தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 04-03-2023

யோவான் 14 : 16 ” நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன். அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்.”

நாம் இப்போது ” தேற்றரவாளன் ” என்பதில் கவனம் வைப்போம். இது பரிசுத்த ஆவியானவரைத் தவிர வேறு யாருமல்ல. யார் இந்த பரிசுத்த ஆவி? அவர் யாரென்று விவரிக்கும் ஞானம் யாருக்கு இருக்கிறது ? கர்த்தரின் கிருபையால் எனக்குத் தெரிந்ததைக் கொஞ்சம் எழுத வேண்டும் என்ற பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதுகிறேன். பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. அல்லது புறக்கணிக்கப்படுகிறது. அவர் புறாவோ , காற்றோ , தண்ணீரோ அல்ல. ஆனால் கர்த்தர் . கர்த்தரைப் போல அல்ல. ஆனால் பிதாவுக்கு இணையானவர். அவர் கர்த்தருக்கு இளையவர் அல்ல. ஆனால் அதே பயபக்தி, மரியாதை , நம்பிக்கைக்கு தகுதியானவர். கர்த்தருடைய கிருபையினால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு கொடுக்கப்படாவிட்டால் , நாம் அவரை அனுபவிக்க முடியாது. அவர் அனைவருக்கும் கிடைப்பதில்லை.
அப்போஸ்தலர் 2 : 38
” பேதுரு அவர்களை நோக்கி நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். “

ஆதியாகமம் 1 : 1 – 3 ல்
” ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. “


திரியேக தேவனின் இயல்பு இதில் காணப்பட்டது. ஆதியாகமம் 1 : 26 ம் வசனத்தில் ” நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக . அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் , மிருக ஜீவன்களையும் , பூமியனைத்தையும் , பூமியின் மேல் ஊரும் சகல பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். “
ஆதாம் மீது ஊதப்பட்ட பரிசுத்த ஆவியானவர் தாமேஇவர்.செங்கடலை பிளந்தவரும் , எரிக்கோ மதிலை விழச்செய்தவரும் இவரே.

லூக்கா 1 : 35 ” பரிசுத்த ஆவி உன் மேல் வரும் , உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்.” கன்னிப்பிறப்பு மற்றும் ஆரோனின் கோலை துளிர்விடச் செய்தவரும், மோசேயின் கோலை பாம்பாக மாற்றியவரும் கழுதையை பேச வைத்தவரும் இவரே. உயிர்த்தெழுதலின் வல்லையால் இயேசுவை உயிர்த்தெழ வைத்தவரும் அவரே.
ரோமர் 6 : 10 – 11 ” அவர் மரித்தது , பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார், அவர் பிழைத்திருக்கிறது தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். அப்படியே நீங்களும் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும் , நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்தவர்களாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். “

மதப் பயங்கரவாதியான சவுல் தமாஸ்கு செல்லும் வழியில் சந்திக்கப்பட்டு , தண்டனை பெற்று , அவரை கர்த்தரிடம் சரணடையச் செய்தார் என்பதையும் அவர் எவ்வாறு சிறந்த அப்போஸ்தலர் பவுலாக மாற்றப்பட்டார் என்பதையும் அறிவோம்.

பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே இயேசுவை மனிதனுக்கு வெளிப்படுத்த முடியும். அப்போஸ்தலர் 9 : 31
” அப்பொழுது நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும் , பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின. “
யோவான் 6 : 44
” என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். கடைசி நாளில் அவனை எழுப்புவேன். “

எந்த மனித உதவியும் இல்லாமல் என்னுடைய முழு குடும்பத்தையும் சந்தித்து அதை மாற்றியமைத்தவர் பரிசுத்த ஆவியானவர்.


ஜெபிக்கும் இடத்தில் மட்டும்தான் நாம் பரிசுத்த ஆவியுடன் ஐக்கியப்பட முடியும். நாம் ஒரு அமைதியான இடத்தில் அவரை வரவேற்று அவருக்காக காத்திருக்க வேண்டும். ஜெபிக்கும் முறை அவராலே தீர்மானிக்கப்படுகிறது. அவரிடம் பேசுங்கள் , அவர் அமைதியாக சிறிய குரலில் பேசுவார். பரிசுத்த ஆவியைப் பெறுவது ஒரு கப் தண்ணீரை பிடித்துக் கொண்டு அதைக் குடிக்காமல் இருப்பது போன்றது. அது நமக்குப் பயனளிக்காது. பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய விழிப்புணர்வு மட்டும் போதுமானதாக இருக்காது. அவரைப் பற்றி கண்டிப்பாக நாம் தெரிந்திருக்க வேண்டும்.

அவரை நாம் அறிந்தால் , அவருடன் சேர்ந்து கொண்டு கர்த்தர் நமக்கு கொடுத்த விதியை நிறைவேற்றலாம். உங்களது வாழ்க்கை , சூழ்நிலைகள் மற்றும் சவால்களில் பயனுள்ள திசைகளை காட்ட உங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் தேவை. அவரில்லாவிட்டால் நாம் வல்லமையற்ற , உந்துசக்தி இல்லாத ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்போம். பரிசுத்த ஆவியின் ஊழியத்தைப் பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கிறது. அதற்கு இந்த செய்தி மட்டும் போதுமானதாக இருக்காது. பரிசுத்த ஆவியின் தலைமைக்கு நம்மை ஒப்புக் கொடுப்போம். அவருக்கு பொறுப்பைக் கொடுப்போம். அவரை வெளிப்படுத்தும்படி அவரிடம் கேட்போம். ஏனென்றால் அவர் நம் ஐக்கியத்தை விரும்புகிறார். ஆமென்.

Sol. லலிதா மேனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *