தானியேல் –II 03.03.2022 – தேவ செய்தி

கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும். அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.
ஏசாயா 49:9,10

எனக்கு இரட்சிப்பு கிடைத்தபிறகும், பாவங்களுக்கு பரிகாரம் செய்தல், தவகாரியங்கள் செய்தல் போன்றவற்றின் மூலமாக என்னுடைய இரட்சிப்புக்காக நான் உழைக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் நெடுநாள் வாழ்ந்தேன். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், என்னுடைய கிரியைகளின் மூலம் கர்த்தரை பிரியப்படுத்தி என்னை தகுதிபடுத்த வேண்டும் என்று நினைத்தேன். அது எவ்வளவு தவறானது என்பதை கர்த்தர் எனக்கு கட்டினார்

தன்னுடைய மரணம் மற்றும் உயிர்ப்பின் மூலமாக இயேசு கிறிஸ்து நமது இரட்சிப்பை முழுமையாக்கி விட்டார். அதனுடன் கூட்டுவதற்கு ஒன்றும் இல்லை.


நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், “அவரையே நோக்கி பார்ப்பது, மேலும் அவரில் விசுவாசம் வைப்பது.”


அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங்கீ 34:5.
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவா: 3:14,15


அனைவரும் காண்பதற்காக, இந்த பூமியில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லா நாமங்களுக்கும் மேலாக, இயேசு கிறிஸ்துவை, பிதாவாகிய தேவன் உயரத்தினார்.


அவரை நோக்கி பார்பவர்கள் பிரகாசமடைந்து அவரின் முக ஒளியை பிரகாசிப்பார்கள்.
அனைத்து சிறையிறுப்பிலுருந்தும் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.
சாவு மற்றும் நித்திய நரகத்தின் கைதிகளாக, ஆதாமின் சந்ததிகளாகிய நாம் பிறந்துள்ளோம்.

ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். எபி 2:15.


பல விசுவாசிகள் இரட்சிப்புக்குள் வந்தபிறகும் இன்னும் சிறையிருப்பில் இருக்கிறார்கள் – விரக்தி, மனச்சோர்வு, நோய், ஊக்க்மின்மை, நம்பிக்கை இழப்பு போன்றவற்றால்.
நீங்கள் ஏன் அந்த சிறையிருப்பை விட்டு வெளியே வரக் கூடாது? “இயேசு கிறிஸ்துவின் விசுவாசி” என்னும் உங்களுடைய அடையாள அட்டையை நீங்கள் காவல்காரனிடம் (சாத்தான்) காட்டலாம்.


உங்களுடைய கடமை இதுதான் – என்னுடைய தண்டனையின் காலம் முடிந்துவிட்டது என்று மக்களுக்குச் சொல்லுவது.


பரலோக பிதா, நியாயாதிபதி, என்னுடைய வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார். நான் இனி சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வெளியே வந்து உங்களை மற்றவர்களுக்கு காட்டுங்கள்.
சாத்தானின் சிறை அறைகள் இந்தியாவில் நிரம்பி வழிகிறது. தணடை காலம் முடிந்தவர்கள் கூட சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள் ஏனென்றால் விடுதலையை அவர்களுக்கு யாரும் அறிவிக்க வில்லை. எத்தனை சோகமானது.
நாம் அவர்களிடம் சென்று சொல்ல வேண்டும்,


…. கட்டுண்டவர்களை நோக்கி புறப்பட்டு போங்கள் என்றும், இருளில் இருக்கிறவர்களை நோக்கி, வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், ஏசாயா 49:9,10


சிறையில் சரியான உணவு (கர்த்தருடைய வார்த்தை) இல்லாததால் அவர்கள் பசியால் இறக்கிறார்கள்.
குடிக்க தண்ணீர் (பரிசுத்த ஆவி) இல்லை.

சூரியனின் வெப்பதிலிருந்து தங்களை பாதுகாக்க நிழல் இல்லை, வெப்பம் அவர்களை பாதிக்கிறது, சரியான மேய்ப்பன் இல்லை அவர்களை வழிநடத்த,
வெளியே வந்தபின்,

அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்;
சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.
அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை;
(இயேசு) அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.


எத்தனை மகிழ்ச்சி!


இந்த மகிழ்ச்சியை அனைத்து வீடுகளும் அனுபவிக்க வேண்ட்ம். இந்திய தேசத்தில் இருக்கும் அனைத்து வீடுகளும் இந்த மகிழ்ச்சியால் நிரம்பியிருப்பதாக.


Sol. Gracy, AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *