தானியேல் – II
நாள் : 23-04-2022 – தேவ செய்தி

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
 1யோவா 1:9.

நாம் தொடர்ந்து கர்த்தருடைய ஐக்கியத்தில் இருக்க வேண்டுமென்றால் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும். கர்த்தர் தன்னுடைய வாக்குறுதியில் மாறாதவர் எனவே நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பும் சுத்திகரிப்பும் நிச்சயம் உண்டு. மேலும் கர்த்தர் தன்னுடைய நீதியின்படியே கிரியை செய்கிறார். சிலுவையில் இயேசுவின் இறப்பு கர்த்தரின் நீதியை முழுமையாக்கி இருக்கிறது மற்றும் குற்றமனப்பான்மையிலிருந்து நம்மை விடுவித்திருக்கிறது.

  1. நம்முடைய இருதயத்தை ஆறாய்ந்து அறிய கர்த்தருக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். சங் 51:10 தாவீது சொல்லுவது போல, “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.”
  2. கர்த்தரோடு நாம் நேரத்தை செலவிட வேண்டும். நம்முடைய ஆதாரமாக இயேசு மற்றும் கர்த்தருடைய வசனம் இருக்க வேண்டும். அதனால்தான் பவுல் சொல்லுகிறார் 1தெச 5:17 – “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.”

கர்த்தருடைய வசனத்தை தினமும் தியானியுங்கள். நமக்கு என்ன வெளிப்படுத்த விரும்புகிறார் எனவும், நம்மை எப்படி மாற்ற விரும்புகிறார் எனவும் அவரை கேளுங்கள். நம்முடைய எந்த பாவத்தையும் அவர் நமக்கு உணர்த்தினால் உடனே பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பு கேளுங்கள், பாவத்தின் மீது வெற்றி கொள்ளுங்கள். நம்முடைய அநேக குற்றங்கள் நமக்கு இயேசு சுட்டிகாட்டினால், பயப்படத்தேவையில்லை. உடனே மன்னிப்பு கேட்ப்போம். அவர் நமக்கு உதவுவார். ஏசா 1:18 – உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.

கிறிஸ்துவைப் போல நாம் மாறுவது ஒரு தொடர்ச்சியான செயல் முறையாகும். இது உடனே ஏற்படாது.

கர்த்தருடைய வெளிப்பாடு இல்லாமல் நாம் மாறமுடியாது. அவர் நமது கண்கள், காதுகள் மற்றும் மனதை திறக்க வேண்டும்,

எரே 17:9,10 – எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

ஜெபம்

பிதாவாகிய தேவனே உம்மோடு எப்போதும் ஐக்கியத்தில் இருக்க எங்களுக்கு உதவி செய்யும். எங்களுடைய பாவங்களை மன்னித்து, இருதயங்களை சுத்தமாக்கும். ஆமேன்.
Sol. Sujatha Maduram

தானியேல் – II
நாள்:22-04-2022 – தேவ செய்தி

ச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்;


நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்; தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்..

சங் 52:8.


கர்த்தர் என்னுடைய பலன் என்று விசுவசிக்க கூடிய நீதிமான் மேற்கண்ட வார்த்தைகளை சொல்லுகிறான்,

பச்சையான ஒலிவமரத்திற்கு இரண்டு பொருட்கள் தேவை,

  • சூரிய ஒளி
  • தண்ணீர்

இங்கு பச்சை ஒலிவமரம் கர்த்தருடைய வீட்டில் வளர்கிறது.


தண்ணீர் மற்றும் சூரியஒளியின் ஆதாரம் என்ன?

ஒளியின் ஆதாரம்

வெளி 1:16

அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.

தண்ணீரின் ஆதாரம்

யோவா 7:38

வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

கர்த்தருடை முகத்தின் வல்லமையான பிரகாசம் ஒலிவமரத்தின் மீது பிரகாசிக்கிறது.


ஒலிவ மரம் பசுமையாக இருப்பதன் காரணம் அது கர்த்தருடைய பிரசன்னத்தில் நடப்பட்டுள்ளது.

அது தண்ணீரையும் சூரிய ஒளியையும் சார்ந்திருக்கும் பூமியில் நடப்படும் மரங்களைப் போல அது இருக்காது.

ஒலிவ மரம் தண்ணீருக்கும் சூரிய வெப்பத்திற்கும்கர்த்தரையே நம்பி இருக்கிறது.

ஓசியா 14:9

சொல்லுவது போல

அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை;

நாங்கள் குதிரைகளின்மேல்

ஏறமாட்டோம்; எங்கள் கைகளின்

கிரியையைப்பார்த்து:

நீங்கள் எங்கள் தேவர்களென்று இனிச் சொல்லமாட்டோம்;

திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.

கர்த்தருடைய பிரசன்னத்தில் வாழ்வதுதான் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை. நம்முடைய ஆதாரம் கர்த்தராகத்தான் இருக்க வேண்டும். அவர் நமக்கு ஒளியாகவும் உயிர்தரும் நீராகவும் இருக்க வேண்டும். இதுதான் நம்மை பச்சை ஒலிவமரமாக வளர உதவுகிறது. மஞ்சள் நிறமுள்ள இலைகள் போதுமான வெளிச்சத்தைப் பெறவில்லை என்பதை காட்டுகிறன. (பெரும்பாலான தாவரங்களுக்கு 6 மணி நேர ஒளி தேவை.
ஜெபம்


தோட்டகாரரான எங்கள் பிதாவாகிய தேவனே, இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாங்கள் உம்மிடம் வருகிறோம். எங்கள் மீது கிருபையாய் இரும். என் துரோகத்தை குணமாக்கி என் மீது கருணை காட்டும். என் வளர்சிக்கு நீரே என் சக்தியாய் இரும். உம்மையே நம்பி இருக்கிறேன்.

ஆமேன்.


SOL.PINTA EUNICE, AOJ


தானியேல் – II

நாள் 21-04-2022 – தேவ செய்தி

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி.

-அப்போஸ் 16:31

பவுலும் சீலாவும் சிறைச்சாலைக்காரனை கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்படி வழி நடத்தினார்கள் அது அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது.

முழு குடும்பமும் கிறிஸ்துவினுடைய படிப்பினையை ஏற்று ஞானஸ்ஞானம் பெற்றார்கள்.

சாட்சி

என்னுடைய வாழ்விலும் இப்படித்தான் நடந்தது. நான் ஒரு ரோமன் கத்தோலிக்கனாக இருந்தேன், பல்வேறு விக்கிரகங்களையும், புனிதர்களையும் வணங்கி வந்தேன். எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஆறுபேர், நான் தான் கடைசி. இயேசு என்னைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தார்.

இது எனக்கு சங்கீதம் 135:4 ஐ ஞாபகப்படுத்துகிறது, கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.

அவர் என்னை ஒரு விசுத்திரமான பொக்கீஷ்மாக தேர்ந்தெடுத்தார், நான் ரோமன் கத்தோலிக்க சபையை விட்டு வெளியே வந்தேன். என்னுடைய வீடு என் பெற்றோரின் வீட்டிற்கு அருகாமையில் இருந்தது.

எனவே கிறிஸ்துவை என்னுடைய வாழ்வில் கிறிஸ்துவின் பிரதிபலிப்பை அவர்கள் பார்த்தனர். என்னுடைய தாயார் இயேசுவை ஏற்றுக்கொண்டார். நான் பிறந்தபோது என் தாயினுடைய கருப்பையும் என்னுடனே வெளியே வந்தது, இது அவருக்கு மிகவும் வேதனை அளித்தது. அவருக்கு செய்யப்பட இருந்த அறுவை சிகிச்சை கூட கர்த்தருடைய கிருபையால் நிறுத்தப்பட்டது.

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.

-சங் 4:3

என் தாயார் பைபிளை படிக்க ஆரம்பித்தார். ரோமன் கத்தோலிக்க சபையை விட்டு வெளியே வந்தார். அதற்குபின் என்னுடைய மூன்று சகோதர சகோதரிகளும் எங்களோடு சேர்ந்துகொண்டனர்.

  என் தாயின் இறப்பு கூட ஒரு சாட்சிதான்.  அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும்வரை பாடல்பாடும்படியாய் எங்களிடம் சொல்லி இருந்தார். தாயின் மரித்த உடலை காண வந்தவர்கள் அனைவரும் தாயின் முகம் தேவதூதரின் முகம் போல் இருப்பதாகச் சொன்னார்கள்.

என் தாயை கடைசிவரை பராமரிக்கவும் அவரை கர்த்தரிடம் கொண்டுவரவும் எனக்கும் என் கணவருக்கும் கிருபை கிடைத்தது.

தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

-யோவான் 3:15

என் தாயார் அவருடைய அன்பான தேவனோடு இருக்கிறார்.

கிறிஸ்தவ வாழ்வில் நமது புரிதலை திறக்கும் திறவுகோல் விசுவாசம் மற்றும் பைபிள்.

இரட்சிப்புக்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பவர்கள் கர்த்தருடைய வார்த்தையால் அவரில் வளர வேண்டும்.

எல்லாருக்கும் மேலாகவும், எல்லாவற்றிற்கும் மேலாகவும் நாம் அவருக்கு கீழ்படிய வேண்டும், அன்பு செய்ய வேண்டும் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்.

பவுலும் சீலாவும் சிறைகாவலரை இயேசுவில் விசுவாசம் வைக்குபடியாய் சொன்னார்கள். இது ஒரு சாதாரணமான, எளிய பயனுள்ள வழிகாட்டுதலாக இருந்தது.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே,   இயேசு கிறிஸ்துவை விசுவசித்தன் மூலம் நான் கிருபையால் இரட்சிக்கப்பட்டதற்கு நன்றி. உம்முடைய வார்த்தைக்காக நன்றி. எனக்கு பலன் கொடுக்கும் இயேசு கிறிஸ்துவின் மூலம் எல்லாவற்றையும் செய்ய என்னால் முடியும் என்பதை நான் விசுவசிக்கிறேன். ஆமேன்.

–Sol.Rani John

தானியேல் – II

நாள் -20-04-2022 – தேவ செய்தி

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

மத் 5:4

நம்முடைய வாழ்வில் மிகப் பெரிய துன்பத்தை அனுபவத்துக்கொண்டிருந்தால் அது நம்மை மன உளைச்சளுக்கு ஆளாக்கும். அது மிகப்பெரிய பள்ளம், நம்மால் அதிலிருந்து மீண்டு வர இயலாது.

என்னுடைய வாழ்விலும் கூட மன உளைச்சலுக்கு ஆளாவதற்கான எல்லா காரணங்களும் இருந்தன – என்னுடைய கணவருக்கு இருதயத்தில் கேளாறு, என்னுடைய இரண்டு குழந்தைகளையும் நான் பார்க்க வேண்டும், நோய்வாய் பட்டிருந்த என்னுடைய மாமனார், மாமியார் இவை எல்லாவற்றிற்கும் மேலாக நான் வேலைக்குச் செல்ல வேண்டும். இதை எல்லாம் எப்படி சமாளித்தேன் என்று நான் இப்போது ஆச்சரியப்படுகிறேன்.

அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.

சங் 118:23

அந்த கஷ்ட நாட்களில் நான் கர்த்தருடைய கைகளில் இருந்தேன் மேலும் என்னை அவர் ஏசா 41:10, 43:2,, சங்க 91 போன்ற வசனங்களால் தேற்றினார்.

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

பிலி 4:7.

நாம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை கடந்துச் செல்லும் போது துன்பம் மற்றும் கவலை நம்மை ஆட்கொள்ளும். இயேசு நம்முடைய இருதயத்தில் பிரவேசித்தால் கவலை, தொல்லை கஷ்டம் எல்லாம் பரந்தோடிப்போகும். இது பொரும்பாலும் எதிரியால் ஏற்படுத்தப்படுவது. இயேசுவினுடைய பிரசன்னத்தில் அவனால் இருக்க முடியாது, யாக்கோபு 4:7 சொல்லுவது போல அவர் நம்மை விட்டு ஓடிவிடுவான்,

தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.

2கொரி 7:10

தேவனுக்கேற்ற துக்கம், துன்பங்களை தாங்குவதற்கு நம்மை பலப்படுத்துகிறது ஆனால் லெளகிக துக்கமோ நம்மை பலவீனப்படுத்துகிறது. நம்முடைய பலவீனம், தொல்லை கஷ்டங்கள், அழுகை எல்லாவற்றையும் சந்தோஷத்தின் ஆவி மாற்றிவிடுகிறது. 

அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

சங்கீதம் 30:5

கர்த்தர் நமது துன்பங்களை, நிறைவான நம்பிக்கையாகவும், நம் கண்ணீரை மகிழ்ச்சியாகவும் மாற்றுகிறார். கர்த்தர் நம்முடைய கண்ணீரை துருத்தியில் சேர்த்துவைக்கிறார். நாம் அழுகையில் விதைப்போம் ஆனால் ஆனந்தத்தில் அறுப்போம்.

நாம் ஆறுதல் படுத்தப்படும்போது நம் இருதயத்திலிருந்து துதியும் நன்றியும் தொடர்ச்சியாக உதடுகளில் வெளிப்படும். மலடியாய் இருந்த அன்னாளின் கண்ணீரை கண்ட தேவன் அவளிடமிருந்துதான் ஒரு பெரிய தீர்க்கதரிசியாகிய சாமுவேலை உருவாக்கினார்.

நாம் என்ன துன்ப துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நம்மை அன்பு செய்யும் உள்ளங்கள் புரிந்துகொள்ளாத போது கர்த்தர் நம்மை ஆறுதல் படுத்துகிறார், விடுவிக்கிறார் காப்பாற்றுகிறார்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, எங்களை உம்மோடு அரவணைத்து, ஆறுதல் படுத்துவதற்காக கோடி ஸ்தோத்திரங்கள் அய்யா, துன்பங்களை தாங்கும் பெலன் தாரும், புயலிலும் உம்மை புகழ பலன் தாரும்

ஆமேன்.

SOL.GIJI JACOB

தானியேல் – II
நாள்:19-04-2022 – தேவ செய்தி

கர்த்தர் யோசுவாவை நோக்கி:

இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்;

அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது,

யோசு 5:9.


அடிமைத்தனம் ஒரு நிந்தையே.

இன்று அநேக மக்கள் நிந்தையில் இருக்கின்றார்கள்.


ஏழ்மை ஒரு நிந்தை
வேலை இல்லாமை ஒரு நிந்தை
ஒற்றுமையில்லாமல் இருப்பது நிந்தை
திருமணம் பிளவுபட்டால் அதுவும் நிந்தை
குழந்தைகளின் நடத்தை தவறாக இருந்தால் அது நிந்தை
விவாகரத்து ஒரு நிந்தை
பிள்ளைகளுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது நிந்தை.
குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது நிந்தை
சரியான வாழ்க்கை துணை கிடைக்காமல் இருப்பது நிந்தை
பொருளாதார சிக்கனம் நிந்தை
கடன் வாங்குதல் நிந்தை

இவை அனைத்தும் பல வகையான நிந்தைகள். இவை அனைத்தும் ஆதாமின் பாவத்தின் பலனே. இந்த நிந்தைகள் அனைத்தும் ஒரு மனிதனை அழுத்துகின்றன, அவனை எழ விடாமல், அதிகாரத்தை கையில் எடுத்து தன் வாழ்க்கையை, சபையை, தொகுதியை, மாநிலத்தை, தேசத்தை ஆளவிடாமல் அவனை அமுக்குகின்றன.

உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை அழுத்தும் காரியங்களை பட்டியலிடமுடியுமா?

மத் 11:28-29
 இயேசு சொல்கிறார், - 

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்.


அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.


ஒருவர் போராட்டத்தின் கீழ் இருந்தால்

சரீரத்தில் (நோயோடு)

ஆத்துமா (நிராகரிப்பு, தனிமை, கசப்பு, பகை, பொறாமை போன்றவை)

ஆவி (பாவத்தில்)


இந்த சுமைகளை அகற்றும்வரை அல்லது உங்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்வரை நாடுகளையும், மாநிலங்களையும், ஆத்துமாக்களையும் வெல்வதைப் பற்றி நினைக்க கூட முடியாது.

எனவே நாம் அனைத்து நிந்தைகளிலும் இருந்து வெளியேறுவோம்.
எந்த அடிமைதனத்தையும் அனுமதியாமல் இருப்போம்.
உங்களுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கின்றதா?
உங்களுக்கு வேலை கொடுக்க ஆட்கள் இருக்கின்றார்கள்.
(உங்கள் தொடர்பு எண்ணைத் தரவும்)
நோய்வாய் பட்டிருக்கின்றீர்களா? உங்களுக்கு சுகம் உண்டு. (தொடர்பு எண்ணை தரவும்)
நீங்கள் வேறு எந்த சுமைகளில் இருக்கிறீர்களா?
அதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
இந்த நிந்தைகளில் இருந்து வெளியேறுவோம், கர்த்தருக்காக ஊழியம் செய்வோம்.


SR. ANGELICA AOJ


தானியேல் – II
நாள் 18-04-2022 – தேவ செய்தி

இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக:

மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

லூக் 10:41.

இயேசுவும் அவருடைய சீடர்களும் பிரயாணமாய் போகையில் அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார், அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.

அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள் அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து அவரிடத்தில் வந்து ஆண்டவரே நான் தனியே வேலை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்கு கவலையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்ன்றாள்.

இயேசு அவளுக்கு பிரதியுத்தரமாக மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

தேவையானது ஒன்றே மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

இயேசுவுக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த போது மார்த்தாள் உலகபிரகாரமான காரியங்களால் அலைகழிக்கப்பட்டாள். நாமும் இயேசுவுக்கு அப்படித்தான் ஊழியம் செய்கிறோம். மார்த்தளுடைய வீட்டில்தான் இயேசு இருந்தார் ஆனாலும் அவள் அவருடைய பாதத்தண்டையில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்கவில்லை. அதேபோல நாமும் கட்டிட சபைக்கு செல்கிறோம் ஏன்? மற்றவர்களுக்கு நம்முடைய ஆன்மீகத்தைப் பற்றி காட்டுவதற்கு. எவ்வளவு கவலையான செய்தி?

மத் 15:8 – இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.

இயேசுவுக்கு சேவை செய்ய மார்த்தாளுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவு பெரிய பாக்கியம். ஆனால் மகிழ்ச்சியே இல்லாமல் அவள் செய்கிறாள். நீங்கள் சபைக்குச் சென்று இயேசுவை ஆராதிக்கிறீர்கள் ஆனால் மகிழ்ச்சி இல்லாமல் செய்தால் எப்படி இருக்கும். மார்த்தாள் இங்கு அவளுடைய குறைகளை சொல்லிக் கொண்டிருக்கிறாள். நாம் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லிக்கொண்டு, மகிழ்ச்சியின்றி இயேசுவுக்கு ஊழியம் செய்வதை பற்றி யோசித்துப் பார்ப்போம்.

மத் 7:1 – நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.குறை சொல்வது மற்றும் முணுமுணுப்பது போன்ற காரணத்தால் கர்த்தருக்கு ஊழியம் செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியை கொன்றுபோட்டாள். இப்பொழுது “இதை குறித்து உங்களுக்கு கவலை இல்லையா” என்று இயேசுவை கேட்டு சூழ்ச்சிதிறமையுடன் கையாளுகிறாள். தன்னுடைய கவலையை எல்லார்மேலும் திணிக்கிறாள்.

மற்றவர்கள் கவலைப்படவில்லை என்று அல்ல,

அவர்கள் மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஊழியம் செய்வது என்று கற்றுக்கொண்டார்கள்.

மரியாளைப்போல நாமும் அவருடைய பதத்தண்டையில் அமர்ந்து அவர் சொல்லுவதை கேட்டால் அவர் நம் அருகில் இருப்பார். கர்த்தரை மகிழ்ச்சிப் படுத்துவது எதுவெனில், அவருக்கு கீழ்படிவது, அவரை நம்புவது, அவர் அருகில் இருப்பதுதான்.

மத் 11:30 – என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். இயேசுவோடு நடப்பது, மகிழ்ச்சியோடு அவருக்கு ஊழியம் செய்வது – இதை சாத்தானால் ஒருகாலும் எடுக்க முடியாது.

நம்முடைய எதிர்காலம், ஆரோக்கியம், குழந்தைகள் என நாம் பலவற்றை குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்

பவுல் சொல்லுகிறார்,

பிலி 4:6-7 - நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

இயேசுவின் காலடையில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்கும் நல்ல பங்கை மரியாள் தெரிந்துகொண்டாள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவருடைய பாதத்தில் அமரவேண்டும். எதிரியால் இந்த நல்ல பங்கை எடுக்க முடியாது. இயேசுவோடு இருக்கும் நம்முடைய நெருங்கிய உறவு, மற்றும் நட்பை, எதிரியால் எடுக்க முடியாது. சாத்தானால் எடுத்துக்கொள்ள முடியாத நல்ல பங்கை நாமும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜெபம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம்முடைய காலடியில் அமர்ந்து நீர் சொல்வதை கேட்க எங்களுக்கு சக்தியையும், தைரியத்தையும் தாரும். சாத்தானால் எடுத்துக்கொள்ள முடியாத நல்ல பங்கை தேர்ந்தெடுக்க எங்களுக்கு ஞானத்தை தாரும். உம்மோடு நெருக்கத்தையும், அன்பையும் அதிகமாக்கும், ஆமேன்.

Sol.ArokiaMari, AOJ


தானியேல் – II நாள் : 17-04-2022 – தேவ செய்தி


ம  த்  தே  யு    2 1 : 1 -10

அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.
வசனம் 5 – சகரியாவி தீர்க்கதரிசனத்தின் நிறைவு. சக9:9 சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.

மத் 21:2-3 – இல் சீடர்களிடம் பேசிய இயேசு இப்போது நம்மிடம் பேசுகிறார்.

இயேசு தனது இரண்டு சீடர்களை அனுப்புகிறார். அதேப்போல தேவன் நம்மையும் அனுப்ப விரும்புகிறார். எங்கு செல்ல? இயேசு மற்றும் அவருடைய ராஜ்யத்திற்கும் எதிராக இருப்பவர்கள் மத்தியிலே நம்மை அனுப்ப விரும்புகிறார். சிறை பட்டவர்களுக்கு விடுதலை அளிக்கவும், பிணியாள்ர்களை சுகமாக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் அவர் நம்மை அனுப்புகிறார். இங்கு இயேசு சொல்லுகிறார், ஒரு கழுதையும் அதன் குட்டியும் கட்டப்பட்டிருப்பதை காண்பீர்கள்.

யாராலும் விரும்பப்படாத உன்னை
எனக்காக தெரிந்துகொண்டேன். 

அவர் உன்னுடைய வாழ்க்கையை முழுமையாக்க விரும்புகிறார்.

யாத் 13:13, மோசேவின் பிரமாணத்தின்படி, முதற்பேரான அனைவரும் கர்த்தருக்கு சொந்தம். முதல் கழுதை குட்டியின் கழுத்து முறிக்கப்பட வேண்டும் ஏனென்றால் அது சிறைப்பட்டிருக்கிறது. நம் வாழ்வில் இயேசு வந்தப்பின் நாம் மாறிவிடுவோம்

கழுதை கர்த்தருடைய வசனத்தின் அதிகாரத்தை காட்டுகிறது. நாம் வேதத்தை சார்ந்திருக்க வேண்டும்.

தன்னுடைய கண்களுக்கு கவர்ச்சியானதையே மனிதன் தேர்ந்தெடுக்கிறான். ஆனால் கர்த்தர் தெரியாததை தேர்ந்தெடுத்து இருதயத்திற்கு நல்லதாக மாற்றுகிறார்.

கழுதையைப் போல நம்மையும் தேவன் பயன்படுத்துவதே போதும் என்று இருக்க வேண்டும், உலகெங்கும் நற்செய்தியை சுமந்து செல்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அதற்கான எந்த பரிசையும் எதிர்பார்க்க கூடாது, கழுதையின் மீது அமர்ந்த இயேசுவின் பிரசன்னமே போதுமான பரிசு, மற்றும் ஆசீர்வாதம், எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது, அவருடைய சித்தத்தை நிறைவேற்ற கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழுதைகள் நாம். நம்முடைய வேலைக்காக நமக்கு புகழை சம்பாதிக்க கூடாது, நம்மை பயன்படுத்துவதற்காக நன்றி சொல்லுவோம். அவருடைய கிருபை மட்டுமே போதும் என்று இருப்போம்,

                                 ஜெபம்                                                  

கர்த்தாவே நான் உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன், சிறைப்பட்டிருந்த எங்களை நீர் விடுதலையாக்கினீர். எங்களைப் போலவே சிறைப்பட்டிருக்கும் அநேக மக்களை விடுதலைச் செய்ய எங்களை அனுப்பும். ஆமேன்.


SOL.ALOYSIUS,AOJ


தானியேல் – II
நாள் – 16-04-2022 – தேவ செய்தி

உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால்

போதிக்கப்பட்டிருப்பார்கள்;

உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.

ஏசா 54:13.

நீதி 22:6 - 
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; 
அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

ஏசா 48:17-19 –

 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர்சொல்லுகிறதாவது: 

பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர்நானே. 

கர்த்தருடைய பிள்ளைகள் அவர் சொல்வதைக் கேட்டிருந்தால், அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும். அழிவுக்கு தேவை இருந்திருக்காது.

2001, ஜனவரி 15 ஆம் தேதி கர்த்தர் எனக்கு ஒரு குடும்பத்தை கொடுத்தார். மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் என கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார். என்னுடைய மூன்றாவது மகன் லோகம் யோசுவா, விடுதியில் தங்கி எட்டாம் வகுப்பை அக்டோபர் 2019 ஆண்டு படித்துவந்தான். தீய நண்பர்களோடு பழகியதால் தீய காரியங்களை செய்ய ஆரம்பித்தான். என்னுடைய வேலைதளத்திலும் எனக்கு பிரச்சனைகள் எழும்பின. எபி 1:13 – மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா? இந்த வசனம் என்னை திடப்படுத்தியது.

மார்ச் முதல்வாரத்தில் சகோதரி ஆஞ்சலிக்கா மறுசீரமைப்பு பற்றி வகுப்பில் பேசினார். அதே வேளையில் என் வாழ்விலும் அநேக மறு சீரமைப்புகள் நடந்தது. அவைகளில் ஒன்று என்னுடைய மகன் லோகம் கெட்ட நண்பர்களின் பிடியிலிருந்து விலகினான். எல்லா மகிமையும் கர்த்தருக்கே. அவர் என் மகன் மீது காட்டிய அன்பு, கருணை மற்றும் கிருபைக்காக நன்றி சொல்லுகிறேன். எரே 33:26 -, அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

இந்த வாக்குதத்தம் என் வாழ்வில் நிறைவேறியது. என் மகன் CBSE 10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறான். எல்லா மகிமையும் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்கே உண்டாகட்டும்.

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். 
மா   ற்  கு   1  1  :  2  4  .

சங் 37:4 – கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
ஏசா 54:10 – மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிறகர்த்தர் சொல்லுகிறார்.
யோவா 6:45 – எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, நான் இழந்த எல்லாவற்றையும் எனக்கு திருப்பி கொடுத்ததற்காக நன்றி. என்னையும் என்னுடைய குடும்பத்தையும் உம் கரத்தில் ஒப்படைக்கின்றேன். தங்களிடம் இருந்ததை இழந்து தவிக்கும் அநேகர் வாழ்வில் மீண்டும் திரும்ப கிடைப்பதாக, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே. 

ஆமேன்.

Sol.Sikap,AOJ


தானியேல் – II
நாள்:15-04-2022 – தேவ செய்தி

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது;

அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.


சங்க் 119:71.

நாம் தினமும் உபத்திரவத்திற்குட்படுகிறோம், அதற்கான காரணங்கள் வேறுபடலாம்.

  • கடமையில் நமது அலட்சியம்
  • நமது கவனக்குறைவு
  • நமது பலவீனங்கள்
  • நமது நோய்கள்
  • மற்றவர்கள் உங்கள் மீது பொறாமைப்படுகிறது
  • நமது உழைப்புக்குப் போதுமான பலன் கிடைப்பதில்லை
  • பிறரை காட்டிகொடுப்பது முதலியன
காரணம் எதுவாக இருந்தாலும் சரி, 

கர்த்தர் நம்மைப் பற்றியும் நம்முடைய உபத்திரவத்தைப் பற்றியும் கவலைப்படுகிறார். நாம் உபத்திரவப்படும்போது அவரும் துன்பப்படுகிறார். 

ஏசா 52:5 – இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.

அவருடைய பிள்ளைகள் அவரோடு இருக்கும்வரை அவர் மகிழ்ச்சியடைகிறார். அவருடைய பிள்ளைகள் அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படும்போது, அவரும் துன்பப்படுகிறார்.

உபத்திரவப்படும்போது, மக்கள் அவரை நோக்கி அழும்போது அவர் அவர்களுடைய அழுகுரலைக் கேட்கிறார், பரத்திலிருந்து வந்து அவர்களை காப்பாற்றுகிறார். அவருடைய பிள்ளைகளை காப்பாற்ற தேவையான எல்லாவற்றையும் அவர் செய்கிறார். அவர்களுடைய சூழலில் ஒரு மாற்றத்தை கொண்டுவருகிறார்.

நம்முடைய வாழ்வில் தேவையான மாற்றங்களை கொண்டுவந்து, நாம் எங்கு தவறு செய்துவிட்டோம் என்பதையும், எங்கு நாம் பாதுகாப்பற்று இருந்தோம் என்பதையும் நமக்கு சுட்டி காட்டுவார்.

ஆன்மீக யுத்தம் செய்யும் பல யுத்திகளை அவர் நமக்குச் சொல்லிதருவார் –

நீ எப்படி யுத்தம் செய்துகொண்டிருக்கிறார், எப்படி வேறுவிதமாகச் யுத்தம் செய்து வெற்றி பெறலாம், எப்படி சில சூழ்நிலைகள் மற்றும் சோதனைகளை இயேசுவோடு நிற்பதன் மூலம் தவிர்த்திருக்கலாம், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலிருந்து தப்ப என்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் போன்றவை.பின்னர் உங்களுடைய முழுவாழ்க்கையும் மாறிவிடும். இதனால்தான் சங்கீதகாரன் சொன்னான், நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

நான் தமிழ்நாட்டில் வசித்துக்கொண்டிருப்பதால் நான் தமிழ் மொழியை கற்றேன். தமிழில் சரளமாக பேச கர்த்தர் எனக்கு கிருபை தந்தார். நான் இரட்சிக்கப்பட்டேன், அநேக பயிற்சி கூட்டங்களை தமிழில் நடத்தியிருக்கின்றேன் அதனால் தமிழில் வேதத்தை நன்றாக வாசிக்க கற்றுக்கொண்டேன். ஆங்கில வேத வசனங்கள் எனக்கு அவ்வளவு சரளமாக வராது. ஒரு காலகட்டத்தில் ஆங்கில வேதாகமத்தை பயன்படுத்தும்படி கர்த்தர் எனக்குச் சொன்னார். 3,4 முறை ஆங்கில பைபிளை பயன்படுத்த ஆவியில் உணர்த்தப்பட்டேன். ஆனால் நான் வேண்டும் என்றே இதை நிராகரித்தேன். திடீரென இந்தியா முழுவதும் எஸ்கோல் தேசிய அறுவடை பெருவிழா தரிசனத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ள நான் சென்றேன். ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது, ஆங்கில வேதாகம வசங்களை பயன்படுத்துவது போன்றவை எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் கர்த்தர் கொடுத்த அறிவுறைப்படி நான் கேட்டு, ஆங்கில வேதாகமத்தை பயன்படுத்த தொடங்கியிருந்தால் இந்த பிரச்சனையை ஈசியாக சரிசெய்திருக்கலாம். நான் கர்த்தருக்கு நன்றி சொன்னேனெ மேலும் அவரிடம் அதற்காக மன்னிப்பு கேட்டேன். அவர் பிரச்சனையை தீர்த்து வைத்தார், ஆங்கிலத்தில் சரளமாக பேச உதவினார். இப்போது பரிசுத்த ஆவியின் உந்துதல்களை நான் கவனமாக கேட்கிறேன், அதற்கு கீழ்படிகிறேன். எல்லா மகிமையும் கர்த்தருக்கே உண்டாகட்டும்.

Sr. Angelica AOJ



தானியேல் – II
நாள்: 14-04-2022 – தேவ செய்தி

இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

ஏசா 12:2.

கர்த்தரே நம்முடைய இரட்சிப்பு என்கிறார், ஏசாயா தீர்க்கதரிசி. இரட்சிப்பு என்பது கர்த்தர் என்கிறார் ஏசாயா. தன்னுடைய வாழ்வில் அநேக இன்னல்களை அவர் மேற்கொண்டார் ஆனால் அவர் திட மனதுடன் இருந்தார்.

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

சங் 18:2.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

ஏசாய 40:31.


ஏசாயா 40:21 ல் சொன்னபடி – நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?

புயல் காற்றும், தீவிரமான மழை வந்தாலும் கழுகு இதைப் போன்ற தடைகளை தோற்கடிக்கும். ஒருவன் தன்னை யகோவா தேவனில் தன்னை நிலை நிறுத்திக்கொள்பவர் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை நடத்துவார். யோபு தன்னுடைய வாழ்வில் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தபோது அவனது மனைவி கர்த்தரை நிராகரிக்கும்படி அவனிடம் கேட்கிறாள். அதற்கு பதிலாக, அவள் ஒரு முட்டாள், ஒரு முட்டாளைப் போல பதில் அளிக்கிறாள் என்று யோபு கூறினார்.

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்;

யோபு 13:15.


வாழ்வில் என்ன இன்னல்கள் நேர்ந்தாலும், நான் அவரை நிராகரிக்க மாட்டேன் என்று அவர் சொன்னார். கர்த்தருடைய இரட்சிப்பிற்காக நான் காத்திருப்பேன் என்று யோபு சொன்னார்.

கர்த்தர் இஸ்ரவேலர்களை செங்கடலை கடக்கச் செய்தபோது மோசேவும், மிரியாமும் கர்த்தரை புகழ்ந்து பாடியது


கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன்,

(யாத் 15:2);

சிவந்த சமுத்திரம் அவர்களுக்கு முன்பக இருந்தது அதே வேளையில் எகிப்தின் சேனை அவர்களுக்கு பின்னால் இருந்தது. கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே தன் கையில் இருந்த கோலை சமுத்திரத்தின் மேல் நீட்டினார். ஒரு சூராவளி காற்றை கர்த்தர் உருவாக்கினார், அதன் மூலம் கடல் நீர் பின் வாங்கியது, இஸ்ரவேலர்கள் நடப்பதற்கு காய்ந்த தரை உண்டானது. இந்த காய்ந்த வழியே அவர்கள் இஸ்ரவேலர்கள் கடந்து சென்றனர். அவர்கள் பிந்தொடர்ந்து வந்த எகிப்தியரின் சேனை மூழ்கடிக்கப்பட்டது, அதில் இருந்த அனைவரும் கடலால் விழுங்கப்பட்டனர். கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளை பாதுகாத்தார்.

யாத் 14:20-30.

சாட்சி

எனக்கு பிரியமானவர் கர்த்தரோடு இருக்க நவம்பர் 8 ஆம் தேதி 2018. என்னுடைய இரண்டு மகன்களும் வேலையின் நிமித்தம் வெகுதொலைவில் வாழ்ந்து வந்தார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டபின் எங்களுடைய குடும்பங்களை விட்டு இங்குதான் குடிவந்தோம். எங்களுடைய ஓய்வுக்குப் பிறகு கர்த்தரை முழுநேரம் சேவிக்க ஆரம்பித்தோம். எங்களுடைய பாரம்பரிய குடும்பத்தில் எங்களை வெட்கப்பட கர்த்தர் விடவில்லை. ஏசா 12:2, சங் 18:2.
2019 ஆம் ஆண்டு நான் இயேசுவின் படை அணியில் சேர்ந்தேன், இது என் குடும்பத்திற்கு ஒரு ஆசீர்வாதமாக இருந்தது. இது என் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனையாகவும் இருந்தது. என்னுடைய குழுவில் பல காரியங்களை குறித்து பேசவும் புது விஷயங்களை கற்றுக்கொள்ளவும் இது எனக்கு உதவியது.

ஜெபம்

அப்பா பிதாவே, வாழ்வில் நீர் எனக்கு கொடுத்த அமைதி, துயரத்தில் இருக்கும் மக்களுக்கு ஆறுதலாக இருப்பதாக, ஆமேன்.


Sol.Shylaja Satheesan