தானியேல் – II

நாள் 06-04-2022 – தேவ செய்தி

வார்த்தை தேவனிடத்திலிருந்தது, .

யோவா 1:1

வேததின் மூலம் நாம் தெரிந்துகொள்வது, ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, இங்கு “ வார்த்தை” என்பது இயேசுவை குறிக்கிறது. இந்த வார்த்தைதான் கர்த்தருடைய செய்தியை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்தியது.

மூன்று குணங்களை, தேவனுடைய வார்த்தையாகிய இயேசுவுக்கு யோவான் பயன்படுத்துகிறார்.

  1. பிதாவோடு வார்த்தையின் உறவு

அ). ஆதியிலிருந்து இயேசு சர்வவல்லமையுள்ள தேவனோடு இருந்தார், “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

கொலோ 1:15.

ஆ) இயேசு (வார்த்தை தேவனோடு இருந்தது, அவருடைய இயற்க்கை மற்றும் குணம் (வல்லமை) பிதாவைப்போல் இருந்தது. பரத்திலிருந்து ஒரு குரல் கேட்டது,

அன்றியும், நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

மாற்கு 1:11.

2.உலகத்தோடு வார்த்தையின் உறவு:

கர்த்தர் உலகை இயேசு கிறிஸ்துவின் மூலம் உருவாக்கினார் மேலும் அதை காத்தும் வருகிறார். “ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோ 1:16)

3.மானித இனம் மற்றும் வார்த்தையின் உறவு:

வார்த்தை மனிதனானார், ஆவியில் தேவன் மனிதனானார், மனித இயல்பு பாவமே செய்யாமல் பாவத்தை மேற்கொண்டது. “அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்;

அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.”

மத் 1:23.

வார்த்தை இன்றும் தேவனோடு இருக்கிறார் மேலும் அவரோடே எப்பொழுதும் இருப்பார் ஏனென்றால் வார்த்தையின் மூலமாகத்தான் நமக்கு வாழ்வு கிடைத்தது, என்பது மேற்கண்ட வசனங்கள் தெளிவாக சொல்லுகின்றன, பரலோக ஆசிர்வாதங்களுக்காக கர்த்தரிடம் கேட்போம் அவர் நம்மை அந்தகாரத்திலிருந்து ஒளிக்கு அழைத்து வருவார்.

ஜெபம்

கிழக்கு உத்திரபிரதேசத்திற்கான பாரத்தை கர்த்தாவே நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிறீர், உம்மைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்ல நீர் எங்களோடு இருப்பீராக. பரலோக வல்லமை மற்றும் சக்தியினால் எங்களை நிறப்பும். ஆமேன்.

Sol.Sudha AOJ

தானியேல் – II

நாள் – 05-04-2022 – தேவ செய்தி

யோவா 1:1 –கிறிஸ்து இயேசுதான் கர்த்தர் என்று வேதம் முழுமையாக சொல்லுகிறது.

கொலோ 2:9 – ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.

ரோம 9:5 – பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான தன்மையை முற்றிலும் தெளிவுபடுத்துவதற்காக, கிறிஸ்து இயேசு செய்த ஏழு இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களை யோவான் இந்த பதிவில் சேர்த்துள்ளார். அவர் தேவகுமாரன் என்பதற்கும், அவருடைய அதிகாரம் மற்றும்  வல்லமைக்கும் சான்றாகும். இந்த ஏழு அடையாளங்களும் இணையற்றவை.

  1. தண்ணீரை திராட்சை ரசமாக்குதல்
  2. ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரனுடைய வியாதியை குணமாக்குதல்.
  3. ஊனமுற்றவனை குணமாக்குதல்
  4. 5000 மக்களை போஷித்தது
  5. தண்ணீர்மேல் நடந்தது
  6. குருடனுக்கு பார்வை அளித்தது.
  7. மரித்த லாசரை உயிரோடு எழுப்பியது.

இயேசு தேவனுடைய தூதர், மனித உருஎடுத்த தெய்வம்,மேலும் தீர்க்கதரிசி மட்டும் அல்ல மாறாக அவர் கர்த்தர், குமாரன் மற்றும் பரிபூரண தேவன்.

யோவா 10:30 -நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

யோவா 8:12 – மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து இயேசு தேவன், அவர் மனிதனாக ஒரு குறுகிய காலத்திற்கு  இவ்வுலகில் வந்தார் ஆனால் அவர் நித்தியமானவர். அவரில் விசுவாசம் வைப்பதால் நமக்கு கிடைப்பது நித்திய வாழ்வு.

நற்செய்திகளில் தேவன் சொன்னது, தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களால் சொல்லப்பட்டது இன்று அணி சபை, வரங்களின் பயிற்சி பள்ளி மற்றும் உருவாகு உருவாக்கு ஊழியங்களின் மூலம் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

நாம் வயதாகி மரித்துபோவோம் ஆனால் இயேசு கிறிஸ்துவின் மீது வைத்திருக்கும் விசுவாச்த்தின் மூலமாக மனித ஆத்துமாக்களுக்கு நித்திய வாழ்வு கிடைக்கும்.

எனவே, தன்னுடைய உயிர்தெழுதலுக்கு முன்பே இயேசு தேவன் என்றும் தனது தெய்வீக சக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கொலோ 2:9 -ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.

ஜெபம்:

பிதாவாகிய எங்கள் தேவனே, நீர் விரும்புகிறது போல உம்மை ஆவியில் ஆராதிக்க எங்களை உம்முடைய ஆன்மீக அடிமையாக்கும். நித்திய வாழ்விற்கான ஓட்டத்தில் எங்களுக்கு உதவி செய்யும். கர்த்தாவே உம்முடைய  தெய்வீக நடத்தைகளையும், வல்லமையையும் மக்கள் வாழ்வில் வெளிப்படுத்தவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும், அபிஷேகத்தால் எங்களை நிறப்பும், ஆமேன்.

Sol.Kamalesh AOJ 

தானியேல் – II
நாள் 04-04-2022 – தேவ செய்தி

னெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும்கர்த்தருடனேகூட இருப்போம்.


இதுதான் நம்முடைய மிகப்பெரிய நம்பிக்கை. கர்த்தருடைய வருகையின் போது அவரோடு கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். பத்து கன்னிகைகள் உவமையின் மூலமாக நமக்கு வேதத்தில் சொல்லியிருக்கிறார். மணவாளன் அவர்களை சந்திக்க வருவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது, ஆனாலும் பத்தில் ஐந்துபேர் மட்டுமே தயாராக இருந்தனர். கர்த்தருடைய வருகை ஒரு கற்பனை அல்ல. இயேசுவே இதை உறுதிப் படுத்துகிறார்.

யோவான் 14:3 இவ்விதமாய் சொல்லுகிறது -நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

அவர் இருக்கும் இடத்திற்கு நம்மையும் கொண்டுசெல்வதுதான் கர்த்தருடைய ஆசை. ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு தகப்பன் தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறான்.

அதேப்போல கர்த்தர் எங்கே இருக்கிறாரோ அங்கு தன்னுடைய குடும்பமாகிய நம்மையும் அழைத்துசென்று அங்கேயே குடியேற்ற விரும்புகிறார். தூதர்கள் கூட இயேசுவின் வருகையைப் பற்றி சாட்சி சொல்லுகின்றனர்.
அப்போ 1:11 சொல்லுகிறது
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

மேற்கண்ட வசனங்களின் மூலம் இயேசுவின் வருகை உறுதி செய்யப்படுகிறது. எனவே நம்மை பரிசுத்தமாக வைத்துக்கொள்ள தயார் செய்ய வேண்டும். நம் வாழ்வில் சோதனைகள் மற்றும் துன்பங்கள் வரும்போது அவற்றைக் கடந்து விசுவாசத்தில் உறுதியாக நிற்க வேண்டும். அநேக மக்கள் எதிரியோடு யுத்தம் செய்யாமலே விசுவாசத்தை கைவிடுகின்றனர். பரலோக வெளிப்பாடுகள் அவர்களுக்கு கிடைத்துவிட்டால், அவர்கள் சந்திக்கும் சோதனைகள் மற்றும் துன்பங்கள் ஒன்றுமில்லாமல் போகும்.

ஜெபம்


பரலோக பிதாவே, ஒருவரும் அழிந்துபோகாமல் பரலோக ராஜ்யம் சென்று சேர்வது உம்முடைய சித்தம். இந்த நாட்களில், உம்மை அறிந்துகொள்ள, உம்மோடு நிரந்தரமான ஒரு உறவை ஏற்படுத்த மேலும் நீர் வரும்போது உம்மோடு எடுத்துச் செல்லப்பட தங்களையே தயார் செய்ய அனைவருக்கும் உதவி செய்யும்.

ஆமேன்.

SOL. SAJITHA EUGINE AOJ

தானியேல் – II
நாள் 03-04-2022 – தேவ செய்தி


எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்;

அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

1 தெசலோ 5:17,18


இந்த அதிகாரத்தில் பவுல், இயேசுவை பின்பற்றும் நம் அனைவருக்கும் ஒரு கடைசி அறிவுரை வழங்குகிறார். நாம் அனைவரும் உயிருள்ள தேவனின் பிள்ளைகள் மேலும் எந்த தடைகள், பிரச்சனைகள், கடினமான சூழ்நிலைகள் அல்லது தடைகள் எதுவாக இருந்தாலும் நாம் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்று அது சொல்கிறது. நம்முடைய ஜெபம் நிறுத்தப்படவோ, தடைபடவோ கூடாது. ஒவ்வொரு விதத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும், எப்பொழுதும் கர்த்தருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதே கர்த்தரின் விருப்பம்.


கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

பி லி ப் 4:4.


பிலி 4:6,7 – நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
இதை நாம் செய்தால் மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்ட அற்புதமான கர்த்தரின் அமைதியை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

நன்றிநிறைந்த இருதயத்துடன், மகிழ்ச்சியோடு ஜெபித்துக்கொண்டிருப்பதே கர்த்தரின் விருப்பம். ரோம 8:28 - அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். நம்முடைய தாயின் கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பே அவர் நம்மை அறிந்திருக்கிறார். அவர் உன்னை உருவாக்கி இருக்கிறார், உன்னை அன்பு செய்கிறார். நீங்கள் அவருடைய பிள்ளைகள் என்பதால், நீங்கள் இப்போது என்ன செய்தாலும் அவர் உங்களுக்கு நல்லது செய்வார்.
எரே 29:11 - நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.


நீதி 3:5-6 – உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும்கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.


நம்மை சிருஷ்டித்த உயிருள்ள தேவன் மீது நம்முடைய முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். உங்களுடைய தேவனுடைய சித்தத்தின்படி மகிழ்ச்சி மற்றும் நன்றிநிறைந்த இருதயத்துடன் ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நாம் அவருடைய சித்தத்தின்படி வேலை செய்யும்போது அவர் நம்முடைய வழிகளை முன்னநடத்துகிறார், கோணலான பாதைகளை செவ்வையாக்குகிறார்.


உபா 28:14 – இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின்கட்டளைகளை கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.


இப்பொழுது இருக்கும் சூழ்நிலையை பார்த்து துவண்டுவிடாதே, ஏமாற்றமடையாதே, மாறாக, நன்றி மற்றும் புகழ்ச்சியோடு இடைவிடாமல் ஜெபித்துக்கொண்டிருந்தால் அவர் உன்னுடைய சூழ்நிலையை மாற்றுவார், உனக்கு வெற்றிதருவார்.

னது கணவருக்கு விபத்து ஏற்பட்டு, மண்டை எலும்பு முறிந்து மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு, அவரது முன் மண்டை எலும்பின் உடைந்த பகுதி மூளையில் சொருகப்பட்டது. சுய நினைவின்றி வென்டிலேட்டரில் இருந்தார், மேலும் நம்பிக்கை இல்லாத நிலையில் இருக்கிறார் என்றனர் மருத்துவர்கள். ஆனால் நான் இயேசுவை பற்றிக்கொண்டு அவரையே நம்பினேன். என் கணவரின் மோசமான மற்றும் சாத்தியமற்ற சூழ்நிலையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஜெபித்தேன். என்னுடைய இடைவிடாத ஜெபம் மற்றும் நன்றி சொன்னதின் காரணத்தால் என் கணவரை கர்த்தர் வென்டிலேட்டரில் இருந்து வெளியே வரச் செய்தார், மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது, கர்த்தர் அவருடைய உயிரை காப்பாற்றினார். நன்றி இயேசுவே. எல்லா புகழும் அவர் ஒருவருக்கே.


கர்த்தாவே, இதைபடிக்கும் அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கையின் அன்றாட அனுபவத்தில் நன்றி மற்றும் புகழ்ச்சியின் இருதயத்தை தந்தருளும். கர்த்தாவே, அவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கவும், தொடர்ந்து ஜெபிக்கவும் மேலும் எல்லா சூழ்நிலைகளிலும் உமக்கு நன்றி சொல்லவும் கற்றுத்தாரும். உம்முடைய சத்தியம் ஒரு நன்றி நிறை உள்ளத்தில் வாழ்கிறது என்பதை நானறிவேன். உம்மில் அவர்களுடைய விசுவாசம் அதிகரிப்பதாக, உம்முடைய சித்தத்தை அவர்கள் செய்வார்களாக, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமேன்.


Sol. Himakshi ,Aoj

தானியேல் – II
நாள் 02-04-2022 – தேவ செய்தி

அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.


அது ஒரு மிகவும் சாதாரண நாள், கழுதைக்கும் அதன் குட்டிக்கும் கூட அது சாதாரண நாள்தான். கழுதையும் அதன் குட்டியும் எங்கே இருக்கின்றன என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். அவைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்பதும் அவர் அறிந்ததே. அவைகளை அவிழ்க்க மட்டும் அவர் சொல்ல வில்லை, அவருக்கு அது தேவை என்றும் சொன்னார். யாராவது கேட்டால், அது ஆண்டவருக்கு தேவை என்று சொல்லுங்கள் எனறார். 2001 ஆண்டு நானும் இதைப் போல நம் ஆண்டவராகிய இயேசுவை சந்தித்தேன். இந்த சந்திப்பு என் வாழ்வை முற்றிலும் மாற்றிப் போட்டுவிட்டது. அவருடைய மாபெரும் கிருபைதான் இது, என்னை விடுதலை மட்டும் செய்ய வில்லை, அவருக்கு நான் தேவை என்றும் சொன்னார். ஆயிரகணக்கான மக்கள் உண்மையும் நேர்மையும் கொண்டவர்களாக இருக்கும்போது, என்னை அவருடைய ராஜ்யத்திற்காக அழைத்தார். நானா? என்னையா?

உங்களால் நினைத்துபார்க்க முடிகிறதா?


வெளி 5:5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

அவரால் எந்த முத்திரையையும், வாழ்வின் எந்தப் பகுதியிலும், எந்த தேசத்திலும், எந்த மக்களையும், எந்த முடிச்சையும் அவரால் உடைக்க முடியும்,
நாம் கதரேனருடைய நாட்டிற்கு போவோம், லேகியோன்(6000) அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதனைப் பற்றி நாம் கேள்விபட்டிருக்கிறோம், அவன் அசுத்த ஆவிகளின் கட்டுபாட்டிற்கு கீழ் வசித்துவந்தான், சாத்தான் அவனை ஆட்சி செய்தது.

யாராலும் குணப்படுத்தமுடியாத ஒரு மனிதன் அவன், ஆனால் இயேசுவுக்கு அல்ல. மாற்கு 5 சொல்லுகிறது, அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவன் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தான் ஆனாலும் அவைகளை அவன் முறித்துபோடுவான்’ கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக் கொள்வான், அவனை யாராலும் கட்டுப்படுத்த முடிய வில்லை. ஆனால் இயேசு வரக் கண்டு அவன் ஓடிவந்து அவரை பணிந்துகொண்டு “இயேசுவே, உன்னதமான தேவனின் குமாரனே” என்று சொன்னான்.


எபே 1:22 – எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,
அதற்கு பின் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். அந்த மனிதன் முற்றிலும் சுகமானான், அசுத்த ஆவி அவனை விட்டு விலகியது, அவனுடைய ஆத்துமா சுத்தமானது, அவன் விடுதலை செய்யப்பட்டான். சாத்தான்கள் அனைத்தும் பன்றிகளுக்குள்ளே அனுப்பப்பட்டது.

அசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவன், சங்கிலிகளாலும், விலங்குகளாலும் கட்டப்பட்டவன், கல்லறைகளில் வாழ்ந்தவன், கற்களால் தன்னையே காயப்படுத்தி கொண்டவன், ஏளனபடுத்தப்பட்டவன், கைவிடப்பட்டவன், தனிமையில் இருந்தவன், மேலும் தன் உயிரை மாய்க முயற்சித்தவன் இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் 

அமைதியாக இருந்தான்.


அவன் இயேசுவை பின்பற்ற முடிவு செய்தான், ஆனால் நீ வீட்டிற்கு போ என இயேசு அவனுக்கு கட்டளை கொடுத்தார். அவனுக்காக நான் மிகவும் வருந்தினேன். அவருடைய கிருபை மனிதன் வசிக்கும் அந்தகாரமான இடத்திலும் பிரகாசிக்கும். கர்த்தருடைய கிரியைகளை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க அவன் அழைக்கப்பட்டான். கர்த்தர் அவனை இப்பொழுது மற்றவர்களை விடுலை செய்யும் ஒரு ஊழிகாரனாக மாற்றினார், யாருக்குமே தேவைப்படாத அவனை தனக்காக பயன்படுத்தினார்.


இயேசு, சிலுவையிலே தன்னுடைய இரத்தத்தை சிந்தி நம்மீது இருந்த சாத்தானின் சாவின் சங்கிலியை உடைத்தெறிந்தார், பாவத்தின் அடிமைதனத்திலிருந்து நம்மை விடுவித்தார். நாம் அவரை ஏற்றுக்கொள்வதன் மூலம் அந்தகாரத்தின் ராஜ்யத்திலிருந்து உடனடியாக் ஒளியின் ராஜ்யமாகிய கர்த்தருடைய ராஜ்யத்திற்கு நொடிபொழுதில் மாற்றப்படுகிறோம்.
யோவா 8:36 – ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.


ஜெபம்


அன்பின் பரலோக பிதாவே, இயேசுவுக்காக நன்றி செலுத்துகிறேன், அவர் தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி அந்தகாரத்தின் பிடியிலிருந்து எங்களை பாதுகாத்தார். இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தொடப்படுவார்களாக, பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்படுவார்களாக, அவர்களுடைய வாழ்வின் அந்தகாரங்களில் உம்முடைய ஒளி ஒளிர்வதாக, அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு பரிபூரண வாழ்வு அவர்களுக்கு கிடைப்பதாக, இயேசுவின் வல்லமைமிக்க நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமேன்.


Sol.Lalitha Menon,Aoj

தானியேல் – II நாள் 01-04-2022 – தேவ செய்தி

லூக் 21:1-4 - அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.

நற்செய்திகளில், கர்த்தருடைய நன்மையின் மீது முழுவதுமாக சார்ந்திருக்கும் இந்த விதைவையை எடுத்துக்காட்டாக நம் ஆண்டவர் இயேசு சொல்லுகிறார். ஏழை விதவை அவளிடம் இருக்கும் அனைத்தையும் கர்த்தருக்கு காணிக்கையாக கொடுக்கிறார். யாரோடு உங்களை ஒப்பிட்டு பார்க்கிறீர்கள்? தாராளமாக கொடுக்கும் பரிசேயனையா அல்லது தன்னுடைய ஏழ்மையிலும் தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தருக்கு காணிக்கையாக கொடுத்த விதவையோடா? இந்த வசனத்தில் நம்மை காண்டுபிடிப்போம்.

நம்மை விட குறைவானவர்களுடன் நமது செல்வத்தையும், சொத்துக்களையும் பகிர்ந்துகொள்வது மற்றும் கொடுப்பது இரண்டிலும் வித்தியாசம் உண்டு. மற்றவர்களுக்கு பணம் கொடுப்பது என்பது நமக்கு ஈசியாக இருக்கலாம், நம்முடைய நேரம், திறமை, சக்தி, மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். நிபந்தனை இல்லாமல் கொடுக்க நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம், நம்முடைய மீதமாக இருப்பதையும், நமக்காக பயன்படுத்தி இனி தேவையில்லை என்னும் சூழ்நிலைவரும்போது மற்றவர்களுக்கு கொடுப்பது கூடாது.

நம்மையே கொடுக்கும்படியாக கர்த்தர் இன்று நம்மை கேட்கிறார்.


நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல, கர்த்தர் கொடுப்பதின் பின் இருக்கும் நம்முடைய மன நிலை, நடவடிக்கை மற்றும் நம் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிறார் கர்த்தர்.


யோவா 3:16 – தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.


கர்த்தருக்கு எது மிகவும் முக்கியமோ, பிரியமானதோ அதை நமக்கு கொடுத்திருக்கிறார். பாவிகளாகிய நமக்காக தன்னுடைய குமாரனாகிய இயேசுவை பலி கொடுத்தார், அவரும் தன்னை வெறுமையாக்கினார். இயேசுவும் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விட்டுகொடுத்தார், தன்னுடைய சரீரம், இரத்தம் மற்றும் உயிரையும் கொடுத்தார்.


லூக் 14:33 – அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம்

வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
கர்த்தர், இயேசுவின் சீடர்களாகிய நமக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அவரைப்போல மாற நம்முடைய சித்தம் அல்ல, அவருடைய சித்தம் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தப்பட வேண்டும். இந்த ஏழை விதவையைப் போல நான் கர்த்தரிடம் ஜெபிக்கிறேன், நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் தாராளமாக கொடுக்க கர்த்தர் நமக்கு திறந்தமனதை கொடுப்பாராக, ஆமேன்.


தனியேல் –
நாள் – 30-03-2022 – தேவ செய்தி

ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். 
மாற்கு 2:21.


இந்த வசனம் தெளிவாக சொல்லுகிறது – நம்முடைய பழைய உலகபிரகாரமான வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வாக மாற்றாவிட்டால், நம்முடைய முன்னிலமையை விட பின்னிலை மோசமாக இருக்கும். பரலோக வாழ்வின் மதிப்புகள், இரட்சிப்பின் மதிப்பிகள் இல்லாமல் நம் வாழ்க்கை நிர்வாணமாக, அம்பலப்படுத்தப்பட்டு, அமைதி, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை இழந்து இருக்கும். சேதமடைந்த பகுதிகளை மறைக்க புதிய ஒட்டுக்களுடன் பழைய ஆடையை அணிய முடியாது. அதேப் போல இயேசு கிறிஸ்துவில் நம்முடைய புதிய வாழ்வில் பழைய வாழ்வை கலக்க முடியாது.


ஊதாரி மைந்தனின் பிதா, மகன் திரும்பி வந்த போது என்ன செய்தார்? லூக் 15:11-32., பழைய வாழ்க்கைக்கு அடையாளமாக இருந்த பழைய ஆடையை களைந்து அவனுக்கு புதிய ஆடையை கொடுத்தார். நாம் இயேசுவுக்குள் வந்துவிட்டால், பழைய ஆடையை களைந்து எறிந்தது போல பழைய வாழ்க்கையை உதறிதள்ள வேண்டும். நம்முடைய சொல், செயல், பதில் அனைத்திலும் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை கைவிட வேண்டும். இரட்சிப்பின் புதிய ஆடையை நாம் அணிந்துகொள்ள வேண்டும்.

எனவே நம்மில் பழைய பழக்க வழக்கங்கள் அல்லது மரித்துபோன நடவடிக்கைகள் அனைத்தும் மறைந்துபோகும். நாம் ஆசாரியர் மற்றும் ராஜாக்களாகவும் இருப்பதால் அதற்கு தகுந்த உடையை அணிய வேண்டும். நாம் தாழ்ச்சியுடனும், வலிமையாகவும், அதிகாரமாகவும் மகிழ்ச்சியாகவும் இரக்கமுள்ளவர்களாகவும், நீதியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்,


எபே 4:20-24 சொல்லுகிறது நாம் புதிய மனிதனை அணிந்து கொள்ள வேண்டும், பழைய மனிதனை களைந்து எறிய வேண்டும்.இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதாலும், அவருடைய கிருபையாலும் தலை முதல் கால் வரை மூட நமக்கு புதிய ஆடை உண்டு. நமது பழைய பழக்க வழக்கங்கள், தவறான செயல்கள் மற்றும் பாவங்களுக்கு இப்போது நம்மிடம் இடம் இல்லை. இரட்சிப்பின் புதிய ஆடையை நாம் அணிந்தால் குற்ற உணர்வு, பயம், கவலை, பெருமை மற்றும் நமது சொந்த நீதியின் மீதான நம்பிக்கையின் பழைய துணிகள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும். மீண்டும் நம்மிடம் வராதபடிக்கு தீயிலே அவைகளை சுட்டெறிக்க வேண்டும்.

கொலோ 3:12 - ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;


நம்முடைய குறிக்கோள்கள் மற்றும் முன்னுரிமைகள் அனைத்தும் மாறிபோகும். ஊதாரிமைந்தன் தன்னுடைய பாவ வாழ்க்கையை நினைக்காதபடி அவனுடைய தகப்பன் அவனை அன்பு செய்து, ஏற்றுக்கொண்டார். அவனுக்கு அணிவிக்கப்பட்ட முத்திரை மோதிரம் அதிகாரத்தின் அடையாளமாகும். பிதாவின் பிரதிநிதியாக அவன் செல்லுவதற்கு காலணிகள் அணிவிக்கப்பட்டது.


ஜெபம்


பரலோக பிதாவே நாங்கள் இரட்சிப்பின் புதிய ஆடையை அணிய விரும்புகிறோம் மேலும் முழுமையாக பாவத்தின் கிரியைகளை எடுத்து எறிகிறோம். இதை செய்வதற்கு எங்களுக்கு கிருபைதாரும், பரிசுத்த ஆவியை தாரும். ஆமேன்.

Sol. Gigi Jacob  AOJ

தானியேல் – II
நாள் 31-03-2022 – தேவ செய்தி

நீ புத்திரனாயும், சுஅதந்தரனாயுமிருக்கிறாய்.


ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்;

நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். கலா 4:7.

சுதந்தரன் என்றால்…..
  • ஒரு நபரின் மரணத்திற்குப் பின் அவரின் சொத்து அல்லது பதவிக்கு சட்டபூர்வமாக உரிமையுள்ள ஒரு நபர்.
  • அல்லது ஒரு நபருடைய சொத்தை உரிமையாக பெற்றப்பின், அவருடைய பணியை (கிறிஸ்து) தொடர்ந்து செய்வது.
  • கர்த்தருடைய புத்திரனாக மாற வேண்டுமென்றால், மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
  • இயேசு கிறிஸ்துவில் நம்முடைய விசுவாசத்தின் காரணமாக நாம் கர்த்தருடைய பிள்ளைகளாகிவிட்டோம். கலா 26
  • நாம் கிறிஸ்துவில் ஞானஸ்ஞானம் பெற்றதால், இயேசுவை தரித்துக்கொண்டிருக்கிறோம், இயேசுவில் நமக்கு இரட்சிப்பு கிடைத்திருக்கிறது.
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. 
                     
                                                            கலா 3:27.


யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

கலா 3:28.
நமக்குள் எந்த பாகுபாடும் இல்லை ஏனென்றால் இயேசு கிறிஸ்துவில் நாம் அனைவரும் ஒன்று, அபிரகாமின் வித்தும், சந்ததியுமாய் இருக்கிறோம்,


அடிமை/சுதந்திரவாளி


பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. கலா 4:1.

நாம் புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறோம். எனவே நாம் இந்த தேசத்தை சுதந்தரித்தன் மூலமாக SMPS &SMLA ஆக முழு தேசத்தின் பாதுகாவலர்களாகவும், காப்பாளர்களாகவும் இருக்கிறோம்.


அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.

கலா 4:3
நமக்கு எல்லாருக்கும் ஒரு கேள்வி, நாம் உண்மையில் சுதந்திரவாளியா அல்லது சிறுபிள்ளையா?(அடிமை)
இல்லை, நாம் சிறுப்பிள்ளை அல்ல. நாம் சுதந்தரவாளிகள், அவரை அப்பா பிதாவே என்று அழைக்கிறோம்.


மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். (கலா 4:6-8)).
நாம் இப்போது அடிமைகள் இல்லை, ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள். 

கடந்த காலத்தில் நாம் அடிமைகளாய் இருந்தோம், ஏனென்றால் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் சித்தத்தை நாம் அறிய வில்லை மேலும் புறஜாதியினரைப் போல நாம் நடந்து கொண்டோம்.
திரும்பிபோதல் இல்லை
இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? கலா 4:9.


நாம் கர்த்தரால் அறியப்பட்டிருக்கிறோம், இது எவ்வளவு அருமையான கிருபையும் ஆசீர்வாதமாய் இருக்கிறது. எனவே நாம் திரும்பி போகக்கூடாது, துன்பம்தரக்கூடிய சக்திகளுக்கு அடிமையாகாமல் இருப்போம், யூத ராஜ சிங்கத்தின் போல யுத்தம் செய்வதற்கு கர்த்தர் நம்மை மன்னிக்க வேண்டும் என்றும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்போம்.

வேதம் சொல்லுகிறது, நாம் கிறிஸ்துவில் சுதந்தரவாளி. நாம் இப்போது கர்த்தருடைய மகனும், மகளும், சுதந்தரவாளியாகவும், காப்பாளனாகவும், நம்பகத்தக்கவர்களாகவும் இருந்து இந்த தேசத்தை சுதந்தரித்து கர்த்தருடைய ராஜ்யத்தை கொண்டுவரவேண்டும்.
யுதராஜ சிங்கம் போல, உண்மையான வீரர்களைப்போல ஆன்மீக யுத்தம் செய்ய நாம் விழித்தெழுவோம்,

15 ஆண்டுகளுக்கு மேலாக இயேசுவின் படை அணியில் ஊழியம் செய்துகொண்டிருக்கிறேன். இயேசு என்னை பாவத்திலிருந்ஹ்டு மீட்டார் என்ற நம்பிக்கையில் நான் ஞானஸ்ஞானம் பெற்றபோது மீண்டும் பிறந்தேன், அப்பொழுதே விசுவாசத்தில் கர்த்தரின் பிள்ளையானேன். இயேசுவின் படை அணியில் வருவதற்கு முன்பே நான் ஞானஸ்ஞானம் பெற்றிருந்தேன், இயேசுவைப் பற்றியும் அறிந்திருந்தேன் ஆனால் என்னை

திட்டத்தை நான் அறிந்திருக்க வில்லை. இயேசுவின் படை அணியில் சேர்ந்தபின் நான் முன்னிலை வீரனாக கர்த்தருக்காக தேசத்தை மட்டும் அல்ல இந்த உலகத்தையே சுதந்தரிக்கவும், அவருடைய ராஜய்த்தை நிறுவவும் வேலை செய்கிறேன். வீரர்களாக தேசத்தை கர்த்தருக்காக சுந்தரித்தோம், ஏனென்றால் நாமே கர்த்தரின் சுதந்தரவாளியாக இருக்கிறோம். இந்த தேசம் நமதே.


இந்த உண்மைகளை நாம் இயேசுவின் படை அணியில் வந்தபிறகுதான் அறிந்து கொண்டோம். நாம் கர்த்தருடைய சேனையில் வீரர்களாக இருக்கிறோம். அவருடைய ராஜ்யத்திற்காக முழு பலத்தோடும், விசுவாச்த்தோடும் யுத்தம் செய்வோம்.


எல்லா மகிமையும் அவருக்கே.

அப்பா, பிதாவே, இந்த நாளை கொடுத்ததற்கும், உம்முடைய வார்த்தையை பகிர்ந்துகொள்ள கொடுத்த கிருபைக்கும் உமக்கு நன்றி செலுத்துகிறோம், உம்மை ஆராதிக்கிறோம். AOJ - “Telangana” காக நன்றி சொல்லுகிறோம். இயேசுவின் படை அணியில் பயணம் செய்ய உதவினீரே, நன்றி, உம்முடைய வெளிப்பாடுகளை புரிய வைத்தீரே நன்றி, பரிசுத்த ஆவியின் உதவியால் தேசத்தை சுதந்தரிக்க வைத்தீரே, நன்றி. பரலோக நீதிமன்றத்தில் தைரியமாக நிற்க எங்களுக்கு உதவி செய்யும், இயேசுவின் வல்லமை மிக்க நாமத்தில் கேட்கிறேன், 
ஆமேன்.

Sol Innareddy AOJ