தானியேல்
01-03-2022 – தேவ செய்தி

ங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்…

(பிலி 1:6).

என்னுடைய சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும், மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டிருக்கிறேன்.
கர்த்தரோடு என்னுடைய 8 வருட பயணத்தில் ஒரு வசனம் எனக்கு எப்போதும் நினைவில் நிற்கிறது.

எபி 13:5 – நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை. இந்த வசனத்தில் உள்ள உண்மைத்தன்மையை நான் அனுபவித்திருக்கிறேன். என்னுடைய தாயின் வயிற்றில் நான் உருவாகும் காலத்திலிருந்தும் கர்த்தரின் அன்பை சந்திப்பதற்கு முன்பும் கூட அவர் எப்போதும் என்னோடு இருக்கிறார் என்பதை இது நினைவுபடுத்துகிறது.
இரண்டாவதாக, கர்த்தர் என்னை ஒருபோதும் கைவிடவில்லை, மேலும் என்னுடைய பலவீனங்கள் அல்லது பாவங்கள், குற்ற உணர்வுகள் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும்போது கூட, நான் உயர்ந்து முன்னேறுவதற்கு என்னை பலப்படுத்துகிறார்.

பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் இயேசுவையும் அவர் கல்வாரிக்கு சிலுவை சுமந்து சென்று போனதையும் எனக்கு நினைவூட்டுகிறார், அந்த பாரமான சிலுவையின் பாரத்தை இயேசு நடக்கும்போது பலமுறை அவரது தோளில் உணர்ந்தார், கீழே விழுந்தாலும் அவர் எழுந்தார் சிலுவையை எடுத்தார், அதை சுமந்துகொண்டு முன்நோக்கிச் சென்றார்.

நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” அவர் மரணபரியந்தம் என்னை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை இதை காட்டுகிறது. எபி 12:1-3


பிதாவாகிய தேவன் தன்னுடைய குமாரனை அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தினார், மேலும் குமாரன் நமக்காக தன்னுடைய உயிரை கொடுத்தார், ஆனால் அவரது அன்பு அத்துடன் நிற்க்க வில்லை, பிதா நமக்கு பரிசுத்த ஆவியையும் கொடுத்தார்.
இப்போது அவருடைய ஆவி என்னுள் இருப்பதால் அது என்னை வழிநடத்துகிறது, எனக்கு கற்பிக்கிறது, ஒவ்வொருநாளும் இயேசுவை எனக்கு உண்மையாக்குகிறது. உண்மையில் இது அதிசயம்தான்.


எதிரியானவன் எனக்குள் சந்தேகத்தை உண்டாக்கி, என்னைச் சுற்றிலும் பொய் மேலும் பல்வேறு சுழ்நிலைகளின் மூலம் உற்சாகத்தை இழக்கச் செய்கிறது, ஆனால் ஒரு வசனம் என்னை பலப்படுத்துகிறது, அதை நான் மிகவும் நேசிக்கிறேன்.
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

ரோமர் 10:11


அவர் மீது விசுவாசமும் நம்பிக்கையும் வைப்போம், – உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்.” என்பதை முழுவதும் நம்புவோம்.. (பிலி 1:6).

Sol. DaiahunTalang, AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *