தானியேல் – II 10-02-2022 – தேவ செய்தி

அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

லூக் 18:38

வேதத்தில் வரும் இந்த நிகழ்வில் ஒரு பர்வை அற்ற மனிதன் ஒருவரை “தாவீதின் குமாரனே” என்று கூப்பிட்டான், ஏனென்றால் மேசியா இந்த வழியாக கடக்க இருக்கிறார் என்று அவனுக்கு சொல்லப்பட்டது. இந்த வாய்ப்பை அவன் இழக்க விரும்பவில்லை, எனவே அவன் இன்னும் சத்தமாக கூவி அழைத்தான், “இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் “


எனக்கு ஒரு சாட்சி ஞாபகத்திற்கு வருகிறது, இந்த நிகழ்வை என்னால் ஒருபோதும் மறக்க இயலாது. நான் வேலைக்காக பட்டணத்திற்கு வெளியில் இருந்தேன். என் மனைவி (பப்பிதா) மூன்று மாத கர்பிணியாக இருந்தாள். ஒரு நாள் என் மனைவியின் உடல்நிலை சரியில்லை யென்றும் நான் உடனடியாக வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் எனக்கு தொலைபேசியில் தகவல் தெறிவிக்கப்பட்டது. உடனடியாக நான் வீட்டிற்கு திரும்பினேன். கரு கலைந்து விட்டது என்று என்னிடம் சொன்னார்கள், மேலும் துயரத்தில் மனைவி மிகவும் அழுதுகொண்டிருந்தாள், உடனடியாக மருத்துவ மனைக்கு சென்றேன், அவள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடிய வில்லை. நான் என்ன தவறு செய்தேன், ஏன் இது எனக்கு நடந்தது? என்ற அவள் கேட்ட இந்த கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை நானும் சோகத்தில் உரைந்து போயிருந்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு மாமா வீட்டிற்கு திரும்பினோம். அப்போது பரிசுத்த ஆவியானவர் எனக்கு புதிய பாடலை கொடுத்தார், நான் பாடலை பாடி கர்த்தரை ஸ்தோத்தரித்தேன். அப்போது நான் பரலோக அமைதியால் நிறப்பபட்டேன்.


சில நாட்களுக்கு பிறகு, என்னுடைய பட்டணத்தில் ஊழியம் செய்ய சில ஊழியகாரர்கள் வந்திருந்தார்கள். அதிர்ஷ்டவசமாக, அவர்கள் காலை உணவிற்கு என் வீட்டிற்கு வந்தார்கள். உணவு அறிந்தியபின் என் குடும்பத்திற்காக அவர்கள் ஜெபித்தார்கள், ஒரு தீர்க்கதரிசன செய்தியையும் எங்களுக்கு கொடுத்தார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் நாங்கள் வரும்போது உங்கள் கையில் ஒரு குழந்தை இருக்கும் என்று அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். இதை கேட்டபின் நானும் என் மனைவியும் சந்தோஷத்தால் நிறப்பப் பட்டோம். உண்மையில் அடுத்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்பாகவே சர்வவல்ல கர்த்தர் ஒரு ஆண் குழந்தையை கொடுத்து எங்களை ஆசீர்வதித்தார். எல்லா மகிமையும் அவருக்கே உண்டாகட்டும்.
இது முற்றிலும் உண்மை. நாம் துன்பத்தில் இருந்து அவரை கூப்பிடும் போது அவர் நமக்கு செவி கொடுக்கிறார். என் இதயம் மகிழ்ச்சியால் நிறம்பியது, நான் கர்த்தருக்கு நன்றி சொன்னேன். பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு என் மகனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டோம்.


நீதிமொழிகள் 8:34 என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
வாசற்படியில் விழித்திருந்து கதவு நிலையருகே காத்திருப்பது, ஜெபத்தையும், கர்த்தருடைய வார்த்தையின் மீது தியானத்தையும் குறிக்கிறது.


கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு;

சங் 37:5

அதற்குபின் என்ன நடந்தது, பார்போமா? இயேசுவின் நாமத்தை சொல்லி கூவி அவன் அழைத்துக் கொண்டிருக்கும்போது, இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார் அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். லூக் 18:40-42).
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று இங்கு இயேசு அவனுக்கு பதிலளித்தால் அவனுடைய விசுவாசத்தை அவர் எல்லாருக்கும் முன்பாக புகழ்ந்தார்.

ஜெபம்:

பரலோக பிதாவே சில வேளைகளில் நான் எளிதாக சோர்வடைந்துவிடுகிறேன். மலையானது மிகவும் உயரமாக இருப்பதால் நான் உற்சாகம் இழந்துவிடுகிறேன். நானே எனக்கு சாக்குப்போக்குகளை சொல்லி கொள்கிறேன். என்னுடைய அவநம்பிக்கைகாக என்னை மன்னியும். அசைக்க முடியாத வகையில் என் நம்பிக்கையைப் புதுப்பிய்யும். நான் உம்மை உடனே ஸ்தோதரிக்கவும், உம்மை நெருக்கமாக பின்பற்றவும் கிருபைதாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமேன்.


Shalom!!!
Sol. Binesh AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *