தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 09-03-2023

இயேசுவும் அவரது இரவு   வருகையாளரும்

‘எனக்கு சாட்சியாக இருங்கள்’இயேசு

       “ ஒரு மனுஷன் சொல்லுவதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். “யோவான். 7:51

ஒருமுறை  இராத்திரியிலே இயேசுவைச் சந்தித்த பரிசேயரான நிக்கொதேமு என்பவர் இந்தக் கூற்றைச் சொன்னார். இயேசு உண்மையிலேயே தேவனிடமிருந்து வந்த ஒரு போதகர் என்று அவர் அறிவித்தார். நிக்கொதேமு இஸ்ரேலின் சிறந்த ஆசிரியராகவும் யூதத் தலைவராகவும் இருந்தார்.

மக்கள் கூடாரப் பண்டிகையைக் கொண்டாட எருசலேம் சென்றனர். யூத அதிகாரிகள் இயேசுவைக் கொல்லக் காத்திருந்தார்கள், அது இயேசுவுக்குத் தெரியும். அதனால் அவர் வெளியரங்கமாய் அங்கு செல்லவில்லை.

எருசலேமில் சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை.

பாதிப்பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம் பண்ணினார். அப்பொழுது யூத அதிகாரிகள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.

அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறது என்று அறிந்துகொள்ளுவான்” என்றார்.

 அப்பொழுது சிலர்: இவனையல்லவா அதிகாரிகள் கொலைசெய்யத் தேடுகிறார்கள்?  இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?” என்றார்கள்.

 அப்பொழுது அவரைப் பிடிக்கவகைதேடினார்கள், ஆனாலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. ஜனங்களில் அநேகர்  அவர் செய்த அற்புதங்களை பார்த்து அவர் கிறிஸ்து என்று  விசுவாசித்தனர். அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன் என்றார். பண்டிகையின் கடைசி நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார்.

 ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். மற்றவர்கள் அவர் மேசியா என்று சொன்னார்கள். காவலர்கள் திரும்பிச் சென்றபோது, ​​பரிசேயர்கள், ஏன் அவரை அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள். “இவரைப் போல் யாரும் பேசியதில்லை” என்று பதிலளித்தனர்.

 அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? என்றனர்.

 அந்த நேரத்தில், நிக்கொதேமு, இயேசுவுக்காக குரல் எழுப்பி, ஒரு மனிதனை அவன் என்ன செய்தான் என்பதை விசாரித்துக் கண்டுபிடிப்பதற்கும் முன்பு, கண்டிக்க முடியாது என்று அவர்களின் சட்டத்தை நினைவுபடுத்தினான்.

சாட்சியம்:

அவருடைய நிபந்தனையற்ற அன்பினால், நாம் மெய்யான வெளிச்சத்திற்கு வந்துள்ளோம். இயேசுவின் சீடர்களாக, நாம் அவருக்கு ஒவ்வொரு நாளும், எப்பொழுதும் சாட்சியாக இருப்போம்.

ஜெபம்:

இயேசுவே, நிக்கொதேமு போல நாங்கள் உம்முடைய ஒளியை ஏந்துபவர்களாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும்.

           வீரா. D. விக்டி மிதிலா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 08-03-2023

ஒரே ஒரு மத்தியஸ்தர்

கர்த்தருக்கும் மனிதனுக்கும் ஒரேயொரு மத்தியஸ்தர் இருப்பதாக வேதாகமம் கூறுகிறது. அவருடைய பெயர் இயேசுகிறிஸ்து . மற்ற எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் “இயேசுகிறிஸ்து.”

1 தீமோத்தேயு 2 : 5 ”  தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. “

மத்தியஸ்தர் என்பவர் யார்?

மத்தியஸ்தர் என்பவர் இரண்டு நபர்களுக்கு இடையில் நிற்பவர். இருவருக்குமிடையே உள்ள மனஸ்தாபத்தின் காரணத்தை அறிந்து , சமாதானத்தை உண்டுபண்ணுபவர்.

அப்போஸ்தலராகிய பவுல் மனிதனுக்கு ஏன் மத்தியஸ்தர் தேவைப்படுகிறார் என்பதை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.  அவர் ரோமருக்கு எழுதிய கடிதத்தில் எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையை இழந்துவிட்டார்கள் என்று கூறுகிறார்.

எசாயா 57 : 21 ” துன்மார்க்கனுக்கு சமாதானம் இல்லையென்று ஏன் தேவன் சொல்லுகிறார்.

” நாம் எல்லாரும் பாவம் செய்திருக்கிறோம். ஒருவேளை நீங்கள் , கர்த்தர் நம்மை பொல்லாத மனிதன் என்று அழைக்கக்கூடிய அளவிற்கு என்ன பாவம் செய்தோம் என்று கேட்கலாம். நாம் அனைவரும் ஆதாமிடமிருந்து நம் முற்பிதாக்களின் பாவங்களைப் பெற்றுள்ளோம். மேலும் பரிசுத்த தந்தைக்கு முன்பாக பாவிகள் என்று அறிக்கையிட்டுள்ளோம்.

எனவே நாம் மன்னிப்பின் மூலமும், மனந்திரும்புதலின் மூலமும் கர்த்தரிடம் திரும்பி வருவதற்கு மீட்பு கண்டிப்பாக அவசியம். ஆகவே நாம் நேரடியாக கர்த்தரிடம் வர முடியாது இயேசுகிறிஸ்து என்ற மத்தியஸ்தர் வழியாகவே வர முடியும்.

நமது மத்தியஸ்தருக்கு நம்மை மத்தியஸ்தம் பண்ண தகுதியிருக்கிறதா?

அனைவரும்  ஏற்றுக் கொள்ளும் தகுதியான ஒரு மத்தியஸ்தரின் 5 பண்புகளைப்  பார்ப்போம்.

1 . நம்பகத் தன்மை

2 . எளிதில் அணுகக்கூடிய தன்மை

3 . அர்ப்பணிப்பு

4 . புத்திகூர்மை

5 . பாரபட்சமின்மை

நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம் எல்லாரையும் மத்தியஸ்தம் பண்ண தகுதி பெற்றிருக்கிறாரா? ஆம். மேற்சொன்ன எல்லா குணாதிசயங்களும் இயேசு கிறிஸ்து பிதாவின் குமாரனாக வாழ்ந்த வாழ்க்கையில் மிக அதிகமாகவே இருந்தது. பாவமே இல்லாத மனிதர். பாவத்தில் விழாதவர். தனக்கு வந்த எல்லா சோதனைகளிலும் துன்பங்களிலும் அவர் எப்போதும்  பாவத்தைக் களைந்தவராகவே இருந்தார். எனவே அப்போஸ்தலராகிய பவுல், இந்த மனிதனாகிய, பிதாவின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து கர்த்தருக்கு முன்பாக மத்தியஸ்தம் பண்ண தகுதியுள்ளவர் என்பதை மிகச் சரியாக புரிந்து கொண்டார். எல்லா நேரங்களிலும்  கர்த்தரை அணுகி  நம்மை அமைதியுள்ளவர்களாக்கி , நம்முடைய எல்லா  பலவீனங்களையும் குறைகளையும்  புரிந்து கொண்டு நித்திய ஜீவனை  தருவதற்கும் அவர் மத்தியஸ்தம் செய்கிறார். கர்த்தரை நோக்கி வந்திருக்கிற எல்லாரும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மத்தியஸ்தம் வழியாக சமாதானத்தையும் அமைதியையும்  அனுபவிப்பார்கள். ஆகவே , மனித குலத்துக்கு கர்த்தரால் வழங்கப்பட்ட ஒரே ஒரு மத்தியஸ்தர், நமக்காக துன்பப்பட்டு, அடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் சாவிலிருந்து உயிர்த்து என்றென்றும் உயிரோடிருக்கிற இயேசுகிறிஸ்துவே  என்று சரியாகச் சொல்ல முடியும். 

1கொரிந்தியர் 15 : 1 – 9 ” அன்றியும்  சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை ஏற்றுக் கொண்டு அதிலே நிலைத்திருங்கள். நான் உங்களுக்கு பிரசங்கித்த பிரகாரமாய், நீங்கள் அதைக் கைக் கொண்டிருந்தால், அதனாலே இரட்சிக்கப்படுவீர்கள். மற்றபடி உங்கள் விசுவாசம் விருதாயிருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால் கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின் படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்து   கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின் அவர் ஐநூறு பேருக்கும் அதிகமின சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார். அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள். பின்பு யாக்கோபுக்கும் அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார். நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன் . தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினாலே ,நான் அப்போஸ்தலனென்றும் பேர் பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.

Sol. பிரான்சிஸ் கோவா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 07-03-2023

எசாயா 40 : 9 - 11 கர்த்தர் மறைந்திருக்கிற காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று   நம்பவைக்கப்படுகிறது.  சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு, எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு.

இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார், அவர் தமது புயத்தினால் அரசாளுவார்;, இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது, அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.

 மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.”

2023 , பெப்ரவரி மாதம் 28

ம் தேதி நடந்த இயேசுவின் படையணி , தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த வார்த்தைகளை பெற்றுக் கொண்டேன். அங்கு தலைமை மேய்ப்பனாக இருப்பவர் புதிய பொறுப்புகளை ஏற்கும் இளைஞர்களுக்கு உதவுவேன் என்று கூறினார். மார்ச் 1 , 2023 அன்று நடைபெற்ற மாதாந்திர வழிபாட்டில் சகோ. ஆஞ்சலிக்கா மற்றும் அவரது தனிக்குழு கிரகித்த மாற்றங்களைக் குறித்து சாட்சியமளிக்க விரும்புகிறேன். அது எப்படி அடுத்த நிலைக்குச் சென்றது என்றும்  மேலும் எல்லா களங்களுக்கும் அப்படியே செல்லும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

பாபிலோனிலிருந்து யூதர்கள் திரும்பியதைப்பற்றி ஒரு   தீர்க்கத்தரிசி குறிப்புகள் வைத்திருந்தார். ஆனால் புதிய ஏற்பாட்டில்  யோவான் ஸ்நானகர் இயேசுகிறிஸ்துவின் அணுகுமுறையை அறிவித்ததை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது ஒரு சிறிய நிகழ்வு.

கிழக்கு தேசங்களில் இளவரசர்கள் பாலைவன நாடுகளின் வழியாக பயணம் செய்கையில் அவர்கள் பாதைகள் செம்மைப்படுத்தப்பட்டு தடைகள் அகற்றப்படும். அதுபோலவே கர்த்தர் தமது வசனங்களை கற்பிப்பதாலும் , பரிசுத்த ஆவியின் மேலுள்ள நம்பிக்கையாலும் நம்முடைய இருதயங்களை செம்மைப்படுத்தி, நம்முடைய உயர்ந்த பெருமையான எண்ணங்களை விழத்தாட்டி , நல்ல விருப்பங்களை விதைத்து, வளைந்த முரட்டுத்தனமான    சுபாவங்களை நேரானதாகவும் மென்மையானதாகவும் மாற்றி எல்லா தடைகளையும் நீக்கி , பூமியில் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற நம்மை தயார்ப்படுத்தி பரலோக ராஜ்யத்திற்கு நம்மை செம்மையாக்குவார். வீழ்ந்த மனிதனுக்குச் சொந்தமானவை அல்லது அவன் செய்யும் அனைத்தும் புல் மற்றும் பூவைப் போன்றது. இறக்கக்கூடிய பாவியான மனிதனுக்குரிய எல்லாப் பட்டங்களும்  உடைமைகளும் அவனைத் தண்டனைக்கு உள்ளாக்கும்போது என்ன செய்யும். எல்லா மாமிசத்தாலும் செய்ய முடியாததை கர்த்தருடைய வசனம் நமக்காகச்  செய்யும். கிறிஸ்துவின் வருகையைப்பற்றிய செய்தி பூமியின் எல்லைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.

சாத்தான் ஆயுதம் ஏந்திய பலசாலி. ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு பலமானவர். மேலும் அவர் முன்னோக்கிச் செல்வார். கிறிஸ்து நல்ல மேய்ப்பர். இளவயதில் இரட்சிக்கப்பட்டவர்கள், பலவீனமான விசுவாசிகள் மற்றும் துக்கமான ஆவி உள்ளவர்களிடம் கனிவான அக்கறை காட்டுகிறார். அவருடைய வசனத்தினால்  வேறு பணிகள் செய்யத் தேவையில்லை. ஆனால்  அவருடைய பாதுகாப்பினால் அவர்களை பலப்படுத்துவதில் எந்த சிரத்தையும் அவருக்கு இல்லை. நாம் நம்முடைய மேய்ப்பனின் குரலைக் கேட்போம் .அவரைப் பின்பற்றுவோம் . அவருடைய ஆடுகளாக நம்மை நிரூபிப்போம்.

கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய நாமம் உயர்ந்தது, உம்முடைய நாமம் பெரியது, எல்லாவற்றிற்கும் மேலாக உமது நாமம் உயர்ந்து நிற்கிறது. எல்லா சிம்மாசனங்களுக்கும் , ஆட்சிகளுக்கும், அதிகாரங்களுக்கும் , பதவிகளுக்கும் மேலாக உமது நாமம் உயர்ந்து நிற்கிறது. ஆமென்.

Sol. ஜோன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 06-03-2023

பெருக்கத்தின் தேவன்

எபிரேயர் 6 : 16
” நிச்சயமாகவே நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னை பெருகவே பெருகப் பண்ணுவேன். “


நம்முடைய தேவன் பெருக்கத்தின் தேவன். அவர் நம்மை பெருகச் செய்கிற தேவன்.
ஆதியாகமம் 1 : 28 ல்
” நீங்கள் பலுகிப் பெருகி , பூமியை நிரப்பி , அதைக் கீழ்ப்படுத்தி , சமுத்திரத்தின் மச்சங்களையும் , ஆகாயத்துப் பறவைகளையும் , பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி , தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் .”
ஆதாமையும் ஏவாளையும் ஆசீர்வதித்த கர்த்தர் ஜல பிரளயத்திற்குப் பிறகு நோவாவையும் அவன் குடும்பத்தையும் ஆசீர்வதித்ததை நாம் பார்க்கிறோம்.

ஆதியாகமம் 26 : 24 ல் கர்த்தர் ஈசாக்கைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடே கூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து , உன் சந்ததியைப் பெருகப் பண்ணுவேன் என்று வாக்கு கொடுக்கிறார்.
1 பேதுரு 1 : 2 ல் அவர் கிருபையையும், சமாதானத்தையும், அன்பையும் ,தேவனை அறிகிற அறிவையும் பெருகச் செய்கிறார் என்பதையும் ,


சங்கீதம் 71 : 21ல் அவர் நம்முடைய மேன்மையை பெருகப்பண்ணுகிறார் என்பதையும் ,


நீதிமொழிகள் 10 : 27 ல் தேவன் நம்முடைய ஆயுசு நாட்களை பெருகப்பண்ணுகிறார் என்றும் வாசிக்கக் கேட்கிறோம்.

அருமையானவர்களே , கர்த்தர் நம்மை பெருகப் பண்ணுகிற தேவனாயிருக்கிறார். அவர் பெருகச் செய்ய வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டிய ஒரு சில காரியங்கள் உண்டு.
முதலாவதாக நாம் ஆதியாகமம் 22 ம் அதிகாரத்தில் கர்த்தர் ஆபிரகாமை மோரியா என்னும் மலைக்குப்போய் ஈசாக்கை பலியிடு என்று சொன்னதும் அதற்குக் கீழ்படிந்து ஆபிரகாமும் மோரியா மலைக்குச் சென்று ஈசாக்கை அவர் பலியிடுவதற்காக பீடத்தில் கிடத்தியபோது தேவதூதன் வந்து ஆபிரகாமைப் பார்த்து ஆபிரகாமே உன்னுடைய ஏக புதல்வன் என்றும் பாராமல் அவனை எனக்கு ஒப்புக் கொடுத்ததினால் நீ நிச்சயமாக தேவனுக்கு பயப்படுகிறவன் என்பதை அறிந்து கொண்டேன் என்று சொல்லி அவர் ஆசீர்வதிக்கிறார்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும் பொழுது இவையெல்லாம் நமக்கு கூடக் கொடுக்கப்படும் என்று மத்தேயு 6 : 33 ல் சொல்லப்படுகிறது நம்முடைய முதலானவற்றை கர்த்தருக்கு கொடுக்கும்போது அவர் எல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணுகிறார்.

நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தபோது ஐந்து அப்பம் இரண்டு மீன்களை பலுகிப் பெருகச் செய்து அநேக ஜனங்களுக்கு உணவளித்ததைப் பார்க்கிறோம். நம்மிடம் இருக்கக்கூடியவற்றை கர்த்தரிடம் கொடுப்போம். அவர் அதை பலுகிப் பெருகச் செய்வார்.


தேவன் நம்மைக் கொண்டு ஒரு பெரிய பெருக்கத்தை இந்திய தேசத்திலே உருவாக்குவாராக. அவர் பெருக்கத்தின் தேவன். நம் மூலமாக அணி சபைகள் பெருகுவதாக. நம்மூலமாக வரங்களின் பள்ளிகள் பெருகுவதாக. நம்மூலமாக தேவ வசனங்கள் பெருகுவதாக. நம்மூலமாக கிருபைகள், அற்புதங்கள் ,ஆபிஷேகம் பெருகுவதாக.


எசாயா 54 : 3 ன் படி நீ வலதுபுறமும் இடதுபுறமும் இடங் கொண்டு பெருகுவாயாக என்ற வார்த்தையின்படி நம்மை இந்த தேசத்திலே பெருகப்பண்ணுவாராக . ஆமென்.

ஜெபம்


அன்பின் பரலோக பிதாவே, நாங்கள் ஒவ்வொரு நாளும் அபிஷேகத்திலும் ஆவியிலும் பெருக எங்களுக்கு உதவும். எங்களிடமிருக்கின்ற குறைகளை நீக்கி நிறைகளை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறோம். அவற்றைப் பெருக்க எங்களுக்கு உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்.

Sol. Dr. பெட்ரீஷியா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 05-03-2023

உங்கள் சிலுவையை சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றுங்கள்.


” அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி : ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து , தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புபவன் அதை இழந்து போவான், என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். “

மத்தேயு 16 : 24 – 25

நாம் பொதுவாக ஆடம்பரமான ஆடைகள் , நல்ல சுவையான உணவுகள் போன்றவற்றை விட்டுவிடுவதை, தன்னைத்தானே வெறுப்பது என்பதுடன் தொடர்புபடுத்துவோம். ஆனால் இயேசுவுடைய தன்னை வெறுத்தல் என்பது இந்த மேலோட்டமான ஆசைகளைக் கடந்து அதற்குப் பதிலாக தம்மையே வெறுக்கும் ஆவிக்குரிய தியாகத்தை வலியுறுத்துகிறது. அவர் இந்த பூமிக்குரிய வாழ்க்கையில் நம்மை எப்படி வெறுத்து நம்முடைய சிலுவையை சுமக்க வேண்டும் என்று முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்.

பிதாவின் குமாரனாக, இயேசு மனித குலத்தை மீட்டெடுப்பதற்காக , தனது இடத்தையும், மகிமையையும் , மற்றும் எல்லாவற்றையும் , மனிதனாக மாற வேண்டி துறந்தார். எல்லாருடைய மீட்பிற்காகவும் பாடுபட்டு சிலுவையில் மரிக்க வேண்டும் என்ற உண்மையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார். மனிதனாக மரணத்திற்குரிய வாழ்க்கை வாழந்தாலும் , அவர் பாவமற்றவராகவே வாழ்ந்தார். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அனைத்தும் தகுதியற்றவை. ஆனால் அவர் ஒரு புகார் கூட சொல்லாமல் அல்லது எந்த வெறுப்பையும் தெரிவிக்காமல் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்.

எசாயா 53 : 7 ” அவர் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும் தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும் அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். “

இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இரண்டு திருடர்களுக்கு இடையில் தொங்கினார். இது சாபத்தின் அடையாளமாக பலரால் பார்க்கப்பட்டது. ஆயினும் கூட இயேசு தன்னை கறைதிரையற்ற , நேர்த்தியான ஆட்டுக்குட்டியாக ஒப்புக் கொடுத்து மனிதகுலத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக தியாகம் செய்தார். இருப்பினும் அவர் மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்ததால் அவரது பாடுகளும் மரணமும் வீணாகவில்லை. தற்போது அவர் பிதாவாகிய கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்து அனைத்து படைப்புகளையும் ஆட்சி செய்கிறார்.


எபிரேயர் 12 : 2 ” அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு , அவமானத்தை எண்ணாமல் , சிலுவையை சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். “


தான் அநியாயமாக நடத்தப்பட்ட போதிலும் இயேசு தம் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. பிதா தமது வாழ்க்கையில் அனுமதித்த எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார். எல்லாவற்றையும் ஏன் தன் வாழ்க்கையையும் கூட இழக்கத் தயாராக இருந்தார் . இந்த தியாகத்தின் மூலம் தான் இயேசு நித்திய ஜீவனைக் கண்டார்.


ஒரு வேளை இயேசுவைக் காட்டிலும் நாம் குறைவான அளவில் இருந்தாலும் , இயேசுவைப் பின்பற்றுபவர்களாக, மற்றவர்களால் நாம் அநீதியாக நடத்தப்படும் சூழ்நிலைகளில் நம்மை காணலாம். இருந்தபோதிலும் இயேசு தம்மைப் போலவே நம்முடைய அந்தஸ்து பதவியைப் பொருட்படுத்தாமல் , தாழ்மையுடன் நம்முடைய சிலுவையை சுமக்க அழைக்கிறார். ஒரு விசுவாசியாக நம்முடைய யுத்தம் மாமிசத்திற்கும் இரத்தத்திற்கும் எதிரானது அல்ல. மாறாக சாத்தானுடைய ராஜ்யத்திற்கு எதிரானது. நமக்கு தீங்கிழைப்பவர்களை நாம் மன்னிப்பதால் , குறையின்றி நம் துன்பங்களைத் தாங்கி அதை கர்த்தருக்குப் பலியாக செலுத்தினால் நம்முடைய பாடுகள் வீண்போகாது என்பது உறுதி. உண்மையில் அவை நமக்கு தீங்கிழைக்கும் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்கு வழிவகுக்கும்.


யோவான் 20 : 23
” எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். “


எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ஆத்துமாவை காப்பதற்காக , இயேசு செய்ததைப் போலவே சாத்தானின் மீது அவனுக்கு எதிராக அசாதாரண வல்லமைமையும் அதிகாரத்தையும் பெறுகிறோம் . நாம் நம்மை வெறுத்து , நம்முடைய சிலுவையை எடுத்துக் கொண்டு கிறிஸ்துவோடு மரிக்கும்போது நாமும் அவருடன் உயிர்த்தெழுந்து அவருடன் ஆட்சி செய்கிறோம்.


2 தீமோத்தேயு 2 : 21 – 12
” இந்த வார்த்தை உண்மையுள்ளது. என்னவெனில் நாம் அவரோடேகூட மரித்தோமானால்,அவரோடேகூட பிழைத்துமிருப்போம். அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். நாம் அவரை மறுதலித்தால் , அவரும் நம்மை மறுதலிப்பார். ” .

ஜெபம்.


அன்பின் பரலோகத் தந்தையே, உமது மகன் இயேசுகிறிஸ்து செய்த இறுதித் தியாகத்திற்காக நாங்கள் எங்கள் இருதயங்களில் நன்றியுடன் முன் வருகிறோம். எங்களை
வெறுத்து தினம்தோறும் எங்களது சிலுவைகளை சுமக்க உம்மையே முன்மாதிரியாகக் கொண்டு, உம்மை பின்தொடர உம்மிடம் வேண்டுகிறோம். அநியாயமாக நடத்தப்பட்டாலும் நாங்கள் தாழ்மையுடன் இருக்கவும் உமது விருப்பத்தின்படி நடக்கவும் எங்களுக்கு உதவி செய்யும். எங்களுக்கு துன்பங்களைத் தாங்கும் வலிமையையும் தைரியத்தையும் தந்து அவற்றை உமக்குப் பலியாக சமர்ப்பிக்கவும் நீர் எங்களுக்கு அமைத்துள்ள பாதையை பகுத்தறிந்து அதில் உண்மையாக நடக்க உமது ஞானத்தயும் வழிகாட்டுதலையும் வேண்டுகிறோம். உமது அன்பிற்கும் இரக்கத்திற்கும் நன்றி.
ஆமென்.

Sol. எட்விற்றா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 04-03-2023

யோவான் 14 : 16 ” நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன். அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்.”

நாம் இப்போது ” தேற்றரவாளன் ” என்பதில் கவனம் வைப்போம். இது பரிசுத்த ஆவியானவரைத் தவிர வேறு யாருமல்ல. யார் இந்த பரிசுத்த ஆவி? அவர் யாரென்று விவரிக்கும் ஞானம் யாருக்கு இருக்கிறது ? கர்த்தரின் கிருபையால் எனக்குத் தெரிந்ததைக் கொஞ்சம் எழுத வேண்டும் என்ற பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதுகிறேன். பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. அல்லது புறக்கணிக்கப்படுகிறது. அவர் புறாவோ , காற்றோ , தண்ணீரோ அல்ல. ஆனால் கர்த்தர் . கர்த்தரைப் போல அல்ல. ஆனால் பிதாவுக்கு இணையானவர். அவர் கர்த்தருக்கு இளையவர் அல்ல. ஆனால் அதே பயபக்தி, மரியாதை , நம்பிக்கைக்கு தகுதியானவர். கர்த்தருடைய கிருபையினால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு கொடுக்கப்படாவிட்டால் , நாம் அவரை அனுபவிக்க முடியாது. அவர் அனைவருக்கும் கிடைப்பதில்லை.
அப்போஸ்தலர் 2 : 38
” பேதுரு அவர்களை நோக்கி நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். “

ஆதியாகமம் 1 : 1 – 3 ல்
” ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. “


திரியேக தேவனின் இயல்பு இதில் காணப்பட்டது. ஆதியாகமம் 1 : 26 ம் வசனத்தில் ” நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக . அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் , மிருக ஜீவன்களையும் , பூமியனைத்தையும் , பூமியின் மேல் ஊரும் சகல பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். “
ஆதாம் மீது ஊதப்பட்ட பரிசுத்த ஆவியானவர் தாமேஇவர்.செங்கடலை பிளந்தவரும் , எரிக்கோ மதிலை விழச்செய்தவரும் இவரே.

லூக்கா 1 : 35 ” பரிசுத்த ஆவி உன் மேல் வரும் , உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்.” கன்னிப்பிறப்பு மற்றும் ஆரோனின் கோலை துளிர்விடச் செய்தவரும், மோசேயின் கோலை பாம்பாக மாற்றியவரும் கழுதையை பேச வைத்தவரும் இவரே. உயிர்த்தெழுதலின் வல்லையால் இயேசுவை உயிர்த்தெழ வைத்தவரும் அவரே.
ரோமர் 6 : 10 – 11 ” அவர் மரித்தது , பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார், அவர் பிழைத்திருக்கிறது தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். அப்படியே நீங்களும் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும் , நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்தவர்களாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். “

மதப் பயங்கரவாதியான சவுல் தமாஸ்கு செல்லும் வழியில் சந்திக்கப்பட்டு , தண்டனை பெற்று , அவரை கர்த்தரிடம் சரணடையச் செய்தார் என்பதையும் அவர் எவ்வாறு சிறந்த அப்போஸ்தலர் பவுலாக மாற்றப்பட்டார் என்பதையும் அறிவோம்.

பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே இயேசுவை மனிதனுக்கு வெளிப்படுத்த முடியும். அப்போஸ்தலர் 9 : 31
” அப்பொழுது நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும் , பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின. “
யோவான் 6 : 44
” என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். கடைசி நாளில் அவனை எழுப்புவேன். “

எந்த மனித உதவியும் இல்லாமல் என்னுடைய முழு குடும்பத்தையும் சந்தித்து அதை மாற்றியமைத்தவர் பரிசுத்த ஆவியானவர்.


ஜெபிக்கும் இடத்தில் மட்டும்தான் நாம் பரிசுத்த ஆவியுடன் ஐக்கியப்பட முடியும். நாம் ஒரு அமைதியான இடத்தில் அவரை வரவேற்று அவருக்காக காத்திருக்க வேண்டும். ஜெபிக்கும் முறை அவராலே தீர்மானிக்கப்படுகிறது. அவரிடம் பேசுங்கள் , அவர் அமைதியாக சிறிய குரலில் பேசுவார். பரிசுத்த ஆவியைப் பெறுவது ஒரு கப் தண்ணீரை பிடித்துக் கொண்டு அதைக் குடிக்காமல் இருப்பது போன்றது. அது நமக்குப் பயனளிக்காது. பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய விழிப்புணர்வு மட்டும் போதுமானதாக இருக்காது. அவரைப் பற்றி கண்டிப்பாக நாம் தெரிந்திருக்க வேண்டும்.

அவரை நாம் அறிந்தால் , அவருடன் சேர்ந்து கொண்டு கர்த்தர் நமக்கு கொடுத்த விதியை நிறைவேற்றலாம். உங்களது வாழ்க்கை , சூழ்நிலைகள் மற்றும் சவால்களில் பயனுள்ள திசைகளை காட்ட உங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் தேவை. அவரில்லாவிட்டால் நாம் வல்லமையற்ற , உந்துசக்தி இல்லாத ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்போம். பரிசுத்த ஆவியின் ஊழியத்தைப் பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கிறது. அதற்கு இந்த செய்தி மட்டும் போதுமானதாக இருக்காது. பரிசுத்த ஆவியின் தலைமைக்கு நம்மை ஒப்புக் கொடுப்போம். அவருக்கு பொறுப்பைக் கொடுப்போம். அவரை வெளிப்படுத்தும்படி அவரிடம் கேட்போம். ஏனென்றால் அவர் நம் ஐக்கியத்தை விரும்புகிறார். ஆமென்.

Sol. லலிதா மேனன்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 03-03-2023


” சகோதரரே , அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி “

பிலிப்பியர் 3 :13


கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே, ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சத்தான மாத்திரைகள் தேவைப்படும் என்பது விதி என்று நமக்குத் தெரியும். சில மாத்திரைகளே உடல்ரீதியான ஆரோக்கியத்தை அதிகரிப்பதைப் போலவே, விதியை நிரப்பக்கூடிய , ஆவிக்குரிய விதியை நிர்ணயிக்கக்கூடிய மாத்திரைகளும் தேவைப்படுவதுண்டு. இந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் விதி நிறைவேறுவது உறுதி.


இப்போது , நாம் நம்முடைய கடந்த காலத்தை விடுவிப்பது இந்த விதி மாத்திரைகளில் ஒன்றாகும். நாம் நம்முடைய எதிர்மறையான கடந்தகாலத்தை விடுவிக்காவிட்டால் , நேர்மறையான எதிர்காலத்திற்குள் நுழைய முடியாது. முந்தைய நாளுக்குரியதை நாம் இன்று இழுத்துக்கொண்டு வந்தால் நாளய வரவை சாத்தியமற்றதாக மாற்றுகிறது. அதாவது குற்றங்களை, தவறுகளை, இழந்துவிட்ட சந்தர்ப்பங்களை, வலிகளை, கடந்தகால வேதனைகளை நாம் மறக்கவோ, மன்னிக்கவோ செய்யாவிட்டால் நாம் எதிர்காலத்தில் நுழைய முடியாது. நாம் கண்டிப்பாக கடந்தகாலத்தின் வாய்ப்புகள், தோல்விகள் இரண்டையும் நாம் இழக்க வேண்டிவரும் அல்லது கைவிட வேண்டி வரும். ஏனென்றால் ஒரே நேரத்தில் கடந்த காலத்தை பற்றிக்கொண்டு எதிர்காலத்தை கீழே விட முடியாது. நாளையை நோக்கி நாம் பின்னால் நடக்க முடியாது.

நாம் ஒவ்வொருமுறையும் தோல்வி அடைவதற்குக் காரணம் நம்மால் எழுந்து , திரும்ப தொடங்க முடியும் என்பதற்காகவே. நாம் ஒரு சந்தர்ப்பத்தைத் தவர விட்டிருக்கலாம் ஆனால் இன்னும் பல நல்ல சந்தர்ப்பங்கள் கண்டிப்பாக நமக்கு வரும். இது ஒரு நல்ல செய்தியாகும். சிலர் உங்களை நோகடித்திருக்கலாம். ஆனால் அவர்களிடம் கசப்பாக இருக்காதீர்கள். அந்த வலி உங்களை இன்னும் சிறப்பானவர்களாக மாற்றும்.

கடந்தகாலத்தை நாம் விட்டுவிட முடிவு செய்தால் மட்டுமே கர்த்தர் நமக்கு ஆதரவாகவும், சாத்தானுக்கு எதிராகவும் விஷயங்களை மாற்ற முடியும். கர்த்தருடைய இரக்கத்தை நாம் பெற வேண்டுமென்றால் , நாம் கடந்தவைகளை விட்டுவிட வேண்டும். எனவே நாம் எந்த இடத்தை அடைய வேண்டுமோ கர்த்தர் ,அந்த இடத்திற்கு இயேசுவின் பெயரால் நம்மை கொண்டு சேர்ப்பார்.

நாம் எல்லோரும் பின்வருவதை நினைவில் கொள்ள வேண்டும்:
நாம் நாளைக்காக பின்னோக்கி நடக்க முடியாது. நாம் பிறரை மன்னிக்கவும் நமது கடந்த காலத்தை மறக்கவும், அவற்றை விட்டுவிடவும், சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். பிறகு ஒரு திடமான பார்வையை உருவாக்க வேண்டும்.

ஜெபம்.


கர்த்தாவே, என்னுடைய எல்லா கடந்தகாலத்தையும் மறக்க கிருபை தாரும். இங்கே நான் இருக்கிறேன். எதிர்காலத்துக்குரிய ஒரு திடமான பார்வையைத் தர இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

Sol. ஃபியானா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 02-03-2023

எவ்வளவு காலம் ஆண்டவரே?

ஆபகூக் 1 : 13 – 17

 “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே. பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன?

 அவர்களெல்லாரையும் தூண்டினால் இழுத்துக்கொள்கிறான். அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் பறியிலே சேர்த்துக் கொள்கிறான். அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான். ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன்தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்

இதற்காக அவன்தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் ஜாதிகளை எப்போதும் கொன்றுபோட வேண்டுமோ? “

நாமும் கர்த்தருக்காக காத்திருக்கிறோமா? எவ்வளவு காலம் ஆண்டவரே இந்த உலகத்தில் நீதி நிலவுவதற்கு முன்னால் என்று கேட்கிறோமா?

இதற்கு முன்னால் மனம் உடைந்த , நிராகரிக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் யாரும் இல்லையா?

இதற்கு முன்னால் புற்றுநோய்க்கு மருந்து உண்டா?

இதற்கு முன்னால் சிறு குழந்தைகள் பசியோடு படுக்கைக்குச் செல்லவில்லையா?

ஆபகூக் தீர்க்கத்தரிசி மனித துயரங்களை நன்கு அறிந்தவர் , அவர் கர்த்தரை நோக்கி அழுகிறார். கர்த்தாவே நான் எவ்வளவு நேரம் உதவிக்கு அழைக்க வேண்டும் ? ஆனால் நீர்  கேட்கவில்லை. உம்மை  நோக்கி கதறுகிறேன். ஆனால் நீர் என்னைக் காப்பாற்றவில்லை. நீர்  ஏன் அநியாயத்தை பார்க்க வைக்கிறீர்கள்.?  நீர்  ஏன் தவறு செய்வதை பொறுத்துக் கொள்கிறீர்?  சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் அழிவு உள்ளது.எவ்வளவு காலம் வல்லமையுள்ள கர்த்தர் அநீதியை அனுமதிப்பார் என்று ஆபகூக்   நீண்ட நேரம் போராடி ஜெபித்தார்.  ஏன் கர்த்தர் ஒன்றுமே செய்யவில்லை. பூமியில் குடியிருப்பவர்கள் எல்லாருக்கும் , கர்த்தர் நமக்கு செவிசாய்க்கிறார், தினம்தோறும் நம் பாரங்களைச் சுமக்கிறார்   என்று கண்டிப்பாகத் தெரியும். நாம் நமது சுமைகளை கர்த்தர் மேல் சுமத்துகிறோம். அவர் அக்கறை எடுக்கிறார் , அவருடைய நேரத்தில் செய்கிறார். விரக்தி அடைய வேண்டாம். அவரிடம் கடைசியாக வார்த்தை இருக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மனிதகுலத்தை  காப்பதற்காக மிகப் பெரிய திட்டம் வைத்திருக்கிறார்.  ஆனால் ஆபகூக் அந்த நேரத்தில் அதை அறிந்திருக்கவில்லை. அவர் நம்மை மீட்டு ,  அவருடைய விலைமதிப்பில்லாத திரு இரத்தத்தால் நம்மை திருப்பி கொண்டு வந்தார். நாம் அவருக்கு மகிமையையும் துதியையும் செலுத்த வேண்டும்.

சாட்சி.

நான் திருமணம் செய்து கொண்டபோது எனக்கு உடனடியாக குழந்தை பிறக்கும் என்று நினைத்தேன். அடுத்த வருடமே அது நடந்தது. ஆனால் எங்களது நம்பிக்கை எல்லாம் சிதைந்துவிட்டன. எனக்கு ஒன்றன்பின் ஒன்றாக கருச்சிதைவு மூன்றுமுறை ஏற்பட்டது. எங்களது விலைமதிப்பற்ற குழந்தைகளை இழந்தது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.  நாங்கள் கர்த்தரிடம் எவ்வளவு காலம் ஆண்டவரே என்று அழுதோம். ஏன் நாங்கள் இதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும் ? கர்த்தருக்காக காத்திருந்தோம். ஜெபித்தோம். எங்களுக்கு அழகான ஆண்குழந்தை கிடைத்தது.  எங்களது குழந்தை எங்களை பெற்றோராக்கியதற்காக நாங்கள் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

ஜெபம்.

ஆண்டவரே, எங்களது அழுகைக்கும்  ஜெபத்திற்கும்  செவிமடுத்ததற்காக, உமது திட்டத்தின்படி , நோக்கத்தின்படி  எங்களுக்கு அற்புதமான ஒரு மகனைத் தந்தற்காகவும்  நன்றி செலுத்துகிறோம். ஆமென்.

Sol. நொரீன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 01-03-2023

இயேசு கிறிஸ்து உண்மையான , ஜீவனுள்ள, ஜெபத்திற்கு பதிலளிக்கின்ற தேவன்

2021 அக்டோபர் மாதம் 17 ம் தியதி இயேசு எனக்கு காண்பித்தது என்னவென்றால் , வானத்தில் மழையும் வெயிலும் இல்லாத நேரத்தில் வானவில் தோன்றியது.

2021 ஜனவரி மாதத்தில் இயேசுகிறிஸ்து , ஒரு சகோதரியிடம் நான் மேற்கு வங்காளத்தில் ஒரு அணி சபை தொடங்க வேண்டும் என்று  கூறினார். நான் குர்கான் என்ற இடத்தில் தங்கியிருந்தபோது,  அந்த சகோதரி

இயேசுவிரும்பியதைப் போல நீ அதை செய்ய  வேண்டும்  என்று என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் நான் இதைப்பற்றி எதுவும் தெரியாததால் முற்றிலும் பூஜ்யமான நபராக இருந்தேன். எனக்குத் தெரிந்த மக்களை நான் தொடர்பு கொண்டு இதில் கலந்து கொள்ளுமாறு கூறினேன். ஆனால் அவர்கள் அதிகாலையில் தங்களால் எழுந்து கலந்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார்கள்.

நான் பிலிப்பியர் 4 : 6 ல் சொல்லப்பட்டது போல ஜெபித்தேன்.

பிலிப்பியர் 4 : 6 " நீங்கள் ஒன்றுக்குங் கவலைப் படாமல் எல்லாவற்றையுங் குறித்து  உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். "

2021 அக்டோபர் 17 ம் தியதி காலை 4.00 முதல் 5.30 வரையுள்ள  கூடுகைக்குப் பின் மொட்டைமாடிக்குச் சென்று இயேசுவைத் துதித்து பாடிக் கொண்டிருந்தேன்.  வானத்தில் மேகமூட்டமாக இருந்தது . திடீரென்று வானவில்லைப் பார்த்தேன்.

நான் மிகவும் ஆச்சரியமடைந்து இயேசுகிறிஸ்துவிடம் , நீர் என்ன விரும்புகிறீரோ அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்று கேட்டேன். இந்தக் கூடுகை அவருக்குரியது என்றும் மேற்கு வங்காள மக்களும் மற்றவர்களும் இதில் கலந்து கொண்டு குணமளிக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

நான் இதைப்பற்றி கவலைப்பட தேவையிருக்கவில்லை.

அதன்பிறகு , எங்கள் கூடுகையிலுள்ள அபிஷேகம் பண்ணப்பட்ட மற்ற உறுப்பினர்களுடன் நான் இதை பகிர்ந்து கொண்டேன்.  அவர்களும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் இதற்கு விளக்கம் அளித்தனர்.

ஒரு சகோரி , வானவில் என்பதன் அர்த்தம் தெளிவாக உள்ளது என்றும் இயேசு கிறிஸ்து இந்த அடையாளத்தின் மூலம் உங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் கூறினார். அறிவியலின்படி  தெளிவான வானத்தில் வானவில் காணப்படுகிறது என்றும் வானவில் உருவாவதற்கு சூரியனும் வெளிச்சமும் தேவைப்படுகிறது என்றும் கூறினார்.

ஆனால் இயேசுகிறிஸ்து மேகமுட்டமான வானத்தில் இந்த வானவில்லைக் காட்டினார். உண்மையில் அவர் அதிசயங்களின் கர்த்தர் , உண்மையாக உயிரோடுள்ள தேவன்.

சில நாட்களுக்குப் பிறகு , இயேசு கிறிஸ்து திரும்பவும் இந்தக் காட்சியை கூடுகையில் பகிர்ந்து கொள்ளச் சொன்னார். நான் பகிர்ந்தேன். அதன்பிறகு பரிசுத்த ஆவியானவர் ஒரு சகோதரி மூலமாக 14,  பெப்ரவரி மாதம் 2023 ல் கீழ்கண்ட வசனங்களின் வழியாகப் பேசினார்.

எசேக்கியல் 1 : 25 : 28

” அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில் , அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின் மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது. அவைகளின் தலைகளுக்கு மீலுள்ள மண்டலத்தின் மீதில் நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும் , அந்த சிங்காசனத்தின் சாயலின் மேல்  மனுஷசாயலுக்குத் ஒத்த ஒரு சாயலும் இருந்தது. அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுபோல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும் , அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக் கண்டேன். மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படி கிணப்படுகிறதோ , அப்படியே சுற்றிலுமுள்ள இந்தப் பிரகாசம் காணப்பட்டது. இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது. அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன் , அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன். “

இப்போது நான் மேற்கு வங்க மக்களுடனும்,  உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வங்காளத்தில்  வேரூன்றியவர்களுடனான காலை ஆராதனையைப் பார்க்கும் போது  வியப்படைகிறேன்.

இயேசுகிறிஸ்து மாலை நேரத்திலும் கூடுகை நடத்த வழிகாட்டினார். தினம்தோறும் விசுவாசிகள் வல்லமையான ஆச்சரியமிக்க சாட்சிகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

உண்மையில் இயேசு உயிருள்ள கர்த்தர். சாத்தியமற்றவைகளுக்கெல்லாம் அவர் கர்த்தர்.

லூக்கா 1 : 37

” தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.”

தீர்க்கத்தரிசனம் நிறைவேறியது.

2012 ல் ஒரு சகோதரர் நான் டெல்லியிலிருந்து வங்காளத்திற்குச் சென்று ஊழியம் செய்வேன் என்று தீர்க்கத் தரிசனம் சொன்னார். ஆம் அந்த நேரத்தில் நான் கொல்கத்தாவில் தங்கியிருந்தேன். ஒரு அமைச்சகத்தின் ஒரு ஜெபவீரராக இருந்தேன். எல்லா மகிமையும் துதியும் இரட்சகராகிய இயேசுகிறிஸ்து ஒருவருக்கே.

ஜெபம்.

அன்பின் பரலோகத் தந்தையே,உம்முடைய கிருபையின் சிங்காசனத்தின் முன்பாக தாழ்ந்து பணிகிறேன். இந்த செய்தியை படிக்கின்ற ஒவ்வொரு மனிதரிடமும் நீர் பேசவும்  உம்முடைய ராஜ்யம் விரிவடைவதற்காக அவர்களைப் பயன்படுத்தவும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன். ஆமென்.

Sol. சுஷ்மிதா ராகா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 28-02-2023

கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுத்தல்.

வெளிப்படுத்தின விசேஷம் 2 : 29 ” ஆவியானவர் சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் “
கர்த்தர் இந்த வசனங்களைக் குறித்து என்னை எச்சரித்தார்.

கர்த்தர் சபைகளுக்கும் அதன் குமாரர் குமாரத்திகளுக்கும் கூட இதைச் சொன்னார்.
வெளிப்படுத்தின விசேஷம் 2 : 2 – 3 ” உன் கிரியைகளையும் , உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும் , அபாபோஸ்தரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும் , நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும் , பொறுமையாயிருக்கிறதையும் , என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். “


கர்த்தர் அவருடைய ராஜ்யத்திற்காக நாம் நிறைய செய்திருப்பதையும் கடந்தகாலத்தில் செய்தவைக்காக நம்மை பாராட்டியதையும் இங்கே குறிப்பிடுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 2 : 4 – 5
” ஆனாலும் , நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாயென்று உன் பேரில் எனக்கு குறையுண்டு. ஆகையால் , நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து , மனந்திரும்பி , ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து , நீ மனந்திரும்பாத பட்சத்தில் , உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கி விடுவேன்.”

வெளிப்படுத்தின விசேஷம் 2 : 29 ல் கேட்கக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார்.


நம்முடைய வாழ்க்கையிலிருந்து ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன்.
ஒரு குடும்பமாக, கர்த்தருடைய ராஜ்யத்திற்காக நிறைய அடிகளை எடுத்து வைத்துள்ளோம். அணி சபைகள் நடத்துகிறோம், சென்னையைப் போலவே, இந்தியாவிலும் நிறைய ஆராதனை பள்ளிகளை நடத்துகிறோம். ஆராதனைப் பள்ளிகளை நடத்த நிறைய இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். கர்த்தருடைய ராஜ்யத்திற்காக நிறைய நேரங்களைச் செலவிட்டிருக்கிறோம்.
கர்த்தருடைய ராஜ்யத்திற்காக நாம் சுறுசுறுப்புடன் பங்கெடுத்ததால் அவர் நம்மை அபரிமிதமாக ஆசீர்வதித்திருக்கிறார்.


எனினும் , நமது ஆதி அன்பு குறைந்துவிட்டது. பரிசுத்த ஆவியானவர் அந்த அன்பை இழந்ததற்காக விளக்குத் தண்டை எடுத்துப் போடுவேன் என்று எச்சரிக்கிறார்.


விளக்குத் தண்டு – நமது சந்தோஷம், நல்ல ஆரோக்கியம், வளமை, மற்றும் உயர்வைக் குறிக்கிறது. விளக்கு அணைக்கப்படும் போது இருளில் அடியெடுத்து வைப்பீர்கள். ஆதி அன்பை இழக்கக்கூடாது என்று கர்த்தர் என்னிடம் பேசியவுடன், நான் உடனடியாக என்னுடைய சகாக்களுடன் ஒரு அணிசபையைத் தொடங்கினேன். என்னுடைய பணியிடத்தில் மிக உயர்ந்த வெற்றி , சந்தோஷம் , மகிழ்ச்சி எல்லாவற்றையும் திரும்ப பெற்றேன். கர்த்தருக்கே மகிமை. கர்த்தர் நம்முடன் பேசும்போது நாம் அனைவரும் அவருடைய சத்தத்திற்கு செவி கொடுக்க வேண்டும்.

அதனால் நம் ஒளி – விளக்குத் தண்டு நம்மிடமிருந்து அகற்றப்படாது.

ஜெபம்


பரலோகத் தந்தையே , நாங்கள் இடப்புறமோ வலப்புறமோ செல்லும்போது , எங்களை சரியான பாதையில் வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி செலுத்துகிறோம். உங்கள் குரலை நாங்கள் கேட்கும் போதெல்லாம் அதனை கேட்டு சரியான பாதைக்கு வர எங்கள் அனைவருக்கும் உதவுங்கள். ஆமென்.

Sol.தியோடர் மொகந்தி