தானியேல் –II 07-02-2022 – தேவ செய்தி

என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

சங் 45:1

சங்கீதம் 45 மெசியாவைப் பற்றிய சங்கீதமாகும். தன்னுடைய அரசனை புகழ்ந்து பாடியுள்ளார் சங்கீதகாரன். எப்பொழுதுமே கவிஞர் கவிதைகளை எழுதிவைத்துக்கொண்டு கேட்பவர்களுக்கு முன்பாக படித்துக்காட்டுவதுதான் வழக்கம். ஆனால் இங்கு சங்கீதக்காரன் எதையும் முன்கூட்டியே எழுதவில்லை. அவன் பரிசுத்த ஆவியினால் நிறப்பபட்டிருந்தான். அவனுடைய நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.போல் இருந்தது. மணமகனாகிய அரசனையும் அவனது மணமகளைப் பற்றியும்தான் கவிஞன் வாழ்த்திப்பாடுகிறான் என்று கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் நினைத்திருக்கலாம் ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் தீர்க்கதரிசனமாகும். சங்கீதகாரன் எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படும்  சபையோடு இயேசுவின் திருமணத்தைப் பற்றி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.

எபேசியர் 5:22-33 இல் பவுல் கணவன் – மனைவியின் ஐக்கியத்தை கிறிஸ்த்து மற்றும் சபையுடன் ஒப்பிடுகிறார். அவருடைய சந்தோஷத்தில் நாம் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய துன்பத்தால் அவர் நம்மை விலைக்கு வாங்கினார்.

மத் 25 – இயேசு கிறிஸ்துவே மணவாளன் மற்றும் சபைதான் மணவாட்டி. நாம் ஆவலோடு காத்திருக்கும் அந்த நிகழ்வுதான் இயேசுவின் இரண்டாம் வருகை.

2000 ஆண்டுகளுக்கும் மேலாக பூமியும் வானமும் சபையோடு இயேசு கிறிஸ்துவின் இந்த பெரிய திருமண விழாவிற்காக காத்திருக்கின்றன. மணவாளனாகிய இயேசுவுக்கு துதிபாடல்பாடவும் மணவாட்டியாகிய சபையை வரவேற்கவும் தூதர்கள் மிக ஆவலோடு காத்துக்கொன்டிருகிறார்கள். சபையாகிய மணவாட்டி உலகில் இருக்கும் அனைத்து விசுவாசிகளையும் குறிக்கிறது. மணவாட்டி இன்னும் மறுரூபம் ஆகவில்லை. இயேசுவுக்கு தகுதியுள்ள ஒரு மணவாட்டியை ஒப்புகொடுப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் சபையாகிய மணவாட்டியை தயார் செய்துகொண்டு வருகிறார். தன்னுடைய வலதுபக்கத்தில் அமர்வதற்கு முற்றிலும் மறுரூபமாக்கப்பட்ட மணவாட்டியை இயேசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த மாபெரும் நிகழ்விற்கு நாம் தயாராக இருக்கிறோமா? வெளி 19:7-9 வசனத்தின்படி மணவாட்டி பரிசுத்தவான்களுடைய நீதியை மெல்லிய வஸ்திரமாக அணிந்திருக்க வேண்டும்.

எபே 5:27 – கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். மணவாட்டியானவள் பரிசுத்தமாகவும், பிழையற்றதாகவும் இருக்க வேண்டும். ஒரு பரிசுத்தமான கன்னியாக இயேசு கிறிஸ்துவிடம் அவளை ஒப்படைக்க வேண்டும்.

இயேசுவின் மணவாட்டியாவதற்கு, பரிசுத்த ஆவிதான் நம்மை தகுதிபடுத்த வேண்டும்.

கன்னியானவள் தன் கணவனுக்காக காத்திருப்பதுபோல நாமும் அந்த மகிழ்ச்சியான நாளுக்காக காத்திருப்போம். ஆமேன்! அல்லேலூயா!

Sol Subramanian

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *