தானியேல் –
04-03-2022 – தேவ செய்தி

பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.

லூக் 16:1

ஐசுவரியவான் – உலகில் உள்ள

செல்வங்களுக்கும் ஆதாரமாய் இருப்பது தேவன்
உக்கிராணக்காரன் – நீங்களும் நானும்

ஐசுவரியவான் தன்னுடைய சொத்தாகிய ஒரு சிரிய தொகுதியை பாதுகாத்துக்கொள்ள உங்களை ஊழியகாரனாக நியமித்துள்ளான்.
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆஸ்தி என்ன?

னித வளங்கள் – உங்கள் தொகுதியின் நிலப்பரப்பை நீங்கள் கணக்கெடுக்க வேண்டும்.
மக்கள் (பாலின வாரியாக, மத வாரியாக, வயது வாரியாக, மொழி வாரியாக, எழுத்தறிவு வாரியாக) முடிந்தவரை அவர்களை பல குழுக்களாக பிரிக்கலாம்.

யற்கை வளங்கள்: நிலம், நீர், சூரிய ஒளி, தாவரங்கள், கனிமங்கள், மலைகள், காடுகள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் போன்றவை.

லாச்சார வளங்கள்: கலாச்சார பாரம்பரியம். உங்கள் தொகுதியின் வயது என்ன? முன்னோர்களிடமிருந்து நீங்கள் பெற்ற அனைத்தையும் (கோவில்கள், தேவாலயங்கள், பெயராக கூட இருக்கலாம், தொகுதியின் பெயர் என்ன, மக்கள் கொண்டாடு திருவிழாக்கள், அவர்கள் நம்பும் மூட நம்பிக்கைகள், இந்தத தொகுதிக்கு ஏதேனும் சிறப்பு அல்லது புகழ் போன்றவை) பட்டியலை எடுத்துக் கொள்ளுங்கள். இவைகளை எழுதுங்கள்.

ள்கட்டமைப்பு: சாலை, நீர் ஆதாரங்கள், ரயில்வே, துறைமுகங்கள், மின்சார இணையம், நெட்வொர்க் இணைப்புகள், தொழில் வளர்ச்சி, கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு வசதிகள் போன்றவை.

ஆன்மீக நிலை: நீங்கள் மட்டுமே விசுவாசிகளா, அந்தத் தொகுதியில் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்களா, ஆம் என்றால் அவர்கள் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலுக்கு துணைசெல்கிறார்களா அல்லது எதிர்கிறார்களா?
இப்படி ஒரு சர்வே எடுக்கலாம். இந்த அனைத்து வளங்களும் நீங்கள் தொகுதிக்கு பொறுப்பேற்ற நாளில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இயேசு தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் பூமியில் உள்ள சாத்தானின் சக்தியை தோற்கடித்து பூமியை வெற்றியுடன் கைப்பற்றினார். அதை தம்முடைய நம்பகமான ஊழியர்களிடம் ஒப்படைத்துவிட்டு தன் தந்தையிடம் சென்றார்.
பூமி ழுமுவதும் பிர்க்கப்பட்டுள்ளது
கண்டங்கள்
நாடுகள்

மாநிலங்கள்/மாகாணங்கள்/தாலுகாக்கள்
தொகுதிகள், கிராமங்கள், வார்டுகள், தெருக்கள் போன்றவை.
மத் 13:34-36 – ஒரு மனிதன் வெளியில் செல்வதற்கு முன் தன்னுடைய ஊழிகாரர்களுக்கு அதிகாரத்தை கொடுத்துச் சென்றான், ஒவ்வொருவனுடைய வேலை என்ன என்றும், காவல்காரனை பார்த்துக்கொள்ளும்படியாகவும் சொல்லிவிட்டுச் சென்றான். வீட்டு எஜமானன் எப்பொழுதுவருவான் என்று வீட்டு வேலைகாரனுக்கு தெரியாது, மாலை, நள்ளிரவு, கோழி கூவும் நேரம் அல்லது இன்னும் காலை; எஜமானன் திடீர் என வருவார், நீங்கள் தூங்கி கொண்டிருப்பதை பார்ப்பார்.


லூக் 16:1 இருக்கும் செல்வந்தனும் , மாற்கு 13:34 இல் இருக்கும் ‘மனிதனும் இயேசு கிறிஸ்துதான். தன்னுடைய ஊழியர்களுக்கு அவர் அதிகாரத்தை தந்திருக்கிறார். இரண்டு வசனங்களிலும் இருக்கும் ஊழியகாரனும், உக்கிரானகாரனும் ஒன்றுதான். எஜமானனிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்றிப்பது நீங்களும் நானும்தான்.


நாம் எப்பதை அதை சமாளிக்கப்போகிறோம்?
அவருடைய வளங்களை வீண்டிப்பதாக பரலோக நீதிமன்றத்தில் தூதர்கள் உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்களா? கர்த்தருடைய ராஜ்யத்தை கட்டியெழுப்ப நீங்கள் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துகிறீர்களா?

Sr. Leema Rose AOJ

தானியேல் –II 03.03.2022 – தேவ செய்தி

கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும். அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.
ஏசாயா 49:9,10

எனக்கு இரட்சிப்பு கிடைத்தபிறகும், பாவங்களுக்கு பரிகாரம் செய்தல், தவகாரியங்கள் செய்தல் போன்றவற்றின் மூலமாக என்னுடைய இரட்சிப்புக்காக நான் உழைக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் நெடுநாள் வாழ்ந்தேன். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், என்னுடைய கிரியைகளின் மூலம் கர்த்தரை பிரியப்படுத்தி என்னை தகுதிபடுத்த வேண்டும் என்று நினைத்தேன். அது எவ்வளவு தவறானது என்பதை கர்த்தர் எனக்கு கட்டினார்

தன்னுடைய மரணம் மற்றும் உயிர்ப்பின் மூலமாக இயேசு கிறிஸ்து நமது இரட்சிப்பை முழுமையாக்கி விட்டார். அதனுடன் கூட்டுவதற்கு ஒன்றும் இல்லை.


நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், “அவரையே நோக்கி பார்ப்பது, மேலும் அவரில் விசுவாசம் வைப்பது.”


அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங்கீ 34:5.
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவா: 3:14,15


அனைவரும் காண்பதற்காக, இந்த பூமியில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லா நாமங்களுக்கும் மேலாக, இயேசு கிறிஸ்துவை, பிதாவாகிய தேவன் உயரத்தினார்.


அவரை நோக்கி பார்பவர்கள் பிரகாசமடைந்து அவரின் முக ஒளியை பிரகாசிப்பார்கள்.
அனைத்து சிறையிறுப்பிலுருந்தும் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.
சாவு மற்றும் நித்திய நரகத்தின் கைதிகளாக, ஆதாமின் சந்ததிகளாகிய நாம் பிறந்துள்ளோம்.

ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். எபி 2:15.


பல விசுவாசிகள் இரட்சிப்புக்குள் வந்தபிறகும் இன்னும் சிறையிருப்பில் இருக்கிறார்கள் – விரக்தி, மனச்சோர்வு, நோய், ஊக்க்மின்மை, நம்பிக்கை இழப்பு போன்றவற்றால்.
நீங்கள் ஏன் அந்த சிறையிருப்பை விட்டு வெளியே வரக் கூடாது? “இயேசு கிறிஸ்துவின் விசுவாசி” என்னும் உங்களுடைய அடையாள அட்டையை நீங்கள் காவல்காரனிடம் (சாத்தான்) காட்டலாம்.


உங்களுடைய கடமை இதுதான் – என்னுடைய தண்டனையின் காலம் முடிந்துவிட்டது என்று மக்களுக்குச் சொல்லுவது.


பரலோக பிதா, நியாயாதிபதி, என்னுடைய வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார். நான் இனி சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வெளியே வந்து உங்களை மற்றவர்களுக்கு காட்டுங்கள்.
சாத்தானின் சிறை அறைகள் இந்தியாவில் நிரம்பி வழிகிறது. தணடை காலம் முடிந்தவர்கள் கூட சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள் ஏனென்றால் விடுதலையை அவர்களுக்கு யாரும் அறிவிக்க வில்லை. எத்தனை சோகமானது.
நாம் அவர்களிடம் சென்று சொல்ல வேண்டும்,


…. கட்டுண்டவர்களை நோக்கி புறப்பட்டு போங்கள் என்றும், இருளில் இருக்கிறவர்களை நோக்கி, வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், ஏசாயா 49:9,10


சிறையில் சரியான உணவு (கர்த்தருடைய வார்த்தை) இல்லாததால் அவர்கள் பசியால் இறக்கிறார்கள்.
குடிக்க தண்ணீர் (பரிசுத்த ஆவி) இல்லை.

சூரியனின் வெப்பதிலிருந்து தங்களை பாதுகாக்க நிழல் இல்லை, வெப்பம் அவர்களை பாதிக்கிறது, சரியான மேய்ப்பன் இல்லை அவர்களை வழிநடத்த,
வெளியே வந்தபின்,

அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்;
சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.
அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை;
(இயேசு) அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.


எத்தனை மகிழ்ச்சி!


இந்த மகிழ்ச்சியை அனைத்து வீடுகளும் அனுபவிக்க வேண்ட்ம். இந்திய தேசத்தில் இருக்கும் அனைத்து வீடுகளும் இந்த மகிழ்ச்சியால் நிரம்பியிருப்பதாக.


Sol. Gracy, AOJ

தானியேல் – II
02-03-2022 – தேவ செய்தி

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

லூக் 18:13.

மார்பிலே அடித்துக்கொண்டான் – இது ஆழமான துக்கத்தையும் மனந்திரும்புதலையும் காட்டுகிறது.

லூக் 18:14 – இந்த ஆயக்காரன் மட்டுமே நீதிமானாக்கப்பட்டான் என்று இயேசு சொன்னது மற்றவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியது.

தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், 
மத் 23:12.

பரலோக ராஜ்யத்தில் நுழைவதற்கு தேவையானது குழந்தையைப்போல விசுவாசம் மேலும் கர்த்தரை சார்ந்திருப்பது. இந்த ஆயக்காரனின் அணுகுமுறையே கர்த்தரிடம் செல்வதற்கு சரியானது. அதிகாரிகளுக்காக வேலைசெய்ததால் ஆயக்காரர்கள் வெறுக்கப்பட்டார்கள் மேலும் ஊழலுக்கு பேர்போனவர்களாக இருந்தார்கள். தங்களுடைய சுயநீதியிலும் கடின இருதயத்தாலும் பரிசேயர்களும், மத போதகர்களும் தவறிப்போன மக்களை பற்றி கவலைப்படவில்லை.

வழி தவறிய பிள்ளைகள் கர்த்தரிடம் திரும்பி வர வேண்டும் என்று கர்த்தரின் இருதயத்தை வெளிப்படுத்தும் இயேசு ஏங்குகிறார்.
நாம் பாவிகள் என்பதை தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு கர்த்தருடைய கிருபையை நாடி, நம் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, கர்த்தரிடம் நம்மை ஒப்புகொடுத்து விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பை பொறுவோம். ரோம 10:3 சொல்லுகிறது எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
யாகோபு 4:6 – அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.


நீதிமொழிகள் 22:4 – தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.


சங் 103:8,9,11
கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள் மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.. .
எனவே அன்பான சகோதர சகோதரிகளே கர்த்தர் பலவீனமானவர்களை அறிந்து அறிந்து அவர்களுக்கு கிருபை தருபவர். யாக்கோபை அறிந்த தேவன் நம்மையும் அறிந்திருக்கிறார் மேலும் நமக்கு ஞானம், அவருடைய் நீதி, மேலும் இரட்சிப்பை கொடுக்கிறார், அவரே நம்மை பரிசுத்தமாக்குகிறார்.
நாம் கர்த்தருக்கு கீழ்படியும்போதும், நம்மை தாழ்த்தும் போதும் அவர் நமக்கு கிருபை கொடுக்கிறார்.
கர்த்தர் என்னுடைய பாவங்களை மன்னித்துவிட்டார் மேலும் என்னை காப்பாற்றிவிட்டார். இதோ கர்த்தர் என்னையும் என் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலாரையும் ஆசீர்வதித்திருக்கிறார்.


ஜெபம்


பரலோக பிதாவே, எங்களுடைய பாவங்களை மன்னியும், உம்மோடு இருக்க என்னை ஆசீர்வதியும், உம்முடைய குழந்தைகள் உமக்கு பயந்து தங்களிஅ தாழ்த்தி, உம்மை துதிக்கவும், உம்முடைய மகிமையை காணவும் செய்யும்.

ஆமேன்.

தானியேல்
01-03-2022 – தேவ செய்தி

ங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்…

(பிலி 1:6).

என்னுடைய சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும், மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டிருக்கிறேன்.
கர்த்தரோடு என்னுடைய 8 வருட பயணத்தில் ஒரு வசனம் எனக்கு எப்போதும் நினைவில் நிற்கிறது.

எபி 13:5 – நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை. இந்த வசனத்தில் உள்ள உண்மைத்தன்மையை நான் அனுபவித்திருக்கிறேன். என்னுடைய தாயின் வயிற்றில் நான் உருவாகும் காலத்திலிருந்தும் கர்த்தரின் அன்பை சந்திப்பதற்கு முன்பும் கூட அவர் எப்போதும் என்னோடு இருக்கிறார் என்பதை இது நினைவுபடுத்துகிறது.
இரண்டாவதாக, கர்த்தர் என்னை ஒருபோதும் கைவிடவில்லை, மேலும் என்னுடைய பலவீனங்கள் அல்லது பாவங்கள், குற்ற உணர்வுகள் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும்போது கூட, நான் உயர்ந்து முன்னேறுவதற்கு என்னை பலப்படுத்துகிறார்.

பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் இயேசுவையும் அவர் கல்வாரிக்கு சிலுவை சுமந்து சென்று போனதையும் எனக்கு நினைவூட்டுகிறார், அந்த பாரமான சிலுவையின் பாரத்தை இயேசு நடக்கும்போது பலமுறை அவரது தோளில் உணர்ந்தார், கீழே விழுந்தாலும் அவர் எழுந்தார் சிலுவையை எடுத்தார், அதை சுமந்துகொண்டு முன்நோக்கிச் சென்றார்.

நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” அவர் மரணபரியந்தம் என்னை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை இதை காட்டுகிறது. எபி 12:1-3


பிதாவாகிய தேவன் தன்னுடைய குமாரனை அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தினார், மேலும் குமாரன் நமக்காக தன்னுடைய உயிரை கொடுத்தார், ஆனால் அவரது அன்பு அத்துடன் நிற்க்க வில்லை, பிதா நமக்கு பரிசுத்த ஆவியையும் கொடுத்தார்.
இப்போது அவருடைய ஆவி என்னுள் இருப்பதால் அது என்னை வழிநடத்துகிறது, எனக்கு கற்பிக்கிறது, ஒவ்வொருநாளும் இயேசுவை எனக்கு உண்மையாக்குகிறது. உண்மையில் இது அதிசயம்தான்.


எதிரியானவன் எனக்குள் சந்தேகத்தை உண்டாக்கி, என்னைச் சுற்றிலும் பொய் மேலும் பல்வேறு சுழ்நிலைகளின் மூலம் உற்சாகத்தை இழக்கச் செய்கிறது, ஆனால் ஒரு வசனம் என்னை பலப்படுத்துகிறது, அதை நான் மிகவும் நேசிக்கிறேன்.
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

ரோமர் 10:11


அவர் மீது விசுவாசமும் நம்பிக்கையும் வைப்போம், – உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்.” என்பதை முழுவதும் நம்புவோம்.. (பிலி 1:6).

Sol. DaiahunTalang, AOJ

தானியேல்
28-02-2022 – தேவ செய்தி

எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.

லூக் 19:17

இந்த வசனத்தில் இரண்டு முக்கியமான வெளிப்பாடுகள் உள்ளன.


கீழ்படிந்து நாம் செய்யும் உழைப்பிற்கு நேரிடையாக வெகுமதி உள்ளது.
தனிப்பட்ட சாட்சி:

நான்கு உடன்பிறப்புகளில் நான் இளையவன். சிறு வயதிலேயே தேவன் என்னை ஊழியத்திற்கு அழைத்ததை நான் உணர்ந்தேன். ஊழியத்தை துவங்கியபோது நான் 

உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், இப்பொழுதும் அப்படியே இருக்க விரும்புகிறேன். எல்லா ஆண்டிலும் கர்த்தர் என்னை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல், என்னுள்ளும் என் வாழ்க்கையிலும் அவர் செயல்படுவதை காணும் மகிழ்ச்சியை எனக்கு கொடுத்துள்ளார். எனக்கு கிடைத்துள்ள அவருடைய ஆசீர்வாதங்களை பார்க்கும்போது ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும், “அவர் என்னை கைவிடாமல் இருப்பதினால்தான் நான் இன்றும் உயிரோடு இருக்கிறேன் மேலும் எனக்கு தேவையான எல்லாவற்றையும் எனக்கு கொடுத்து ஆசீர்வதித்துள்ளார்.”


இயேசு மீண்டும் வரும்போது, முதலாவதாக கேட்கும் கேள்வி, அவர் நமக்கு கொடுத்த ராத்தலை வைத்து நாம் வியாபாரம் செய்து என்ன சம்பாதித்திருக்கிறோம் என்பது தான்

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

லூக் 16:10


அவருடைய சேவகர்களாக நாம் செய்யவேண்டியது எல்லாம், அவருடைய கர்த்தத்துவத்திற்கு உண்மையுடன் அடிபணிந்து அவர் நமக்கு கொடுத்திருக்கும் இராத்தல்களை பயன்படுத்துவதுதான்.
உண்மையுள்ள கீழ்படிதல் மட்டுமே இயேசுவைப் பின்பற்றுபவரின் ஒரே வாழ்க்கைமுறை.

சின்ன விஷயங்களிலும் கீழ்படிந்திருப்பதுதான் பாராட்டுக்கும் அதிக ஆசீர்வாதங்களுக்கும் வழிவகுக்கும்.


அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவினுடைய துன்பத்திலும் மரணத்திலும் நாம் பங்குபெற்றால் இயேசு கிறிஸ்துவைப்போலவே அவருடைய உயிர்ப்பிலும் பங்குகொள்ள முடியும் என்று சொன்னார். தேவன் அழைத்த பரம அழைத்தலின் பந்தயப் பொருளுக்காக இலக்கைநோக்கித் தொடருகிறேன். (பிலி 3:10-14).


அனுதினமும் இயேசுவுக்காக வாழ முயலும் நமக்கு நினைவில் வைக்க வேண்டியது – நாம் இவ்வுலகில் அனுபவிக்கும் பாடுகளை விட நமக்காக வைக்கப்பட்டிருக்கும் வெகுமதி மிகப்பெரியது. அதுதான் நித்திய வாழ்வு.

இறுதியாக, லூக்கா 18:8 –ல் இயேசு கேட்ட கேள்வி, “மனுஷகுமாரன் வரும்போது பூமியில் விசுவாசத்தைக் காண்பாரோ?” என்பதுதான் நமக்கும் ஒரு சவாலாக இருக்கிறது.
கர்த்தர் நம்மிடம் ஒப்படைத்த பரிசுகள் மற்றும் திறமைகள், வளங்களைச் செயல்படுத்துவதில் நாம் வெளிபடுத்திய உண்மையுள்ள கீழ்படிதலுக்கு ஏற்றார் போலத்தான் நமக்கு கிடைக்கும் வெகுமதியும் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


அன்பின் பரலோக பிதாவே, நான் கீழ்படிதலுடன் உழைக்க முடியும் என்பதற்காக நீர் என்னிடம் ஒப்படைத்த வேலையில் உமக்கு உண்மையாய் இருக்க எனக்கு இயேசுவின் நாமத்தில் உதவி செய்யுமாறு ஜெபிக்கிறேன். நான் இறுதிவரை உண்மையுள்ளவனாக இருக்கவும், இயேசு மீண்டும் வரும்போது என்னை உண்மையுள்ளவனாக காணவும் நான் ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியான தேவனே என்னுள் வந்து எனக்கு சொல்லித்தாரும், எவ்வாறு கர்த்தருடைய ராஜ்யத்தின் காரியங்களில் அவர் விருப்பத்தின்படி உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும் என்று. அவருடைய மகிமைக்காக வாழ எனக்கு உதவி செய்யும் ஆமேன்.

Sol. Pradeep Samuel Singh, Aoj

தானியேல் – II
27-02-2022 – தேவ செய்தி

அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்

(லூக் 19:4).

இயேசு கிறிஸ்துவை காண்பதற்கு சகேயு மிகவும் ஆசைப்பட்டான். “தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள்” என்று இயேசு சொன்னார். ஆவலுடன், ஏக்கத்துடன், மன்றாடுதல், விசுவாசம், மரக்கிளையிலிருந்து கீழே இயேசு கிறிஸ்துவின் பார்வையை சந்தித்தல் போன்வற்றை நாம் காட்சிப்படுத்தி பார்க்கலாம்.

இயேசு கிறிஸ்து தாமாகவே சகேயுவின் வீட்டிற்கு செல்கிறார் அங்கு அவனுடைய இதயத்தை திறந்து இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறான். கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்கு எவனுக்கு சித்தம் இருக்கிறதோ, அவன் கிறிஸ்துவை அறிவான்.
யாரை இயேசு அழைக்கிறாரோ அவர்கள் தங்களை தாழ்த்தி அவரிடம் வர வேண்டும். சகேயு எல்லாருக்கும் முன்பாக தன்னை தாழ்த்தி காட்டினார். உண்மையில் அவர் மனம் மாறினார் மேலும் இயேசுவை ஏற்றுக்கொண்டார். ஒரு பரிசேயனாக தன்னுடைய வேலையின் நிமித்தம் நீதிமானாக்கப்படுவோம் என்று அவன் எதிர்பார்க்க வில்லை. ஆனால் வேலையும் நம்பிக்கையுமே அவனை நீதிமானாக்கியது. இது உண்மையான விசுவாசத்தையும், மனந்திரும்புதலையும் காட்டுகிறது. இப்பொழுது அவன் சந்தோஷமாக இருக்கிறான் மேலும் பாவத்தை விட்டு விலகி கர்த்தர் பக்கம் திரும்பினான். இரட்சிப்போடு கிறிஸ்து அவனுடைய வீட்டிற்குச் சென்றார், நாம் இயேசுவை அனுபவிக்க உண்மையான முழுமையான முயற்சி எடுக்கும்போது அதற்கு தக்க பரிசு அவர் கொடுக்கிறார் என்பதை சகேயுவின் இந்த கதைமூலம் அறிகிறோம். சுவிசேஷமான நற்செய்திக்காக சகேயு ஆர்வமாக இருந்ததால் அவனுடைய வாழ்வில் இந்த மாற்றம் ஏற்ப்பட்டது. தன்னுடைய மனந்திரும்புதலின் மூலம் அவன் ஒரு புதியா வாழ்விற்கு தயாராகி இருந்தான். நம்முடைய வாழ்வின் அநேக காரியங்கள் நம்மை பின்னோக்கி இழுக்கின்றன உதாரணமாக நம்முடைய அணுகுமுறை, பெருமை, கோபம், மனச்சோர்வு, பொறாமை, கவலைகள் மற்றும் பல. இவைகள் நாம் கர்த்தரிடம் செல்வதை தடை செய்கிறது. ஆனால் லூக் 19:4 சொல்லுகிறது, அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, இயேசுவை பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.

நாம் குறையற்றவர்கள் அல்ல என்பது நமக்குத்தெரியும். ஆனால்,

நாம் இயேசுவிடம் நெருங்கி வரும்போது அவரும் நமக்கு நெருக்கமாக வருகிறார்.


சகேயுவின் வாழ்வைப்போலவே என்னுடைய வாழ்வும் உலகபிரகாரமான காரியங்களில் சிக்கி தவித்தது. சிறையிருப்பிலிருந்தும், பிணைப்புகளின் சங்கிலிகலிருந்தும் என்னால் விடுபடமுடியவில்லை. ஆனால் இயேசுவின் பிரசன்னத்தால் தொடபட்டதுமுதல் எவையெல்லாம் நான் அவரிடம் செல்வதை தடுத்ததோ அவை அனைத்தையும் உதறிபோட்டேன். அவருடைய பிரசன்னம் என்னுடைய பாவங்களை அறிக்கையிடச் செய்தது, நான் விடுதலை அடைந்தேன்.
நம்மை வெறுத்து கர்த்தருக்கு கீழ்படிய நாம் முயற்சி செய்ய வேண்டும். யாத் 19:20 – மக்கள் விரைவாக தங்களை பரிசுத்தப்படுத்தினார்கள் மேலும் கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினார் தன்னுடைய மக்களை சந்திப்பதர்காக. இயேசுவை நான் சந்தித்தபின் என்னுடைய வாழ்வு முற்றிலுமாக மாறிவிட்டது.


பிதாவே, என்னுடைய பாவத்தை சிலுவையில் சுமப்பதற்கு உம்முடைய குமாரனை அனுப்பியதற்காக நான் நன்றி கூறுகிறேன். இது என்னைப்போல பாவிகளின் இரட்சிப்புக்கு வழி திறந்துள்ளது. ஏனென்றால் ஒரு காலத்தில் நான் தொலைந்து போனேன் ஆனால் இப்போது என்னால் பார்க்க முடிகிறது. எவ்வாறு இயேசுவை தன் வீட்டில் வரவேற்றதர்காக சகேயுவின் வாழ்க்கை மாறியது மேலும் இரட்சிப்புப் அவன் வீட்டில் வந்ததோ அதேபோல ஒவ்வொரு மனிதனும் இயேசுவை தங்களுடைய இருதயங்களில் வரவேற்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

ஆமேன்.

SOL.CLARA BENEDICT AOJ

தானியேல் – II 26.02.2022– தேவ செய்தி

ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் பிரத்தியட்சமாய்ப் பதிலளிப்பார் என்றும் நீ அறியக்கடவாய்.
உபா 7:9,10

கர்த்தருடைய இரண்டு குணங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
கர்த்தரில் அன்புகூர்ந்து அவரது கற்பனைகளை கைகொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறை மட்டும் தயவையும் உடன்படிக்கையையும் காக்கிற உண்மையுள்ள தேவன் அவர்.
அவரை பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார்.


பத்தாவது வசனத்தில் யகோவா தேவனின் இரண்டாவது குணம் மூன்றுமுறை சொல்லப்பட்டிருக்கிறது.


ஒருவர் ஏன் யகோவா தேவனை வெறுக்க வேண்டும்?

எந்த ஒரு குழந்தையும் தன்னுடைய தாயையும் தகப்பனையும் அன்பு செய்யும். தன்னுடைய பெற்றோர்கள் தனக்கு செய்யும் எல்லா காரியங்களாகிய– உணவளிப்பது, உடை அணிவிப்பது, குளிக்க வைப்பது, அன்பு செய்வது, கைபிடித்து நடத்திச் செல்வது, கூட விளையாடுவது, குழந்தை நன்கு வளரவேண்டும், மேலும் எப்பொழுதும் குழந்தையின் நலன் கருதுவது, போன்ற எல்லாவற்றையும் குழந்தை பார்த்துக்கொண்டிருக்கிறது.

குழந்தை வளர்ந்து பெரிய ஆளாக மாறியபின் தன்னுடைய பெற்றோர்களில் பெரிய குறை கண்டுபிடி அவர்களைக்கும்வரை தனது தந்தை அல்லது தாயை வெறுக்க வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு மனிதனும் கர்த்தரிடமிருந்துதான் ஜீவனை பெறுகிறான். வாழ்வை கொடுப்பதற்கும் அதை எடுப்பதற்கும் யகோவா தேவனுக்குத்தான் வல்லமை உண்டு. இந்த அதிகாரத்தை அவர் இயேசு கிறிஸ்துவிடமும் கொடுத்திருக்கிறார்.
ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

(யோவா 10:18).


ஜீவன் கொடுப்பவரை எப்படி மனிதனால் வெறுக்க முடியும்? நிச்சயமாக அவனால் முடியாது. வஞ்சகத்தால் அவனால் அப்படி செய்ய முடியும், அவனால் தன்னுடைய உண்மையான தகப்பனை காணமுடியாது. அவனுடைய இதயமும் மனமும் குருடாக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குழந்தை தனது தந்தை அல்லது தாயை அடையாளம் காண முடியாததுபோல, இந்த உலகில் பிறக்கும் எந்த குழந்தையும் கடத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.

2கொரி 4:4 – தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
மனிதனுடைய குருடாக்கப்பட்ட கண்களால் சிருஷ்டி கர்த்தாவை பார்க்க, மீண்டும் அவர்களுடைய கண்கள் திறக்கப்பட வேண்டும். கர்த்தருடைய வேதத்தை அறிவதன் மூலம் மட்டுமே இந்த உண்மையை அறிந்துகொள்ள முடியும். கர்த்தர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர்கள் மீது இரக்கம் காட்டுவார்.

  1. தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார்.

பிரட்தியட்சமாய் அவர்களுக்கு பதிலளிப்பார்.
பூமியிலும், மனித குலத்திலும் நாம் காணும் அனைத்து அழிவுகளும் இந்தக் காரணத்தால் கண்டறியப்படலாம்.
யகோவா தேவனை வெறுப்பது;
கர்த்தரை எப்படி ஒருவரால் வெறுக்க முடியும் அல்லது தங்களது வெறுப்பை யகோவா தேவனை நோக்கி வெளிப்படுத்தமுடியும்?
இயேசுவில் நம்பிக்கை வைக்காததன் மூலம்.
பிதாவானவர் குமாரனில் (இயேசு) அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனிடத்தில் (இயேசு) விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்;

குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.

யோவா 3:35,36

இயேசுவில் நம்பிக்கை வைக்காதது யகோவா தேவனை வெறுப்பதாகும்.
இயேசுவில் நம்பிக்கை வைக்காதவர்கள் மீது கர்த்தருடைய கோபம் வெளிப்படும். இன்றைய வசனம் சொல்லுகிறது. தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார்.
உலகபிரகாரமான மனிதனுக்கு உயிரை கொல்லுவது, உயிரை எடுப்பது இதுதான் மிகப்பெரிய அழிவாக கருதப்படும், ஆனால் வேதம் இன்னும் அதிகமாக சொல்லுகிறது. அப்படிப்பட்டவர்கள் இரண்டாவது மரணத்திற்கு ஆளாவார்கள்.


பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். வெளி 21:8


இரண்டாவது மரணம் என்பது ஒரு மனிதன் மரித்தப்பின் அக்கினி கடலில் அனாதி காலத்திற்கு போடப்படுவது.
நரகம் என்பது அக்கினியும் கந்தகமுமான நிறைந்த கடல் என்று இயேசு சொல்லுகிறார். (வெளி 20:10,15). அங்கு நெருப்பினால் மக்கள் வாதிக்கப்படுவார்கள். வெளி 14:10-11 – நித்திய நெருப்பு, அந்தகாரம், புழுக்கள், அழுமை மற்றும் பற்கடிப்பு.
மத் 8:12, 22:12, 25:30, லூக் 13:28, மத் 9:44,46,48, எசா 33:14

லூக் 12:5 – நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்..
இதை எழுதிக்கொண்டிருக்கையில் ஒருவித பயம் என்னை சூழ்ந்தது. நம்முடைய தொகுதியில் இயேசுவை அறியாமல் நித்திய அழிவிற்கு போகும் மக்கள் எத்தனை பேர் என்று கணக்கிட்டு பார்ப்போமா? அவர்களுக்கு பரலோகத்தை தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

Sol. Ann Rose AOJ

தானியேல் – II
25-02-2022 – தேவ செய்தி

இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.

(எரே 33:6).

08-12-2019 அன்று இந்திய சபையில் மேற்கண்ட வசனத்தை பேசினார்.


இந்திய சபை கன்னியாகுமரியில் இருந்து கஷ்மீர் வரை பரவியுள்ளது. கர்த்தருடைய கிருபை மற்றும் நன்மைக்காக நன்றி. கடந்த 25 ஆண்டுகளாக கர்த்தர் பல்வேறு பாஸ்டர்களையும், நற்செய்தி அறிவிப்பாளர்களையும் எழுப்பி இருக்கிறார். அவர்கள் கடினமாக உழைத்தார்கள்,, தலையிலிருந்து கால்வரை, தெற்கிலிருந்து வடக்கு வரை கிழக்கிலிருந்து மேற்குவரை இந்தியா முழுவதும் சபைகள் நிறுவப்பட்டிருக்கிறது.
இப்பொழுது இருக்கும் இந்திய சபையின் நிலையை இரண்டு உதாரணங்கள் மூலம் காட்டப்பட்டது.
உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.

ஏசா 1:6


இந்திய சபை மனித உடலோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. இது இயேசு கிறிஸ்துவின் உடல் ஆனால் காயமும் வீக்கமும் நிறைந்துள்ளது. கர்த்தர் அதை ஆராய்ந்து பார்த்தார், அதை குணமாக்கினார்.


இந்திய சபை ஒரு கட்டிடத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது.கி.மு. 0 வில் பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் அஸ்த்திவாரத்தின் மீது கட்ட ஆரம்பித்தார். கடந்த 2019 ஆண்டுகளாக அப்போஸ்தலர்களும், பவுலும் மற்றவர்களும் அதை கட்டினார்கள். எண்ணமுடியாத மக்கள் இதற்காக வேலை செய்திருக்கிறார்கள். இந்த காலத்தில் இதற்காக நாம் பணிஅமர்த்தப்பட்டிருக்கிறோம்.
எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்..

1கொரி 3:10


ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,
அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும் (1கொரி 3:12,13).


இந்திய திருச்சபைக்கு 2014 முதல் “அக்கினி பரிட்சையின் நாட்கள்”. ஒவ்வொருவரும் கட்டிய பொருள் அக்கினி பரிட்சைக்கு ஆளகிறது. பயனற்ற பொருட்களால் கட்டப்பட்ட அந்த பகுதிகளை இடித்து கட்டிடத்திலிருந்து அகற்ற வேண்டும். காய்ந்தபுல் மற்றும் வைக்கோல் கொண்டு கட்டப்பட்ட அந்த பகுதிகள் அக்கினியால் எரிக்கப்படும். செல்வ செழிப்புக்கான நற்செய்தி மற்றும் மேலோட்டமான படிப்பினைகளின் அடிப்படையில் கட்டப்பட்ட சபைகள் சோதிக்கப்படும், பயனற்றவை என்று கண்டறியப்பட்டால் அகற்றப்படும்.


ஒரு போதகர் தன்னுடைய அனுபவத்தை என்னோடு பகிர்ந்துகொண்டார்.
நான் கடந்த 23 ஆண்டுகளாக சபையை நடத்திக்கொண்டு வருகிறேன். என்னுடைய விசுவாசியினுடைய மகள் ஒரு இந்து பையனோடு ஓடிவிட்டாள். இந்த சபையின் முதல் விசுவாசி அவர்தான் மேலும் 23 ஆண்டுகளாக அவர் எங்களோடு இந்த சபையில் இருக்கிறார்.

நான் அந்த குடும்பத்தினரை சமாதானப்படுத்தவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் சென்றிருந்த போது, தன் மகள் செய்தது நியாயம்தான் என்று அவர்கள் சொல்வதை கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்.


நான் எப்படிப்பட்ட ஊழியம் செய்கிறேன் என்று ஆராய்ந்துபார்க்க வேண்டும். நம்மை தாழ்த்தி இந்திய சபைக்காக ஜெபிப்போம்.


அனைத்து காயங்களுடன் சபையை நாம் இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புகொடுப்போம்.
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. ஏசா 1:5.
கர்த்தர் இரண்டு காரியங்களை சபைக்கு வாக்களிக்கிறார்.
சுகமாக்குதல்
எல்லா நோய்களிலிருந்தும் சபை சுகமாக்கப்படும்.
ஆரோக்கியம்
சபைக்கு போதுமான அளவு எதிர்ப்பு சக்தி இருக்கும்படியாக கர்த்தரே பார்த்துக்கொள்வார்.


ஜெபம்


அப்பா பிதாவே முழு சபையும் அதில் இருக்கும் ஒவ்வொரு விசுவாசியும் நீர் வாக்களிக்கும் அமைதி மற்றும் உண்மையை மகிழ்வுடன் அனுபவிப்பார்களாக. ஆமேன்.

Sr. Angelica AOJ

தானியேல் – II
24-02-2022 – தேவ செய்தி

அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.

லூக் 19:14.

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் என்பவர் 58 வயதான ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மிஷனரி ஆவார்..இவர் இந்தியாவில் தொழுநோயாளிகள் மத்தியில் தன்னலமற்ற பணியுடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்து வந்தார். ஜனவரி 22 ஆம் தேதி இரவு கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் – 10 வயது பிலிப் மேலும் 7 வயது திமோதியுடன் – அவர் பணியாற்றிய மக்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
அவரை வெறுத்தனர்: அவருடைய ஏழ்மையான பிறப்பிற்காகவும், சிலுவையில் அறையப்பட்டதற்காகவும், அவருடைய கற்பனைகளுக்காகவும், பரிசுத்ததிற்காகவும் அவரை இகழ்ந்தனர்.

அவருக்கு ஒரு செய்தியை அனுப்பினர்:
அதிருப்தியடைந்த குடிமக்கள்அவருடைய ஆட்சி என்னவாக இருக்குமோ என்று பயந்து, அவர் ஆட்சியாளராக நியமிக்கப்படுவதை எதிர்த்து அவருக்கு எதிராக ஒரு ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.


மத் 2:22ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,


இந்த உண்மை யூதர்களின் நினைவில் “புதியதாக” இருந்ததால், இந்த உவமையை நம்மை மிகவும் வியக்க வைக்கிறது.

யோவா 1:11 - 
அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

யூதர்கள் இயேசுவை நிராகரித்தார்கள், அவருடைய ஆட்யின் கீழ் இருக்க மனத்தில்லாமல் இருந்தனர், சற்று நேரத்திற்குப் பின் ஒரு கொலையாளியை ஏற்றுக்கொள்ளவும் தயாரானார்கள். மகிமையின் தேவனை கொன்றவர்கள், தங்கள் ஆத்துமாவை மீட்பவரை விட தங்கள் கோபத்தில் ஒரு கொலைகாரனை விரும்புவதில் எந்த ஆச்சரியமுமில்லை.

பிரபுவாக இருந்த ஒருவன் இயேசுவின் பிரதிநிதி மற்றும் இறுதி தீர்ப்பு மரணத்தைவிட மிக மோசமானது – இது நரகத்திற்கும், நெருப்பு ஏரிக்குமான நித்திய தீர்ப்பாகும். இயேசுவை நிராகரிப்பதால் இயேசு யார் என்றும் அவர் என்ன என்பதிலும் எந்த மாற்றமும் வரபோவதில்லை. அவரை நிராகரிப்பவர்களுக்கு நித்திய நரக தண்டனை உண்டு.

கிருபை இழந்தவர்களுக்கு கிறிஸ்துவின் நுகம் தாங்கமுடியாதது ஆனால் இரட்சிக்கப்பட்ட பாவிக்கு அது எளிதானது மற்றும் இலகுவானது. நம்மையே நாம் நியாயம் தீர்ப்போம்….. இந்த சுமையை நாம் ஏற்றுக்கொள்ளுகிறோமா அல்லது இதை எடுத்துப்போட நினைக்கிறோமா?
ஜெபம்: அன்பு தகப்பனே உம்மிடம் எங்களை ஒப்படைக்கின்றோம். நான் தீர்ப்பளிக்காமல் உமது னபின் ஆழத்தைப் புரிந்துகொள்ள எனக்கு உதவும்.

ஆமேன்.

Sol. Pratibha AOJ

தானியேல் – II
23-02-2022 – தேவ செய்தி

அதைக் கண்ட யாவரும் இவர் பாவியான மனுஷன் இடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்

லுக்கா 19:7

இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தது பாவிகளை இரட்சிக்கவே என வேத வசனம் கூறுகிறது.


1Timothy 1:15

யூதர்களைப் பொறுத்தவரை அவர்களை பார்க்கப்போகும் மேசியா வானவர் ராஜாவாக தன்னை ரோமர்கள் இருந்து பிடியிலிருந்து மீட்பார் எனவும் மாம்ச பிரகாரமாக நம்பினர்.


இன்னும் சொல்லப்போனால் யோவான் ஸ்நானகன் கூட இயேசுவை அவ்வாறாகவே கருதினார்.
Mat 11:3

தேவனுடைய ஆவி உடையவர்களே தேவனின் திட்டத்தை புரிந்துகொள்ள முடியும் என வசனம் கூறுகிறது.


Rome 8:5

இன்று தேவனுடைய பிள்ளைகள் திட்டத்தையும் அவருடைய எண்ணத்தையும் அறிந்து கொள்ளாமல் செயல்படுகிறது.


தேவனுடைய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்ட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம் இருப்பதனாலேயே இன்னும் தேவனுடைய வார்த்தை அனேக இடங்களில் பிரஸ்தாபிக்க படவில்லை.
நான் இயேசுவின் படையணி மூலமாக தேவன் வெளிப்படுத்தின் பிரகாரமாய்
குடி போதை மறுவாழ்வு மையத்தில் (Redemption Recovery Care) ல் ஒரு பயிற்சியை தொடங்க வேண்டும் என வெளிப்படுத்தினார்.


அநேகர் இதை எதிர்த்தனர் ஏனெனில் வேதத்தின் அத்தியாயங்கள் அவரால் புரிந்துகொள்ள முடியாது ,அனேக படிப்பறிவில்லாதவர்கள் , அவர்களின் மன நிலைமை தொடர்ந்து வகுப்புகளை கேட்பதற்கும் வேதத்தின் ஆழமான சத்தியங்களை அறிந்து கொள்வதற்கும் ஏற்றதாகவே இராது என கூறி அப்பயிற்சி நடத்துவதில் பயனில்லை எனக் கூறி.

இருப்பினும் தேவனுடைய திட்டத்தின் பிரகாரமாய் நான் அதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டேன்.
தேவன் அற்புதமாக அதில் செயல்பட்டார் அனேகர் மனம் திரும்பினர் இந்த வகுப்புகள் காலை ஐந்தரை மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடக்கும்.


ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை உள்ள எல்லா காரியங்களும் அதில் கற்றுக் கொடுக்கப்படும் தேவனை அறியாத அனேகர் அப்பாவ பழக்கத்திலிருந்து வெளிவந்தன. மேலும் அநேக மற்றவர்களுக்கு வேதத்தை கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களாக மாறினர்.

John 4:1-14 வசனத்தில் நாம் வாசித்த பிரகாசமாய் இயேசு கிறிஸ்து பாரம்பரிய ஒரு கிணற்றடியில் அமர்ந்திருக்கிறார் அவர் திட்டத்தின் பிரகாரம் அவர் சந்தித்த அந்த சமாரியா ஸ்திரீ அனேகன் ஒதுக்கி வைக்கப்பட்டு தள்ளப்பட்ட நிலைமையில் இருந்தவள் மூலமாக கிராமம் ரசிக்கப்பட்டது. தேவன் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மனித மூளைக்கு எட்டாத அவர்கள். தேவனுடைய ஆவி உடையவர்களே தேவனுடைய திட்டத்தை புரிந்துகொள்ள முடியும்.


இக் கடைசி காலத்தில் அநேகர் ஒதுக்கப்பட்டு தள்ளப்பட்டவர்கள் மூலமாகவே
தேவனுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்
.

Sol. Paul Vasanthan AOJ