மாசற்றதன்மை மற்றும் பரிசுத்தம்
ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்.
லூக் 19:2
மேற்கண்ட வசனம் கல்லூரியில் நான் புதிதாக சென்ற ஆரம்ப நாட்களை எனக்கு நினைவுபடுத்துகிறது. நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். கர்த்தரை காணவும், அவர் அன்பை அனுபவிக்கவும் நான் மிகவும் ஆசைப்பட்டேன். என்னுடைய சகோதரி மூலமாக நான் புதிய ஐக்கியத்திற்கு கொண்டுவரப்பட்டேன், அங்கே கிறிஸ்துவை இன்னும் ஆழமாக அறிந்து கொண்டேன். இயேசு எவ்வளவு நல்லவர் என்றும் அவர் என்னை எவ்வளவு அன்பு செய்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன். இதற்கு பின்னரே நான் ஞானஸ்ஞானம் எடுக்க முடிவு செய்தேன், அதன் மூலம் நான் அவருடைய கிருபையால் இரட்சிப்பைப் பெற்றேன். இதற்கு பின் நான் SHUATS இல் இடம் கிடைக்கும் என்று எனக்கு தெரியாது. கர்த்தர் என்னை SHUATS க்கு கொண்டுபோக முன்கூட்டியே நியமித்து வைத்திருந்தார். அங்கு நான் மகிழ்ச்சியாகவும், மன நிறைவோடும் இருந்தேன்.
ஒரு நாள் என் சகோதரி ஒரு ஜெப கூட்டத்திற்கு அழைத்துச் சென்றாள், அங்கே விசுவாசிகள் கர்த்தரை ஆவியிலும் உண்மையிலும் ஆழமாக ஆராதித்துக் கொண்டிருந்தார்கள், மேலும் அங்கு பகிரப்பட்ட கர்த்தருடைய வார்த்தை வல்லமையானதாகவும், அற்புதமான வெளிப்பாடுகளுடனும் இருந்தது. கர்த்தரை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள இது எனக்கு உதவியது. கர்த்தரை அறிந்து கொள்ளும் தாகம் எனக்குள் இன்னும் அதிகமானது.
சகேயு வரிவசூலிப்பவனாகவும் மிகவும் செல்வந்தவனாகவும் இருந்தான். இயேசு அந்த வழியாக வருகிறார் என்று கேள்விப்பட்டவுடன் அவரை காண ஆசைப்பட்டான், குள்ளமாக இருந்த காரணத்தால் அவன் ஒரு காட்டத்திமரத்தில் ஏறினான். சகேயுவின் இருதயத்தில் இருந்த இயேசுவை அறியும் ஆசையை இயேசு அறிந்திருந்தார்.
லூக் 19:8-10 – சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
இயேசுவை அறியக்கூடிய அதிகமான ஆசை உங்களுடைய இருதயத்தில் வளர வேண்டும் என்று உங்களை ஊக்குவிக்கிறேன்.
பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். யோவா 14:8
கர்த்தர் மட்டும் உங்களிடத்தில் இருந்தால், உனக்கு தேவையான அனைத்தும் உங்களிடம் உள்ளது.
நீங்கள் எதைச் சந்தித்தாலும், அது நோய், நிதி நெருக்கடி அல்லது சிக்கலான உறவுகளாக இருந்தாலும் கர்த்தரை தேடுவதை நிறுத்தாதீர்கள். அற்புத அடையாளங்களுக்காக அல்ல மாறாக அவரை இன்னும் அறிந்து கொள்ளவும், அவருக்கு சேவை செய்யவும் அவரை தேடுங்கள். உங்கள் இருதயத்தில் வாசம் செய்ய அவரை அழையுங்கள், அவர் நமக்கு எதிரானவர் அல்ல நமக்கு சாதகமானவர்,
சங் 37:4 – கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
கர்த்தர் இல்லாமல் நாம் ஒன்றும் இல்லை.
ஜெபம்: பிதாவே நாங்கள் உம்மை அன்பு செய்கிறோம், உம்மையை நாங்கள் வாஞ்சிக்கிறோம், உம்மையல்லாமல் எங்களுக்கு யாரும் இல்லை.. உம்மை இன்னும் அறிய எங்களுக்கு உதவும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமேன்.
Sol. Mercy AOJ,
