கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.
சங்கீ 34:22
கர்த்தரை சேவித்து அவருக்கு ஊழியம் செய்பவர்கள் மீது குற்றஞ்சுமராது.
அவர்கள் பாவம் செய்தாலும் கர்த்தர் அவர்களை மன்னித்துவிடுவார், புத்தகத்தில்லிருந்து அழித்தப்போடுவார்.
ஆதிஆகமத்தில் நாம் இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை பார்க்கிறோம்.
அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான். தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார். அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ? இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான். அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை. அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தா ர்கள்
ஆதி 20:2-8
அபிமெலேக்கு கர்த்தருக்கு பயந்தவனாய் இருந்ததால், அபிரகாமின் மனைவியாகிய சாராளை தொட அவனை கர்த்தர் அனுமதிக்க வில்லை. கணவிலே கர்த்தர் தோன்றி அபிமெலேக்கிடம் சொன்னார், அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார். 20:7
மற்றவனுடைய மனைவியை எடுத்துக்கொண்டதற்கு தண்டனை மரணம். ஒரு மனிதனின் மரணம் அல்ல அவனோடு இருக்கும் அனைத்த்ம் சேர்ந்து மரிக்க வேண்டும்;
ஒரு தலைவனாக இருந்து தவறு செய்ய நேர்ந்தால், அவனுடைய மக்கள், வேலையாட்கள், வியாபாரம், பணியிடம், தொடர்புகள், கட்சி, வளர்ச்சி, நற்பெயர், எந்த துறையிலும் அவர் செய்த முன்னேற்றம், சொத்துக்கள், மரம், பயிர்கள் என அனைத்தும், ஆறுகள், தாவரங்கள் அனைத்தும் மரணத்திற்கு உள்ளாகின்றன. ஆனால் பாவத்தை ஏற்றுக்கொண்டு கர்த்தருக்கு முன்பாக பாவ அறிக்கை செய்தால் அதை அவர் மன்னித்து இழந்த எல்லாவற்றையும் மீண்டும் கொடுப்பார்.
ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின்நிமித்தம் கர்த்தர்அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால், ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார். ஆதி 20:17,18.
அபிமெலுக்கு தன்னுடைய குற்றங்களை கர்த்தரிடம் மட்டுமல்லாது, தன்னுடைய
வேலையாட்களிடமும் சொன்னான். அவர்கள் அனைவரும் மரித்துபோவார்கள் என்பதால் மிகவும் பயந்தார்கள். கர்த்தராகிய ஆண்டவரை அறியாவிட்டாலும் அபிமெலேக்கை நாம் நேர்மையான ராஜாவாகவே பார்கிறோம்.
எரேமியாவின் புஸ்தகத்தில் கர்த்தர் தன்னுடைய மக்களாகிய இஸ்ரவேலை குற்றம் சுமத்துகிறார்.
செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள். கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ் சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள். ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர்சொல்லுகிறார். எரே 2:7-9
பாவம் செய்தவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பேரக்குழந்தைகள் கூட குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாக காணப்பட்டனர், ஏனென்றால் அவர்கள் ஒருபோதும் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்ளவில்லை அல்லது மனந்திரும்பவில்லை.
நேரம் ஒதுக்கி, உங்களுடைய மக்கள் மற்றும் தொகுதி மக்களின் விபச்சாரத்தின் பாவங்களை ஒப்புக்கொண்டு . கர்த்தரிடம் அறிக்கையிடுங்கள். உங்களுடைய குடும்பத்தில், வேலை செய்யும் இடத்தில், தெருவில், அரசாங்கத்தில், லோக்சபா, ராஜ்யசபா, நீதித்துறை, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், சுற்றுலாதளங்கள், மத மையங்கள், தேவாலயங்கள் போன்றவற்றில் மரணம் உள்ளதா? ஒப்புக்கொள்வதன் மூலமும், பாவங்களை அறிக்கையிடுவதன் மூலமும் நாம் அனைத்தையும் மீட்டெடுக்க முடியும்.
“உருவாகு உருவாக்கு” பயிற்சிக்கு அநேக மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேண்டும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தேன். அதே நாளில் ஒரு சகோதரன் என்னை அழைத்தான். “ ஜனவரி மாத ‘எழுச்சிகுரல்’ என்னும் மாத பத்திரிக்கையைப் படித்தேன், கர்த்தர் 2021 ஆம் ஆண்டில் இயேசுவின் படை அணி மூலம் செய்த அனைத்து காரியங்களையும் கண்டு வியப்படைந்தேன். கடந்த சில ஆண்டுகளாக இயேசுவின் படை அணியோடு சேராததற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.” என்றார். நிழல் சட்டமன்ற உறுப்பினராக இருக்க அவர் முன்வந்தார். அடுத்தவாரமே அவர் மூலம் நான்கு பேர் சேர்க்கப்பட்டனர். ஒருவர் இயேசுவின் படை அணிக்கு முற்றிலும் புதியவர். உருவாகு உருவாக்கு பயிற்சியில் பங்குகொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தார். சகோதரனை மீண்டும் கொண்டுவந்ததற்காக கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்.
அன்பின் பரலோக பிதாவே, அலட்சியம், மந்தம் , ஆன்மீக சோம்பல் மற்றும் ஆன்மீக தூக்கம் அகியவற்றின் கரணமாக கடந்த ஆண்டுகளில் சாத்தானால் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்க AOJ வீரர்களுக்கு உதவும், எங்களை மன்னியும். ஆமேன்.
Sr. Roger AOJ
