தானியேல் – II
02-03-2022 – தேவ செய்தி

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

லூக் 18:13.

மார்பிலே அடித்துக்கொண்டான் – இது ஆழமான துக்கத்தையும் மனந்திரும்புதலையும் காட்டுகிறது.

லூக் 18:14 – இந்த ஆயக்காரன் மட்டுமே நீதிமானாக்கப்பட்டான் என்று இயேசு சொன்னது மற்றவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியது.

தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், 
மத் 23:12.

பரலோக ராஜ்யத்தில் நுழைவதற்கு தேவையானது குழந்தையைப்போல விசுவாசம் மேலும் கர்த்தரை சார்ந்திருப்பது. இந்த ஆயக்காரனின் அணுகுமுறையே கர்த்தரிடம் செல்வதற்கு சரியானது. அதிகாரிகளுக்காக வேலைசெய்ததால் ஆயக்காரர்கள் வெறுக்கப்பட்டார்கள் மேலும் ஊழலுக்கு பேர்போனவர்களாக இருந்தார்கள். தங்களுடைய சுயநீதியிலும் கடின இருதயத்தாலும் பரிசேயர்களும், மத போதகர்களும் தவறிப்போன மக்களை பற்றி கவலைப்படவில்லை.

வழி தவறிய பிள்ளைகள் கர்த்தரிடம் திரும்பி வர வேண்டும் என்று கர்த்தரின் இருதயத்தை வெளிப்படுத்தும் இயேசு ஏங்குகிறார்.
நாம் பாவிகள் என்பதை தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு கர்த்தருடைய கிருபையை நாடி, நம் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, கர்த்தரிடம் நம்மை ஒப்புகொடுத்து விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பை பொறுவோம். ரோம 10:3 சொல்லுகிறது எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
யாகோபு 4:6 – அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.


நீதிமொழிகள் 22:4 – தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.


சங் 103:8,9,11
கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள் மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.. .
எனவே அன்பான சகோதர சகோதரிகளே கர்த்தர் பலவீனமானவர்களை அறிந்து அறிந்து அவர்களுக்கு கிருபை தருபவர். யாக்கோபை அறிந்த தேவன் நம்மையும் அறிந்திருக்கிறார் மேலும் நமக்கு ஞானம், அவருடைய் நீதி, மேலும் இரட்சிப்பை கொடுக்கிறார், அவரே நம்மை பரிசுத்தமாக்குகிறார்.
நாம் கர்த்தருக்கு கீழ்படியும்போதும், நம்மை தாழ்த்தும் போதும் அவர் நமக்கு கிருபை கொடுக்கிறார்.
கர்த்தர் என்னுடைய பாவங்களை மன்னித்துவிட்டார் மேலும் என்னை காப்பாற்றிவிட்டார். இதோ கர்த்தர் என்னையும் என் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலாரையும் ஆசீர்வதித்திருக்கிறார்.


ஜெபம்


பரலோக பிதாவே, எங்களுடைய பாவங்களை மன்னியும், உம்மோடு இருக்க என்னை ஆசீர்வதியும், உம்முடைய குழந்தைகள் உமக்கு பயந்து தங்களிஅ தாழ்த்தி, உம்மை துதிக்கவும், உம்முடைய மகிமையை காணவும் செய்யும்.

ஆமேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *