தானியேல் – II
நாள் 31-03-2022 – தேவ செய்தி

நீ புத்திரனாயும், சுஅதந்தரனாயுமிருக்கிறாய்.


ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்;

நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். கலா 4:7.

சுதந்தரன் என்றால்…..
  • ஒரு நபரின் மரணத்திற்குப் பின் அவரின் சொத்து அல்லது பதவிக்கு சட்டபூர்வமாக உரிமையுள்ள ஒரு நபர்.
  • அல்லது ஒரு நபருடைய சொத்தை உரிமையாக பெற்றப்பின், அவருடைய பணியை (கிறிஸ்து) தொடர்ந்து செய்வது.
  • கர்த்தருடைய புத்திரனாக மாற வேண்டுமென்றால், மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
  • இயேசு கிறிஸ்துவில் நம்முடைய விசுவாசத்தின் காரணமாக நாம் கர்த்தருடைய பிள்ளைகளாகிவிட்டோம். கலா 26
  • நாம் கிறிஸ்துவில் ஞானஸ்ஞானம் பெற்றதால், இயேசுவை தரித்துக்கொண்டிருக்கிறோம், இயேசுவில் நமக்கு இரட்சிப்பு கிடைத்திருக்கிறது.
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. 
                     
                                                            கலா 3:27.


யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

கலா 3:28.
நமக்குள் எந்த பாகுபாடும் இல்லை ஏனென்றால் இயேசு கிறிஸ்துவில் நாம் அனைவரும் ஒன்று, அபிரகாமின் வித்தும், சந்ததியுமாய் இருக்கிறோம்,


அடிமை/சுதந்திரவாளி


பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. கலா 4:1.

நாம் புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறோம். எனவே நாம் இந்த தேசத்தை சுதந்தரித்தன் மூலமாக SMPS &SMLA ஆக முழு தேசத்தின் பாதுகாவலர்களாகவும், காப்பாளர்களாகவும் இருக்கிறோம்.


அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.

கலா 4:3
நமக்கு எல்லாருக்கும் ஒரு கேள்வி, நாம் உண்மையில் சுதந்திரவாளியா அல்லது சிறுபிள்ளையா?(அடிமை)
இல்லை, நாம் சிறுப்பிள்ளை அல்ல. நாம் சுதந்தரவாளிகள், அவரை அப்பா பிதாவே என்று அழைக்கிறோம்.


மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். (கலா 4:6-8)).
நாம் இப்போது அடிமைகள் இல்லை, ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள். 

கடந்த காலத்தில் நாம் அடிமைகளாய் இருந்தோம், ஏனென்றால் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் சித்தத்தை நாம் அறிய வில்லை மேலும் புறஜாதியினரைப் போல நாம் நடந்து கொண்டோம்.
திரும்பிபோதல் இல்லை
இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? கலா 4:9.


நாம் கர்த்தரால் அறியப்பட்டிருக்கிறோம், இது எவ்வளவு அருமையான கிருபையும் ஆசீர்வாதமாய் இருக்கிறது. எனவே நாம் திரும்பி போகக்கூடாது, துன்பம்தரக்கூடிய சக்திகளுக்கு அடிமையாகாமல் இருப்போம், யூத ராஜ சிங்கத்தின் போல யுத்தம் செய்வதற்கு கர்த்தர் நம்மை மன்னிக்க வேண்டும் என்றும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்போம்.

வேதம் சொல்லுகிறது, நாம் கிறிஸ்துவில் சுதந்தரவாளி. நாம் இப்போது கர்த்தருடைய மகனும், மகளும், சுதந்தரவாளியாகவும், காப்பாளனாகவும், நம்பகத்தக்கவர்களாகவும் இருந்து இந்த தேசத்தை சுதந்தரித்து கர்த்தருடைய ராஜ்யத்தை கொண்டுவரவேண்டும்.
யுதராஜ சிங்கம் போல, உண்மையான வீரர்களைப்போல ஆன்மீக யுத்தம் செய்ய நாம் விழித்தெழுவோம்,

15 ஆண்டுகளுக்கு மேலாக இயேசுவின் படை அணியில் ஊழியம் செய்துகொண்டிருக்கிறேன். இயேசு என்னை பாவத்திலிருந்ஹ்டு மீட்டார் என்ற நம்பிக்கையில் நான் ஞானஸ்ஞானம் பெற்றபோது மீண்டும் பிறந்தேன், அப்பொழுதே விசுவாசத்தில் கர்த்தரின் பிள்ளையானேன். இயேசுவின் படை அணியில் வருவதற்கு முன்பே நான் ஞானஸ்ஞானம் பெற்றிருந்தேன், இயேசுவைப் பற்றியும் அறிந்திருந்தேன் ஆனால் என்னை

திட்டத்தை நான் அறிந்திருக்க வில்லை. இயேசுவின் படை அணியில் சேர்ந்தபின் நான் முன்னிலை வீரனாக கர்த்தருக்காக தேசத்தை மட்டும் அல்ல இந்த உலகத்தையே சுதந்தரிக்கவும், அவருடைய ராஜய்த்தை நிறுவவும் வேலை செய்கிறேன். வீரர்களாக தேசத்தை கர்த்தருக்காக சுந்தரித்தோம், ஏனென்றால் நாமே கர்த்தரின் சுதந்தரவாளியாக இருக்கிறோம். இந்த தேசம் நமதே.


இந்த உண்மைகளை நாம் இயேசுவின் படை அணியில் வந்தபிறகுதான் அறிந்து கொண்டோம். நாம் கர்த்தருடைய சேனையில் வீரர்களாக இருக்கிறோம். அவருடைய ராஜ்யத்திற்காக முழு பலத்தோடும், விசுவாச்த்தோடும் யுத்தம் செய்வோம்.


எல்லா மகிமையும் அவருக்கே.

அப்பா, பிதாவே, இந்த நாளை கொடுத்ததற்கும், உம்முடைய வார்த்தையை பகிர்ந்துகொள்ள கொடுத்த கிருபைக்கும் உமக்கு நன்றி செலுத்துகிறோம், உம்மை ஆராதிக்கிறோம். AOJ - “Telangana” காக நன்றி சொல்லுகிறோம். இயேசுவின் படை அணியில் பயணம் செய்ய உதவினீரே, நன்றி, உம்முடைய வெளிப்பாடுகளை புரிய வைத்தீரே நன்றி, பரிசுத்த ஆவியின் உதவியால் தேசத்தை சுதந்தரிக்க வைத்தீரே, நன்றி. பரலோக நீதிமன்றத்தில் தைரியமாக நிற்க எங்களுக்கு உதவி செய்யும், இயேசுவின் வல்லமை மிக்க நாமத்தில் கேட்கிறேன், 
ஆமேன்.

Sol Innareddy AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *