தானியேல் – II நாள் 01-04-2022 – தேவ செய்தி

லூக் 21:1-4 - அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.

நற்செய்திகளில், கர்த்தருடைய நன்மையின் மீது முழுவதுமாக சார்ந்திருக்கும் இந்த விதைவையை எடுத்துக்காட்டாக நம் ஆண்டவர் இயேசு சொல்லுகிறார். ஏழை விதவை அவளிடம் இருக்கும் அனைத்தையும் கர்த்தருக்கு காணிக்கையாக கொடுக்கிறார். யாரோடு உங்களை ஒப்பிட்டு பார்க்கிறீர்கள்? தாராளமாக கொடுக்கும் பரிசேயனையா அல்லது தன்னுடைய ஏழ்மையிலும் தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தருக்கு காணிக்கையாக கொடுத்த விதவையோடா? இந்த வசனத்தில் நம்மை காண்டுபிடிப்போம்.

நம்மை விட குறைவானவர்களுடன் நமது செல்வத்தையும், சொத்துக்களையும் பகிர்ந்துகொள்வது மற்றும் கொடுப்பது இரண்டிலும் வித்தியாசம் உண்டு. மற்றவர்களுக்கு பணம் கொடுப்பது என்பது நமக்கு ஈசியாக இருக்கலாம், நம்முடைய நேரம், திறமை, சக்தி, மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். நிபந்தனை இல்லாமல் கொடுக்க நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம், நம்முடைய மீதமாக இருப்பதையும், நமக்காக பயன்படுத்தி இனி தேவையில்லை என்னும் சூழ்நிலைவரும்போது மற்றவர்களுக்கு கொடுப்பது கூடாது.

நம்மையே கொடுக்கும்படியாக கர்த்தர் இன்று நம்மை கேட்கிறார்.


நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல, கர்த்தர் கொடுப்பதின் பின் இருக்கும் நம்முடைய மன நிலை, நடவடிக்கை மற்றும் நம் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிறார் கர்த்தர்.


யோவா 3:16 – தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.


கர்த்தருக்கு எது மிகவும் முக்கியமோ, பிரியமானதோ அதை நமக்கு கொடுத்திருக்கிறார். பாவிகளாகிய நமக்காக தன்னுடைய குமாரனாகிய இயேசுவை பலி கொடுத்தார், அவரும் தன்னை வெறுமையாக்கினார். இயேசுவும் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விட்டுகொடுத்தார், தன்னுடைய சரீரம், இரத்தம் மற்றும் உயிரையும் கொடுத்தார்.


லூக் 14:33 – அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம்

வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
கர்த்தர், இயேசுவின் சீடர்களாகிய நமக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அவரைப்போல மாற நம்முடைய சித்தம் அல்ல, அவருடைய சித்தம் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தப்பட வேண்டும். இந்த ஏழை விதவையைப் போல நான் கர்த்தரிடம் ஜெபிக்கிறேன், நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் தாராளமாக கொடுக்க கர்த்தர் நமக்கு திறந்தமனதை கொடுப்பாராக, ஆமேன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *