தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 02-03-2023

எவ்வளவு காலம் ஆண்டவரே?

ஆபகூக் 1 : 13 – 17

 “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே. பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன?

 அவர்களெல்லாரையும் தூண்டினால் இழுத்துக்கொள்கிறான். அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் பறியிலே சேர்த்துக் கொள்கிறான். அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான். ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன்தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்

இதற்காக அவன்தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் ஜாதிகளை எப்போதும் கொன்றுபோட வேண்டுமோ? “

நாமும் கர்த்தருக்காக காத்திருக்கிறோமா? எவ்வளவு காலம் ஆண்டவரே இந்த உலகத்தில் நீதி நிலவுவதற்கு முன்னால் என்று கேட்கிறோமா?

இதற்கு முன்னால் மனம் உடைந்த , நிராகரிக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் யாரும் இல்லையா?

இதற்கு முன்னால் புற்றுநோய்க்கு மருந்து உண்டா?

இதற்கு முன்னால் சிறு குழந்தைகள் பசியோடு படுக்கைக்குச் செல்லவில்லையா?

ஆபகூக் தீர்க்கத்தரிசி மனித துயரங்களை நன்கு அறிந்தவர் , அவர் கர்த்தரை நோக்கி அழுகிறார். கர்த்தாவே நான் எவ்வளவு நேரம் உதவிக்கு அழைக்க வேண்டும் ? ஆனால் நீர்  கேட்கவில்லை. உம்மை  நோக்கி கதறுகிறேன். ஆனால் நீர் என்னைக் காப்பாற்றவில்லை. நீர்  ஏன் அநியாயத்தை பார்க்க வைக்கிறீர்கள்.?  நீர்  ஏன் தவறு செய்வதை பொறுத்துக் கொள்கிறீர்?  சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் அழிவு உள்ளது.எவ்வளவு காலம் வல்லமையுள்ள கர்த்தர் அநீதியை அனுமதிப்பார் என்று ஆபகூக்   நீண்ட நேரம் போராடி ஜெபித்தார்.  ஏன் கர்த்தர் ஒன்றுமே செய்யவில்லை. பூமியில் குடியிருப்பவர்கள் எல்லாருக்கும் , கர்த்தர் நமக்கு செவிசாய்க்கிறார், தினம்தோறும் நம் பாரங்களைச் சுமக்கிறார்   என்று கண்டிப்பாகத் தெரியும். நாம் நமது சுமைகளை கர்த்தர் மேல் சுமத்துகிறோம். அவர் அக்கறை எடுக்கிறார் , அவருடைய நேரத்தில் செய்கிறார். விரக்தி அடைய வேண்டாம். அவரிடம் கடைசியாக வார்த்தை இருக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மனிதகுலத்தை  காப்பதற்காக மிகப் பெரிய திட்டம் வைத்திருக்கிறார்.  ஆனால் ஆபகூக் அந்த நேரத்தில் அதை அறிந்திருக்கவில்லை. அவர் நம்மை மீட்டு ,  அவருடைய விலைமதிப்பில்லாத திரு இரத்தத்தால் நம்மை திருப்பி கொண்டு வந்தார். நாம் அவருக்கு மகிமையையும் துதியையும் செலுத்த வேண்டும்.

சாட்சி.

நான் திருமணம் செய்து கொண்டபோது எனக்கு உடனடியாக குழந்தை பிறக்கும் என்று நினைத்தேன். அடுத்த வருடமே அது நடந்தது. ஆனால் எங்களது நம்பிக்கை எல்லாம் சிதைந்துவிட்டன. எனக்கு ஒன்றன்பின் ஒன்றாக கருச்சிதைவு மூன்றுமுறை ஏற்பட்டது. எங்களது விலைமதிப்பற்ற குழந்தைகளை இழந்தது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.  நாங்கள் கர்த்தரிடம் எவ்வளவு காலம் ஆண்டவரே என்று அழுதோம். ஏன் நாங்கள் இதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும் ? கர்த்தருக்காக காத்திருந்தோம். ஜெபித்தோம். எங்களுக்கு அழகான ஆண்குழந்தை கிடைத்தது.  எங்களது குழந்தை எங்களை பெற்றோராக்கியதற்காக நாங்கள் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

ஜெபம்.

ஆண்டவரே, எங்களது அழுகைக்கும்  ஜெபத்திற்கும்  செவிமடுத்ததற்காக, உமது திட்டத்தின்படி , நோக்கத்தின்படி  எங்களுக்கு அற்புதமான ஒரு மகனைத் தந்தற்காகவும்  நன்றி செலுத்துகிறோம். ஆமென்.

Sol. நொரீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *