தானியேல் 03-02-2022 – தேவ செய்தி

பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

(லூக் 18:11).

தங்கள் நீதிமான்கள் என்று தங்களை நம்பி மற்றவர்களை இகழ்ந்த சிலருக்கு இயேசு இந்த உவமையைச் சொன்னார்.

சுயநீதி நம் சொந்த தவறுகளிலிருந்து நம் கண்களை குருடாக்குகிறது மற்றும் வாழ்க்கையில் தோல்வியுற்றவர்கள் தவறுகளை செய்யும்போதோ  அல்லது நம்மைப் போன்ற ஆவிக்குறிய கனிகளை தராத மற்றவர்களை இழிவாகப் பார்க்க வைக்கிறது.

ஒரு முறை ஒரு ஜெபக்கூட்டத்தில் என்னுடைய தோழி செய்தியின் போது தூங்கிவிட்டாள். நான் வருத்தப்பட்டேன், இதற்காக அவளை வெறுத்தேன்.கஆனால் சில நிமிடங்களில் நானும் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன். ஆனால் ஆவியில் நான் விழித்திருந்தேன், அந்த வேளையில் கர்த்தர் என்னிடம், “ குற்றவாளிகளென்று  தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள்.” தோழியின் பலவீனத்தில்  அவள் மேல் கருணை காட்டாததால் நான் மனம் வருந்தினேன்.

லூக் 13:2,3 – இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

லூக் 6:41 – நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

நாம் சுய நீதியில் இருக்கும்போது  கர்த்தருக்கு நன்றி சொல்வதில் குறைவு படுகிறோம்.

லூக் 7:36-47 – பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம் பண்ணவேண்டுமென்று இயேசுவை அழைத்தான். அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் அங்கு வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்திக்க வந்தாள். நியாயபிரமாணங்களை பின்பற்றும் பரிசேயன் அந்த ஸ்திரீயை இழிவாகப் பார்த்தான். அதே வேளையில் தான் ஒரு பாவி என்று உணர்ந்த அவளோ இயேசுவினுடைய பாதங்களை தன் கண்ணீரினால் நனைத்து தன் தலைமயிரினால் துடைத்து அவருடைய பாதங்களை முத்தஞ் செய்து பரிமளதைலத்தைப் பூசினாள். இயேசு 47 வசனத்தில் – இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே, எவனுக்கு கொஞ்சம் மன்னிக்கப்பட்டதோ அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்.”

செயல்களில் காட்டப்படும் மனிதனின் நீதி மற்ற மனிதர்களுக்கு முன்பாக மேன்மை பாராட்டை பெறும் ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுமில்லை, ரோமர் 4:2.  நாம் அனைவரும் தீட்டானவர்கள் போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்ல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது – ஏசா 64-6. இயேசுவே நம் பாவங்களை மன்னித்து கர்த்தருக்கு முன்பாக நம்மை நீதிமான்களாக்குகிறார், நம்முடைய செயல்கள் அல்ல.

ரோமி 3:22 – அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

கலா 2:20 -; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

ஆமேன்.

Sol. Sheeba Benjamin AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *