தானியேல் 08-02-2022 – தேவ செய்தி

முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

(லூக் 18:38)

வேதத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பல பெயர்கள் உள்ளன ஆனால் இந்த பார்வையற்றவர் ஏன் இயேசுவை “தாவீதின் குமாரனே” என்று ஏன் கூப்பிட்டார்?

எனக்கு இரங்கும் என்று அவன் அதிகமாய் கூப்பிட்டான். மனதாழ்ச்சியுடனும், மனந்திரும்பி கர்த்தரிடம் அணுகும் எவருக்கும் அவருடைய கிருபை கிடைப்பதை யாராலும் தடை செய்ய முடியாது. இந்த குருடன்  இயேசுவை குணப்படுத்துபவராக மட்டும் அல்ல மேலும் அவரை மேசியா என்றும் தெரிந்து வைத்திருக்கிறான் ஏனென்றால்  இஸ்ரவேலின் மீட்பர் தாவீது ராஜாவின் வம்சத்திலிருந்துதான் வருவார். எனவே இந்த குருடன் பிரதான ஆசாரியருக்கோ அல்லது நடைமுறையில் இருந்த யூதமதத்திற்கோ பயப்படாமல் அனைவருக்கும் முன்பாக இயேசுவை மேசியாவாக ஒப்புக்கொண்டார்.

பாவம், சாபம் மற்றும் அடிமைத்தனங்களிலிருந்து நம்மை மீட்க வந்த ஒரே இரட்சகர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்பதை நாம் அழுத்தம் திருத்தமாகவும், சத்தமாகவும் அனைவருக்கும் முன்பாக சொல்ல வேண்டும். அவர் ஒருவரே நம்மை இருளிலிருந்து காப்பாற்றி அவருடைய வியத்தகு ஒளிக்கு நம்மை கொண்டுசெல்ல முடியும் . அவரால் மட்டும்தான் அசுத்த ஆவியின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்க முடியும் என்று நாம் சொல்ல வேண்டும்.

வாழ்க்கை நமக்கு முன்பாக பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த தருணங்களை தருகிறது அவைகளில் சில இனிமையானவைகள் அல்ல, சில வெளிப்படையான தோல்விகள் ஏமாற்றங்கள் மற்றும் பின்னடைவுகள். ஆனாலும் நாம் ஒருபோதும் தனியாக இல்லை, நம்முடைய கர்த்தரும், இரட்சகரும்  ஆன இயேசு கிறிஸ்து எப்போதும் நமது வலது பக்கத்தில் இருக்கிறார் (சங் 16:8). நமது தோல்விகளை அவர் வெற்றியாக மாற்றுவார் அல்லது பின்னடைவு/தோல்விகளை சரியான நேரத்தில் நமக்கு சாதகமாக மாற்றித்தருவார். பல நேரங்களில் வாழ்க்கையில் நாம் சந்தித்த பின்னடைவு பேரழிவை ஏற்படுத்தியது, ஆனால்  இந்த பேரழிவுதான் நம் வாழ்க்கையில் நடந்த மிகச் சிறந்த விஷயம் என்று நாம் சொல்லும்  அளவிற்கு கர்த்தர்  அதை மாற்றிப் போடுகிறார்.

மருத்துவ படிப்பிற்காக எனக்கு சீட் கிடைக்காதபோது, எல்லாம் முடிந்துவிட்டது என்று நான் நினைத்தேன். ஆனால் கர்த்தர் என்னுடைய அகந்தையை உடைத்து, என்னை வலிமையாக்கி ஆவியின் பட்டயத்தை திறம்பட கையாளக் கற்றுக்கொண்டால் பெரிய காரியங்களை செய்ய முடியும் என்பதை  கர்த்தருடைய வார்த்தையாகிய வேதத்தின் மூலம் எனக்கு வெளிப்படுத்தினார்.

தாவீதின் குமாரனாகிய இயேசுவே என்மேல் இரக்கமாயிரும், உமது இரக்கம் எனக்காக பேசட்டும், உமது கிருபை எனக்காக பேசட்டும். ஆமென்.

கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. (சங் 118:1)

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. (புலம்பல் 3:22-23).

Sol Michael Roby P.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *