ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். மாற்கு 2:21.
இந்த வசனம் தெளிவாக சொல்லுகிறது – நம்முடைய பழைய உலகபிரகாரமான வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வாக மாற்றாவிட்டால், நம்முடைய முன்னிலமையை விட பின்னிலை மோசமாக இருக்கும். பரலோக வாழ்வின் மதிப்புகள், இரட்சிப்பின் மதிப்பிகள் இல்லாமல் நம் வாழ்க்கை நிர்வாணமாக, அம்பலப்படுத்தப்பட்டு, அமைதி, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை இழந்து இருக்கும். சேதமடைந்த பகுதிகளை மறைக்க புதிய ஒட்டுக்களுடன் பழைய ஆடையை அணிய முடியாது. அதேப் போல இயேசு கிறிஸ்துவில் நம்முடைய புதிய வாழ்வில் பழைய வாழ்வை கலக்க முடியாது.
ஊதாரி மைந்தனின் பிதா, மகன் திரும்பி வந்த போது என்ன செய்தார்? லூக் 15:11-32., பழைய வாழ்க்கைக்கு அடையாளமாக இருந்த பழைய ஆடையை களைந்து அவனுக்கு புதிய ஆடையை கொடுத்தார். நாம் இயேசுவுக்குள் வந்துவிட்டால், பழைய ஆடையை களைந்து எறிந்தது போல பழைய வாழ்க்கையை உதறிதள்ள வேண்டும். நம்முடைய சொல், செயல், பதில் அனைத்திலும் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை கைவிட வேண்டும். இரட்சிப்பின் புதிய ஆடையை நாம் அணிந்துகொள்ள வேண்டும்.
எனவே நம்மில் பழைய பழக்க வழக்கங்கள் அல்லது மரித்துபோன நடவடிக்கைகள் அனைத்தும் மறைந்துபோகும். நாம் ஆசாரியர் மற்றும் ராஜாக்களாகவும் இருப்பதால் அதற்கு தகுந்த உடையை அணிய வேண்டும். நாம் தாழ்ச்சியுடனும், வலிமையாகவும், அதிகாரமாகவும் மகிழ்ச்சியாகவும் இரக்கமுள்ளவர்களாகவும், நீதியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்,
எபே 4:20-24 சொல்லுகிறது நாம் புதிய மனிதனை அணிந்து கொள்ள வேண்டும், பழைய மனிதனை களைந்து எறிய வேண்டும்.இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதாலும், அவருடைய கிருபையாலும் தலை முதல் கால் வரை மூட நமக்கு புதிய ஆடை உண்டு. நமது பழைய பழக்க வழக்கங்கள், தவறான செயல்கள் மற்றும் பாவங்களுக்கு இப்போது நம்மிடம் இடம் இல்லை. இரட்சிப்பின் புதிய ஆடையை நாம் அணிந்தால் குற்ற உணர்வு, பயம், கவலை, பெருமை மற்றும் நமது சொந்த நீதியின் மீதான நம்பிக்கையின் பழைய துணிகள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும். மீண்டும் நம்மிடம் வராதபடிக்கு தீயிலே அவைகளை சுட்டெறிக்க வேண்டும்.
கொலோ 3:12 - ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
நம்முடைய குறிக்கோள்கள் மற்றும் முன்னுரிமைகள் அனைத்தும் மாறிபோகும். ஊதாரிமைந்தன் தன்னுடைய பாவ வாழ்க்கையை நினைக்காதபடி அவனுடைய தகப்பன் அவனை அன்பு செய்து, ஏற்றுக்கொண்டார். அவனுக்கு அணிவிக்கப்பட்ட முத்திரை மோதிரம் அதிகாரத்தின் அடையாளமாகும். பிதாவின் பிரதிநிதியாக அவன் செல்லுவதற்கு காலணிகள் அணிவிக்கப்பட்டது.
ஜெபம்
பரலோக பிதாவே நாங்கள் இரட்சிப்பின் புதிய ஆடையை அணிய விரும்புகிறோம் மேலும் முழுமையாக பாவத்தின் கிரியைகளை எடுத்து எறிகிறோம். இதை செய்வதற்கு எங்களுக்கு கிருபைதாரும், பரிசுத்த ஆவியை தாரும். ஆமேன்.
Sol. Gigi Jacob AOJ
