தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 27-02-2023

நம்முடைய கவனத்தையும் நோக்கத்தையும் எப்போது இழக்கிறோம் ?

ஆதியாகமம் 9 : 20 – 21
” நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சைத் தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சை ரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். “

நோவா ஒரு நீதிமானாகவும், கர்த்தரின் பார்வைக்கு தயவுள்ளவனாகவும், நீதியையும் கர்த்தருடைய கோபத்தைப் பிரசங்கிப்பவனாகவும், இருந்தான். கர்த்தருடைய வார்த்தைகளைக் கவனித்து அவருக்கு முழுமையாக கீழ்படிதலுள்ள ஒரு மனிதனாக இருந்தான். கர்த்தருடைய நோக்கத்திற்காக விற்கப்பட்ட மனிதன். கர்த்தருடைய வழிகளில் தன் குடும்பத்தை கொண்டு வருபவராக இருந்தார்.

இந்த மனிதனாகிய நோவா தன் வாழ்க்கையில் சில தவறுகளைச் செய்ததால் அதன் விளைவுகள் இன்றும் உணரப்படுகின்றது.

1 . மது அருந்தினார்.

மத்தேயு 24 : 38
” எப்படியெனில் ஜலப்பிரளயத்திற்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும் , ஜனங்கள் புசித்தும் குடித்தும் பெண் கொண்டும் பெண் கொடுத்தும் “
ஜலப்பிரளயத்திற்கு முன் உள்ள தீய வாழ்க்கைமுறைகளில் குடிப்பழக்கமும் ஒன்று. நோவா குடிப்பதனால் உண்டான தீமைகளையும் கண்டார். கர்த்தரிடமிருந்து மக்களை விலக்குகின்ற அந்தப் பழக்கத்தையும் செய்ய ஆரம்பித்தார். கர்த்தருடைய காரியங்களில் வைராக்கியத்தையும் ஆர்வத்தையும் இழந்து இவ்வுலக இன்பங்களைத் தேடிக் கொண்டிருந்தார்.

ஒருவன் தெய்வீக நோக்கங்களுக்காக வாழாதபோது மெதுவாக இலக்கற்ற நாட்டத்தில் ஈடுபட முனைவான். இது பெரும்பாலும் அடிக்கடி அழிவிலும் மன அழுத்தத்திலும் முடியும்.

2 . தன்னுடைய பிள்ளைகளை சபித்தார்.

காம் , தன் தந்தை கூடாரத்தில் குடிபோதையில் நிர்வாணமாக கிடப்பதைக் கண்டான். குடிபோதையில் இருந்ததற்காக மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக , தன் மகனை சபிப்பதற்கு தன்னுடைய ஆவிக்குரிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். நிறைய நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் தவறுகளை ஒருபோதும் ஒத்துக் கொண்டதுமில்லை. தங்கள் வழிகளை மாற்றிக் கொண்டதுமில்லை. மாறாக தங்கள் குழந்தைகளை எதிர்மறையாக பாதிக்கும் தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவோ அல்லது மறைக்கவோ முயற்சிக்கிறார்கள்.
காம் கானானுக்கு முற்பிதாவாக இருந்தார். பல நூற்றாண்டுகளாக கானானில் வசிக்கக்கூடிய மக்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிரிகளாகவே இருந்தார்கள்.

3 . கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கவும், அவருக்குக் கீழ்படியவும் நோவா தன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவில்லை.
நோவாவின் மூன்று பிள்ளைகளுக்கும், அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கர்த்தருடைய வழிகளைக் கற்பித்திருந்தால் அது எவ்வளவு அழகாக இருந்திருக்கும்.

நோவா தன்னுடைய பிள்ளைகளுக்கு கர்த்தருக்கு செவிசாய்க்கவும் கீழ்படியவும் கற்றுக் கொடுத்திருந்தால் , அது எவ்வளவு ஆசீர்வாதமாக இருந்திருக்கும். நோவாவின் தோல்வி நீண்ட கால விளைவைக் கொடுத்தது.

பெற்றோர்களாகிய, தலைவர்களாகிய , நாமும் கூட நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க , வழி நடத்த, வழிகாட்டத் தவறினால் பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும். ஆனால் நம் பிள்ளைகளை கர்த்தரின் வழிகளில் பயிற்றுவித்தால் வரும் தலைமுறைகள் கூட அந்த வழிகளைப் பின்பற்றும்.

உபாகமம் 24 : 14 ” உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புவிக்கவும் , உன் பாளயத்துக்குள்ளே உலாவிக் கொண்டிருக்கிறார். ஆகையால் அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு உன்னைவிட்டுப் போகாதபடிக்கு உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது. “கர்த்தருக்கே மகிமை.

Sol. அருண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *