தானியேல் –II 07-02-2022 – தேவ செய்தி

என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

சங் 45:1

சங்கீதம் 45 மெசியாவைப் பற்றிய சங்கீதமாகும். தன்னுடைய அரசனை புகழ்ந்து பாடியுள்ளார் சங்கீதகாரன். எப்பொழுதுமே கவிஞர் கவிதைகளை எழுதிவைத்துக்கொண்டு கேட்பவர்களுக்கு முன்பாக படித்துக்காட்டுவதுதான் வழக்கம். ஆனால் இங்கு சங்கீதக்காரன் எதையும் முன்கூட்டியே எழுதவில்லை. அவன் பரிசுத்த ஆவியினால் நிறப்பபட்டிருந்தான். அவனுடைய நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.போல் இருந்தது. மணமகனாகிய அரசனையும் அவனது மணமகளைப் பற்றியும்தான் கவிஞன் வாழ்த்திப்பாடுகிறான் என்று கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் நினைத்திருக்கலாம் ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் தீர்க்கதரிசனமாகும். சங்கீதகாரன் எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படும்  சபையோடு இயேசுவின் திருமணத்தைப் பற்றி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.

எபேசியர் 5:22-33 இல் பவுல் கணவன் – மனைவியின் ஐக்கியத்தை கிறிஸ்த்து மற்றும் சபையுடன் ஒப்பிடுகிறார். அவருடைய சந்தோஷத்தில் நாம் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய துன்பத்தால் அவர் நம்மை விலைக்கு வாங்கினார்.

மத் 25 – இயேசு கிறிஸ்துவே மணவாளன் மற்றும் சபைதான் மணவாட்டி. நாம் ஆவலோடு காத்திருக்கும் அந்த நிகழ்வுதான் இயேசுவின் இரண்டாம் வருகை.

2000 ஆண்டுகளுக்கும் மேலாக பூமியும் வானமும் சபையோடு இயேசு கிறிஸ்துவின் இந்த பெரிய திருமண விழாவிற்காக காத்திருக்கின்றன. மணவாளனாகிய இயேசுவுக்கு துதிபாடல்பாடவும் மணவாட்டியாகிய சபையை வரவேற்கவும் தூதர்கள் மிக ஆவலோடு காத்துக்கொன்டிருகிறார்கள். சபையாகிய மணவாட்டி உலகில் இருக்கும் அனைத்து விசுவாசிகளையும் குறிக்கிறது. மணவாட்டி இன்னும் மறுரூபம் ஆகவில்லை. இயேசுவுக்கு தகுதியுள்ள ஒரு மணவாட்டியை ஒப்புகொடுப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் சபையாகிய மணவாட்டியை தயார் செய்துகொண்டு வருகிறார். தன்னுடைய வலதுபக்கத்தில் அமர்வதற்கு முற்றிலும் மறுரூபமாக்கப்பட்ட மணவாட்டியை இயேசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த மாபெரும் நிகழ்விற்கு நாம் தயாராக இருக்கிறோமா? வெளி 19:7-9 வசனத்தின்படி மணவாட்டி பரிசுத்தவான்களுடைய நீதியை மெல்லிய வஸ்திரமாக அணிந்திருக்க வேண்டும்.

எபே 5:27 – கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். மணவாட்டியானவள் பரிசுத்தமாகவும், பிழையற்றதாகவும் இருக்க வேண்டும். ஒரு பரிசுத்தமான கன்னியாக இயேசு கிறிஸ்துவிடம் அவளை ஒப்படைக்க வேண்டும்.

இயேசுவின் மணவாட்டியாவதற்கு, பரிசுத்த ஆவிதான் நம்மை தகுதிபடுத்த வேண்டும்.

கன்னியானவள் தன் கணவனுக்காக காத்திருப்பதுபோல நாமும் அந்த மகிழ்ச்சியான நாளுக்காக காத்திருப்போம். ஆமேன்! அல்லேலூயா!

Sol Subramanian

தானியேல் – II 06-02-2022 – தேவ செய்தி

அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.

லூக் 18:24

கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, சர்வவல்லமையுள்ள தேவனுக்கு மகிமை உண்டாவதாக. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (மத் 6:21)

இந்த வேத வசனத்தை நான் தியானித்துக்கொண்டிருக்கையில் தேவன் என்னை லூக் 16:19-23 வது வசனத்தை நினைவுபடுத்தினார். இயேசு கிறிஸ்து தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு ஒரு செல்வந்தன் மற்றும் ஒரு தரித்திரனுடைய உண்மையான அனுபவத்தை பற்றி கூறினார்.

மத் 18:10 – இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

தரித்திரன் செல்வந்தனுடைய  வாசலில் இருந்தான், செல்வந்தன் அவனை புறக்கணித்தான், அவனை ஒரு பொருட்டாக கருதவில்லை. தரித்திரனுக்கு உதவிகரம் நீட்ட செல்வந்தன் எந்த முயற்சியும் செய்யவில்லை.

லாசருடைய உடல் முழுவதும் பருக்களால் நிறம்பி இருந்தது அவன் செல்வந்தனின் வாசலருகே கிடந்தான். அவனுடைய பருக்களில் இருந்து துர்நாற்றம் வீசியது, சீழ்வடிந்தது, ஈக்கள் மொய்த்தன, நாய்கள் அவன் பருக்களை நக்கியது. லாசர் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்தான், அவனது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருந்தது. ஆனால் லாசருக்கு மருத்துவ உதவி செய்ய இந்த செல்வந்தனுக்கு தோன்றவே இல்லை.

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. (நீதி 3:27).

செல்வந்தனிடம்  எல்லாம் ஏராளமாக இருந்தது ஆனால் லாசருக்கு உதவும் எண்ணம் அவனது இதயத்தில் இல்லவே இல்லை. அதே வேளையில் மருத்துவ உதவிக்காகவும், உணவிற்காகவும் லாசர் போராடிக்கொண்டிருந்தான்.  செல்வந்தனோ மற்ற யாரோ அவனுக்கு உதவ முன்வரவில்லை. இவ்வாறு செல்வந்தனுடைய இதயம்  சுயநலம் மற்றும் உலகபிரகாரமான விஷயங்களில் திசை திருப்பப்பட்டிருந்தது.

தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

1யோவா 4:20,21)

செல்வந்தன் தன்னுடைய செல்வத்தை பூமிக்குரிய ராஜ்யத்தில் சேமித்து வைத்தான். அவன் கற்பனைகளை கைகொண்டான், ஆனால் பரிசுத்த ஆவியின் கனிகள் அவனிடம் காணப்படவில்லை.

வேதம் சொல்லுகிறது இருவரும் மரித்தனர். லாசர் அபிரகாமின் மடியில் ஆறுதல் படுத்தப்பட்டான். செல்வந்தனோ நரகத்தில் இருந்தான். இந்த உவமை நமக்கு ஒரு எச்சரிக்கை.யாக இருக்கட்டும். நம் வாழ்வை ஆராய்ந்து பார்ப்போம். இப்பொழுது நாம் எங்கு இருக்கிறோம்? நம்முடைய வாழ்வில் பரிசுத்த ஆவியி.ன் கனிகளை வெளிப்படுத்துகிறோமா? இல்லை என்றால் மனந்திரும்பி கர்த்தரிடம் மன்னிப்பு கேட்போம்.

ஜெபிப்போம். பரலோக பிதாவே உமக்கு முன்பாக வுருகிறோம் எங்களை மன்னித்து உம்முடைய பாதசுவடில் நடக்கு பரிசுத்த ஆவியால் எங்களை பலபடுத்தும்ம் . இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம். ஆமேன்.

Sol. Dr. G. Kamalin Viji , AOJ

தானியேல்  – II 05-02-2022 – தேவசெய்தி

அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

லூக் 18:14

பரிசேயன் மற்றும் வரிவசூலிப்பவன்  உவமையில், தன்னை தாழ்த்தியதால் வரிவசூலிப்பவனே நீதிமானாக்கப்பட்டவனாய் வீடுதிரும்பினான்.

நீதிமானாக்கப்படுவது என்றால் என்ன?

இறையியல் படி கர்த்தருடைய பார்வையில் ஒருவர் நீதிமானாக்கப்படுவது அல்லது நீதிமான் என்று அறிவிக்கப்படுவது.

நாம் எவ்வாறு நீதிமானக்கப்படுகிறோம்?

ரோம 3:24-26 – இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.

தாழ்த்துதல்

தாழ்த்துதல் என்பது சமர்ப்பணத்தின் ஆவி அல்லது பெருமை கொள்ளாமல் இருப்பது. மேற் கண்ட உவமையிலிருந்து நம்மை தாழ்த்தினால் இயேசு கிறிஸ்துவின் மூலம் நீதிமான்களாக்கப்படுகிறோம் என்பதை புர்ந்துகொள்கிறோம்.

மனத்தாழ்மை என்பது கர்த்தரின் கிருபையை நம்மில் கொண்டுவருவதற்கும் நம்மில் வளர்க்க வேண்டிய ஒரு குணமாகும்.

நீதி 11:2 – அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.

அப்போஸ்தலர் பவுல்: பவுல் என்ற சவுல் பெருமை நிறைந்த யூதர் என்றும், கிறிஸ்தவர்களை கடுமையாக சித்திரவதை செய்து கொல்பவர் என்று அழைகப்பட்டார். ஆனால் இயேசுவை ஒரு முறை சந்தித்த பின் அவர் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.

அவர் நீதிமானாக்கப்பட்டார் மற்றும் இயேசு கிறிஸ்துவின் மூலம் தாழ்மையடைந்தார்.

2கொரி 11:ல் உள்ள பவுலின் தீவிர சாட்சி இதுவே, நம்மைப் போல சிறியவர்களை எடுத்து கர்த்தர் நம்முடைய வாழ்வின் மூலமாக அவருடைய மகிமைக்காக  வல்லமையுடன் பயன்படுதுகிறார்.

இப்பொழுது நாம் நம்முடைய தேவனாகிய இயேசுவை பார்ப்போம்.

தழ்ச்சியின் மிகச்சிறந்த உதாரணம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து.

பிலி 2:8 – அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

சிலுவையிலிருந்து அனைவரையும் மன்னிக்கும் அளவுக்கு இயேசு தன்னை தாழ்த்தினார்.

மத் 11:29 – நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

சங் 25:9 – சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.

நான் ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன், பின்னர் குடும்பமாக நாங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஆவிக்குறிய கிறிஸ்தவர்களாக மாறினோம். எங்களை எங்கள் குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்கினர், எங்களை வெட்கப்படுத்தினர். ஆனால் எங்களை தாழ்த்துவதற்கு கர்த்தர் எங்களுக்கு கிருபை தந்தார், நாங்கள் அவர்களுடைய இரட்சிப்பிற்காக ஜெபிக்க துவங்கினோம். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, இப்போது எல்லாரும் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்ஞானமும் பெற்றுக்கொண்டார்கள். எல்லா மகிமையும் கர்த்தருக்கே உண்டாகட்டும்.

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக பிதாவே எங்களை தாழ்ச்சியின் ஆவியால் நிறப்பும். உம்முடைய அழைத்தலுக்கு நாங்கள் கீழ்படிய எங்களுக்கு உடதவும். இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கின்றோம். ஆமேன்.

Sol. Camilia AOJ

தானியேல் – II 04.02.2022 தேவ செய்தி

அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்துகொள்ளவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.

1இராஜா 1:6

வேதத்தில் அதிகமாக பேசப்படும் ஒரு நபர் யாரென்றால் அது தாவீதுதான். அவன் பெரிய வெற்றியாளனாக இருந்தாலும் அவனால் செய்யப்பட்ட தவறுகளும் வேதத்தில் இடம்பெற்றுள்ளன. அவனுக்கு நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். மேலே உள்ள வசனம் ஒரு தகப்பனாக தான் செய்ய வேண்டிய கடமையிலிருந்து அவன் தவறிவிட்டதை காட்டுகிறது.

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். (நீதி 22:6).

இன்றைய சமூகம் ஒரு குழந்தையை நெறிப்படுத்துவதில் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். (நீதி 23:13).

பல நாடுகள் தங்கள் குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினரிடம் “இயேசு” “கர்த்தர்” மற்றும் “பாவம்” என்ற வார்த்தையை உச்சரிக்க சட்டப்பூர்வமாக தடை விதித்துள்ளன. ஆனால் பைபிள் இதற்கு எதிர்மறையாக சொல்லுகிறது. ஒரு குழந்தையை கண்டிப்புடன் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்றும் பைபிள் கற்பிக்கிறது.

ஒரு குழந்தையை நாம் ஏன் நெறிப்படுத்த வேண்டும்?

பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.

1இராஜா 1:6 – அதோனியா தனது தாய்க்கு மட்டுமல்ல, தகப்பனுக்கும், உடன்பிறந்தவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், முழு இஸ்ரவேலர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியதை காண்கிறோம். கடைசியில் அவன் தனது சொந்த சகோதரனால் கொல்லப்பட்டான், அது அவனது பெற்றோருக்கு நினைத்துபார்க்க கூட முடியாத துயரத்தையும் சோகத்தையும் தந்திருக்கும்.

“அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்துகொள்ளவில்லை;” – இந்த வசனத்தின் மீது கவனம் செலுத்துவோம்.

இவ்வாறு தகப்பன் என்கிற ஸ்தானத்திலிருந்து தாவீது  தவறியதில் 3 கருத்துக்கள் அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  1. தாவீது அவனை கடிந்துகொள்ளவில்லை.
  2. எந்த நேரத்திலும்
  3. “நீ இப்படிச் செய்வானேன்?” என்று கேட்டதே கிடையாது.

நீங்கள் உங்கள் குழந்தைகளை கடிந்து கொள்ள தயாராக இருக்கிறீர்களா? உங்களுடைய குழந்தைகளை நெறிபடுத்தினால் நிச்சயம் அவர்கள் உங்கள் மேல் பிரியமாய் இருக்கமாட்டார்கள். உங்கள் குழந்தைகளுக்கு வெறுப்புண்டாக்க பயப்படுகிறீர்களா? உங்கள் குழந்தைகளை நெறிபடுத்துவதில் நீங்கள் எவ்வளவு சக்தி, முயற்சி மற்றும் நேரத்தை செலவிட்டீர்கள்?

இக்காலத்து குடும்பங்கள் குழந்தைகளை மையமாக கொண்டுள்ளன ஆனால் வேத வசனத்தின்படி இது நல்ல அறிகுறி அல்ல. நம்முடைய குடும்பத்திற்குள் ஆராய்ந்து பார்ப்போம். என் குழந்தையின் எதிர்மறையான போக்குகள் என்ன?

இதை கண்டுபிடிக்க எப்போதாவது முயற்சி எடுத்ததுண்டா?

இல்லையென்றால் இன்றே நேரத்தை ஒதுக்கி, அதை வெளிப்படுத்தும்படி பரிசுத்த ஆவியிடம் கேளுங்கள். நாளைக்கு தள்ளிப்போட வேண்டாம்.

தாவீது அதோனியாவை நெறிப்படுத்த ஏன் தயங்கினான்? அடுத்த வசனம் சொல்லுகிறது,

“அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.”

தாவீது தன்னுடைய அழகான இரண்டு மகன்களை பற்றி பெருமை பட்டிருக்கலாம்.

உங்களுடைய ‘புத்திசாலியான’, ‘அழகான,’ ‘ரேங்க்ஹோல்டர்,’ ‘ஸ்மார்ட்’ மற்றும் ‘திறமையான’ குழந்தையை நெறிப்படுத்த தயங்காதீர்கள்.

நீங்கள் சரியான நேரத்தில் உங்கள் குழந்தைகளை நெறிபடுத்த தவறிவிட்டால், அவர்களுடைய வாழ்வு பாதிக்கப்படும். குழந்தை உங்கள் குடும்பத்திற்கும் அவன்/அவள் வளர்க்க வேண்டிய சொந்த குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும்,, தலைவலியாகவும், தொல்லையாகவும் மாறிவிடும்.

ஒரு காலத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ நாடுகளில் நடந்த மாபெரும் ஆன்மீகச் சிதைவு இது. அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை நெறிபடுத்த தவறிவிட்டார்கள். கர்த்தர் அவர்களுக்கு மத்தியில் ஒரு சக்திவாந்த மாயையை அனுப்பினார், அதனால் அவர்கள் ஒரு பொய்யை நம்பினர். “அதிகபட்ச தனிமனித சுதந்திரம் கொடுத்து எந்தஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் இருந்தால் பிள்ளைகள் தவறானதிலிந்து சரியானதை தேர்ந்தெடுப்பார்கள்.” இது ஒரு வஞ்சகம் என்பதை இந்த சந்ததி நமக்குமுன் உறுதிசெய்துள்ளது. நாம் அதை கண்டுபிடித்த நேரத்தில் பல தலைமுறைகள் ஈடுசெய்ய முடியாத சேதத்தை சந்தித்துவிட்டன, பலர் தங்கள் ஆத்துமாவில் மரித்துபோயினர், மேலும் அவர்களை ஆட்சி செய்யும் அரசாங்கம் கர்த்தரின் சட்டங்களை மதிக்காத அல்லது குறைவாக மதிக்கும் தகுதியற்றவர்களின் கைகளுக்குச் சென்றுது.

Sr. Angelica AOJ

தானியேல் 03-02-2022 – தேவ செய்தி

பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

(லூக் 18:11).

தங்கள் நீதிமான்கள் என்று தங்களை நம்பி மற்றவர்களை இகழ்ந்த சிலருக்கு இயேசு இந்த உவமையைச் சொன்னார்.

சுயநீதி நம் சொந்த தவறுகளிலிருந்து நம் கண்களை குருடாக்குகிறது மற்றும் வாழ்க்கையில் தோல்வியுற்றவர்கள் தவறுகளை செய்யும்போதோ  அல்லது நம்மைப் போன்ற ஆவிக்குறிய கனிகளை தராத மற்றவர்களை இழிவாகப் பார்க்க வைக்கிறது.

ஒரு முறை ஒரு ஜெபக்கூட்டத்தில் என்னுடைய தோழி செய்தியின் போது தூங்கிவிட்டாள். நான் வருத்தப்பட்டேன், இதற்காக அவளை வெறுத்தேன்.கஆனால் சில நிமிடங்களில் நானும் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன். ஆனால் ஆவியில் நான் விழித்திருந்தேன், அந்த வேளையில் கர்த்தர் என்னிடம், “ குற்றவாளிகளென்று  தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள்.” தோழியின் பலவீனத்தில்  அவள் மேல் கருணை காட்டாததால் நான் மனம் வருந்தினேன்.

லூக் 13:2,3 – இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

லூக் 6:41 – நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

நாம் சுய நீதியில் இருக்கும்போது  கர்த்தருக்கு நன்றி சொல்வதில் குறைவு படுகிறோம்.

லூக் 7:36-47 – பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம் பண்ணவேண்டுமென்று இயேசுவை அழைத்தான். அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் அங்கு வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்திக்க வந்தாள். நியாயபிரமாணங்களை பின்பற்றும் பரிசேயன் அந்த ஸ்திரீயை இழிவாகப் பார்த்தான். அதே வேளையில் தான் ஒரு பாவி என்று உணர்ந்த அவளோ இயேசுவினுடைய பாதங்களை தன் கண்ணீரினால் நனைத்து தன் தலைமயிரினால் துடைத்து அவருடைய பாதங்களை முத்தஞ் செய்து பரிமளதைலத்தைப் பூசினாள். இயேசு 47 வசனத்தில் – இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே, எவனுக்கு கொஞ்சம் மன்னிக்கப்பட்டதோ அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்.”

செயல்களில் காட்டப்படும் மனிதனின் நீதி மற்ற மனிதர்களுக்கு முன்பாக மேன்மை பாராட்டை பெறும் ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுமில்லை, ரோமர் 4:2.  நாம் அனைவரும் தீட்டானவர்கள் போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்ல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது – ஏசா 64-6. இயேசுவே நம் பாவங்களை மன்னித்து கர்த்தருக்கு முன்பாக நம்மை நீதிமான்களாக்குகிறார், நம்முடைய செயல்கள் அல்ல.

ரோமி 3:22 – அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

கலா 2:20 -; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

ஆமேன்.

Sol. Sheeba Benjamin AOJ

தானீயேல் – II 02-02-2022

லூக் 19:9 இல் பரிசேயன் மற்றும் ஆயக்காரனை பற்றி இந்த உவமையில் சொல்லப்பட்டிருக்கிறது. பரிசேயன் சுய நீதிக்காரன் மேலும் அவன் ஆயக்காரனை துச்சமாக எண்ணுகிறான். ஆனால் ஆயக்காரனோ தான் ஒரு பாவி என்பதை உணர்ந்து கர்த்தருடைய கிருபைக்காக மனறாடுகிறான், அதனால் அவன் உயர்த்தவும் படுகிறான்.

கர்த்தருடைய வார்த்தை இருபக்கமும் கருக்குள்ள பட்டயம். சுய நீதி மற்றும் பெருமை அல்ல மாறாக கர்த்தர் தாழ்ச்சியையே விரும்புகிறார். விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய கிருபையை இழக்காதபடிக்கு மற்றவரை இகழ்ந்து பேசக்கூடாது. ரோம 12:3 – “தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்” – கர்த்தரைப் பற்றிய பெரும்பாலான மனிதர்களின் புரிதல் உண்மையில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. வேதம் இதற்கு நிறைய உதாரணங்களை தருகிறது. அவைகளில் சிலவற்றை நாம் தியானிக்கலாம்.

ஆதி 29 – யாக்கோபு எவ்வாறு ராகேலுக்கு முக்கியத்துவம் கொடுத்தான் என்றும் தன்னுடைய அன்புக்கு அவளை பாத்திரமாக கருதினான் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 31 வது வசனம் சொல்லுகிறது, “லேயால் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்பதை கர்த்தர் கண்டார்.” லேயால் தன் கணவன் மீதான அன்பிலும், கர்த்தர் மீதான விசுவாசத்திலும் உறுதியாக இருந்தாள். அதனால் கர்த்தர் லேயாளுக்கு 6 பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்தார் மேலும் ராகேலையோ நீண்ட காலமாக மலடியாக வைத்திருந்தார். லேயால் தன் கணவனால் அற்பமாக எண்ணப்பட்டால் ஆனால் கர்த்தருடைய கண்களில் அவளுக்கு கிருபை கிடைத்தது.

1சாமுவேல் 16:11 எவ்வாறு தாவீது, ஈசாயின் மறக்கப்பட்ட ஒரு மகனாக இருந்தான்.  இஸ்ரவேலின் அடுத்த ராஜாவை அபிஷேகம் பண்ணும்போது சாமுவேல் ஈசாயை கேட்கிறார், “உன் பிள்ளைகள் இவ்வளவுதானா?..இன்னும்  எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான, அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான் என்றான்.” கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாவீதை சாமுவேல் அபிஷேகம் செய்கிறார்.

நியாயாதிபதிகள் 6:15 – கிதியோன் தன்னுடைய தகப்பன் வீட்டில் “நான் எல்லாரிலும் சிறியவன் “ என்று கருதினான் ஆனால் கர்த்தரோ அவனை பராக்கிரமசாலியாக கருதுகிறார். நியா 6:12.

யோவான் 4 –சமாரியப் பெண் யூதர்களாலும், கிராமத்தில் இருக்கும் மற்றவர்களாலும் துச்சமாக எண்ணப்பட்டாள் அதனால் தான் யாக்கோபின் கிணற்றில் தண்ணீர் எடுக்க யாரும் வராத நேரத்தில் வந்தாள். அவள் இயேசுவை சந்தித்த பின் நற்செய்தியை அறிவிப்பவளாக மாற்றப்படுகிறாள், அதுமட்டுமல்ல அவள் அநேகரை கர்த்தரிடத்தில் கொண்டுவருகிறாள்.

ஒரு முறை நேர்காணலுக்கு செல்ல வேண்டியிருந்தது.  அந்த நாட்களி என்னிடம்  Ph.D பட்டமோ தேவையான அனுபவமோ இல்லை. நேர்காணலுக்கு வந்திருந்த மற்றவர்களுடைய அதிகமான படிப்பையும் அனுபவத்தையும் பார்த்தபோது எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லாமல் போனது. ஆனால் நான் ஜெபித்தேன், கர்த்தரை சார்ந்திருந்தேன். இன்றும் கூட என்னால் சாட்சியாக சொல்ல முடியும், தகுதியின் அடிப்படையில் கர்த்தரே என்னை தேர்ந்தெடுத்தார்.

ஒருவர் தன்னை எப்படி பார்த்தாலும், அவருடைய குடும்பத்தினரோ அல்லது சமுதாயமோ எப்படி பார்த்தாலும், கர்த்தர் நம்மை எவ்வாறு பார்கிறார் என்பதை பைபிள் நமக்கு கற்பிக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் மற்றவர்களை கர்த்தர் பார்கிறபடி பார்க்க அவருடைய கிருபையை நாட வேண்டும். அதே சமயம் நாம் இகழ்ந்து அற்பமாக நடத்தப்படும்போது மனிதனுடையதை விட சிறந்த தயவை கர்த்தரிடமிருந்து பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்க முடியும். வாழ்வில் நம்முடைய எதிர்பார்புகளுக்கு மேலாக கர்த்தர் நம்மை ஆசீர்வதித்த சூழ்நிலைகளை நாம் சந்தித்திருக்கலாம். அவருடைய கிருபை என்றும் உள்ளது, அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

அன்பு தேவனே,

நாங்கள் வெறுக்கப்படும்போது உம்மைச் சார்ந்திருக்க எங்களுக்கு உதவி செய்யும். எங்களை இகழ்வோருக்கு முன்பாக எங்களை உயர்த்த உமது கண்கள் எங்கள் மீது இருக்கிறது என்று நம்புவதற்கு எங்களுக்கு உதவும். மற்றவர்களில் சிறந்ததையே காணவும், உம்முடைய சிருஷ்டியில் ஒருவரை கூட இகழாமல் இருக்கவும் எங்களுக்கு கிருபைதாரும். ஆமேன்.

Sol G.S. Angelin AOJ Trichy

தானியேல் – II 01-02-2022 – தேவ செய்தி

அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்

(லூக் 18:9)

நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தேன். இதனால் எனக்கு வேதத்தைப் பற்றி நன்கு தெரியும் என்றும் பெரும்பாலானவர்களை விட நான் சிறந்தவன் என்றும் நினைத்தேன். ஆனால் வயது ஆக, ஆக, நான் நினைத்தது எதுவுமே எனக்கு நல்லது செய்யவில்லை என்பதையும், என் வாழ்நாள் முழுவதும் வேதத்தைப் படித்திருந்தாலும் வேதத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் எனக்கு தெரியவில்லை என்பதையும் அறிந்தேன்.

நான் இந்த வசனத்தை படித்துக்கொண்டிருக்கையில்,  நம்முடைய சுயநீதியின்  மீது நாம் அளவுகடந்த நம்பிக்கை வைக்கும் போது நடக்கும் 3 காரியங்களை கர்த்தர்  எனக்கு காட்டினார்.

  1. இது கர்த்தர் நமக்கு கொடுக்கும் வெளிப்பாடு மற்றும் பணியிலிருந்து நம்மை திசை திருப்புகிறது.

மாற்கு 10:20, 21,22,23 ஒரு பணக்கார இளைஞன் இயேசுவை சந்திப்பதைப் பற்றி விளக்குகிறது. தன்னுடைய அறிவும், கற்பனைகளுக்கு கீழ்படிவதும் அவனை நல்லவனாக மாற்றும் என்று அவன் நினைத்திருந்தான் ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தரை வைக்க வேண்டும் என்ற வெளிப்பாட்டை அவன் இழந்துவிட்டான்.

  • இது கர்த்தருடனான நமது ஒற்றுமையை துண்டிக்கிறது.

நியா 16:20; – கர்த்தரோடு இசைந்திருக்காமல் தன் அபிஷேகம் மற்றும் அது கொண்டுவந்த பலத்தின் மீது நம்பிக்கை வைத்த சிம்சோனைப் பற்றி சொல்லுகிறது. அவன் தனது பலத்தின் ரகசியத்தை தெலீலாளுக்கு வெளிப்படுத்தியவுடன் கர்த்தர் அவனை விட்டு விலகினார்.

  • இது கர்த்தருடைய அழைப்பையும், அறிவுறுத்தல்களுக்கும் கீழ்படியாதபடி செய்கிறது:

உபா 10:1- ஆரோனின் புத்திரர்களாகிய நாதாவும், அபியூவும் கர்த்தர் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டு வந்தார்கள். 1சாமு 13 சவுல் ராஜா, சாமுவேல் ஆசாரியன் மட்டுமே செலுத்த வேண்டிய பலியை, அவன் வர தாமதித்ததால் சவுல் ராஜாவே செலுத்தினார் என்றும் பார்கிறோம். இரண்டு நிகழ்விலும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாததின் காரணமாக அவர்கள் தங்களுடைய அபிஷேகத்தை இழந்தார்கள், அதுவே அவர்களுடைய அழிவுக்கு காரணமாயும் இருந்தது.

இந்த வேத வசனங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்ன வென்றால், நாம் கர்த்தரோடு இருப்பது சுத்த கிருபைதான் என்றும், அவருக்கு முன்பாக நம்மை தொடர்ச்சியாகவும், விடாமல் தாழ்த்த வேண்டும் என்பதுதான்.

2கொரி 12:9 – “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்”

2கொரி 4:7-9 மற்றும் மத் 5:5 பொக்கீஷத்தை மண்பாண்டங்களில் (பலவீனமானது) கொண்டிருக்கிறோம் எனவே சாந்தமாக (தாழ்த்தப்பட்ட மற்றும் பணிந்து) இருப்பதுதான் நமக்கு பாக்கியம்.

எனவே இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றி கர்த்த்ரை மட்டுமே மகிமைபடுத்த கூடிய ஒரு வாழ்வை அனுதினமும் விடாமலும் வாழ்வோம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

Sol.Paul Hudson