நாள் -20-04-2022 – தேவ செய்தி
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
மத் 5:4

நம்முடைய வாழ்வில் மிகப் பெரிய துன்பத்தை அனுபவத்துக்கொண்டிருந்தால் அது நம்மை மன உளைச்சளுக்கு ஆளாக்கும். அது மிகப்பெரிய பள்ளம், நம்மால் அதிலிருந்து மீண்டு வர இயலாது.
என்னுடைய வாழ்விலும் கூட மன உளைச்சலுக்கு ஆளாவதற்கான எல்லா காரணங்களும் இருந்தன – என்னுடைய கணவருக்கு இருதயத்தில் கேளாறு, என்னுடைய இரண்டு குழந்தைகளையும் நான் பார்க்க வேண்டும், நோய்வாய் பட்டிருந்த என்னுடைய மாமனார், மாமியார் இவை எல்லாவற்றிற்கும் மேலாக நான் வேலைக்குச் செல்ல வேண்டும். இதை எல்லாம் எப்படி சமாளித்தேன் என்று நான் இப்போது ஆச்சரியப்படுகிறேன்.
அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.
–சங் 118:23
அந்த கஷ்ட நாட்களில் நான் கர்த்தருடைய கைகளில் இருந்தேன் மேலும் என்னை அவர் ஏசா 41:10, 43:2,, சங்க 91 போன்ற வசனங்களால் தேற்றினார்.
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
–பிலி 4:7.
நாம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை கடந்துச் செல்லும் போது துன்பம் மற்றும் கவலை நம்மை ஆட்கொள்ளும். இயேசு நம்முடைய இருதயத்தில் பிரவேசித்தால் கவலை, தொல்லை கஷ்டம் எல்லாம் பரந்தோடிப்போகும். இது பொரும்பாலும் எதிரியால் ஏற்படுத்தப்படுவது. இயேசுவினுடைய பிரசன்னத்தில் அவனால் இருக்க முடியாது, யாக்கோபு 4:7 சொல்லுவது போல அவர் நம்மை விட்டு ஓடிவிடுவான்,
தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
–2கொரி 7:10
தேவனுக்கேற்ற துக்கம், துன்பங்களை தாங்குவதற்கு நம்மை பலப்படுத்துகிறது ஆனால் லெளகிக துக்கமோ நம்மை பலவீனப்படுத்துகிறது. நம்முடைய பலவீனம், தொல்லை கஷ்டங்கள், அழுகை எல்லாவற்றையும் சந்தோஷத்தின் ஆவி மாற்றிவிடுகிறது.
அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
–சங்கீதம் 30:5
கர்த்தர் நமது துன்பங்களை, நிறைவான நம்பிக்கையாகவும், நம் கண்ணீரை மகிழ்ச்சியாகவும் மாற்றுகிறார். கர்த்தர் நம்முடைய கண்ணீரை துருத்தியில் சேர்த்துவைக்கிறார். நாம் அழுகையில் விதைப்போம் ஆனால் ஆனந்தத்தில் அறுப்போம்.
நாம் ஆறுதல் படுத்தப்படும்போது நம் இருதயத்திலிருந்து துதியும் நன்றியும் தொடர்ச்சியாக உதடுகளில் வெளிப்படும். மலடியாய் இருந்த அன்னாளின் கண்ணீரை கண்ட தேவன் அவளிடமிருந்துதான் ஒரு பெரிய தீர்க்கதரிசியாகிய சாமுவேலை உருவாக்கினார்.
நாம் என்ன துன்ப துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நம்மை அன்பு செய்யும் உள்ளங்கள் புரிந்துகொள்ளாத போது கர்த்தர் நம்மை ஆறுதல் படுத்துகிறார், விடுவிக்கிறார் காப்பாற்றுகிறார்.
ஜெபம்
அன்பின் பரலோக பிதாவே, எங்களை உம்மோடு அரவணைத்து, ஆறுதல் படுத்துவதற்காக கோடி ஸ்தோத்திரங்கள் அய்யா, துன்பங்களை தாங்கும் பெலன் தாரும், புயலிலும் உம்மை புகழ பலன் தாரும்
ஆமேன்.
–SOL.GIJI JACOB
