அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்துகொள்ளவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.
1இராஜா 1:6
வேதத்தில் அதிகமாக பேசப்படும் ஒரு நபர் யாரென்றால் அது தாவீதுதான். அவன் பெரிய வெற்றியாளனாக இருந்தாலும் அவனால் செய்யப்பட்ட தவறுகளும் வேதத்தில் இடம்பெற்றுள்ளன. அவனுக்கு நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். மேலே உள்ள வசனம் ஒரு தகப்பனாக தான் செய்ய வேண்டிய கடமையிலிருந்து அவன் தவறிவிட்டதை காட்டுகிறது.
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். (நீதி 22:6).
இன்றைய சமூகம் ஒரு குழந்தையை நெறிப்படுத்துவதில் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். (நீதி 23:13).
பல நாடுகள் தங்கள் குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினரிடம் “இயேசு” “கர்த்தர்” மற்றும் “பாவம்” என்ற வார்த்தையை உச்சரிக்க சட்டப்பூர்வமாக தடை விதித்துள்ளன. ஆனால் பைபிள் இதற்கு எதிர்மறையாக சொல்லுகிறது. ஒரு குழந்தையை கண்டிப்புடன் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்றும் பைபிள் கற்பிக்கிறது.
ஒரு குழந்தையை நாம் ஏன் நெறிப்படுத்த வேண்டும்?
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
1இராஜா 1:6 – அதோனியா தனது தாய்க்கு மட்டுமல்ல, தகப்பனுக்கும், உடன்பிறந்தவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், முழு இஸ்ரவேலர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியதை காண்கிறோம். கடைசியில் அவன் தனது சொந்த சகோதரனால் கொல்லப்பட்டான், அது அவனது பெற்றோருக்கு நினைத்துபார்க்க கூட முடியாத துயரத்தையும் சோகத்தையும் தந்திருக்கும்.
“அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்துகொள்ளவில்லை;” – இந்த வசனத்தின் மீது கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு தகப்பன் என்கிற ஸ்தானத்திலிருந்து தாவீது தவறியதில் 3 கருத்துக்கள் அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- தாவீது அவனை கடிந்துகொள்ளவில்லை.
- எந்த நேரத்திலும்
- “நீ இப்படிச் செய்வானேன்?” என்று கேட்டதே கிடையாது.
நீங்கள் உங்கள் குழந்தைகளை கடிந்து கொள்ள தயாராக இருக்கிறீர்களா? உங்களுடைய குழந்தைகளை நெறிபடுத்தினால் நிச்சயம் அவர்கள் உங்கள் மேல் பிரியமாய் இருக்கமாட்டார்கள். உங்கள் குழந்தைகளுக்கு வெறுப்புண்டாக்க பயப்படுகிறீர்களா? உங்கள் குழந்தைகளை நெறிபடுத்துவதில் நீங்கள் எவ்வளவு சக்தி, முயற்சி மற்றும் நேரத்தை செலவிட்டீர்கள்?
இக்காலத்து குடும்பங்கள் குழந்தைகளை மையமாக கொண்டுள்ளன ஆனால் வேத வசனத்தின்படி இது நல்ல அறிகுறி அல்ல. நம்முடைய குடும்பத்திற்குள் ஆராய்ந்து பார்ப்போம். என் குழந்தையின் எதிர்மறையான போக்குகள் என்ன?
இதை கண்டுபிடிக்க எப்போதாவது முயற்சி எடுத்ததுண்டா?
இல்லையென்றால் இன்றே நேரத்தை ஒதுக்கி, அதை வெளிப்படுத்தும்படி பரிசுத்த ஆவியிடம் கேளுங்கள். நாளைக்கு தள்ளிப்போட வேண்டாம்.
தாவீது அதோனியாவை நெறிப்படுத்த ஏன் தயங்கினான்? அடுத்த வசனம் சொல்லுகிறது,
“அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.”
தாவீது தன்னுடைய அழகான இரண்டு மகன்களை பற்றி பெருமை பட்டிருக்கலாம்.
உங்களுடைய ‘புத்திசாலியான’, ‘அழகான,’ ‘ரேங்க்ஹோல்டர்,’ ‘ஸ்மார்ட்’ மற்றும் ‘திறமையான’ குழந்தையை நெறிப்படுத்த தயங்காதீர்கள்.
நீங்கள் சரியான நேரத்தில் உங்கள் குழந்தைகளை நெறிபடுத்த தவறிவிட்டால், அவர்களுடைய வாழ்வு பாதிக்கப்படும். குழந்தை உங்கள் குடும்பத்திற்கும் அவன்/அவள் வளர்க்க வேண்டிய சொந்த குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும்,, தலைவலியாகவும், தொல்லையாகவும் மாறிவிடும்.
ஒரு காலத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ நாடுகளில் நடந்த மாபெரும் ஆன்மீகச் சிதைவு இது. அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை நெறிபடுத்த தவறிவிட்டார்கள். கர்த்தர் அவர்களுக்கு மத்தியில் ஒரு சக்திவாந்த மாயையை அனுப்பினார், அதனால் அவர்கள் ஒரு பொய்யை நம்பினர். “அதிகபட்ச தனிமனித சுதந்திரம் கொடுத்து எந்தஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் இருந்தால் பிள்ளைகள் தவறானதிலிந்து சரியானதை தேர்ந்தெடுப்பார்கள்.” இது ஒரு வஞ்சகம் என்பதை இந்த சந்ததி நமக்குமுன் உறுதிசெய்துள்ளது. நாம் அதை கண்டுபிடித்த நேரத்தில் பல தலைமுறைகள் ஈடுசெய்ய முடியாத சேதத்தை சந்தித்துவிட்டன, பலர் தங்கள் ஆத்துமாவில் மரித்துபோயினர், மேலும் அவர்களை ஆட்சி செய்யும் அரசாங்கம் கர்த்தரின் சட்டங்களை மதிக்காத அல்லது குறைவாக மதிக்கும் தகுதியற்றவர்களின் கைகளுக்குச் சென்றுது.
Sr. Angelica AOJ
