தானியேல் – II

17-02-2022 – தேவ செய்தி

புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்

லூக் 19:13.

நாம் அனைவரும் இந்த உலகில் ஒரு நோக்கத்திற்காக இருக்கிறோம். நாம் பிறந்திருக்கும் குடும்பம் அல்லது வசித்துவரும் நாடு எல்லாமே ஒரு குறிக்கோளோடுதான் அமைந்துள்ளது, நம் ஆண்டவராகிய இயேசு திரும்பி வரும் மட்டும் ஒரு நோக்கத்திற்காக சேவை செய்துகொண்டிருக்க வேண்டும்.
லூக்கா 19:13


நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம் பண்ணுங்கள். – இதுதான் நம்முடைய தேவனின் கட்டளை, அவருடைய ஊழியகாரர்களாகிய நாம பின்பற்ற வேண்டிய ஒரு கட்டளை.
நாம் இயேசு கிறிஸ்துவின் சேவகர்கள். நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிய வேண்டும். அவருடைய இரகசிய வருகைவரை நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பரலோக ராஜ்யத்தின் காரியங்களை செய்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால் நாம் வேறு இடத்தில் நமக்கு கொடுக்கப்படாத காரியத்தில் பிஸியாக இருக்கிறோம். இதனால் தேவையில்லாத பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய திறமையின் காவலாளி நாமே. ஒரு நாள் நம்முடைய திறமை, கொடுக்கப்பட்ட காரியங்கள் இவைகளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். நம்முடைய வேலை நற்செய்தியை அறிவிப்பது மற்றும் சீடராக்குவது. இந்த வேலையை நாம் செய்துகொண்டு வந்தால் அவர் நம்மை பார்த்து, “நல்லது உத்தம ஊழியனே” என்று சொல்லுவார். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகள் (திறமைகள்) அவர் நமக்கு கொடுத்திருக்கும் வேலையை நிறைவு செய்யத்தான். நாம் உண்மையில் நம் திறமைகளை பரலோகராஜ்யத்தின் காரியத்தில் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோமா? நாம் உத்தம உழியர்களா? நாம் நேர்மையான ஊழியர்களா?

உங்களோடு ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கட்ந்த 27 ஆண்டுகளாக திருமணமான ஒரு முஸ்லீம் சகோதரியை சந்தித்தேன். அவர் மிகவும் மனம் உடைந்து போயிருந்தார் ஏனென்றால் 17 ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய கணவர் அவரை கைவிட்டுவிட்டார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிறப்பப்பட்டு நான் அவருக்காக டிசம்பர் 18 தேதியிலிருந்து ஜெபித்து வந்தேன். பிப்ரவரி 2ஆம் தேதி அந்த சகோதரியின் கணவர் தொலைபேசியில் அவரை அழைத்தார் இதோ நான் திரும்பி வருகிறேன் உன்னிடம் என்று சொன்னார். அவர்கள் இருவரும் சொன்ன ஒரே சாட்சி என்னவென்றால் இயேசு கிறிஸ்துதான் எங்களை ஒன்று சேர்த்தார் எல்லா மகிமையும் அவருக்கே.
உங்களுக்கும் எனக்கும் இருக்கின்ற கேள்வி இன்று என்னவென்றால் பரலோக ராஜ்யத்தின் காரியங்களில் நாம் முழுமனதுடன் அல்லது அரை மனதுடன் அல்லது முற்றிலும் ஈடுபடாமல் இருக்கின்றோமா? ஆராய்ந்து பார்ப்போம்.


நமக்குள் குறை இருப்பதாக நாம் உணர்ந்தால் உடனே மனம்வருந்தி மன்னிப்பு கேட்போம். நம்முடைய முதலாளியின் புத்தகத்தில் நமது பெயர் இல்லாமல் போக கூடாது,
ஜெபம்:
அப்பா பிதாவே, நான் மீண்டுமாக உமக்கு சேவை செய்ய விரும்புகிறேன், எனக்குள் இருக்கும் நெருப்பை அனலாக்கும். இயேசு கிறிஸ்துவே எனக்கு கிருபைதாரும் நான் முற்றிலும் புதுப்பிக்கப்படுவேன். பரிசுத்த ஆவியானவரே என்னை முற்றிலும் உம்முடைய கட்டுபாட்டின் கீழ் வையும்,, உம்முடைய மகிமைக்காக என்னை பயன்படுத்தும், YESHUA HAMASHIACH நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமேன்.

Sol.Theresa Cabral.(AOJ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *