இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
லூக் 18:22
இங்கு சொல்லப்படும் மனிதன் மிகவும் செல்வந்தன். அவன் கர்த்தரை பின்பற்றினான், அவன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய கட்டளைகளை அவனுக்கு புரிந்த மத அடிப்படையில் பின்பற்றினான். இந்த செல்வந்தன் மத கற்பனைகளை பின்பற்றினானே ஒழிய கர்த்தரோடும் மற்றவர்களோடும் நல்ல உறுதியான உறவை அவன் ஏற்படுத்த வில்லை. அவனுடைய வாழ்வு எவ்வளவு குறைகள் நிறைந்தது என்பதை இயேசு அவனுக்கு காட்டினார். அவனுடைய எண்ணங்கள் எப்படி சுயநலம் மிகுந்தவை மற்றும் உலகபிரகாரமானவை என்பதையும் சுட்டிகாட்டினார்.
மத் 19:21 – அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
நீங்கள் அதிகம் நேசிக்கும் அனைத்தையும் விற்று, அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, சிலுவையை எடுத்துக்கொள்ளுங்கள்.
செல்வம் கர்த்தரின் அங்கீகாரத்தின் அடையாளம் என்று அவன் நினைத்தார். ஆனாலும் அவர் திருப்தியடையவில்லை, ஏதோ ஒன்று அவரை மேலும் தேட வைத்தது.
அவரது கவனம் முழுவதும் செல்வத்தின் மீதும் சில நேரம் சமுதாயத்தின் மீதும் சமுதாயம் அவனை எப்படி பார்கிறது என்பதைப்பற்றியும்தான் இருந்தது. அதனால்தான் இயேசு உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்றுவிடு என்றார்.
அநேக வேளைகளில் நாம் இயேசுவை பின்பற்றுகிறோம், மேலும், ஜெபம், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற எல்லா நல்ல காரியங்களை செய்கிறோம், கர்த்தர் நம்மை செல்வத்தால் ஆசீர்வதிக்கிறார். கர்த்தர் நம்மை அங்கீகரிக்கிறார் என்று நினைத்து நாம் செல்வத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகிறோம்.
நமது வேலை, வியாபாரம், குடும்பம் போன்றவற்றில் நாம் சிக்கிகொள்கிறோம். ஆனால் நாம்முடைய வாழ்வில் சந்தோஷம், திருப்தி, மற்றும் போதும் என்ற மனம் இல்லாம இருக்கிறோம்.
என்னை கீழே இழுப்பது எது?
மத் 6:19 – பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
பூமியில் பொக்கீஷங்களை சேர்த்து வைப்பதிலும், வேறுஒருவராக வாழ முயற்சிப்பதிலும், பல போட்டிகளிலும் மக்கள் இன்று ஈடுபட்டிருக்கிறார்கள்.
நீதி 6:19 – ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.
பல வருடங்களுக்கு முன், எனக்கு தெரிந்த சில நண்பர்கள் தவறான பாதையில் சென்று ஏராளமான செல்வத்தைசேர்த்தனர். ஒருவர் மிகவும் செல்வந்தர். போன வருடம் இள வயதில் அவர் மரித்துபோனார், தன்னுடைய குடும்பத்திற்காக எதையும் வைக்க வில்லை.
வாழ்வில் நாம் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ வேண்டும்.
கடந்த ஆண்டு முடிவில் நான் சந்தோஷமாக இல்லை, ஏதோ ஒன்றை நான் கைவிட வேண்டும் என்று உணர்ந்தேன். அதற்குபின் உடனடியாக எனக்குள் இதற்குமுன்னாள் அனுபவிக்காத அமைதியும், மகிழ்ச்சியும் என்னை நிறப்பிற்று, பாடல் இல்லாமல் நடனமாடினேன், காற்றில் மிதப்பது போல் இருந்தது.
மற்றவர்களுக்கு உதவி செய்வதன்மூலம் தியாகம் செய்வது அழிக்கமுடியாத பொக்கீஷத்தை தருகிறது.
Sol. Arvind Dias AOJ
