தானியேல் – II
நாள் 02-04-2022 – தேவ செய்தி

அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.


அது ஒரு மிகவும் சாதாரண நாள், கழுதைக்கும் அதன் குட்டிக்கும் கூட அது சாதாரண நாள்தான். கழுதையும் அதன் குட்டியும் எங்கே இருக்கின்றன என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். அவைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்பதும் அவர் அறிந்ததே. அவைகளை அவிழ்க்க மட்டும் அவர் சொல்ல வில்லை, அவருக்கு அது தேவை என்றும் சொன்னார். யாராவது கேட்டால், அது ஆண்டவருக்கு தேவை என்று சொல்லுங்கள் எனறார். 2001 ஆண்டு நானும் இதைப் போல நம் ஆண்டவராகிய இயேசுவை சந்தித்தேன். இந்த சந்திப்பு என் வாழ்வை முற்றிலும் மாற்றிப் போட்டுவிட்டது. அவருடைய மாபெரும் கிருபைதான் இது, என்னை விடுதலை மட்டும் செய்ய வில்லை, அவருக்கு நான் தேவை என்றும் சொன்னார். ஆயிரகணக்கான மக்கள் உண்மையும் நேர்மையும் கொண்டவர்களாக இருக்கும்போது, என்னை அவருடைய ராஜ்யத்திற்காக அழைத்தார். நானா? என்னையா?

உங்களால் நினைத்துபார்க்க முடிகிறதா?


வெளி 5:5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

அவரால் எந்த முத்திரையையும், வாழ்வின் எந்தப் பகுதியிலும், எந்த தேசத்திலும், எந்த மக்களையும், எந்த முடிச்சையும் அவரால் உடைக்க முடியும்,
நாம் கதரேனருடைய நாட்டிற்கு போவோம், லேகியோன்(6000) அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதனைப் பற்றி நாம் கேள்விபட்டிருக்கிறோம், அவன் அசுத்த ஆவிகளின் கட்டுபாட்டிற்கு கீழ் வசித்துவந்தான், சாத்தான் அவனை ஆட்சி செய்தது.

யாராலும் குணப்படுத்தமுடியாத ஒரு மனிதன் அவன், ஆனால் இயேசுவுக்கு அல்ல. மாற்கு 5 சொல்லுகிறது, அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவன் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தான் ஆனாலும் அவைகளை அவன் முறித்துபோடுவான்’ கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக் கொள்வான், அவனை யாராலும் கட்டுப்படுத்த முடிய வில்லை. ஆனால் இயேசு வரக் கண்டு அவன் ஓடிவந்து அவரை பணிந்துகொண்டு “இயேசுவே, உன்னதமான தேவனின் குமாரனே” என்று சொன்னான்.


எபே 1:22 – எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,
அதற்கு பின் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். அந்த மனிதன் முற்றிலும் சுகமானான், அசுத்த ஆவி அவனை விட்டு விலகியது, அவனுடைய ஆத்துமா சுத்தமானது, அவன் விடுதலை செய்யப்பட்டான். சாத்தான்கள் அனைத்தும் பன்றிகளுக்குள்ளே அனுப்பப்பட்டது.

அசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவன், சங்கிலிகளாலும், விலங்குகளாலும் கட்டப்பட்டவன், கல்லறைகளில் வாழ்ந்தவன், கற்களால் தன்னையே காயப்படுத்தி கொண்டவன், ஏளனபடுத்தப்பட்டவன், கைவிடப்பட்டவன், தனிமையில் இருந்தவன், மேலும் தன் உயிரை மாய்க முயற்சித்தவன் இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் 

அமைதியாக இருந்தான்.


அவன் இயேசுவை பின்பற்ற முடிவு செய்தான், ஆனால் நீ வீட்டிற்கு போ என இயேசு அவனுக்கு கட்டளை கொடுத்தார். அவனுக்காக நான் மிகவும் வருந்தினேன். அவருடைய கிருபை மனிதன் வசிக்கும் அந்தகாரமான இடத்திலும் பிரகாசிக்கும். கர்த்தருடைய கிரியைகளை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க அவன் அழைக்கப்பட்டான். கர்த்தர் அவனை இப்பொழுது மற்றவர்களை விடுலை செய்யும் ஒரு ஊழிகாரனாக மாற்றினார், யாருக்குமே தேவைப்படாத அவனை தனக்காக பயன்படுத்தினார்.


இயேசு, சிலுவையிலே தன்னுடைய இரத்தத்தை சிந்தி நம்மீது இருந்த சாத்தானின் சாவின் சங்கிலியை உடைத்தெறிந்தார், பாவத்தின் அடிமைதனத்திலிருந்து நம்மை விடுவித்தார். நாம் அவரை ஏற்றுக்கொள்வதன் மூலம் அந்தகாரத்தின் ராஜ்யத்திலிருந்து உடனடியாக் ஒளியின் ராஜ்யமாகிய கர்த்தருடைய ராஜ்யத்திற்கு நொடிபொழுதில் மாற்றப்படுகிறோம்.
யோவா 8:36 – ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.


ஜெபம்


அன்பின் பரலோக பிதாவே, இயேசுவுக்காக நன்றி செலுத்துகிறேன், அவர் தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி அந்தகாரத்தின் பிடியிலிருந்து எங்களை பாதுகாத்தார். இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தொடப்படுவார்களாக, பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்படுவார்களாக, அவர்களுடைய வாழ்வின் அந்தகாரங்களில் உம்முடைய ஒளி ஒளிர்வதாக, அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு பரிபூரண வாழ்வு அவர்களுக்கு கிடைப்பதாக, இயேசுவின் வல்லமைமிக்க நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமேன்.


Sol.Lalitha Menon,Aoj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *