யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
லூக் 21:9.
திகிலடைவது அல்லது பய்ப்படுவது என்பது உலகெங்கிலும் உள்ள அனைவராலும் அனுபவிக்கப்படும் இயல்பான ஒரு மனித உணர்ச்சியாகும். இந்த உண்மையை அறிந்த தேவன் வேதத்தில் 365 தடவை “பய்ப்படாதே” என்று நம்மை திடப்படுத்தியிருக்கிறார்.
ஏசா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
மேற்கண்ட வசனத்திலே கர்த்தர் முதலாவது நம்முடைய பயத்துக்கு பதில் தருகிறார். மத் 8:23-27 இங்கும் கூட இயேசு கடல் ஏற்பட்ட பெருங்காற்றை அமைதி படுத்தும் போதும் சீடர்களை திடப்படுத்துவதை காண்கிறோம். கடல் கொந்தளிப்பால் பெரிய அலைகள் எழும்பின, படகில் மோதின, சீடர்கள் பயந்தார்கள், பயத்தினால் ஆட்கொள்ளப்பட்ட அவர்கள் ஆண்டவரே எங்களை காப்பாற்றும், நாங்கள் மடிந்து போகிறோம் என்று சொன்னார்கள்.
இந்த நிகழ்வில் கூட தேவன் முதலாவது அவர்களை பயப்பட வேண்டும் என்றார், பின்னர் சீடர்களை பயமுறுத்திய உண்மையான புயல் காற்றை கடிந்து கொண்டார். கர்த்தர் மனித பலவீனத்தை நன்கு அறிந்தவர் எனவே மனித உணர்வுகளை முதலில் நிவர்த்தி செய்கிறார் அதற்கு பின் அவருடைய வாக்குறுதியினால் நம்மை திடப் படுத்துகிறார்.
எபி 13:5 -,
உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
2008 ஆம் ஆண்டில் என் கணவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட போது, மரண பயம், என் குழந்தைகளின் எதிர்காலம், குறித்து நான் மிகவும் பயப்பட்டேன். நான் இவைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த போது பயம் என்னை ஆட்கொண்டது. ஆனால் என் உண்மையுள்ள தேவன் எனக்காக ஜெபிக்கவும் என்னுடன் இருக்கவும் பலரை எழுப்பி என் பயத்தை நீக்கினார். பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டன் என் மனதில் ஜீவனுள்ள கர்த்தருடைய வார்த்தைகள் வேலை செய்ய ஆரம்பித்தன. கர்த்தருடைய வாகுறுதிகளை என்னுடைய வாழ்க்கை சூழ்நிலைகளில் நான் பிரகடனம் செய்த போது என்னை திடப்படுத்தும் கர்த்தருடைய பிரசன்னைத்தை நான் உணர்ந்தேன்.
சங் 34:4
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
பிதாவே, என் மனதை முறியடிக்கும் மற்றும் முடக்கும் என் அச்சங்களை உமது கர்த்தில் ஒப்படைக்கிறேன். உமது வாக்குறுதிக்கு ஏற்ப என்னுடைய வாழ்க்கை சூழ்நிலைகள் அனைத்திலும் உம்முடைய பிரசன்னத்தில் விசுவாசம் வைக்க எனக்கு உதவி செய்யும். உம்முடைய வாக்குதத்தங்களுக்கும், உறுதிமொழிக்கும் நன்றி தகப்பனே. ஆமேன்.
கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.
(1இராஜா 9:3).
சாலமோன் தன் வாழ்நாளில் செய்த மிகபெரிய சாதனை என்றால், இந்த பூமியில் கர்த்தருக்கு ஆலயம் கட்டியதுதான். கர்த்தர் தன்னுடைய மகிமையை அங்கு வெளிப்படுத்தினார் மேலும் அதை அவருடைய ஜெப வீடாக மாற்றினார். கர்த்தரிடம் ஜெபிக்கவும் அவரது ஆசீர்வாதங்களை பெறவும் அனைவரும் இந்த ஆலயதிற்குத்தான் வர வேண்டும். சாலமோன் அதை கட்டிய பிறகு, இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து, ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழியும் மட்டும் இஸ்ரவேலர்களின் அனைத்து நடவடிக்கைகளும் இந்த ஆலயத்தைச் சுற்றியே இருந்தன.
இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்ப்புக்குப்பின் கர்த்தருடைய வாசஸ்தலத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவர் மனிதர்களுடைய இருதயங்களில் வாசம் செய்வதை விரும்பினார்.
மனிதர்களின் இருதயங்களை தன்னுடைய வாசஸ்தலமாக மாற்ற கர்த்தர் இரண்டு நிபந்தனைகளை வைத்தார்.
பரலோகத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர் நொறுங்குண்டு பணிந்த ஆவி உள்ளவர்களிடத்தில் வாசம் செய்கிறார்.
புதிய ஏற்பாட்டில், கர்த்தருக்கு ஆலயம் கட்ட விரும்புகிறவர்கள், இரண்டு காரியங்களை கவனிக்க வேண்டும்.
நொருங்கிய இருதயம் மற்றும் பரிசுத்தமாக இருத்தல் – தனிப்பட்ட நபரின் செயல்கள்.
வீட்டை பரிசுத்தமாக வைத்திருப்பது மேலும் அவருடைய நாமத்தை அங்கே என்றென்றைக்கும் உயர்த்தி வைப்பது.
அவருக்கு வாசஸ்தலத்தை கட்டுவது கர்த்தரின் வேலையாகும். சரியான இடத்தை தேர்ந்தெடுப்பது, திட்டதை உருவாக்குவத்உ, பயன்படுத்தப்படும் பொருட்கள், உள்துறை வடிவமைப்பு, அலங்காரம் பேன்ற அனைத்தும் கர்த்தருடையது. மனிதர்கள் நிலத்தை அதாவது தங்கள் இருதயத்தை அவருக்கு கொடுக்கலாம்.
மக்களாகிய நாம் எப்படி ஒரு வீடுகட்டுவதற்கு பொருத்தமான நிலங்களைத் தேடுகிறோமோ, அதேபோல் கர்த்தர் தம்முடைய வீட்டை கட்டுவதற்குரிய நிலத்தை தேடிக்கொண்டிருக்கிறார்.
எங்கெல்லாம் நொருங்கிய உள்ளம் மற்றும் தாழ்ந்த ஆவியை அவர் காண்கிிறாரோ, தன்னுடைய முத்திரையை பதித்து அதை வங்கிகொள்கிறார். அதை தனதாக்கி கொள்கிறார். தன்னுடைய வீட்டை கட்டுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவரே செய்கிறார்.
அநேக மக்கள் இன்று தங்களுடைய பணம், நிலம், கட்டிடங்கள் என கர்த்தருக்கு தயாராக இருக்கிறார்கள்,ஏனென்றால் அப்படி கொடுப்பது அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தை கொண்டுவருவதாக அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் கர்த்தருக்கு இவைகளில் ஒன்று கூட தேவையில்லையே. அவர் நொருங்கிய இருதயம் மற்றும் தாழ்ந்த ஆவியை தேடுகிறார்.
நம்மில் அநேகம் பேருக்கு இதை குறித்து தவறான புரிதல் இருக்கின்றது.
கர்த்தருக்கு வீடு கட்ட நாம் நிலத்தை தேடுகிறோம். ஆனால் கர்த்தர் இருதயங்களை தேடுகிறார்.
கர்த்தருடைய இந்த கையாளும் திறனை புரிந்து கொள்வதற்கு எனக்கு பல ஆண்டுகள் ஆனது. மக்கள் கர்த்தருடைய காரியத்திற்கு பணம், நிலம் மற்றும் கட்டிடங்களை கொடுத்தபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். பிறகு எல்லாவற்றையும் விட்டுவிட்டு கர்த்தர் புறப்படச் சொன்னபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன். இப்படி பல்வேறு நிகழ்வுகளுக்குப் பிறகுதான் நான் இதனை புரிந்து கொண்டேன். மனிதர்களுடைய நிலம், பணம், கட்டிடங்கள், மாறுதல்களை ஏற்படுத்தக்கூடிய உயர்ந்த பதவிகள் என இவைகள் கர்த்தர் சந்தோஷப்பட வில்லை. ஆனால் ஒரு இருதயத்தை கண்டுபிடித்து அங்கே தன்னுடைய வீட்டை கட்டுவதற்கு அவருடைய கண்கள் உலகமெங்கும் சுற்றிதிருந்து கொண்டு இருக்கிறது.
எப்பொழுதெல்லாம் யாராவது ஒருவர் தன்னுடைய இருதயத்தை கொடுக்க முன்வந்தால் உடனே கர்த்தர் அதை ஆராய்ந்து அறிகிறார்.
எபி 4:13 - அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
அது நொருங்கிய இதயமா (செய்த பாவங்களுக்காக மனம் வருந்துதல்)
அது தாழ்ந்த ஆவியை கொண்டுள்ளதா
கர்த்தர் ஆராயும் போது இந்த இரண்டு குணங்களையும் கண்டுபிடித்தால் உடனடியாக அதை பரிசுத்தப்படுத்தவும், அங்கு என்றென்றைக்கும் தன்னுடைய நாமத்தை உயர்த்தியும் வைக்கிறார்.
நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும். இதற்குபின் அந்த அந்தஸ்து மாறிவிடுகிறது. அவன் இவ்வாறாக சொல்லத் தொடங்குகின்றான்,
மீக 4:5 - சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகியகர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
ஒரு முறை ஒரு தம்பதியினருக்காக மட்டும் நாங்கள் வெகுதூர பயணம் மேற்கொண்டோம். அந்த கூடுகைக்கு 20 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஒரு கணவன் மற்றும் அவரது மனைவி மட்டுமே வந்திருந்தனர். இந்த பயணத்தை நாங்கள் ரத்து செய்துவிடலாமா என்று கர்த்தரிடம் ஆலோசனை கேட்டபோது, வேண்டாம், தொடருங்கள் என்று கர்த்தர் சொன்னார்.
அநேக அற்புதங்கள் நடந்ததை நாங்கள் கண்டோம். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. எவ்வாறு கர்த்தர் மக்களை தேர்ந்தெடுக்கிறார், எப்படி அவரக்ளுடைய கண்களை திறக்கிறார், எவ்வாறு மனிதர்களுடைய இருதயங்களை தன்னுடை வாசஸ்தலமாக மாற்றுகிறார்… எல்லாமே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இது புதிய துவக்கமாக இருக்கிறது !!
எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
(லூக் 21:20).
எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். (லூக் 21:20). நாம் கிருபையின் யுகத்தின் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.
சகரியா கூறுகிறார், “எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.” (சக 14:2,3).
பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர்இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
(சங் 125:2).
எதிரியின் படை எருசலேமிற்கு எதிராக போரிட அதனை சுற்றி வளைத்துக்கொண்டு யுத்தம் செய்ய தயாராக இருந்தார்கள், எருசலேமின் அழிவு மிக அருகாமையில் இருந்தாலும், சேனைகளின் கர்த்தர் அவர்களை சூழ்ந்து கொண்டிருந்தார். கர்த்தர் தன்னுடைய மக்களை ஒருபோதும் கைவிட மாட்டார். ஒரு வலிமை மிக்க போர்வீரனாக கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் செய்வார்.
சில வருடங்களுக்கு முன் திருச்சியில் நற்செய்தியை அறிவிக்கவும், செவிலிய மாணவிகளுக்கு ஆராதனை வகுப்பு நடத்தவும் நான் தயாராகி கொண்டிருந்தேன். பைபிள் இன் சில பிரதிகளை கையில் எடுத்துக் கொண்டு நான் படிகளில் கீழே இறங்கினேன். திடீரென்று யாரோ என்னை கீழே தள்ளுவதுப் போல நான் உணர்ந்தேன். எனக்குத் தெரியாமல் நான் படியிலிருந்து தலை கீழாக விழுந்தேன்.
நான் கண் விழுத்து பார்த்தபோது, ஒரு மிகவும் அழகிய காட்சியை கண்டேன். என் கையிலிருந்து கீழே விழுந்த பைபிள்கள் படிகட்டின் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொன்றாகப் பகிகளில் வைக்கப்பட்டிருந்தன. யாரோ என் தலையைப் பிடித்துத் தூக்க்கிச் செல்வது போல் உணர்ந்தேன். என் உடலிலோ என் எலும்புகலிலோ ஒரு காயம் கூட இல்லை. உண்மையில் தலையில் காயம் அல்லது பல எலும்பு முறிவுகள் ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தன. என் உயிரைக் காப்பாற்ற என்னைப் பாதுகாக்க தேவதூதர்களை அனுப்பியவர் தேவன்.
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின்நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது,கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.(எசா 59:19). அன்புமிக்க ஜேப வீரர்களே, உங்களைச் சுற்று உங்களோடு போராடிக்கொண்டிருக்கும் எதிரிகளை நினைத்து கவலைப் பட வேண்டும். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். (சங் 34:7).
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். (மத் 24:6-8).
இன்று நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் பஞ்சம், போர், பூமி அதிர்ச்சி போன்றவைகள் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக விரைவில் வர இருக்கிறதை அறிவிக்கின்றன. அன்பு ஜெப வீரர்களே, உங்களுடைய சாட்சி என்னும் விளக்குகள் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தின் எண்ணெயுடனும், மணமகனை சந்திக்க நீங்கள் தயாரா? ராஜாதி ராஜாவை சந்திக்க நம்மை தயார் செய்து கொண்டு, பிறரையும் தயார் செய்வோமா?.
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, சேனைகளின் கர்த்தராக எங்களை சூழ்ந்துகொண்டு எங்களை பாதுகாப்பதற்காக நன்றி செலுத்துகிறோம். வேதத்தில் உள்ள தீர்க்க தரிசன வசனங்கள் மூலமாகவும், எங்களைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் காரியங்களையும் கண்டு, உலகின் கடைசி நாட்களில் வந்து நிற்கிறோம் என்பதை அறிகிறோம் மேலும் மணவாட்டியை சந்திக்க கதவண்டையில் நீர் நிற்கிறீர் என்பதையும் நாங்கள் அறிவோம். உம்முடைய இரண்டாம் வருகைக்கு எங்களை தயார்படுத்தும், ஆயிரகணக்காண மக்களை தயார் செய்து மேகத்தின் நடுவில் உம்மை சந்திக்க வருமாறு செய்ய எங்களை அபிஷேகியும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.!
என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்;
மத் 10:22
கிறிஸ்தவர்களின் வாழ்க்கை பூக்கள் நிறைந்த பாதை அல்ல மாறாக முட்கள் நிறைந்தது. கிறிஸ்தவர்கள் வாழ்க்கை துன்பங்கள், அவமானங்கள், மேலும் உபத்திரவங்களால் நிறைந்துள்ளன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனம் இதைத்தான் எனக்கு நினைப்பூட்டுகிறது. உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். (யாகோபு 4:4)
நாம் உலகத்தையும் கர்த்தரையும் ஒன்றாக அன்பு செய்ய முடியாது. ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. (1யோவா 2:15).
நாம் இரண்டு எஜமான்களுக்கு – செல்வம் மற்றும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியாது.
கர்த்தருடைய அன்பிலும் ஐக்கியத்திலும் தொடர்ந்து இருக்க, இவ்வுலகின் நமது பல் செயல்களின் மீது போதுமான கட்டுப்பாட்டை கொண்டிருப்பது அவசியமாகும். பணத்தை அன்பு செய்வதன் மூலம் நாம் இயேசுவை அன்பு செய்ய முடியாது. மனிதர்களுக்கு முன்னிரிமை கொடுப்பதால் கர்த்தருக்கு முதலிடம் கொடுக்க இயலாது. நாம் கர்த்தருக்கு முதலிடம் கொடுக்கும்போது நம்முடைய உறவினர்கள், கணவன், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என அனைவரும் நம்மை வெறுப்பார்கள். கர்த்தருக்கு முதலிடம் கொடுப்பதால் நாம் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற முடியாது எனவே நம்மை வெறுப்பார்கள்.
எபி 12:2 சொல்லியிருப்பது போல சிலுவையின் எல்லா துன்பங்களையும் அவர் சகித்துக்கொண்டார்.
அதேபோல நாம் கர்த்தரோடு என்றென்றும் இருக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி நமக்கு முன் வைக்கப்பட்டுள்ளது. எனவே இயேசுவின் பெயரால் நாம் துயரங்களை சகிப்போம்.
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள், (1பேது 4:14)..
நான் தமிழ்நாட்டில் இருக்கும் திருச்சி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். 25 ஆண்டுகளாக நான் ஒரு நிறுவன சபையில் உறுப்பினராக இருந்துவருகிறேன். ஜூம் வழியே 2020 இல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு இருந்த நாட்களில் நடத்தப்பட்ட அனைத்து வரங்களின் பயிற்சி பள்ளிகளிலும் நான் பங்கு கொண்டேன் மேலும் இயேசுவின் படை அணியால் நடத்தப்பட்ட அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்றேன். இதன் மூலமாக கர்த்தர் யார் மற்றும் அவரை அறிந்து கொள்ள எனக்கு கிருபை வழங்கப்பட்டது. கர்த்தரை தெரிந்து கொள்வது, கர்த்தரைப் பற்றி தெரிந்துகொள்வது இரண்டிலும் வித்தியாசம் உள்ளது.
நிறுவன சபையில் இருந்த பொழுது நான் அமைதியாகவே இருந்தேன் ஆனால் இங்கே கர்த்தருடைய கிருபையால் மூன்று அணி சபைகளை என்னால் நடத்த முடிந்தது. என்னுடைய பலவீனத்திற்கும் மத்தியில் நான் காலை ஆராதனையில் விடாது தொடர்ந்து பங்கு கொள்கிறேன். என்னுடைய குடும்ப சூழ்நிலை சாதகமாக இல்லாவிட்டாலும் என்னால் முடிந்ததை நான் கர்த்தருக்கு செய்து கொண்டு வருகிறேன். அநேக வேளைகளில் என் தேவன் என்னை வழி நடத்துவதை நான் அறிந்திருக்கிறேன். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.
இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
லூக் 21:12.
சீடர்கள் நற்செய்தியை அறிவிப்பதால் அவர்களுக்கு ஏற்படபோகும் துன்புறுத்தல்களைப் பற்றி இயேசு இங்கு தீர்கதரிசனம் உரைக்கிறார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் கூட அவர் எப்படி கேலி செய்யப்பட்டார், சவுக்கால் அடிக்கப்பட்டார், முகத்தில் அடிக்கப்பட்டார், அவர் முகத்தில் எச்சில் துப்பினர், யூதர்களின் கவுன்சில் முன் கொண்டுவரப்பட்டார், பிலாத்து முன்னும், ஏரோது முன்பும் நின்றார், இறுதியாக சிலுவையில் அறையப்பட்டார்,
பவுலும் தான் எப்படி உபத்திரவங்களை அனுபவித்தார் என்பதை சொல்கிறார். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். (2கொரி 11:24,25).
பவுல் ரோமாபுரியில் சிறைச்சேதம் செய்யப்பட்டார்.
இயேசுகிறிஸ்துவின் சீடர்களும் பல் வேறு உபத்திரவங்களை கடந்து சென்றனர், அரசர்களுகு முன்பாக நின்று சாட்சி கொடுத்தனர், சென்ற இடமெல்லாம் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தனர், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கினர், மேலும் வியாதியஸ்தர்களை சுகமாக்கினர்.
மலை பிரசங்கத்தில் கூட உபத்திரவத்தைப் பற்றி இயேசு என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
மத் 5:10-12
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் பல்வேறு நிலைகளில் உபத்திரவத்தை எதிர்கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளுக்காக வலுவாக நின்றதன் காரணமாக மக்கள் என்னப்பற்றி தவறாகப் பேசியிருக்கிறார்கள்.
இவைகளை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது தெரியுமா? சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; மத் 5:12..
மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். (1பேது 3:8,9)
அப்போஸ்தலர் பவுல் 5:23 இல், சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. இதுதான் பரிசுத்தமாக்கப்படுதல். பூரணமான, முழுமையான, தூய்மையான, பரிசுத்தமான மேலும் குற்றமில்லாமல் ஆக்குதல்தான் பரிசுத்தம் ஆக்கப்படுவது. சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தினால் விசுவாசத்தின் மூலம் அவர் நம்மை பரிசுத்தமாக்கினார். அதன்பின் பரிசுத்த ஆவியை அனுப்பி பரிசுத்தமாக்குதலின் வேலையை தொடர்ந்தார். வார்த்தை என்னும் தண்ணீரில் நாம் மூழ்கவேண்டும், தண்ணீர் நம்மை உள்புறமாக சுத்தம் செய்யும். பின் அமைதி மற்றும் கிருபையை நம்மால் உணர முடியும்.
வேதத்தில் நாம் கற்ப்பதை வாழ்வில் பயன்படுத்த வேண்டும். நம்முடைய உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் முழுமையாக்கப்பட வேண்டும், இச்சையிலிருந்து கண்கள் காக்கப்பட வேண்டும், நம்முடைய வாய் மற்றும் நாவு பரிசுத்தமாக்கப் பட்டால் நம்முடைய பேச்சு மற்றவர்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.பொய், புறம் பேசுதல், அசுத்தமான வார்த்தைகளை பயன்படுத்தல் போன்றவற்றை கேட்பதிலிருந்து நம்முடைய காதுகள் தடைசெய்யப்பட வேண்டும்..எது நல்லது, உன்னதமானது, தூய்மையானது, ஆரோக்கியமானது, கர்த்தருக்கு பிரியமானது என்பவைகளின் மூலமாக நம்முடைய மனம் தூய்மையாக்கப்பட வேண்டும். கர்த்தருக்கு பிரியமானதை மட்டுமே கரங்கள் செய்ய வேண்டும், கர்த்தர் அனுமதிக்கும் இடங்களுக்கு மட்டுமே கால்கள் செல்ல வேண்டும். கர்த்தருடைய வார்த்தை நமக்கு என்ன சொல்லி கொடுகிறதோ அதற்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்.
நம்முடைய எண்ணங்கள், இலக்குகள் மற்றும் முன்னுரிமைகள் கர்த்தருக்கு பிரியமாக இருக்க வேண்டும்.
அப்போஸ்தலரான பவுல் நான்கு வார்த்தைகள் மூலமாக கர்த்தரில் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
நாம் கவலைப் பட தேவையில்லை
அவர் அதைச் செய்வார்
அவர் நம்மை காப்பாற்றுவார்
அவருடைய வாக்குறுதிகளில் தியானம் செய்து சந்தேகம் இல்லாத மனமாக மாற்ற வேண்டும்.
நம்முடைய ஜெபங்கள் வீண்போவதில்லை, அவருடைய நேரத்தில் அதற்கு பதில் அளிப்பார்.
ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன்,
என்னுடைய மகனுடைய திருமணத்திற்குபின் குழந்தை பெறுவதற்கு 10 ஆண்டுகள் காத்திருந்தார்கள். கர்த்தர் நிச்சயம் நமக்குகொடுப்பார் என்ற நம்பிக்கையில் பிறக்கும் அமைதியும் விசுவாசமும் என்னில் இருந்தது. ஒன்பதாவது வருடம் கர்த்தர் எனக்கு ஒரு வாக்குதத்ததைகொடுத்தார், சங் 128:6 – நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பாய்’. அதற்கு பின் விசுவாசத்தோடு நான் அனைவருக்கும் சொன்னேன், கர்த்தரின் வாக்குறுதிபடி நமக்கு ஒரு பிள்ளையை கொடுப்பார் என்று. அதை கர்த்தர் நிறைவேற்றவும் செய்தார். “அவர் செய்து முடிப்பார்” என்னும் கர்த்தருடைய வார்த்தையில் விசுவாசம் வையுங்கள், அவருடைய நேரத்தில் அதை நிறைவேற்றுவார். அவருடைய வாக்குறுதிகளில் முழுமையாக நம்பிக்கை வைத்து கலங்கமற்றவர்களாகவும், விசுவாசத்தோடும் இருக்க வேண்டும். இரண்டு படகுகளில் நாம் பயணம் செய்யக்கூடாது, அலை அடிக்கும்போது படகு விலகும் நாம் மூழ்கிபோவோம். லூக் 16:9-13 – இரண்டு எஜமானகளுக்கு நம்மால் ஊழியம் செய்ய இயலாது, – தேவனுக்கும், உலக பொருட்களுக்கும் நம்மால் ஊழியம் செய்ய முடியாது. நம் கையில் இருப்பதை நம்முடைய தேவைக்கும், ஏழைகளுக்கு கொடுக்கவும் கர்த்தர் பெருகச்செய்வார், நம்முடைய உடலின் தேவைகள் மட்டுமல்லாது நம்முடைய ஆன்மீக தாகத்தையும் அவருடைய வார்த்தையால் அவர் திருப்திப் படுத்துவார்.
பரலோக பிதாவே, எங்களை ஆராய்ந்து பார்க்க உதவி செய்யும், வாழ்வின் எல்லா பகுதிகளையும் ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாக்கும். எங்களுடைய ஜெபத்தை கேட்டு அதற்கு பதில் தருவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமேன்.
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.
லூக் 21:10
இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அவரிடம் உலகின் முடிவு மற்றும் அவருடைய வருகையின் அடையாளம் என்ன என்று கேட்டனர். இயேசு பல் வேறு அடையாளங்களை அவர்களுக்குச் சொன்னார், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யம் எழும்பும் என்பது ஓர் அடையாளமாகும். வருங்காலத்தைப் பற்றி கர்த்தர் வேதத்தில் அநேக இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது அவர் எவ்வளவு நல்லவர் என்பதை காட்டுகிறது.
பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏசா 42:9
கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் ஒரே புத்தகம் பைபிள். வேதத்தின்படி இரண்டு ராஜ்யங்கள் உலகில் இருக்கின்றன.
கர்த்தருடைய ராஜ்யம் அல்லது ஒளியின் ராஜ்யம் மற்றும் சாத்தானின் ராஜ்யம்
அல்லது இருளின் ராஜ்யம்.
கடைசி காலங்களில் அந்தகாரம் அதிகரிக்கும். இன்று பாவம் நம்முடைய விரல் நுனியில் கிடைக்கிறது என்பதை நன்கு அறிவோம்.
இன்றைய உலகம் மேல் சொன்னதுபோலத்தான் இருக்கிறது. நாம் கடைசி காலங்களில் இருக்கிறோம். அந்தகாரத்தின் ராஜ்யம் நமக்கு எதிராக எழும்ப போகிறது.
என்னுடை வாழ்வில் ஒரு முறை நான் அந்தகாரத்தால் மூடப்பட்டேன். நான் மன சோர்வடைந்தேன். என்னுடை அன்றாட வாழ்வின் கடைமைகளை கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. என்னால் சரியாக தூங்க இயலவில்லை. விசுவாசிகளுடைய விசுவாசமுள்ள ஜெபத்தால் மன உளைச்சளில் இருந்து வெளியே வர இயேசு எனக்கு உதவி செய்தார்.
நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.(ரோம 12:21)
ஜெயம்கொள்பவர்களுக்கு பரிசு உண்டு. எனவே நாம் வெல்லுவதற்கு முயற்சி செய்வோம்.
ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். (லூக் 21:36).
உபத்திர்வங்களிலிருந்து தப்புவதற்கான ஒரு வழியை இயேசு நமக்கு கொடுத்திருக்கிறார். அந்தகாரத்தை மேற்கொண்டு வெற்றியாளார்களாக, ஜீவ கிரிடத்தைபெற இயேசுவே எங்களுக்கு உதவி செய்யும்.
அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்.
(1சாமு 30:19).
சவுலுக்கு பயந்து தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள தாவீது காத் பட்டணத்திற்கு சென்று ஒளிந்து கொண்டிருக்கையில், அவனுடைய எதிரிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவனிடம் இருந்த எல்லா வற்றையும் சூரையாடினார்கள். தாவீது அவர்களுடைய (காத்) இராணுவத்தோடு தங்க அனுமதிக்கப்பட வில்லை. அவன் அங்கிருந்து திரும்பி வந்தபோது தன்னுடைய மனைவிகள், பிள்ளைகள் மற்றும் அவனுடைய அனைத்து பொருட்களும் அமலேக்கியர்களால் கொள்ளையிடப்பட்டதை கண்டான். தாவீதும் அவனது கூட்டாளிகளும் அழுவதற்கு கண்ணீர் வற்றிப்போகும் மட்டும் அழுதனர்.
ஆனால் தாவீது தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். 1சாமு 30:6
தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.
1சாமு 30:8.
கர்த்தரிடமிருந்து பதில் பெற்றபின் தாவீது தன்னுடைய உடைமைகளை சூரையாடிய எதிரிகளை பின் தொடர்ந்தான், அவர்களோடு யுத்தம் செய்ய. அவன் இழந்த அனைத்தையும் திரும்ப பெற்றான்.. சிறியவற்றிலிருந்து பெரியவை வரை தன்னுடைய மகன்கள் மற்றும் மகள்கள் என எதிரி எடுத்துச் சென்ற அனைத்தையும் திரும்ப பெற்றான்.
கர்த்தருடைய பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே செல்லாதீர்கள். முக்கியமாக யுத்த நேரத்தில்.
எதிரியின் கண்கள் உங்கள்மீது இருக்கும். நீங்கள் ஜாக்கிரதையாக இராவிட்டால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் அவன் திருடிக்கொள்வான். யுத்த களத்தில் நிற்கும் நீங்கள் உங்களுடைய குடும்பம், குழந்தைகள், வேலைத்தளம் மற்றும் உங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் எதிரி கைவைக்காதபடிக்கு நீங்கள் பாதுகாக்க வேண்டும்.
தாவீது ‘காத்’க்கு செல்வதைப் பற்றி கர்த்தரிடம் ஆலோசிக்காமல் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே சென்றான். எதிரி உடனே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான். நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகள் ஆதலால் எல்லா திசையிலிமிருந்து கர்த்தர் உங்களை பாதுகாக்கிறார். நீங்களும் உங்களுடைய குடும்பமும் பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறீர்கள். எதைப்பற்றியும் பயப்பட தேவை இல்லை. தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் 2திமோ 2:4. எதிரி உங்களிடமிருந்து எதையாவது திருடிவிட்டானா? கர்த்தருக்காக யுத்தம் செய்யவும், அவருக்கு ஊழியம் செய்யும் சுதந்தரம்?
பேய்களை ஓட்டவும், நோய்களை சுகமாக்கவும் கர்த்தர் உங்களுக்குகொடுத்திருக்கும் அதிகாரம்? உங்களுடைய குழந்தைகள், அவர்களுடைய படிப்பு, அவர்களின் எதிர்காலம்? அவர்களுடைய திருமண வாழ்க்கை? அவர்களின் குடும்பத்தின் சந்தோஷம், அமைதி மற்றும் இரட்ச்சிப்பு? நம்முடைய அடிப்படை அதிகாரமான நற்செய்தியை அறிவிப்பது, மற்றும் கற்றுக்கொடுப்பது? உங்களிடமிருக்கும் நம்பிக்கை? இயேசு கிறிஸ்துவில் உங்களுடைய விசுவாசம்? நீங்கள் இழந்தவற்றிற்காக அழுதுகொண்டு, உடைந்து போய் இருக்கீற்களா? கவலை வேண்டாம். எழுந்திருங்கள். கர்த்தர் உங்களுக்கு பச்சை கொடி காட்டுகிறார். உங்களுடைய எதிரியை நீங்கள் மேற்கொள்ளலாம். நம்முடைய தேசத்தை சூரையாடிக்கொண்டிருக்கிற எதிரியை நாம் அவன் மீண்டும் எப்பொழுதுமே இந்த தேசத்திற்குள் வராதபடிக்கு துரத்துவோம். கர்த்தரில் நாம் பலப்படுவோம். எதிரியோடு யுத்தம் செய்வோம், இழந்த அனைத்தையும் திரும்ப பெறுவோம்.
கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.
சங்கீ 34:22
கர்த்தரை சேவித்து அவருக்கு ஊழியம் செய்பவர்கள் மீது குற்றஞ்சுமராது.
அவர்கள் பாவம் செய்தாலும் கர்த்தர் அவர்களை மன்னித்துவிடுவார், புத்தகத்தில்லிருந்து அழித்தப்போடுவார். ஆதிஆகமத்தில் நாம் இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை பார்க்கிறோம்.
அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான். தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார். அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ? இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான். அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை. அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தா ர்கள்
ஆதி 20:2-8
அபிமெலேக்கு கர்த்தருக்கு பயந்தவனாய் இருந்ததால், அபிரகாமின் மனைவியாகிய சாராளை தொட அவனை கர்த்தர் அனுமதிக்க வில்லை. கணவிலே கர்த்தர் தோன்றி அபிமெலேக்கிடம் சொன்னார், அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார். 20:7
மற்றவனுடைய மனைவியை எடுத்துக்கொண்டதற்கு தண்டனை மரணம். ஒரு மனிதனின் மரணம் அல்ல அவனோடு இருக்கும் அனைத்த்ம் சேர்ந்து மரிக்க வேண்டும்; ஒரு தலைவனாக இருந்து தவறு செய்ய நேர்ந்தால், அவனுடைய மக்கள், வேலையாட்கள், வியாபாரம், பணியிடம், தொடர்புகள், கட்சி, வளர்ச்சி, நற்பெயர், எந்த துறையிலும் அவர் செய்த முன்னேற்றம், சொத்துக்கள், மரம், பயிர்கள் என அனைத்தும், ஆறுகள், தாவரங்கள் அனைத்தும் மரணத்திற்கு உள்ளாகின்றன. ஆனால் பாவத்தை ஏற்றுக்கொண்டு கர்த்தருக்கு முன்பாக பாவ அறிக்கை செய்தால் அதை அவர் மன்னித்து இழந்த எல்லாவற்றையும் மீண்டும் கொடுப்பார்.
ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின்நிமித்தம் கர்த்தர்அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால், ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார். ஆதி 20:17,18. அபிமெலுக்கு தன்னுடைய குற்றங்களை கர்த்தரிடம் மட்டுமல்லாது, தன்னுடைய வேலையாட்களிடமும் சொன்னான். அவர்கள் அனைவரும் மரித்துபோவார்கள் என்பதால் மிகவும் பயந்தார்கள். கர்த்தராகிய ஆண்டவரை அறியாவிட்டாலும் அபிமெலேக்கை நாம் நேர்மையான ராஜாவாகவே பார்கிறோம். எரேமியாவின் புஸ்தகத்தில் கர்த்தர் தன்னுடைய மக்களாகிய இஸ்ரவேலை குற்றம் சுமத்துகிறார்.
செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள். கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ் சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள். ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர்சொல்லுகிறார். எரே 2:7-9 பாவம் செய்தவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பேரக்குழந்தைகள் கூட குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாக காணப்பட்டனர், ஏனென்றால் அவர்கள் ஒருபோதும் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்ளவில்லை அல்லது மனந்திரும்பவில்லை.
நேரம் ஒதுக்கி, உங்களுடைய மக்கள் மற்றும் தொகுதி மக்களின் விபச்சாரத்தின் பாவங்களை ஒப்புக்கொண்டு . கர்த்தரிடம் அறிக்கையிடுங்கள். உங்களுடைய குடும்பத்தில், வேலை செய்யும் இடத்தில், தெருவில், அரசாங்கத்தில், லோக்சபா, ராஜ்யசபா, நீதித்துறை, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், சுற்றுலாதளங்கள், மத மையங்கள், தேவாலயங்கள் போன்றவற்றில் மரணம் உள்ளதா? ஒப்புக்கொள்வதன் மூலமும், பாவங்களை அறிக்கையிடுவதன் மூலமும் நாம் அனைத்தையும் மீட்டெடுக்க முடியும்.
“உருவாகு உருவாக்கு” பயிற்சிக்கு அநேக மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேண்டும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தேன். அதே நாளில் ஒரு சகோதரன் என்னை அழைத்தான். “ ஜனவரி மாத ‘எழுச்சிகுரல்’ என்னும் மாத பத்திரிக்கையைப் படித்தேன், கர்த்தர் 2021 ஆம் ஆண்டில் இயேசுவின் படை அணி மூலம் செய்த அனைத்து காரியங்களையும் கண்டு வியப்படைந்தேன். கடந்த சில ஆண்டுகளாக இயேசுவின் படை அணியோடு சேராததற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.” என்றார். நிழல் சட்டமன்ற உறுப்பினராக இருக்க அவர் முன்வந்தார். அடுத்தவாரமே அவர் மூலம் நான்கு பேர் சேர்க்கப்பட்டனர். ஒருவர் இயேசுவின் படை அணிக்கு முற்றிலும் புதியவர். உருவாகு உருவாக்கு பயிற்சியில் பங்குகொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தார். சகோதரனை மீண்டும் கொண்டுவந்ததற்காக கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்.
அன்பின் பரலோக பிதாவே, அலட்சியம், மந்தம் , ஆன்மீக சோம்பல் மற்றும் ஆன்மீக தூக்கம் அகியவற்றின் கரணமாக கடந்த ஆண்டுகளில் சாத்தானால் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்க AOJ வீரர்களுக்கு உதவும், எங்களை மன்னியும். ஆமேன்.
அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
லூக் 21:6
யெருசலேம் தேவாலயத்தின் அழிவைப் பற்றி இயேசு கிறிஸ்து சொன்ன தீர்க்கதரிசனம் கி.பி. 70 இல் நிறைவேறியது.
மத் 24:2 இல் இயேசு சொன்னது போல இப்படிப்பட்ட ஒரு அழிவு ஏன் வந்தது? இவ்வுலகின் அதிசயங்களும், சந்தோஷங்களும் ஒழிந்து போகும். அப்போஸ்தலர்கள் யெருசலேம் தேவாலயத்தின் அழகைப்பற்றி பேசுகையில் இயேசு இதைச் சொன்னார்.
அவர் இந்த உலகை நியாயம் தீர்க்க வரும்போது, துன்பத்திலும் சிறையிருப்பிலும் இருக்கும் தங்களுடைய மக்களை அவர் விடுவிப்பார். கர்த்தருடைய நீதி தீர்ப்பு யூதர்கள் மீது வந்தது, பாவங்கள் தண்டிக்கப்படாமல் போகாது என்பதை சுட்டிக்காட்ட அவர்களுடைய நகரமானது நமக்கு உதாரணமாக வைக்கப்பட்டுள்ளது.
கர்த்தருடைய கோபம் யெருசலேம் தேவாலயத்தின் மீது வந்தது போல, , பாவிகளுக்கு எதிரான அவருடைய எச்சரிக்கையும் நிச்சயமாக நிறைவேறும். மிக அழகான இந்த மனித உடல் விரைவில் புழுக்களுக்கு இறையாகும். மிக பிரமாண்டமான கட்டிடம் ஒரு பாழடைந்த குவியல் போல் மாறும், இதையெல்லாம் பார்க்கவில்லையா? ரோம் பேரரசர் டைட்டஸ் ரோமாபுரியின் பெரிய மன்னனாக இருந்தான். நீங்கள் நகரத்திற்குள் பிரவேசிக்கும் போது, யெருசலேம் தேவாலயத்தை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று அவன் தன்னுடைய வீரர்களுக்கு கட்டளையிட்டான். ஆனால் வீரர்களும் அவர்களுடைய படை தளபதியும் ஆவேசத்துடன் சென்று, கர்த்தர் சொன்னபடியே ஒரு கல் மேல் இன்னொரு கல் இராதபடி செய்தனர்.
மீக 3:12 – சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம். பாவிகளின் கவர்ச்சிமிக்க செழிப்பை கண்டு உற்சாகம் அடைகிறோம் ஆனால் யெருசலேம் தேவாலயத்திற்கு நிகழ்ந்தது என்ன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகில் வலிமையான இடம் என்று ஒன்று இல்லை.
எல்லாம்வல்ல தேவனே அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார், எதையும் நொடிபொழுதில் அழிக்க வல்லவராய் இருக்கிறார். திருடர்களின் குகைகளான அற்புதமான ஜெப ஆலயங்களை எவ்வளவு குறைவாக தேவன் மதிப்பிடுகிறார் என்பதை நாம் கவனிக்கலாம். நோடர்-டேமின் பழமைவாய்ந்த தேவாலயம் தீ பிடித்து முற்றிலும் அழிந்தது. பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற 850 ஆண்டுகள் பழமையான ஒரு பெரிய தேவாலயம், ரோமன் கத்தோலிக்க சிலை வழிபாட்டிற்கு பெயர்போன அந்த தேவாலயம் ஏப்ரல் 15, 2019 அன்று முற்றிலுமாக அழிக்கப்பட்டது. கர்த்தருடைய சித்தம் இந்த பூமியில் நிறைவேறும் என்பதை இது உறுதிபடுத்துகிறது. அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், தன்னுடைய திட்டத்தின்படி அவருடைய நேரத்தில் அனைத்தையும் செய்து முடிப்பார்.
ஜெபம்
அன்பின் பரலோக பிதாவே, உலக பொருடகள், பதவி, பரிசுகள் மற்றும் பணத்தின் மீது ஒரு போதும் சார்ந்திருக்கச் செய்யாதேயும். பிதாவே நாங்கள் உம்மைத்தான் சார்ந்திருக்க விரும்புகிறோம், ஒளியில் நடக்க உம்முடைய கிருபை தாரும். உம்மோடு நெருங்கி இருக்க எங்களுக்கு கற்றுத்தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதவே. ஆமேன்.