தானியேல் – II

நாள் 19-05-2022 – தேவ செய்தி


பரலோக நாணயம்
பரலோகத்தின் பொக்கீஷங்களை நாம் எப்படி சம்பாதிக்கலாம்?


ஒவ்வொரு நாட்டிலும்/ராஜ்யத்திலும் நாணயம் உள்ளது. நம்முடைய பிதாவின் பரலோக ராஜ்யத்திலும் நாணயம் உள்ளது. அது என்ன என்று உங்களால் கணிக்க முடியுமா? பரலோகத்தின் நாணயம் ‘அன்பு’. பரலோகத்தில் வசிப்பவர்கள் அன்பு என்னும் நாணயத்தின் மூலமாகத்தான் கொடுக்கல் வாங்கல் செய்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் விலையேறப்பெற்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் வாங்கப்பட்டனர் மேலும் இரட்சிப்பு என்னும் பரிபூரண அன்பளிப்பை பெற்றனர். பரலோகத்தில் கொடுக்கல், வாங்கல் அன்பினால் நிறைவேற்றப்படுகிறது.
ஒரு விசுவாசி தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு பரலோக பொக்கீஷத்தை சம்பாதிக்க முடியும்?
பூமியின் இருக்கும் ராஜ்யத்தில் கூட உண்மையான கிறிஸ்தவர்கள் இந்த நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு இந்த உலகத்தின் பொருட்செல்வம் பயனற்றது.


இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

மத் 6:24.


பரிசேயர்கள் இயேசுவை எப்படியாவது மடக்கலாம் என நினைத்து அவரிடம் கேட்டனர், “இராயனுக்கு வரி கொடுப்பது நியாயமா இல்லையா? அவர்களுடைய கெட்ட எண்ணத்தை புரிந்துகொண்ட இயேசு அவர்களுக்கு பதில் சொன்னார்,


இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

மத் 22:21.


இவ்வுலகில் வசிக்கும் ஒரு நல்ல விசுவாசிக்கு எல்லாவற்றிற்கும் மேலான ஒரு பொருளாக பணம் இருக்கது. கர்த்தர் என்ன கொடுத்திருக்கிறாரோ அதில் திருப்தியாய் இருக்க அவன் அறிந்திருப்பான். உலகபிரகாரமாக செல்வந்தர்களாக இருப்பவர்களைப் பார்த்து அவன் பொறாமைபடுவதும் இல்லை.

கர்த்தர் தங்களுக்கு நியமித்ததை நிறைவேற்றுவது மற்றும் ஆத்தும ஆதாயம் செய்வதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

சங் 37:16.


அழிந்து போகும் இந்த உலகத்தின் செல்வங்களை சம்பாதிப்பது எப்படி என்று இவ்வுலகத்தார் கவலைப் பட்ட்டுகொண்டிருக்கிறார்கள். சாத்தான் அவர்களுடைய கண்களை குருடாக்கிவிட்டான், மேலும் இவ்வுலக செல்வத்தை அடைவதுதான் மகிழ்ச்சியின் மந்திரம் என அவர்களை ஏமாற்றியும் இருக்கிறான்.


இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,

1திமோ 6:17.


உண்மையான விசுவாசிகள் வேதத்தை வாசிப்பது அதன்படி நடப்பது இதுவே அவர்கள் சேர்த்து வைக்கும் பரலோக பொக்கீஷம். அன்பிலும் ஒற்றுமையிலும் ஒருமித்து அவர்கள் வாழ்கிறார்கள், மேலும் தங்களுடைய ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற பரலோக பொக்கீஷத்தின் மீது அவர்கள் கண்கள் நிலைத்திருக்கிறது.


பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்,

1திமோ 6:10.


பரலோக ராஜ்ய பணத்தின் மதிப்பு
அன்பின் வல்லமை அதிகம் அதை தெரிந்தவர்களுக்கே அதன் உண்மை தெரியும். அதன் மூலம் உங்களுடைய குழந்தைகளின் கீழ்படிதலை வாங்க முடியும், கணவருடைய நம்பகத்தன்மையை வாங்க முடியும், உனது மனைவியின் கரிசனையை வாங்க முடியும், உன்னுடைய பெற்றோர்களின் அமைதி, எஜமானனின் கிருபை, உங்களுடைய வேலைகாரனின் விசுவாசம், ஒரு புதிய மனிதனின் நம்பிக்கையைக் கூட நம்மால் வெல்ல முடியும் இந்த அன்பால்.

அன்புக்கு ஒரு காந்த சக்தி உள்ளது, அது அவர்களின் ஆவி மற்றும் அதன் விளைவாக அவர்களின் மனசாட்சியை உயிருடன் வைத்திருப்பவர்களிடம் மட்டுமெ அது செயல்படும்.அதனால் தான் கர்த்தரின் சித்தத்தின்படி அழைக்கப்பட்டவர்களை அவருடைய அன்பு ஈர்க்கிறது. உலக பிரகாரமாக வாழ்ந்து தங்கள் மனசாட்சியை சாகடித்துவிட்ட மக்களின் மீது அன்பு வேலை செய்யாது.


அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மத் 19:21.


ஆனால் விசுவாசிகளாகய நாம் கர்த்தருடைய வருகைக்காக ஆவலோடு காத்திருக்கும் வேளையிலே அன்பின் நாணயத்தை கொண்டு கொடுக்கல் வாங்கல் செய்வோம், இந்த உலக செல்வத்தால் அல்ல.

ஜெபம்


ரலோக பிதாவே, நாங்கள் எப்போதும் பரலோக நாணயத்தைக் கொண்டு பரிவர்த்தனை செய்ய எங்கள் வாழ்வை மாற்றும். பரிசுத்த ஆவியின் வல்லமையை எங்களுக்குள் பொழிந்தருளும். துன்ப துயரத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக இருந்து அவர்களுடைய ஆத்துமாவை கர்த்தருக்காக ஆதாயம் செய்ய கிருபைத்தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.


Sol. Neelam Sharma

தானியேல் – II

நாள் – 18-05-2022 – தேவ செய்தி

அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறார்.

2 சாமு 22:49.

அநேக எதிரிகளை தாவீது தன் வாழ்வில் சந்திக்க நேர்ந்தது. தனக்கு எதிராக எதிரிகள் ஏன் எழுந்திருக்கிறார்கள் எனபது அவனுக்கு தெரியும். அவன் பாவம் செய்த போது தேவன் அறிவித்த தண்டனைகளில் ஒன்று, இவ்வாறாக இருந்தது,

இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி,

2 சாமு 12:10,11

தாவீதின் மகன் அவனுக்கு எதிராக எழுந்த அவனுக்கு பகைவன் ஆனான். தாவீதின் படையை அப்சலோம் திரட்டினான்,  அரண்மனையை விட்டு தாவீதை விரட்டினான், மேலும் தன்னையே ராஜாவாக அறிவித்தும் கொண்டான். தாவீது ராஜா தன் பாவங்களுக்காக மனம் வருந்தி கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்டிருந்தாலும் இஸ்ரவேல் மக்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் வரை அப்சலோமின் அரசாட்சியின் கீழ் இருந்தனர். தாவீதின் அனைத்து பாவங்களையும் தேவன் மன்னித்தார். ஆனால் பாவத்திற்கான தண்டனை அவன் மேல் இருந்தது. தண்டனை காலத்தில் கூட தாவீது கர்த்தரை நாடினான், அவரோ அவனோடு இருந்து அவனுக்கு சகாயம் செய்தார்.

சில காலத்திற்கு பிறகு ராஜ்யபாரம் அவன் கைக்கு வந்தது, இஸ்ரவேலர்கள் மீண்டுமாய் அவன் அரசாட்சிக்கு கீழ் வந்தனர்.

இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து,

2 சாமு 19:41.

அவர்கள் தாவீதின் மேல் உரிமை கொண்டாட தொடங்கினர்.

தாவீதின் திரும்பி வருவதற்கான அழைப்பு பத்து கோத்திரங்களில் இருந்து வந்தது ஆனால் சில தவறான நிர்வாகத்தால், உண்மையான வரவேற்பு யூதாவல் வழங்கப் பட்டது. இது ஒரு புதிய வெளிப்பாட்டிற்கு வழி வகுத்தது, அதாவது நீண்ட காலமாக ராஜ்யத்தில் பிளவை கொண்டு வந்தது. ஆகவே, “பட்டயம் என்றும் உன் வீட்டை விட்டு விலகாதிருக்கும்” என்னும் தீர்க்கதரிசன் வார்த்தை நடைமுறைக்கு வந்தது.

இன்றும் கூட அநேக விசுவாசிகள் சோதனைகள் மற்றும் உபத்திரவங்களுக்கு உள்ளாகிறார்கள், அதன் மீது அவர்களால் வெற்றிகொள்ள முடிவதில்லை, அதற்கான காரணங்களையும் அவர்களுக்கு தெரியாது.

ஒரு தேசமாக இந்தியா பல ஆண்டுகளாக சாத்தானின் அடிமைதனத்தின் மீழ் இருந்து வருகிறது. ஆனால் இப்போது தண்டனையின் காலம் முடிவுக்கு வருகிறது. இயேசு கிறிஸ்து மெதுவாக இந்த தேசத்தை கைப்பற்றுகிறார்.

இது நடக்கும் நேரத்தை கவனியுங்கள்.  இயேசுவின் அரசை உங்கள் பகுதிகளில் நிறுவுவது உங்களின் கடமையாகும். எந்தெந்த அடிமைதனத்தின் கீழ் உங்களுடைய மக்கள் இருக்கிறார்கள்? ஒவ்வொன்றாக அவைகளை துரத்துங்கள்.

தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்;

கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.

2 சாமு 21:1.

உங்கள் தொகுதிகளில் ஏதேனும் வியாதியோ, வரட்ச்சி (கர்த்தருடைய வார்த்தைக்காக) அல்லது மக்களை தொடர்ந்து சித்திரவதைச் செய்கிறதா? அதற்கான காரணத்தை கர்த்தரிடம் கேளுங்கள். அதற்கான பதிலையும் அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்.

2சாமு 21:14.

உங்கள் தேசத்திற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஏதாவது இன்னும் இருக்கிறதா?

கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்குமுன்பாகப் பாடின பாட்டு.

2 சாமு 22:1

இந்தியா விடுதலையின் பாடலை வெகுவிரைவில் பாட போகிறது. அதன் அடிமைத்தனம் முடிவுக்கு வருகிறது. இந்த தேசத்தை ஆண்ட – பாவங்கள், சாபங்கள், பொய் தேவர்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக இந்த தேசத்தை விட்டு ஓடுகிறார்கள். இதிய தேசமே! நீ கட்டப்படுகிறாய், நீ உன் அணிகலன்களை மீண்டும் அணிந்து கொண்டு மகிழ்ந்து நடனமாடுபவர்களோடு நீ நடனமாடுவாய்.

ஆமேன்.

–Sr. Angelica AOJ

தானியேல் – II

நாள்: 15-05-2022 – தேவ செய்தி

நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்: (யோவா 15:16)

நாம் அல்ல அவரே நம்மை தெரிந்து கொண்டார் என்று இந்த வசனத்தின் மூலம் தேவன் சொல்லுகிறார். இந்த உலகத்தின் அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்னரே தேவன் நம்மை தெர்ந்து கொண்டார்.

எபே 1:4 – அவர் நம்மை மட்டும் அல்ல நம்முடைய பெற்றோர்களையும், சகோதர சகோதரிகள், கணவன், மனைவி பிள்ளைகள் என அனைவரையும் தெரிந்து கொண்டார். இப்பொழுது நம்மிடம் இருப்பதெல்லாம் தேவனால் ஏற்கனவே திட்டமிடப்பட்டது. கர்த்தரிடமிருந்து நமக்கு கொடுக்கப்பட்ட கொடைகள் என்று அவைகளை சொல்லலாம். நம்முடைய வாழ்வில் என்ன நடந்தது என்ன நடக்கப்போகிறது என்பதை நம்மை உருவாக்குவதற்கு முன்னமே திட்டம் போட்டு வைத்திருக்கிறார்.

தங்களுடைய கடந்த அனுப்வத்தினால் அநேகம்பேர் மிகவும் கசப்படைகிறார்கள். தேவனோடு அவர்களுடைய உறவு சாதரணமானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட மக்கள் சாத்தானுடைய தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

ஆவியில் மறுபிறப்படைந்த அநேக விசுவாசிகள் கூட இவ்வாறாக பின்வாங்கி போய் விடுகிறார்கள்.

நான் உங்களுக்கு என்னுடைய சாட்சியை சொல்லுகிறேன்.

நான் ஒரு இந்து குடும்பதிலிருந்து வருகிறேன். 26 ஆண்டுகளுக்கு முன் ஒரு சந்தைக்கு போய் இருந்தேன். அது மாலை வேலையாய் இருந்தது. சில கிராமத்து இளைஞர்கள் என்னை நோக்கி தவறான வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்தனர். நான் அங்கிருந்து உடனே வெளியேற நினைத்து, வெளியே செல்லும் வழியை தேடினேன் அது எனக்கு தெரியவில்லை. அங்கிருந்த சில இளைஞர்களை நான் வழி கேட்டேன். வேண்டுமென்றே அவர்கள் எனக்கு தவறான வழியை காட்டினார்கள். நான் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஒரு குரல் கேட்டது, இந்த இளைஞர்களை ஒருபோதும் நம்பாதே, என்று. ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் நான் பின்நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அந்த இளைஞர்கள் என்னை பின் தொடர்ந்து வந்தனர், நான் அங்கிருந்து ஒரு பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்தேன். இயேசுவை நான் ஏற்றுக்கொண்ட பின் அவருடைய கிருபையால் தான் நான் காப்பாற்றப்பட்டேன் எனென்றால் அவர் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த நிகழ்வு நடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நான் நண்பர்கள் மூலமாக இயேசுவைப் பற்றி தெரிந்து கொண்டேன். மூன்று ஆண்டுகள் இயேசுவோடு நான் நடந்த பின், முன்பு கேட்ட அதே குரலை நான் மீண்டும் கேட்டேன். யோவான் 15:16 இல் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு உணமி என்பதை நான் அறிந்து கொண்டேன் – அதாவது இந்த உலகின் அடித்தளம் போடுவதற்கு முன்பாகவே தேவன் நம்மை தெரிந்து கொண்டார், ஆனால் நமக்குத்தான் அது தெரிய வில்லை.

கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் அழைத்திருக்கிறார், மேலும் தேர்ந்தெடுத்திருக்கிறார், எரே 1:5 சொன்னது போல, நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.

எனவே சோதனைகள் வரும்போது ஏமாற்றமடையாதீர்கள் அல்லது நம்பிக்கையை இழக்காதீர்கள் அல்லது மனச்சோர்வடையாதீர்கள் ஏனென்றால் நற்செய்தி  என்னவென்றால் நமது அனைத்தும் கர்த்தருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

ஒரு நாள் உள்ளூர் சந்தையில் பல ஆண்டுகளுக்கு முன் நான் கேட்ட அந்த குரலைப்பற்றி வெளிப்படுத்துமாறு ஜெபித்தேன்.  தேவன் அதற்கு பதிலாக எரே 1:5 மூலமாக என்னிடம் பேசினார்.

என்னுடைய அனுபவத்திலிருந்து நான் சொல்ல விரும்புவது, என்ன நடந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இயேசுவோடு முன்னேறுவோம்.  அவர் நம்மை வழிநடத்துவார். பரலோகத்திற்கு நாம் செல்வதற்கு முன்பாக தேவன் எதை செய்யுமாறு நம்மை பணித்திருக்கிறாரோ அவைகளை செய்து முடிப்போம்.

எங்கள் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து, உம்முடைய வார்த்தையை புரிந்துகொள்ள எங்கள் மனகண்களையும் திறந்துவிட்டதற்காக நன்றி. ஆமேன்.

SOL. RICHA JAIN, AOJ

தானியேல் – II

நாள் 14:05-2022 – தேவ செய்தி

அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு:நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.

லூக் 17:10

நாம் அனைவரும் ஊழியகாரராக இருந்திருக்கலாம் அல்லது ஊழியகாரரை நியமித்த அனுபவம் நமக்கு இருக்கலாம். மற்றவர்களுக்கு ஊழியம் செய்பவன் தான் ஊழியகாரன். ஊழிய காரனுக்கு போதிய சுதந்திரம் கிடையாது, மிக குறைந்த அளவே அவன் தன் சுதந்திரத்தை பயன்படுத்த முடியும். அவர்களுடைய பெயருக்கு ஏற்றாற்போல மற்றவர்களுக்கு அவர்கள் ஊழியம் செய்ய வேண்டும்.

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணத்தின் மூலமாக இயேசு சொல்லுகிறார், ஒவ்வொரு விசுவாசியும் ஒரு ஊழியகாரன் என்று, மேலும் அந்த ஊழியகாரனுக்கு யாரையும், எப்போதும் ஏன் என்று கேட்கும் அதிகாரம் இல்லை மாறாக தன்னுடைய எஜமானன் சொல்வதை தாழ்மையுடன் கேட்டு அதற்கு கீழ்படிய வேண்டும். தன்னுடைய கூலியை தவிற வேறு எதன் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை.

ஆனால் கர்த்தருடைய ஊழியத்தில், ஒரு விசுவாசியானவன் தான் பெற்ற அதிகாரத்தை பயன்படுத்தி பேய்களை ஓட்ட வேண்டும் நோய்களை சுகமாக்க வேண்டும். ஆனால் அந்த அதிகாரத்தை தனக்காக எப்பொழுதும் பயன்படுத்தக் கூடாது.

ஊழியத்திற்கு பிறகு மிகவும் களைப்பாக வீடு திரும்பும் போது நிறை பொருட்கள் அலங்கோலமாக வைக்கப்பட்டிருக்கலாம் ஆனால் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

அநேக அசுத்த ஆவிகளை விரட்டியப்பின் நாம் வீடுவருவோம், வீட்டிலும் சிலர் அசுத்த ஆவி பிடித்தவர்கள் போல செயல்பட்டால் அவர்கள் மீது கோபப் பட நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஒரு ஊழியகாரனின் கடமை எல்லாம்  தன் எஜமானனுக்கு சேவை, சேவை, சேவை மட்டுமே.

தன்னுடைய மரணம் மற்றும் உயிர்ப்பால் இயேசுகிறிஸ்து நம் அனைவரையும் பிதாவின் உண்மையான பிள்ளைகளாக மாற்றியிருக்கிறார். ஆனால் நம்முடைய எஜமானனுக்கு சேவை செய்யும் தாழ்மையான மனம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.  ஒரு எஜமானன் மற்றும் சேவகன் மூலமாக இயேசு நமக்கு ஒரு உதாரணம் கொடுக்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் ஊழியகாரன் அவருடைய எல்லா கட்டளைகளுக்கு கீழ்படிய வேண்டும். புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை பின்பற்றியபின் நாம் ஒரு அபிரயோஜனமான ஊழியகாரர் என்று சொல்ல வேண்டும். உங்களுடைய அடிப்படை தேவையான உணவும் நீர், இருப்பிடம் போன்றவற்றிற்கும் பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சேவகர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் என்று வாசிக்கின்றோம்.

ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.

மாற்கு 13:34

அந்த எஜமானனுடைய வீட்டை கட்டி காப்பதில் இந்த அதிகாரத்தை அவன் பயன்படுத்த வேண்டும். ஆனால் எஜமானனிடம் நம்முடைய நடத்தை எப்பொழுதுமே லூக் 17:10 போல இருக்க வேண்டும்

.

ஒரு முறை ஜெபிப்பதற்காக ஒரு அரசு ஊழியரின் வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அந்த ஓட்டுநர் தனது எஜமானன் மீது கொண்டிருந்த மதிப்பு மரியாதையை கண்டு நான் வியந்தேன். காரின் என் ஜினை நிறுத்திவிட்டு காரின் கதவை திறக்க வந்த விதம், நாங்கள் அவருடைய விருந்தினராக இருந்ததால் அவர் எங்களுக்கும் அவ்வாறே செய்தார். நமக்கு எல்லாவற்றையும் கொடுத்த, நம்முடைய வாழ்க்கையையும் கொடுத்த எல்லாம்வல்ல தேவனுக்கு முன்பாக நாம் எப்படி தாழ்மையுடன் இருக்க வேண்டும். இந்த வாழ்வில் நம்மிடம் இருப்பதெல்லாம் அவர் நமக்கு கொடுத்தவை. நம்முடைய சுவாச காற்றைகூட அவர் எப்பொழுதும் நிறுத்திவிடலாம்.

ஜெபம்

பரலோக பிதாவே, உமக்கு சேவை செய்வதில் பணிவுடனும் மனத்தாழ்மையுடனும் இருக்க எங்களுக்கு கிருபைதாரும். வருடங்கள் கடக்கும்போதும், ஊழியத்தில் அனுபவம் பெருகும்போது உம்மீதுள்ள பயபக்தியை ஒருபோதும் நாங்கள் இழந்துவிடக்கூடாது. எப்போதும் “பிரயோஜனமற்ற வேலையாட்களாக” நாங்கள் இருப்போம்.

SR. ANGELICA AOJ  

தானியேல் – II

நாள்:13-05-2022 –  தேவ செய்தி

அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

லூக் 18:14

ஜெபத்தைப் பற்றி பேசும் போது கர்த்தரை நாம் அணுகுவதற்கு சரியான மனநிலை என்ன என்பதை இயேசு கிறிஸ்து இந்த உவமையின் மூலம் எடுத்துச் சொல்கிறார். ஆலய்த்திற்கு ஜெபிக்கச் சென்ற இரண்டு மனிதர்களைப் பற்றி அவர் பேசினார். அவர்களில் ஒருவன் பரிசேயன் மற்றொருவன் ஆயகாரன்.

பரிசேயன் அங்கே நின்றுகொண்டு தான் எப்படிப்பட்ட நீதிமான் என்று தன்னைத்தானே உயர்த்தி ஜெபித்தான். ஆனால் அந்த ஆயகாரன் தன் மார்பிலே அடித்துக்கொண்டு தான் ஒரு பாவி என்று ஏற்றுக்கொண்டான் அதற்காக கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டான்.

பரிசேயனுடைய ஜெபத்தில் என்ன தவறு இருந்தது, பரிசேயனுடைய ஜெபத்தில் எது சரியாக இருந்தது. இவர்கள் இருவரைப் பற்றிய கர்த்தரின் மதிப்பீடு நமது எதிர்பார்ப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டுமா? இதை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் இல்லை.

பரிசேயன் தன்னுடைய ஜெபத்தை எப்படி துவங்குகிறான் என்று பார்ப்போம், “கர்த்தாவே இந்த ஆயகாரனைப் போல நான் இல்லாததால் நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.”

நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்கச் செல்லுகிறீர்கள், அவரிடம் நீங்கள் இவ்வாறு சொல்லுகிறீர்கள், நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன், எனக்கு மருந்து தேவை இல்லை. உங்களுடைய காத்திருப்பு அறையில் இருக்கும் நோயாளிகளைப் போல நான் இல்லை. என்னிடம் எந்த குறையும் இல்லை.

மருத்துவர் அவனை செக்கப் செய்து பார்க்க கூட அவன் அனுமதிக்க வில்லை. இப்படிப்பட்டவனோடு மருத்துவர் என்ன செய்வார்? இந்த மனிதனில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது, அவனுடைய வியாதி கண்டுபிடிக்கப்படாது, ஏனென்றால் அவனுக்கு எதுவுமே தேவை இல்லை. மருத்துவரை அவன் அனுமதித்திருந்தால் அவனுக்கு இருக்கும் வியாதி என்ன என்பதை அவர் கண்டறிந்து அதற்கு மருந்து கொடுத்திருப்பார்.

இதைத்தான் வேறு இடத்தில் இயேசு சொல்லுகிறார்,, “ பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.” மத் 9:12. இந்த வசனத்திற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு இந்த பரிசேயன். தேவாலயத்தில் தான் நீதிமான் என்றும் தன்னுடைய ஆன்மீக மற்றும் தார்மீக தன்மையை நியாயப்படுத்தவே வந்தான். அவன் ஜெபிக்க வரவே இல்லை..

ஏன் இந்த பரிசேயன் இப்படி ஜெபிக்கிறான் என்பது ஆயக்காரனுக்கு நன்றாகவே தெரியும். தன்னை அசிங்கப்படுத்தவே. பரிசேயன் உரத்த குரலில் சொன்னான், “பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.லூக் 18:11,

ஆயக்காரன் பதிலுக்கு ஒன்றுமே சொல்ல வில்லை. அவன் தனது ஆத்துமாவின் நோயை அறிந்திருந்தான். அவன் யாரையும் வெறுக்க வில்லை, தனது தேவையைப் பற்றி மட்டுமே நினைத்து தன் மார்பை அடித்துக்கொள்கிறான், அவனை துன்புறுத்திய அந்த நோயானது வெடித்து வெளியே வந்தது.

தேவனே பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும் என்றான். தான் மட்டும் தான் இந்த உலகிலேயே இருக்க கூடிய ஒரே பாவி என்று தன்னை நினைத்தான். ஆனாலும் இயேசு சொல்லுகிறார் இப்படிப்பட்ட  ஜெபத்தைத்தான் கர்த்தர் கேட்கிறார்.

பெருமையும் மன நிறைவோடும் தங்களுடைய வார்த்தை ஜாலத்தால் தைரியமாக ஜெபிப்பவர்கள், எப்படி கர்த்தருடைய தேவாலயத்திற்குள் வந்தார்களோ அப்படியே திரும்பி செல்வார்கள்.

ஜெபம்

உமக்கு முன்பாக எப்போதும் எங்களை தாழ்த்த எங்களுக்கு கிருபை தாரும். எங்களை உம்மிடம் ஒப்புகொடுக்கிறோம். ஆமேன்.

Sol.Gerard

தானியேல் – II

நாள் 12-05-2022- தேவ செய்தி

அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான். கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.

2நாளா 30:18-20

தன்னுடைய ஆளுகையின் போது எசேக்கியா ராஜா பல நாட்களாக பழுதடைந்திருந்த கர்த்தருடைய தேவாலயத்தை புதுப்பித்தான். கர்த்தருக்கான ஊழியத்தை தொடர்ந்தான். அவன் ஆசாரியர்களுக்கு சொன்னதாவது.

என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள்கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றான்.

2 நாளா 29:11.

ஆனாலும் அநேக ஜனங்கள் தங்களைச் சுத்தம் பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள். ராஜா எசேக்கியா இஸ்ரேல் மற்றும் யுதேயாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினான், எருசேலேமிலிருக்கும் கர்த்தருடைய தேவாலத்திற்கு அனைவரும் வந்து பஸ்காவை அனுசரிக்க வேண்டும் என்று எழுதி அனுப்பினான்.

ராஜாவும் அவருடைய பிரபுக்களும் எருசலேமில் உள்ள மொத்த சபையும் இரண்டாம் மாதத்தில் பஸ்காவை கொண்டாட முடிவு செய்தனர், ஆனால் போதிய ஆசாரியர்கள் தங்களை அர்ப்பணிக்காததாலும், மக்கள் இன்னும் கூடிவராததாலும் அவர்களால் அதைக் கொண்டாட முடியவில்லை.

எனவே ராஜா மீண்டும் ஒரு கடிதத்தை மக்களுக்கு அனுப்பி வைத்தான்.

நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர்கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.

இப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன் மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள்.

2 நாளா 30:9-10.

எசேக்கிய சோர்ந்து போகவில்லை. தங்களை பரிசுத்தம் பண்ணாதவர்களுக்காக கர்த்தரிடம் ஜெபித்தான், மேலும் கர்த்தர் அவர்களை மன்னித்தார். ராஜாவினுடைய பிரார்த்தனையை கர்த்தர் கேட்டு மக்களை சுகமாக்கினார்.

யூதா மற்றும் இஸ்ரவேல் இந்த இரண்டு ராஜ்யங்களையும் ஒன்றிணைத்து கர்த்தருடைய சந்நிதிக்குக் கொண்டுவர ராஜா எசேக்கியா ஏவ்வளவு பொறுமையாக இருந்திருப்பார்.

இந்தியாவில் உள்ள அனைத்து சபைகளையும் கர்த்தரிடம் கொண்டுவந்து தூய்மைப்படுத்துவது மிகப்பெரிய முயற்சியாகும்.  துரோகம், கேலி அவமானங்கள் போன்றவற்றை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் ஆனால் நல்ல முடிவுகளை கொண்டுவர விடா முயற்சி தேவை.

யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.

2நாளா 30:12.

கர்த்தருடைய கிருபை இந்திய சபையின் மீது இப்பொழுது இருக்கிறது. நாம் ஒருமனம் உள்ள இருதயாத்தோடு நாம் உழைக்க வேண்டும். கர்த்தருடைய சித்தத்திற்கு தங்களை ஒப்புகொடுக்காதவர்களுக்காக நாம் ஜெபிப்போம். நாம் ஜெபிக்கும் போது கர்த்தர் நம் நாட்டையும் , நம் மக்களையும் சுகப்படுத்துவார்.

நமக்கு தேவையானது குணப்படுத்துதல்.

கடந்தகாலத்தின் வலிமிகுந்த நினைவுகளிலிருந்து குணமாக வேண்டும்.

நீண்ட காலமாக நம் நினைவில் இருக்கும் காயங்களில் இருந்து குணமாக வேண்டும்.

ஆத்துமா, ஆவி மற்றும் சரீரம் குணமாக வேண்டும்.

உடல் உணர்வு மற்றும் ஆன்மீக காயங்களிலி இருந்து நாம் குணமடைய வேண்டும்.

குற்ற உணர்வு, அவமானம் மற்றும் நாம் வெறுக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களிலிருந்து குணமாக வேண்டும்.

நம்முடைய தேசமும் குணமடைய வேண்டும். அதுவும் வியாதிப்பட்டிருக்கிறது.

நம்முடைய பொருளாதாரம் நோயுற்றுள்ளது.

நம்முடைய தொழில்களும் நலிவடைந்துள்ளன.

நம்முடைய மக்கள் நோயுற்று இருக்கிறார்கள்.

இளைஞர்கள், குழந்தைகள்ள், முதியவர்கள் தங்களுடைய ஆவி ஆத்துமா மற்றும் சரீரத்தில் நோயுற்றிருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய சபைகள் நோயுற்றுள்ளன.

சாட்சி

ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி மும்பையில் நடந்த கூடுகையில்   சபையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று முடிவு செய்த அன்றே தேவன் அதிசயத்தை நடத்தினார். இரண்டு சபைகளின் தலைவர்கள் தங்களுடைய விசுவாசிகளை பயிற்சிக்கு அனுப்புகிறோம் என்று எங்களுக்கு போன் செய்தனர். நம்முடைய தேசத்திற்கு அதன் மக்களுக்கும் முழுமையான ஆரோக்கியத்தையும் சுகத்தையும் தேவன் தர வேண்டும் என்று தீர்க்கதரிசனம் உரைப்போம். இன்று 24 மணி நேரமும் உங்கள் நாவு இதை உச்சரித்துக்கொண்டே இருக்கட்டும். இன்றே இதற்கான பலனை நாம் காண்போம்.

Sr. Angelica AOJ

.

தானியேல் – II

நாள்:11-05-2022 – தேவ செய்தி

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

த் 7:7

இந்த வசனம் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் நாம் ஜெபிக்க வேண்டும் என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. ஆன்மீக ஆசீர்வாதங்கள் மற்றும் அன்றாட தேவைகளுக்காக தேவனுடைய பிள்ளைகள் கர்த்தரிடம் கேட்க வேண்டும். ஒரு முதலாளியிடம் கேட்பதை போல அல்ல ஒரு தகப்பனிடம் குழந்தை கேட்பதை போல கேட்க வேண்டும்.

இந்த உலகில் இருக்கும் நம்முடைய தகப்பன் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பல்வேறு தடைகள் உள்ளன. ஆனால் நம்முடைய தேவன் நாம் நினைப்பதற்கு வேண்டுவதற்கும், அதிகமாய் செய்ய வல்லவராய் இருக்கின்றர். தைரியமாகவும், விசுவாசத்தோடும், நன்றியோடும், சிறிதும் சந்தேகம் இல்லாமல் நாம் அவரை கேட்க வேண்டும்.

நம்முடைய தேவைக்காக கேட்க வேண்டும், அவருடைய விவேகத்தை நாட வேண்டும், சந்தர்ப்பங்களை தேட வேண்டும். நன்றியோடு, அவருடைய வார்த்தையின் படி, அவருடைய சித்தத்திற்கு ஏற்றவாறு அவரை நாம் கேட்க வேண்டும். இயேசுவின் நாமத்தினால் நாம் கேட்க வேண்டும். நாம் அவருடைய மகிமைக்காக உழைக்கும் போது பிதா நம்மில் மகிழ்ச்சி அடைகிறார்.

நாம் விடாமுயற்சியுடன் கேட்க வேண்டும் தட்ட வேண்டும். தம்மை நேசிப்பவர்களுக்கு பரிபூரணமான மற்றும் நல்லதைக் கொடுக்க தேவன் தயாராக இருக்கிறார். கண்கள் காணாததையும், காதுகள் கேட்காததையும் நம் எண்ணங்களில் தோன்றாததையும் அவர் நமக்கு கொடுக்க வல்லவராய் இருக்கிறார்.

ழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;

ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

1கொரி 2:9

நாம் கேட்காததினால் நம்மிடம் இல்லை. அல்பாவும் ஒமேகாவும், துவக்கமும் முடிவும் ஆன தேவன் அனைத்தையும் அறிந்தவர். நமக்கு என்ன தேவை என அவருக்கு தெரியும். நாம் அவரிடம் கேட்க வேண்டும்.

மத் 7:11

 நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.

யாகோ 4:2-3.

சாட்சி

ஆகஸ்ட் மாதம் 2021 ஆம் ஆண்டு காலை ஆராதனையில் நான் முதன்முதலாக பங்கேற்றேன். ஒவ்வொரு நாளும் இந்த காலை ஆராதனையில் பங்கேற்க ஆவலாய் இருக்கிறேன். மற்ற சகோதர சகோதரிகளுடன் கலந்துரையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அருமையான காலை ஆராதனை, ஆராதனை பாடல்கள், விண்ணப்ப ஜெபம் மற்றும் தேவ செய்தி என அனைத்துமே என்னுடைய மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, தைரியமாக கேட்கவும், தேடவும் கதவை தட்டவும், விசுவாசத்தோடும் நன்றிநிறை உள்ளத்தோடும் சந்தேகம் இல்லாமல் எங்களுடைய தேவைகளுக்காக உம்மிடம் கேட்டு பெற்றுக்கொள்ள எங்களுக்கு கிருபை தாரும்.

ஆமேன்.

Sol.Anju

தானியேல் – II

நாள் : 27-04-2022 – தேவ செய்தி

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.

1தெச 5:17

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

லூக் 18:1

அநியாயமான நீதிபதியை தன் எதிராக எதிராக நியாயம் கேட்க விடப்பிடியகச் சென்ற விதவையின் உவமையை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். அவளுக்கு உதவி செய்ய யாருமே இல்லை. ஆனால் தொடர்ச்சியாக அவள் சென்று தன் கோரிக்கையை சளைக்காமல் நீதிபதி முன் வைத்தாள். அவளுடைய விடாமுயற்சியால்தான் நீதிபதி அவளுடைய வழக்கை தீர்த்துதந்தார். ஜெபத்தின் மூலம் பரலோக பிதாவுடன் தொடர்ந்து உறவாடுவதன் மதிப்பை தம்முடைய சீடர்களுக்கு உணர்த்தவே இந்த நிகழ்வை இயேசு உவமையாக கூறுகிறார். தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கூக்குரலை கேட்க அவர் காதுகள் தயாராக இருக்கின்றன. அவருடைய உதவி நமக்கு தேவையா இல்லையா என்பது நம்முடைய தேர்வு.

தானியேல் ஒரு நாளைக்கு மூன்று வேளை தவறாமல் ஜெபித்தான். தானியேல் பாபிலோனில் இருந்தபோது, கர்த்தருடைய இரக்கத்தின் மீது அவனுடைய கண்கள் நிலைத்திருந்தது மேலும் அவருடைய நகரமாகிய எருசலேமின் திசையை நோக்கி அவனுடைய ஜன்னல்கள் திறந்திருந்தன. கர்த்தர் அவனுடைய ஜெபத்தை எப்படி புறக்கணிப்பார்.

கர்த்தர் தன்னுடைய தூதர்களை அனுப்பி  தானியேலை காயப்படுத்தாதபடி சிங்கங்களின் வாய்களை கட்டிப்போட்டார். தானியல் கர்த்தருடைய குணங்களை அறிந்திருந்தார் எனவே தன்னுடைய மக்களுக்காகவும், அவர்களுடைய விடுதலைக்காகவும் திறப்பில் நின்று ஜெபித்தார். தனது சொந்த பாவத்தையும், தனது முன்னோர்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு உபவாசத்துடன் ஜெபித்து விண்ணப்பங்கள் செய்து, 21 நாட்கள் வழக்கம் போல் சாக்கு உடை மற்றும் சாம்பலை பூசி தன்னை தாழ்த்தினார். நாம் வேதத்தில் படிப்பது போல ஜெபத்திற்கு பதிலை கபிரியேல் மூலம் தேவன் அனுப்பினார்.

ஆகவே எல்லா மனிதர்களுக்காகவும், அரசர்களுக்காகவும், அதிகாரத்தில் உள்ள அனைவருக்காகவும் விண்ணப்பங்கள், பிரார்த்தனைகள் பரிந்து பேசுதல்கள் மற்றும் நன்றி செலுத்துதல் அகியவை செய்யப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்துகிறேன்.

1திமோ 2:1-2

திமோத்தேயுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் அப்போஸ்தலன் அரசர்கள், ஆட்சியாளார்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள அனைவருக்காகவும் தொடர்ந்து ஜெபிக்குமாறும் மக்கள் நல்ல மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு உதவும் வகையில் அரசாங்க புத்திசாலியான தீர்மானங்களை எடுப்பார்கள். தலைவர்கள் மக்கள் நலனுக்கான தங்கள் கடமையில் திறமையாகவும் நேர்மையாகவும் இருக்க நாம் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.

எசேக் 22:30

திறப்பில் நின்று தேசத்திற்காக ஜெபிக்க ஆள் இல்லை என்று எசேக்கியலுடன் தேவன் சொல்லுகிறார்.

நம்முடைய தேசத்திற்காகவும், ஆட்சியாளர்களுக்காகவும் மக்களுடைய நலனுக்காகவும்  ஜெபிப்பது நம்முடைய கடமை அல்லவா?

அநேக நேரங்களில் இஸ்ரவேலர்கள் வணங்கா கழுத்துள்ளவர்களாகவும், கர்த்தருக்கு எதிராக கலகம் செய்தார்கள் இதனால் தேவன் அவர்களிடம் கோபமாக இருந்தார். அநேக தருணங்களில் இஸ்ரவேலர்களுடைய நன்றிகெட்ட தனத்திற்கு, கர்த்தருடைய கோபம் அவர்கள் மேல் வராமல் இருக்க மோசே திறப்பில் நின்று ஜெபித்தான்.

நாம் இடைவிடாமல் ஜெபிப்போம். நம்மீதும் நமது தேசத்தின் மீதும் அவருடைய கருணையை காட்ட சர்வவல்லமை உள்ள தேவனக்கு முன்பாக தலை வணங்குவோம். அவருடைய நன்மைகளுக்காக நாம் அவரை ஆசீர்வதிப்போம்.

Sol. Dr. Salomi Kurien

தானியேல் – II

நாள் 26-04-2022 – தேவ செய்தி

ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.

-லூக் 14:1

எல்லோரும் அவரை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

பரிசேயரில் தலைவனாகிய ஒருவனிடமிருந்து இயேசுவுக்கு வந்த அழைப்பைப் பற்றி தியானிப்போம். மக்கள் மீது சுமத்தப்பட்ட யூத மதத்தின் தேவையற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பலவற்றை ஒழிக்கவே இயேசு வந்திருக்கிறார் என்று பரிசேயர்கள் ஏற்கனவே ஒரு கருத்தை உருவாக்கை வைத்திருந்தனர்.

இந்த அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்று இயேசு யோசித்திருப்பார். நானும் கூட சபைகளில் அல்லது குறிப்பிட்ட பிரிவினருடன் பயிற்ச்சி அளிப்பதற்காவோ அல்லது செய்தி கொடுப்பதற்காகவோ அழைக்கப்படும்போது அதை ஏற்கலாமா வேண்டாமா என்பதை யோசித்துதான் முடிவெடுப்பேன்.

ஏற்கனவே அவர்களுடன் கசப்பான அனுபவம் இருப்பதனால் இயேசு அழைப்பை நிராகரித்திருக்கலாம். அவர் எங்கு எப்போது சென்றாலும், அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிப்பதற்காக ஒரு கூட்டத்தை இயேசுவிடம் பரிசேயர்கள் அனுப்புவார்கள்.

அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

-லூக் 6:7

இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும், அநேக காரியங்களைக் குறித்துப்பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார்கள்.

லூக் 11:53-54.

இயேசுவை ஆபத்தில் தள்ளுவதற்கு ஒற்றர்களைகூட அனுப்பினார்கள்

அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.

-லூக் 20:20.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு அழைப்பை ஏற்கிறார்.  இங்கு கூட அவரை கவனமாக கவனித்துக்கொண்டிருந்தார்கள். இயேசு வேண்டுமென்றே தைரியமாக உண்மையை போதிப்பதற்கான சூழ்நிலைகளைத் தேடி உருவாக்கினார்.

பவுல் சொல்லுகிறார்,

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

2திமோ  4:2.

கொலோ 1:28-29, 1திமோ 2:11-12, 1தெச 5:14, தீத்து 1:13, தீத்து 2:15, எபி 13:22, வெளி 3:19

  1. இயேசு முழு பொறுமையோடு போதிக்கவும், கண்டிக்கவும், புத்திமதி சொல்லவும், திருத்தவும் வாய்ப்புகளைத் தேடினார்.
  2. அவரை அவமானப் படுத்துவார்கள், அவரில் குற்றம் கண்டுபிடிப்பார்கள் என்று தெரிந்து அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
  3. எங்கு நற்செய்தி ஏற்றுக்கொள்ளப்படாதோ அங்கேயும் நற்செய்தியை அறிவிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
  4. நற்செய்தியை அறிவிப்பதற்கான சூழ்நிலைகளையும், வாய்ப்புகளையும் உருவாக தயாராக இருக்க வேண்டும்.
  5. நமக்கு நன்றாக தெரிந்த இடங்களில் கூட எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.

ஜெபம்

பரலோக பிதாவே, எதிலும் கோபம் கொள்ளாமல், சுவிசேஷத்திற்காக எதிரான சூழ்நிலைகளை சந்திக்கவும், எதிரிகளின் மத்தியில் கூட நற்செய்தியை பிரசங்கிக்க இயேசுவைப் போல இருப்பதற்கு எங்களுக்கு தைரியத்தையும் மன வலிமையையும் தாரும்,

ஆமேன்.

–Sr. Angelica AOJ

தானியேல் – II

நாள்-24-04-2022 – தேவ செய்தி

இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்;

அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

எஸ்றா 7:6

எஸ்றா ஒரு வேதபாரகனாயிருந்தன், அவன் பாபிலோனுக்கு கைதியாக பிடித்துக் கொண்டுச் செல்லப்பட்டான்.

மோசே மூலம் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை எழுதுவதற்கு ஆவலாகவும், தயாராகவும் இருந்தான். கர்த்தர் எழுதக்கூடிய ஒரு பேனாவாக அவன் நாவு இருந்தது,

மேலும் அவனுடைய பேச்சும் எழுத்தும் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. கர்த்தர் ஒரு செய்தியை சொல்லும்போது அதை சுவற்றிலும் கற்பலகையிலும் அவன் எழுதி வைத்தான்.

யாத் 31:18

எஸ்றா ஞானத்திலும், வளர்த்தியிலும் வளர வழி தேடினார். அப்படிப்பட்ட மக்களை கர்த்தர் வழிநடத்துவார் மேலும் அவர்கள ஆசீர்வதிப்பார். அவர்களுடைய செல்வாக்கை பெருக்கச் செய்வார்.

தானியேல் 5:5-12

எஸ்றா மற்றும் நெகேமியா இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் மேலும் அவர்கள் செல்வாக்கு மிக்க யூதர்களாக இருந்தார்கள்.

எருசலேமுக்கு திரும்பி அதை மீண்டும் கட்ட வேண்டும் என்ற ஆசை அனலாக எரிந்துகொண்டிருந்தது. எருசலேமை மீண்டும் கட்ட  தேவையான பொருட்களையும், அதற்கான அனுமதியையும் பெறுவதில் வெற்றிப்பெற்றனர்.

எஸ்றா 7:10

சொல்லுகிறது  கர்த்தருக்கு நன்றி சொல்லவும் அவரை துதிக்கவும் எஸ்றா தனது மற்றும் மக்கள் இருதயத்தை தயார் செய்தான். அவன் கர்த்தருடைய வார்த்தையை வாசிக்க ஆரம்பித்தவுடன் மக்கள் மனம் நொந்து அழ ஆரம்பித்தனர். எஸ்றா அவர்களை ஆறுதல்படுத்தினான், அவர்களை மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்தான்.  நம்முடைய துக்கம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் கர்த்தருடைய வேதத்தை நாம் வாசித்து, தியானம் செய்து, மனப்பாடம் செய்யும் போது அது நம்மை சந்தோஷமாக வைத்திருக்கும்.

கர்த்தருடைய  ஏதாவது ஒரு வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைப்பது மேலும் அதை தனதாக்கி கொள்வதும் கூட கீழ்படிதல்தான்.

எஸ்றாவைப் போல நாமும் கர்த்தருடைய வசனத்தைப் படித்து நேரம் கிடைக்கும் போது அதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். இந்த சிறிய காரியத்தில் நாம் உணமையுள்ளவர்களாக இருந்தால் கர்த்தர் நம்முடைய பார்வையையும், செல்வாக்கையும் விரிவுபடுத்துவார்.

கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.

சங் 115:14

வேதத்தை தினம்தோரும் படிக்க வேண்டும், அதை தினமும் வியாக்கியானம் செய்ய வேண்டும், தினமும் மற்றவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வேதத்தை படிப்பவர்கள் அதை அன்றாட வாழ்வில் பயன்படுத்தாமல், வெறும்படிப்பவராகவே இருக்க இயலாது. வாக்குறுதியின் தேசத்திற்கு (பைபிளின் வாக்குறுதிகள்) மக்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

தானியேல் 12:3

நாம் வேதத்தை அதிகமாக படிப்பதாலும், தியானம் செய்வதாலும், மனப்பாடம் செய்வதாலும், மேலும் அதை பின்பற்றுவதாலும் நாம் ஆசீர்வதிக்கப் படுவோம், அதையே நம்முடைய வாழ்க்கையாக மாறிவிடும்

எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய இதயத்திற்கு எடுத்துச் செல்லும்போது கர்த்தர் நம்மை அதிகமாக ஆசீர்வதிக்கிறார் மேலும் நாமும் உண்மையான சமாதானத்தை அனுபவிக்கிறோம். எழுதுவது என்பது நம்முடைய எண்ணங்களுக்கு பார்க்க கூடிய வார்த்தையில் மாற்றுகிறோம். வார்த்தைகள் காணப்படாததை நமக்கு காட்டுகிறது.

நாம் கர்த்தருக்காக எழுதும்போது அவருடைய கையில் எப்போதும் தயாராக இருக்கும் ஒரு பேனாவாக மாறுவோம்.

ஜெபம்

பரலோக பிதாவே, உம்முடைய கையில் தயாராக இருக்கும் ஒரு பேனாவாக எங்களை மாற்றும். எங்களுடைய எண்ணங்களையும், செல்வாக்கையும் அதிகபடுத்தும். இயேசுவின் இனிய நாமத்தில் கேட்கிறேன் பிதாவே. ஆமேன்.

Sol.Gigi Jacob