அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
லூக் 21:6
யெருசலேம் தேவாலயத்தின் அழிவைப் பற்றி இயேசு கிறிஸ்து சொன்ன தீர்க்கதரிசனம் கி.பி. 70 இல் நிறைவேறியது.
மத் 24:2 இல் இயேசு சொன்னது போல இப்படிப்பட்ட ஒரு அழிவு ஏன் வந்தது?
இவ்வுலகின் அதிசயங்களும், சந்தோஷங்களும் ஒழிந்து போகும்.
அப்போஸ்தலர்கள் யெருசலேம் தேவாலயத்தின் அழகைப்பற்றி பேசுகையில் இயேசு இதைச் சொன்னார்.
அவர் இந்த உலகை நியாயம் தீர்க்க வரும்போது, துன்பத்திலும் சிறையிருப்பிலும் இருக்கும் தங்களுடைய மக்களை அவர் விடுவிப்பார். கர்த்தருடைய நீதி தீர்ப்பு யூதர்கள் மீது வந்தது, பாவங்கள் தண்டிக்கப்படாமல் போகாது என்பதை சுட்டிக்காட்ட அவர்களுடைய நகரமானது நமக்கு உதாரணமாக வைக்கப்பட்டுள்ளது.
கர்த்தருடைய கோபம் யெருசலேம் தேவாலயத்தின் மீது வந்தது போல, , பாவிகளுக்கு எதிரான அவருடைய எச்சரிக்கையும் நிச்சயமாக நிறைவேறும்.
மிக அழகான இந்த மனித உடல் விரைவில் புழுக்களுக்கு இறையாகும். மிக பிரமாண்டமான கட்டிடம் ஒரு பாழடைந்த குவியல் போல் மாறும், இதையெல்லாம் பார்க்கவில்லையா?
ரோம் பேரரசர் டைட்டஸ் ரோமாபுரியின் பெரிய மன்னனாக இருந்தான். நீங்கள் நகரத்திற்குள் பிரவேசிக்கும் போது, யெருசலேம் தேவாலயத்தை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று அவன் தன்னுடைய வீரர்களுக்கு கட்டளையிட்டான். ஆனால் வீரர்களும் அவர்களுடைய படை தளபதியும் ஆவேசத்துடன் சென்று, கர்த்தர் சொன்னபடியே ஒரு கல் மேல் இன்னொரு கல் இராதபடி செய்தனர்.
மீக 3:12 – சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்.
பாவிகளின் கவர்ச்சிமிக்க செழிப்பை கண்டு உற்சாகம் அடைகிறோம் ஆனால் யெருசலேம் தேவாலயத்திற்கு நிகழ்ந்தது என்ன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகில் வலிமையான இடம் என்று ஒன்று இல்லை.
எல்லாம்வல்ல தேவனே அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார், எதையும் நொடிபொழுதில் அழிக்க வல்லவராய் இருக்கிறார்.
திருடர்களின் குகைகளான அற்புதமான ஜெப ஆலயங்களை எவ்வளவு குறைவாக தேவன் மதிப்பிடுகிறார் என்பதை நாம் கவனிக்கலாம்.
நோடர்-டேமின் பழமைவாய்ந்த தேவாலயம் தீ பிடித்து முற்றிலும் அழிந்தது. பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற 850 ஆண்டுகள் பழமையான ஒரு பெரிய தேவாலயம், ரோமன் கத்தோலிக்க சிலை வழிபாட்டிற்கு பெயர்போன அந்த தேவாலயம் ஏப்ரல் 15, 2019 அன்று முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
கர்த்தருடைய சித்தம் இந்த பூமியில் நிறைவேறும் என்பதை இது உறுதிபடுத்துகிறது. அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், தன்னுடைய திட்டத்தின்படி அவருடைய நேரத்தில் அனைத்தையும் செய்து முடிப்பார்.
ஜெபம்
அன்பின் பரலோக பிதாவே, உலக பொருடகள், பதவி, பரிசுகள் மற்றும் பணத்தின் மீது ஒரு போதும் சார்ந்திருக்கச் செய்யாதேயும். பிதாவே நாங்கள் உம்மைத்தான் சார்ந்திருக்க விரும்புகிறோம், ஒளியில் நடக்க உம்முடைய கிருபை தாரும். உம்மோடு நெருங்கி இருக்க எங்களுக்கு கற்றுத்தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதவே. ஆமேன்.
Sol. Usha Sonny Aoj
