தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 28-02-2023

கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுத்தல்.

வெளிப்படுத்தின விசேஷம் 2 : 29 ” ஆவியானவர் சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் “
கர்த்தர் இந்த வசனங்களைக் குறித்து என்னை எச்சரித்தார்.

கர்த்தர் சபைகளுக்கும் அதன் குமாரர் குமாரத்திகளுக்கும் கூட இதைச் சொன்னார்.
வெளிப்படுத்தின விசேஷம் 2 : 2 – 3 ” உன் கிரியைகளையும் , உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும் , அபாபோஸ்தரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும் , நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும் , பொறுமையாயிருக்கிறதையும் , என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். “


கர்த்தர் அவருடைய ராஜ்யத்திற்காக நாம் நிறைய செய்திருப்பதையும் கடந்தகாலத்தில் செய்தவைக்காக நம்மை பாராட்டியதையும் இங்கே குறிப்பிடுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 2 : 4 – 5
” ஆனாலும் , நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாயென்று உன் பேரில் எனக்கு குறையுண்டு. ஆகையால் , நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து , மனந்திரும்பி , ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து , நீ மனந்திரும்பாத பட்சத்தில் , உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கி விடுவேன்.”

வெளிப்படுத்தின விசேஷம் 2 : 29 ல் கேட்கக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார்.


நம்முடைய வாழ்க்கையிலிருந்து ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன்.
ஒரு குடும்பமாக, கர்த்தருடைய ராஜ்யத்திற்காக நிறைய அடிகளை எடுத்து வைத்துள்ளோம். அணி சபைகள் நடத்துகிறோம், சென்னையைப் போலவே, இந்தியாவிலும் நிறைய ஆராதனை பள்ளிகளை நடத்துகிறோம். ஆராதனைப் பள்ளிகளை நடத்த நிறைய இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். கர்த்தருடைய ராஜ்யத்திற்காக நிறைய நேரங்களைச் செலவிட்டிருக்கிறோம்.
கர்த்தருடைய ராஜ்யத்திற்காக நாம் சுறுசுறுப்புடன் பங்கெடுத்ததால் அவர் நம்மை அபரிமிதமாக ஆசீர்வதித்திருக்கிறார்.


எனினும் , நமது ஆதி அன்பு குறைந்துவிட்டது. பரிசுத்த ஆவியானவர் அந்த அன்பை இழந்ததற்காக விளக்குத் தண்டை எடுத்துப் போடுவேன் என்று எச்சரிக்கிறார்.


விளக்குத் தண்டு – நமது சந்தோஷம், நல்ல ஆரோக்கியம், வளமை, மற்றும் உயர்வைக் குறிக்கிறது. விளக்கு அணைக்கப்படும் போது இருளில் அடியெடுத்து வைப்பீர்கள். ஆதி அன்பை இழக்கக்கூடாது என்று கர்த்தர் என்னிடம் பேசியவுடன், நான் உடனடியாக என்னுடைய சகாக்களுடன் ஒரு அணிசபையைத் தொடங்கினேன். என்னுடைய பணியிடத்தில் மிக உயர்ந்த வெற்றி , சந்தோஷம் , மகிழ்ச்சி எல்லாவற்றையும் திரும்ப பெற்றேன். கர்த்தருக்கே மகிமை. கர்த்தர் நம்முடன் பேசும்போது நாம் அனைவரும் அவருடைய சத்தத்திற்கு செவி கொடுக்க வேண்டும்.

அதனால் நம் ஒளி – விளக்குத் தண்டு நம்மிடமிருந்து அகற்றப்படாது.

ஜெபம்


பரலோகத் தந்தையே , நாங்கள் இடப்புறமோ வலப்புறமோ செல்லும்போது , எங்களை சரியான பாதையில் வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி செலுத்துகிறோம். உங்கள் குரலை நாங்கள் கேட்கும் போதெல்லாம் அதனை கேட்டு சரியான பாதைக்கு வர எங்கள் அனைவருக்கும் உதவுங்கள். ஆமென்.

Sol.தியோடர் மொகந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *