அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
லூக் 18:14
பரிசேயன் மற்றும் வரிவசூலிப்பவன் உவமையில், தன்னை தாழ்த்தியதால் வரிவசூலிப்பவனே நீதிமானாக்கப்பட்டவனாய் வீடுதிரும்பினான்.
நீதிமானாக்கப்படுவது என்றால் என்ன?
இறையியல் படி கர்த்தருடைய பார்வையில் ஒருவர் நீதிமானாக்கப்படுவது அல்லது நீதிமான் என்று அறிவிக்கப்படுவது.
நாம் எவ்வாறு நீதிமானக்கப்படுகிறோம்?
ரோம 3:24-26 – இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.
தாழ்த்துதல்
தாழ்த்துதல் என்பது சமர்ப்பணத்தின் ஆவி அல்லது பெருமை கொள்ளாமல் இருப்பது. மேற் கண்ட உவமையிலிருந்து நம்மை தாழ்த்தினால் இயேசு கிறிஸ்துவின் மூலம் நீதிமான்களாக்கப்படுகிறோம் என்பதை புர்ந்துகொள்கிறோம்.
மனத்தாழ்மை என்பது கர்த்தரின் கிருபையை நம்மில் கொண்டுவருவதற்கும் நம்மில் வளர்க்க வேண்டிய ஒரு குணமாகும்.
நீதி 11:2 – அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
அப்போஸ்தலர் பவுல்: பவுல் என்ற சவுல் பெருமை நிறைந்த யூதர் என்றும், கிறிஸ்தவர்களை கடுமையாக சித்திரவதை செய்து கொல்பவர் என்று அழைகப்பட்டார். ஆனால் இயேசுவை ஒரு முறை சந்தித்த பின் அவர் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.
அவர் நீதிமானாக்கப்பட்டார் மற்றும் இயேசு கிறிஸ்துவின் மூலம் தாழ்மையடைந்தார்.
2கொரி 11:ல் உள்ள பவுலின் தீவிர சாட்சி இதுவே, நம்மைப் போல சிறியவர்களை எடுத்து கர்த்தர் நம்முடைய வாழ்வின் மூலமாக அவருடைய மகிமைக்காக வல்லமையுடன் பயன்படுதுகிறார்.
இப்பொழுது நாம் நம்முடைய தேவனாகிய இயேசுவை பார்ப்போம்.
தழ்ச்சியின் மிகச்சிறந்த உதாரணம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து.
பிலி 2:8 – அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
சிலுவையிலிருந்து அனைவரையும் மன்னிக்கும் அளவுக்கு இயேசு தன்னை தாழ்த்தினார்.
மத் 11:29 – நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
சங் 25:9 – சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
நான் ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன், பின்னர் குடும்பமாக நாங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஆவிக்குறிய கிறிஸ்தவர்களாக மாறினோம். எங்களை எங்கள் குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்கினர், எங்களை வெட்கப்படுத்தினர். ஆனால் எங்களை தாழ்த்துவதற்கு கர்த்தர் எங்களுக்கு கிருபை தந்தார், நாங்கள் அவர்களுடைய இரட்சிப்பிற்காக ஜெபிக்க துவங்கினோம். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, இப்போது எல்லாரும் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்ஞானமும் பெற்றுக்கொண்டார்கள். எல்லா மகிமையும் கர்த்தருக்கே உண்டாகட்டும்.
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக பிதாவே எங்களை தாழ்ச்சியின் ஆவியால் நிறப்பும். உம்முடைய அழைத்தலுக்கு நாங்கள் கீழ்படிய எங்களுக்கு உடதவும். இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கின்றோம். ஆமேன்.
Sol. Camilia AOJ
