தானியேல் –
04-03-2022 – தேவ செய்தி

பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.

லூக் 16:1

ஐசுவரியவான் – உலகில் உள்ள

செல்வங்களுக்கும் ஆதாரமாய் இருப்பது தேவன்
உக்கிராணக்காரன் – நீங்களும் நானும்

ஐசுவரியவான் தன்னுடைய சொத்தாகிய ஒரு சிரிய தொகுதியை பாதுகாத்துக்கொள்ள உங்களை ஊழியகாரனாக நியமித்துள்ளான்.
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆஸ்தி என்ன?

னித வளங்கள் – உங்கள் தொகுதியின் நிலப்பரப்பை நீங்கள் கணக்கெடுக்க வேண்டும்.
மக்கள் (பாலின வாரியாக, மத வாரியாக, வயது வாரியாக, மொழி வாரியாக, எழுத்தறிவு வாரியாக) முடிந்தவரை அவர்களை பல குழுக்களாக பிரிக்கலாம்.

யற்கை வளங்கள்: நிலம், நீர், சூரிய ஒளி, தாவரங்கள், கனிமங்கள், மலைகள், காடுகள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் போன்றவை.

லாச்சார வளங்கள்: கலாச்சார பாரம்பரியம். உங்கள் தொகுதியின் வயது என்ன? முன்னோர்களிடமிருந்து நீங்கள் பெற்ற அனைத்தையும் (கோவில்கள், தேவாலயங்கள், பெயராக கூட இருக்கலாம், தொகுதியின் பெயர் என்ன, மக்கள் கொண்டாடு திருவிழாக்கள், அவர்கள் நம்பும் மூட நம்பிக்கைகள், இந்தத தொகுதிக்கு ஏதேனும் சிறப்பு அல்லது புகழ் போன்றவை) பட்டியலை எடுத்துக் கொள்ளுங்கள். இவைகளை எழுதுங்கள்.

ள்கட்டமைப்பு: சாலை, நீர் ஆதாரங்கள், ரயில்வே, துறைமுகங்கள், மின்சார இணையம், நெட்வொர்க் இணைப்புகள், தொழில் வளர்ச்சி, கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு வசதிகள் போன்றவை.

ஆன்மீக நிலை: நீங்கள் மட்டுமே விசுவாசிகளா, அந்தத் தொகுதியில் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்களா, ஆம் என்றால் அவர்கள் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலுக்கு துணைசெல்கிறார்களா அல்லது எதிர்கிறார்களா?
இப்படி ஒரு சர்வே எடுக்கலாம். இந்த அனைத்து வளங்களும் நீங்கள் தொகுதிக்கு பொறுப்பேற்ற நாளில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இயேசு தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் பூமியில் உள்ள சாத்தானின் சக்தியை தோற்கடித்து பூமியை வெற்றியுடன் கைப்பற்றினார். அதை தம்முடைய நம்பகமான ஊழியர்களிடம் ஒப்படைத்துவிட்டு தன் தந்தையிடம் சென்றார்.
பூமி ழுமுவதும் பிர்க்கப்பட்டுள்ளது
கண்டங்கள்
நாடுகள்

மாநிலங்கள்/மாகாணங்கள்/தாலுகாக்கள்
தொகுதிகள், கிராமங்கள், வார்டுகள், தெருக்கள் போன்றவை.
மத் 13:34-36 – ஒரு மனிதன் வெளியில் செல்வதற்கு முன் தன்னுடைய ஊழிகாரர்களுக்கு அதிகாரத்தை கொடுத்துச் சென்றான், ஒவ்வொருவனுடைய வேலை என்ன என்றும், காவல்காரனை பார்த்துக்கொள்ளும்படியாகவும் சொல்லிவிட்டுச் சென்றான். வீட்டு எஜமானன் எப்பொழுதுவருவான் என்று வீட்டு வேலைகாரனுக்கு தெரியாது, மாலை, நள்ளிரவு, கோழி கூவும் நேரம் அல்லது இன்னும் காலை; எஜமானன் திடீர் என வருவார், நீங்கள் தூங்கி கொண்டிருப்பதை பார்ப்பார்.


லூக் 16:1 இருக்கும் செல்வந்தனும் , மாற்கு 13:34 இல் இருக்கும் ‘மனிதனும் இயேசு கிறிஸ்துதான். தன்னுடைய ஊழியர்களுக்கு அவர் அதிகாரத்தை தந்திருக்கிறார். இரண்டு வசனங்களிலும் இருக்கும் ஊழியகாரனும், உக்கிரானகாரனும் ஒன்றுதான். எஜமானனிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்றிப்பது நீங்களும் நானும்தான்.


நாம் எப்பதை அதை சமாளிக்கப்போகிறோம்?
அவருடைய வளங்களை வீண்டிப்பதாக பரலோக நீதிமன்றத்தில் தூதர்கள் உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்களா? கர்த்தருடைய ராஜ்யத்தை கட்டியெழுப்ப நீங்கள் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துகிறீர்களா?

Sr. Leema Rose AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *