும் காரியங்களை விசேஷமாக இந்த கடைசி நாட்களைப் பற்றி வேதத்தில் எழுதப்பட்டுள்ளதை நாம் அறிந்திருக்க வேண்டும். லூக் 24:18 – எம்மாவுக்கு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு சீடர்களில் ஒருவன் இயேசுவை பார்த்து கேட்டான், “இந்நாட்களில் எருசலேமில் நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறேரோ என்றான்.” அவன் இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததைப் பற்றி குறிப்பிட்டான், அந்நாட்களில் அது அனைவரின் விவாதப் பொருளாகவும் இருந்தது.
நம்முடைய ஆண்டவர் சொல்லுகிறார் (மத் 24:42) உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் “விழித்திருங்கள்”. விழிப்பாக இருந்து விசுவாசத்தில் கிரியை செய்ய இந்நாட்களில் ஆண்டவர் பர்திமேயுக்களை தேடுகிறார். நிறைய காரியங்கள் மற்றும் முடிவுகள் இந்த நேரத்தில் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் ஒருபோதும் செய்யப்படாது. ஊமையும் செவிடுமான அசுத்த ஆவியின் பிடியிலிருந்து நாம் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜெபிப்போம் அப்போதுதான் சரியான வேளையிலே கேட்கவும் பேசவும் முடியும்.
Sol. Amala Arunachalam(AOJ)
