நாள்: 03-03-2023
” சகோதரரே , அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி “
பிலிப்பியர் 3 :13
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே, ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சத்தான மாத்திரைகள் தேவைப்படும் என்பது விதி என்று நமக்குத் தெரியும். சில மாத்திரைகளே உடல்ரீதியான ஆரோக்கியத்தை அதிகரிப்பதைப் போலவே, விதியை நிரப்பக்கூடிய , ஆவிக்குரிய விதியை நிர்ணயிக்கக்கூடிய மாத்திரைகளும் தேவைப்படுவதுண்டு. இந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் விதி நிறைவேறுவது உறுதி.
இப்போது , நாம் நம்முடைய கடந்த காலத்தை விடுவிப்பது இந்த விதி மாத்திரைகளில் ஒன்றாகும். நாம் நம்முடைய எதிர்மறையான கடந்தகாலத்தை விடுவிக்காவிட்டால் , நேர்மறையான எதிர்காலத்திற்குள் நுழைய முடியாது. முந்தைய நாளுக்குரியதை நாம் இன்று இழுத்துக்கொண்டு வந்தால் நாளய வரவை சாத்தியமற்றதாக மாற்றுகிறது. அதாவது குற்றங்களை, தவறுகளை, இழந்துவிட்ட சந்தர்ப்பங்களை, வலிகளை, கடந்தகால வேதனைகளை நாம் மறக்கவோ, மன்னிக்கவோ செய்யாவிட்டால் நாம் எதிர்காலத்தில் நுழைய முடியாது. நாம் கண்டிப்பாக கடந்தகாலத்தின் வாய்ப்புகள், தோல்விகள் இரண்டையும் நாம் இழக்க வேண்டிவரும் அல்லது கைவிட வேண்டி வரும். ஏனென்றால் ஒரே நேரத்தில் கடந்த காலத்தை பற்றிக்கொண்டு எதிர்காலத்தை கீழே விட முடியாது. நாளையை நோக்கி நாம் பின்னால் நடக்க முடியாது.
நாம் ஒவ்வொருமுறையும் தோல்வி அடைவதற்குக் காரணம் நம்மால் எழுந்து , திரும்ப தொடங்க முடியும் என்பதற்காகவே. நாம் ஒரு சந்தர்ப்பத்தைத் தவர விட்டிருக்கலாம் ஆனால் இன்னும் பல நல்ல சந்தர்ப்பங்கள் கண்டிப்பாக நமக்கு வரும். இது ஒரு நல்ல செய்தியாகும். சிலர் உங்களை நோகடித்திருக்கலாம். ஆனால் அவர்களிடம் கசப்பாக இருக்காதீர்கள். அந்த வலி உங்களை இன்னும் சிறப்பானவர்களாக மாற்றும்.
கடந்தகாலத்தை நாம் விட்டுவிட முடிவு செய்தால் மட்டுமே கர்த்தர் நமக்கு ஆதரவாகவும், சாத்தானுக்கு எதிராகவும் விஷயங்களை மாற்ற முடியும். கர்த்தருடைய இரக்கத்தை நாம் பெற வேண்டுமென்றால் , நாம் கடந்தவைகளை விட்டுவிட வேண்டும். எனவே நாம் எந்த இடத்தை அடைய வேண்டுமோ கர்த்தர் ,அந்த இடத்திற்கு இயேசுவின் பெயரால் நம்மை கொண்டு சேர்ப்பார்.
நாம் எல்லோரும் பின்வருவதை நினைவில் கொள்ள வேண்டும்:
நாம் நாளைக்காக பின்னோக்கி நடக்க முடியாது. நாம் பிறரை மன்னிக்கவும் நமது கடந்த காலத்தை மறக்கவும், அவற்றை விட்டுவிடவும், சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். பிறகு ஒரு திடமான பார்வையை உருவாக்க வேண்டும்.
ஜெபம்.
கர்த்தாவே, என்னுடைய எல்லா கடந்தகாலத்தையும் மறக்க கிருபை தாரும். இங்கே நான் இருக்கிறேன். எதிர்காலத்துக்குரிய ஒரு திடமான பார்வையைத் தர இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
Sol. ஃபியானா
