தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 08-03-2023

ஒரே ஒரு மத்தியஸ்தர்

கர்த்தருக்கும் மனிதனுக்கும் ஒரேயொரு மத்தியஸ்தர் இருப்பதாக வேதாகமம் கூறுகிறது. அவருடைய பெயர் இயேசுகிறிஸ்து . மற்ற எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் “இயேசுகிறிஸ்து.”

1 தீமோத்தேயு 2 : 5 ”  தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. “

மத்தியஸ்தர் என்பவர் யார்?

மத்தியஸ்தர் என்பவர் இரண்டு நபர்களுக்கு இடையில் நிற்பவர். இருவருக்குமிடையே உள்ள மனஸ்தாபத்தின் காரணத்தை அறிந்து , சமாதானத்தை உண்டுபண்ணுபவர்.

அப்போஸ்தலராகிய பவுல் மனிதனுக்கு ஏன் மத்தியஸ்தர் தேவைப்படுகிறார் என்பதை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.  அவர் ரோமருக்கு எழுதிய கடிதத்தில் எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையை இழந்துவிட்டார்கள் என்று கூறுகிறார்.

எசாயா 57 : 21 ” துன்மார்க்கனுக்கு சமாதானம் இல்லையென்று ஏன் தேவன் சொல்லுகிறார்.

” நாம் எல்லாரும் பாவம் செய்திருக்கிறோம். ஒருவேளை நீங்கள் , கர்த்தர் நம்மை பொல்லாத மனிதன் என்று அழைக்கக்கூடிய அளவிற்கு என்ன பாவம் செய்தோம் என்று கேட்கலாம். நாம் அனைவரும் ஆதாமிடமிருந்து நம் முற்பிதாக்களின் பாவங்களைப் பெற்றுள்ளோம். மேலும் பரிசுத்த தந்தைக்கு முன்பாக பாவிகள் என்று அறிக்கையிட்டுள்ளோம்.

எனவே நாம் மன்னிப்பின் மூலமும், மனந்திரும்புதலின் மூலமும் கர்த்தரிடம் திரும்பி வருவதற்கு மீட்பு கண்டிப்பாக அவசியம். ஆகவே நாம் நேரடியாக கர்த்தரிடம் வர முடியாது இயேசுகிறிஸ்து என்ற மத்தியஸ்தர் வழியாகவே வர முடியும்.

நமது மத்தியஸ்தருக்கு நம்மை மத்தியஸ்தம் பண்ண தகுதியிருக்கிறதா?

அனைவரும்  ஏற்றுக் கொள்ளும் தகுதியான ஒரு மத்தியஸ்தரின் 5 பண்புகளைப்  பார்ப்போம்.

1 . நம்பகத் தன்மை

2 . எளிதில் அணுகக்கூடிய தன்மை

3 . அர்ப்பணிப்பு

4 . புத்திகூர்மை

5 . பாரபட்சமின்மை

நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம் எல்லாரையும் மத்தியஸ்தம் பண்ண தகுதி பெற்றிருக்கிறாரா? ஆம். மேற்சொன்ன எல்லா குணாதிசயங்களும் இயேசு கிறிஸ்து பிதாவின் குமாரனாக வாழ்ந்த வாழ்க்கையில் மிக அதிகமாகவே இருந்தது. பாவமே இல்லாத மனிதர். பாவத்தில் விழாதவர். தனக்கு வந்த எல்லா சோதனைகளிலும் துன்பங்களிலும் அவர் எப்போதும்  பாவத்தைக் களைந்தவராகவே இருந்தார். எனவே அப்போஸ்தலராகிய பவுல், இந்த மனிதனாகிய, பிதாவின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து கர்த்தருக்கு முன்பாக மத்தியஸ்தம் பண்ண தகுதியுள்ளவர் என்பதை மிகச் சரியாக புரிந்து கொண்டார். எல்லா நேரங்களிலும்  கர்த்தரை அணுகி  நம்மை அமைதியுள்ளவர்களாக்கி , நம்முடைய எல்லா  பலவீனங்களையும் குறைகளையும்  புரிந்து கொண்டு நித்திய ஜீவனை  தருவதற்கும் அவர் மத்தியஸ்தம் செய்கிறார். கர்த்தரை நோக்கி வந்திருக்கிற எல்லாரும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மத்தியஸ்தம் வழியாக சமாதானத்தையும் அமைதியையும்  அனுபவிப்பார்கள். ஆகவே , மனித குலத்துக்கு கர்த்தரால் வழங்கப்பட்ட ஒரே ஒரு மத்தியஸ்தர், நமக்காக துன்பப்பட்டு, அடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் சாவிலிருந்து உயிர்த்து என்றென்றும் உயிரோடிருக்கிற இயேசுகிறிஸ்துவே  என்று சரியாகச் சொல்ல முடியும். 

1கொரிந்தியர் 15 : 1 – 9 ” அன்றியும்  சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை ஏற்றுக் கொண்டு அதிலே நிலைத்திருங்கள். நான் உங்களுக்கு பிரசங்கித்த பிரகாரமாய், நீங்கள் அதைக் கைக் கொண்டிருந்தால், அதனாலே இரட்சிக்கப்படுவீர்கள். மற்றபடி உங்கள் விசுவாசம் விருதாயிருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால் கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின் படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்து   கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின் அவர் ஐநூறு பேருக்கும் அதிகமின சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார். அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள். பின்பு யாக்கோபுக்கும் அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார். நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன் . தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினாலே ,நான் அப்போஸ்தலனென்றும் பேர் பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.

Sol. பிரான்சிஸ் கோவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *