நாள்: 26-02-2023
மற்றவர்களைவிட கர்த்தரை நாம் அதிகமாக நேசிக்கின்றோமா?
நாம் கர்த்தரை அன்பு செய்கிறோமா? ஏன் ? எவ்வளவு?
இயேசு பேதுருவை நோக்கி
” இவைகளைவிட என்னை அதிகமாக அன்பு செய்கிறாயா? என்று கேட்டார். இயேசு இதே கேள்வியை பேதுருவை நோக்கி மூன்று முறை கேட்டார். இயேசு , பேதுரு தம்மை அன்புசெய்கிறார் என்ற பதிலை அவரிடமிருந்து பெறுதற்காகவே இதனைக் கேட்டார். மிகவும் உணர்வுபூர்வமான சூழ்நிலை. யோனாவின் குமாரனாகிய சீமோனே என்று பேதுருவை அழைத்தார். இயேசு ஒருவேளை , அவருடைய சோதனையின் போது ஒரு பாறையாக அவருடன் உறுதியாக நிற்கும் வேளையில் பேதுருவின் பலவீனத்தை நினைவுபடுத்த , அவ்வாறு அழைத்திருக்கலாம்.
இயேசு சோதிக்கப்படும் போது பேதுரு அவரை மூன்றுமுறை மறுதலித்தார். மேலும் இயேசு , தம்மை மதிப்பிற்குரிய தலைவராகக் கொண்ட சீடரால் நண்பரால் மறுக்கப்படுவது எவ்வளவு வேதனைக்குரியது என்று சொல்ல இயேசு அவரைப் பார்த்தார். அவர் மறுதலித்தபோது இயேசுவின் கண்கள் தம்மை குத்தப்பட்டதைப் போல பார்க்கும்போது பேதுரு கசப்புடன் அழுதார். இயேசு உயிர்த்தெழுந்தபிறகு அவரை சந்தித்தபோது அவருடன் பேசினார். இருப்பினும் பேதுருவை இயேசுவுடனான தமது முந்தைய உறவுக்கு கொண்டு வருவது அவசியமாக இருந்தது. பேதுரு எப்படி இயேசுவின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினார் என்பதை நினைவுபடுத்துங்கள்.
மத்தேயு 26 : 33
” பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக : உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும் , நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றார். ”
இயேசுவின்மீது அவர் கொண்ட அன்பைப்பற்றி இயேசு அறிய விரும்பினார். அதை பகிரங்கமாக அறிவிக்க விரும்பினார். பேதுரு தன்மீது கொண்டிருந்த அன்பை இயேசு அறிந்திருந்தார். அதை அவர் மீண்டும் கேட்க விரும்பினார். அவருடைய சீடர்கள் நண்பர்கள் எல்லாரும் அவரைவிட்டு பயந்து சிதறி ஓடினார்கள். யோவான் மட்டுமே சிலுவையினருகில் அவருடன் இருந்தார்.
பேதுரு தன்னை எல்லாருக்கும் முதன்மையானவராய் கருதியிருக்கலாம் , எல்வாரையும் வழி நடத்தும் திறமை பெற்றிருக்கலாம். ஆனால் தன்னுடைய சுய மரியாதையிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இயேசுவின் ராஜ்யத்திற்குள்ள பொறுப்புகளை ஒப்படைப்பதற்குமுன் அவரது மீட்பை இயேசு விரும்பினார். அவர் இயேசுவை மறுத்தது பெரும் குற்றமாகும். அவர் இயேசுவுடன் சமரசப்பட வேண்டியிருந்ததது. பேதுரு மற்றவர்களைவிட அதிகமாக பாவம் செய்தார், மேலும் அவர் மற்றவர்களைவிட அதிகமாக நேசிக்கிறாரா என்று கேட்டு அவரை மன்னிக்க இயேசு முயற்சி எடுத்தார். கர்த்தர் தன் அன்பைப் பற்றி திரும்பத் திரும்ப கேட்ட கேள்விகள் அவரது பலவீனத்தைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வந்தன. மன்னிப்பு அதிகமாக இருக்குமிடத்தில் அன்பு அதிகமாக இருக்கும் என்பதை இயேசு அறிவார். மூன்று முறை மறுதலித்ததால், மூன்றுமுறை அவரை நேசித்தேன் என்று இயேசு சொல்ல வைத்தார்.
லூக்கா 7 ம் அதிகாரத்திலும் இதே சம்பவம் சொல்லப்பட்டுள்ளது. இயேசு , இந்தக் கதையைச் சொன்னார். ஒருமனிதன் இருவருக்கு கடன் கொடுத்தான் . ஒருவனுக்கு 500 வெள்ளியும், மற்றவனுக்கு 50 வெள்ளியும் . ஆனால் இருவரும் அதை திருப்பிச் செலுத்தவில்லை. இருவரையும் இரக்கப்பட்டு மன்னித்து கடனை ரத்து செய்தார். இருவரில் யார் அதிகமாக நேசித்தார்கள் என்று இயேசு கேட்க, சீமோன் , பெரிய கடன் யாருக்கு ரத்து செய்யப்பட்டதோ அவர் தான் என்று பதிலளித்தார். அதுதான் சரி என்று இயேசு கூறினார். லூக்கா 7 : 41 – 43.
பவுல் எல்லா பாவிகளிலும் தான் முதன்மையானவன் என்று ஒப்புக் கொண்டார். கர்த்தர் அவரை மன்னித்தார். பேதுருவின் இந்த உணர்தல் அவரை பிரகடனப்படுத்தியது.
ரோமர் 8 : 37 – 39 ” இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும் , ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் , நிகழ் காரியங்களானாலும்,
வருங்காரியங்களானாலும், உயர்வானாலும் , தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்காதென்று நிச்சயித்திருக்கிறேன். “
இயேசு நம்மை மீட்டெடுக்க விரும்புகிறார், அவருடனான உறவை மீட்டெடுக்க விரும்புகிறார். நம் சொந்த வாழ்க்கையை நாம் திரும்பிப் பார்த்தால் இயேசுவை மறுதலித்த பல காரணங்களை நாம் காணலாம். நம்முடைய உறவுமுறை, நம் நடத்தை, நம் பேச்சு, நம் ஆடை அணியும் முறை, நம் பொழுதுபோக்குகள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்க வேண்டும். அவர் பரிசுத்தமானவராக இருப்பதால் அவரை பின்பற்றுபவர்களும் பரிசுத்தமாக இருப்பது அவசியம். நம்முடைய பாவங்கள் அனைத்தும் இயேசுவின் மேல் சுமத்தப்பட்டு நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார்.
கர்த்தரிடம் சென்று , நம் தவறுகள், பாவங்களை ஒப்புக் கொண்டு , மன்னிப்பு கேட்டு, இயேசுவின் மூலம் நம் பிதாவாகிய தந்தையிடம் சமரசம் ஆக வேண்டும். இயேசுவின் விலை மதிப்பற்ற இரத்தத்தால் நம்மைக் கழுவ வேண்டும். அவரை நம்ப வேண்டும். அவரை விசுவசிக்க வேண்டும். கிறிஸ்து இயேசுவின் சிலுவையைத் தவிர நமக்கு பெருமை கொள்ள ஏதுமில்லை. அவர் நம்முடைய எல்லா அநீதிகளையும் மன்னித்து சரீரம் மற்றும் ஆவிக்குரிய எல்லா நோய்களையும் சுகமாக்குகிறார். அவர் நேசிக்கப்படவும், மதிக்கப்படவும், போற்றப்படவும் தகுதியானவர். நாம் பாவிகளாக இருக்கும் போதே அவர் நம்மை நேசித்தார், நம்முடைய தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார்.
ஜெபம்
எங்களை நேசித்ததற்கும் , எங்கள் பாவங்களை மன்னித்ததற்கும் நன்றி கர்த்தரே. உமக்கு உண்மையாக இருக்க எங்களுக்கு உதவும். மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட அன்பு மற்றும் அமைதியால் எங்களை நிரப்பும். கர்த்தராகிய இயேசுவின் வழியாக நன்றி செலுத்துகிறோம். ஆமென்.
Sol. சலோமி குரியன்.
