தானியேல் –II – தேவ செய்தி

நாள் – 20/6/22

தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்குவதற்காக கர்த்தர் மனஸ்தாப பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனம் ஆயிருந்தது இருந்தது.

 ஆதி 6:6

நீண்ட துன்பம் பரிசுத்த ஆவியானவரின் கனிகளில் ஒன்றாய் இருக்கிறது.

ஆவியின் கனியோ அன்பு, சமாதானம் சந்தோஷம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இப்படிபட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

கலாத்தியர் 5: 22, 23

நீடிய துன்பம் எப்படி ஒரு பரிசுத்த ஆவியானவரின் கனியாக இருக்கும் என்று நான் ஆச்சரியத்துடன் கேட்டிருந்தேன்.

இந்தக் காரியம் ஏதேன் தோட்டத்தில் பார்க்கிறோம் அப்பொழுது ஆதாம் ஏவாள் பாவம் செய்தார்களோ அப்பொழுதிலிருந்து தொடங்கி நோவாவின் காலத்தில் கடைசியாக தேவன் சொன்னது

ஆதியாகமம் 6: 3

அப்பொழுது கர்த்தர் என் ஆவி என்றைக்கும் மனுஷனுடைய போராடுவதில்லை என்றார். தேவன் அவருடைய ஜனங்கள் எப்பொழுது பாவ சுபாவம் உடையவர்களாகவும் அவரை எதிர்த்து நிற்க ஆளாகவும் இருக்கிறார் என்கிறார்கள் என்று அறிந்து அவருக்கு அவர்களுக்காக தூக்கப்பட்டார். பரிசுத்த ஆவியானவரை எடுக்கப்படுகிற அவர்களாகவே மனிதன் ஆதிமுதல் எப்பொழுதும் காணப்படுகிறான். தேவன் தம்முடைய ஜனத்தின் அன்பிற்காகவும் அவர்களுடைய மனம் திரும்புதல் அழகாகவும் நீண்டகாலமாக காத்துக் கொண்டிருக்கிறார். ஆதாம் தொடங்கி நோவா காலம் வரைக்கும் தம் பிள்ளைகள் மனம் திருந்த திரும்பவில்லை என்று ஏமாற்றத்துடன் காத்துக்கொண்டிருந்தார். உலகத்தை சுற்றிப் எதற்காக தேவன் 6 நான் எடுத்துக்கொண்டார் என்று பார்க்கிறோம் ஆனால் பெருவெள்ளம் பூமியைவிட அழிப்பதற்காக நாற்பதுநாள் இரவும் பகலும் எடுத்துக்கொண்டார் மற்றும் அந்த தண்ணீர் வற்ற அதற்காக 150 நாட்கள் தேவையாக இருந்தது. தேவன் இதை ஒரு நாளில் செய்திருக்க வேண்டும் ஆனால் அவர் நீண்ட காலம் துன்பப்படும் படி தெரிந்து கொண்டார். அவருடைய துன்பம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நம்முடைய பாவங்களுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். சிலுவையின் மரத்துண்டு மற்றும் இன்னும் அவர் பிறந்த உடனே நமக்காக உன்னுடைய தனது மகளுக்காக பார்த்துக் கொண்டிருக்கிறார். யோவான் 3 : 16

தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளின் போது நம்முடைய பாவங்களுக்காக துன்பப்பட்டார் சிலுவையில் அதை ஜெயமாக மாற்றினார்.

ரோமர் 8 32

தம்முடைய சொந்த குமாரன் என்று பாராமல் நம் எல்லாருக்காகவும் அவரை ஒப்புக் கொடுத்தவர், அவருடைய கூட மற்ற எல்லாவற்றையும் அருள் ஆதரிப்பது எப்படி?

யாக்கோபு 1 :2,

என் சகோதரரே நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது,

1 கொரிந்தியர் 10 : 13

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையே அல்லாமல் இது வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவர் ஆக இருக்கிறார் உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்க படுவதற்கு அவருக்கு இடம் கொடாமல், சோதனையை தாங்க தக்கதாக சோதனை யோடு கூட அதற்கு தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

2 பேதுரு 3 : 9

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிற படி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தை குறித்து தாமதமாய் இராமல், ஒவ்வொருவரும் கெட்டுப்போகாமல்,  எல்லோரும் மனம் திரும்ப வேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமை வல்லவராயிருக்கிறார்.

நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நாள் முதல் ஒவ்வொரு விசுவாசிகளும் போல எனக்கும் பல துன்பங்கள் நேர் இட்டனர். உடன் சென்ற சபையிலே என்னை மன ரீதியாகவும் வெளியே அங்கமாகவும் என்னை துன்பப்படுகிறார்கள். தேவன் எல்லாவற்றையும் சேர்க்கவும் அவர்களை மன்னிக்கவும் கிருபை செய்தார்.

ஜெபம்

ஆண்டவரே எங்களுக்கு உம்முடைய கிருபை தாரும் இந்தத் துன்பத்தை பொறுமையோடு கையாளவும் இந்தப் பாதையில் நாங்கள் வழி விலகி போகாதபடி எங்களுக்கு கிருபை செய்தருளும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் நல்ல பிதாவே ஆமென்.

Sol நேஹா

தானியேல் –II – தேவ செய்தி

நாள் 21-06-2022

உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன?.

ஆதி 40:7

யோசேப்பு சிறையில் இருந்தான். பானபாத்திரகாரனும், சுயம்பாகியுமாகிய இரண்டுபேரும் தண்டனை பெற்று சிறைக்கு வந்தார்கள். யோசேப்பு அவர்களைப் பார்த்து ஏன் துக்கமாய் இருக்கிறீர்கள் என்று கேட்டான். யோசேப்புதான் பொய் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஆனாலும் அவன் மற்றவர்களை உற்சாகப்படுத்தினான். நமக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் நம்மைவிட அதிகமான துன்பத்தில் இருப்பவர்களுக்கு நாம் ஆறுதல் சொல்ல வேண்டும்.

நமக்காக கர்த்தருடைய திட்டம் பல வேளைகளில், நாம்மைப் பற்றி சிந்திக்காமலும், சுயபச்சாதாபத்திலிருந்து நம்மை வெளியேற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த இரண்டு மனிதர்களும் துக்கமாய் இருப்பதை கண்டான், மேலும் இருவரும் சொப்பணத்தை கண்டார்கள் என்பதையும் அறிந்தான். சொப்பணத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குறியதல்லவா?  எனக்கு சொல்லுங்கள் , நான் அதற்காக ஜெபிப்பேன்.

யோசேப்பு அந்த இரண்டு சொப்பணங்களுக்குமான அர்த்தத்தை அறிந்தான். மூன்று கிளைகள் மற்றும் மூன்று நாட்களுக்குமான அர்த்தத்தை கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு சொன்னார்.

யோசேப்புவை தேவன் இன்னும் தயார்படுத்திக்கொண்டிருந்தார். தேவன் அவனை தயார் செய்து கொண்டிருந்ததின் முக்கியமான பாகம் என்னவென்றால், சுய பச்சாதபம், சுய நீதி, மேலும் எதிர்காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ளுதல் போன்றவற்றிலிருந்து அவனை மீட்பதாகும். தேவன் சொப்பனத்தை  பானபாத்திரகாரனும், சுயம்பாகியுமாகிய இரண்டுபேருக்கும் கொடுத்தார். அவனுடைய சொப்பனத்தை யோசேப்பு சரியாக சொன்னார். “நீ மீண்டும் உன்னுடைய பழைய இடத்தை பெறுவாய்.’ ஆனால் நீ நன்றாக இருக்கும்போது என்னை நினைத்துப்பார், என் மீதும் இரக்கம் காட்டும். என்னைப் பற்றி பாரவோனுக்குச் சொல். என்னை இந்த இடத்திலிருந்து வெளியே கொண்டுவா.  ஆதி 40:15 – நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்..

பானபாத்திரக்காரனுக்கு யோசேப்பு சொன்னது போலவே தன்னுடைய பழைய பதவியை பெற்றான், ஆனால் அவன் யோசேப்புவைப் பற்றி மறந்தும் போனான். இன்னும் இரண்டு வருடங்கள் யோசேப்பு சிறையில் இருந்தான்.

யொசேப்புவை தயார் செய்ததுபோல கர்த்தர் நம்மையும் தயார் செய்கிறார். அவர் சொல்லுகின்ற இடத்திற்கு நாம் வர வேண்டுமெ என்று பார்க்கிறார்.

என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே. ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்,

1 கொரி 4:4-5

யோசேப்பை குறித்து தேவன் வைத்திர்ந்த வேலைக்கு அவன் முற்றிலும் யாதொரு எதிர்ப்பு செய்கிறவனாக இல்லாமலும், சுய பச்சாதாபம் இல்லாமலும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் மேலும் இரண்டு ஆண்டுகள் அவன் சிறையிருப்பில் இருந்தான். இரண்டு ஆண்டின் முடிவிலே பாரவோன் மன்னனுக்கு சொப்பனம் வந்தது. அது தான் கர்த்தருடைய நேரத்தில் யோசேப்ப்புக்கு தேவன் வைத்திருந்த மாறுதலுக்கான நேரம்.

ஜெபம்

பிதாவே எல்லாவற்றிலும் எங்களுடைய புத்தி அல்லது திறமையை அல்ல மாறாக உம்மை சார்ந்திருக்க கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே.

ஆமேன்.

Sol.Gerard


தானியேல் – II – தேவ செய்தி

நாள்: 08-06-2022

புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.

கலா 3:1.

அப்போஸ்தலர் பவுல் கலாத்தியர்களிடம் உங்கள் நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி மேலும் வேதத்திற்கு முரணான பொய்களால் நீங்கள் ஏமாற்றப்பட்டீர்கள் என்று சொன்னார். மேலும் அவர்களிடம், ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?. மனதில் இருக்கும் அரணால் வரும் பலன்கள் இவைகளே.

மக்கள் சில நேரங்களில் அசுத்த ஆவியினால் அல்ல தங்களுடைய சொந்த அரண்களாலே பிரச்சனைக்குள்ளாகிறார்கள். நம்முடைய கடந்த கால வாழ்க்கையில் நடந்த சில பாவங்களை குற்றச்சாட்டுகளாக நம்மீது வைத்து நம்மை சோர்வடைய செய்கிறான். நம்முடைய விசுவாச வாழ்க்கையை நாசமடைய செய்கிறான். மக்கள் தங்களுடைய பழைய சடங்கு சம்பரதாயங்களில் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்,

எபி 10:5,6,7.

நாம் உன்னதமான நம்பிக்கையில் இருக்கிறோம். நம்முடை பாவங்களை மன்னிக்க தன்னையே தந்து நம்மை அவருடைய சொந்த ஜனங்களாக்கிய நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து மகிமையோடு மேகத்திலிருந்து இறங்கி வருவார்.

தன்னுடைய கிரியைகளால் நம்மை பரிசுத்தமாக்கமுடியும் என்னும் பொய்யில் யாரும் மாட்டிக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, நம்முடைய நல்ல காரியங்கள் அழுக்கு துணிபோல.

நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.

ஏசா 64:6.

அவரே நம்முடைய முதன்மையான ஆசாரியர், பரலோகத்தில் நமக்காக பரிந்துபேசுபவர்..

நாம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டுள்ளோம்.தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்.

எபே 5:26

சாட்சி

நாங்கள் கிற்ஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னரும் ஒரு சாதாரண விசுவாசிகளாகவே இருந்தோம்.  எங்களுடைய தாத்தா ஒரு ஆசாரியராக இருந்தார். சுட்டெறிக்கும் வெயிலிலும் நற்செய்தியை அறிவிக்க கிராமங்களுக்குச் சென்றுவிடுவார். நாங்களும் இயேசுவிடம் எங்கள் வாழ்க்கையை ஒப்புகொடுத்து நீரினால் ஞானஸ்ஞானம் பெற்றோம்.   

ஜெபம்

பிதாவே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை எங்களுடை பாவங்களை கழுவ கொடுத்ததற்காக நன்றி. நித்திய ஜீவனில் பங்காளர்களாக எங்களை தேர்ந்துகொண்டதற்காக உமக்கு நன்றி.

ஆமேன்.

Sol .Noreen

தானியேல் – II – தேவ செய்தி

நாள் :07-06-2022

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

1 பேது 2:3.

நம்முடைய உடலுக்கு உணாவு இல்லாமல் இருக்கும்போது பசிக்கு ஆளாகிறது எனவே உபவாசம் இருக்க நமக்கு நிறைய பொறுமை தேவைப்படுகிறது. சரீர பிரகாரமாக உபவாசம் இருப்பது, சரீர இச்சைகளை கொல்லத்தான் மேலும் சரீரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவும்தான். தன்னுடைய ஊழியத்தை இவ்வுலகில் துவங்குவதற்கு முன்பாக இயேசு கிறிஸ்து 40 இரவும் பகலும் உபவாசம் இருந்தார். மத் 4:1-17). தானியேல், மோசே, எஸ்தர், தாவீது போன்ற பலர் வேதத்தில் உபவாசம் இருப்பதை நாம் காண்கிறோம்.

ஒரு ஆன்மீக மனிதனுக்கு வேறொரு வகையான உபவாசம் மிகவும் ஆபத்தானது. அது ஆன்மீக உபவாசம் என்று சொல்லலாம். சீடர்களுக்கு ஜெபிக்க சொல்லி கொடுக்கும் போது, சரீர உணவிற்கு அப்பாற்பட்டு ஆன்மீக உணவைப் பற்றி குறிப்பிடுகிறார். பழைய ஏற்பாட்டில் தேவன் மக்களை மன்னாவால் போஷித்தார். இன்றும் கூட தேவன் தன்னுடைய வார்த்தையினால் நம்மை போஷிக்கிறார்.

ஒரு மனிதன் சரீரம் ஆவி மற்றும் ஆத்துமாவினால் உண்டாக்கப்பட்டிருக்கிறான். நம்முடைய உடலுக்கு உணவு தேவைப்படுவதைப் போல நம்முடைய ஆன்மாவிற்கும்  கர்த்தருடைய வார்த்தை மற்றும் அவருடைய கறிபனைகள் என்னும் உணவால் திருப்தி படுத்த வேண்டும். இவ்வுலக மனிதன் நல்ல உணவு உண்டு மகிழ்ச்சி அடைவது போல ஆன்மீக மனிதன் ஆன்மீக உணவினால் திருப்தி அடைகிறான்.

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 

சங் 34:8.

கர்த்தருடைய உண்மையான மனிதன் விரும்புவது என்ன வென்றால் கர்த்தருடைய வேத வார்த்தையால், தியானத்தால், ஜெபத்தால், மற்றும் ஆராதனையால் நிறப்பப்பட வேண்டும் என்பது தான். இயேசு தன்னை உண்மையாக பின்பற்றுபவர்களுக்காக இவ்வாறு ஜெபிக்கிறார்.

யோவா 17:9-11

நான் அவர்களுக்காக வேண்டிகொள்கிறேன், உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல் நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்…..

நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன்.

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது….

சங் 34:15

அதனால்தான் மலை பிரசங்கத்தில் இயேசு தெளிவாக சொல்லுகிறார், நீதியின் நிமித்தம் பசி தாகம் உள்ளவர்கள் பாக்கிய்வான்கள் அவர்கள் திருப்திஅடைவார்கள்.

சாட்சி

நான் இல்லத்தரசியாக இருக்கிறேன். வீட்டில் உள்ள அனைத்துவேலைகளையும் தவறாமல் செய்துவருகிறேன். நான் கர்த்தருடைய வேதத்திற்கு அதிக பசியாய் இருக்கிறேன். வேத வாசிப்பு, வெளிப்பாடுகளை எழுதுதல், பிறருக்காக ஜெபித்தல், கர்த்தருடைய ஊழியத்தை செய்வது எனக்கு மேன்மையாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் என்னை அவருடைய வழிநடத்துதலால் இன்னும் மேலே கொண்டுசெல்வார்.

ஜெபம்

பரலோக பிதாவே, நித்திய வாழ்வின் மீது எங்கள் கவனம் என்றும் இருப்பதாக, எங்களுடைய உலக கடமைகளை செய்யும் போது உம்முடைய பிரசன்னத்தால் எங்களை நிறப்பும், உம்முடைய கட்டளைகளுக்கு கீழ்படிய எங்களுக்கு உதவிசெய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே,,

ஆமேன்.

Sol.  Neelam

தானியேல் – II

நாள் 06-06-2022 – தேவ செய்தி

ஆகையால்  உங்கள் ஜீவனுக்காகவும்  கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;

மத் 6:25

இந்த வசனத்தில் இயேசு சொல்லுகிறார் உங்கள் ஜீவனுக்காக கவலைப்பட வேண்டாம்,  இவ்வுலகில் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.

என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

யோவான் 16:33

கர்த்தர் நமக்கு கொடுக்கும் முழு ஒளியை அனுபவிக்கவிடாமல் தடை செய்ய சாத்தான் பயன்படுத்தும் ஆயுதங்கள்தான் பயம், கவலை மற்றும் பதட்டம். இந்த உணர்வுகள் நம்மை முடக்கி வைக்கின்றன.  நம்முடைய கவலைகளை கர்த்தர் மீது போட்டுவிட்டு கவலையற்ற வாழ்வை வாழா நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார்.

ஏசா 35:4

ஏன் நாம் கவலைப்படகூடாது..

  1. உலக பொருட்களை விட இந்த வாழ்வு மிகவும் பெரியது.
  2. மனிதன் பொருட்களைவிட விலையேறப்பெற்றவன்.
  3. உடைகளைப்பற்றி கவலைப்படாத விலங்குகள் மற்றும் தாவரங்களைவிட மனிதன் மேன்மையானவன்.
  4. கவலைப்படுதல் ஒரு பாவம், அது நமக்குள் பயத்தை உண்டுபண்ணுகிறது.
  5. கவலை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.
  6. துன்பங்களை உருவாக்குகிறது.
  7. நமக்காக கவலைப்படும், நம்மை தாங்கும் பரலோக பிதா இருக்கும்போதும் அனாதைகள் போல நம்மை வாழவைக்கிறது இந்த கவலை.
  8. நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதத்தை பெறவிடாமல் கவலைபட வைக்கும்.

நம்முடைய எல்லா செல்வங்கள், ஆசீர்வாதங்கள் அனைத்தையும் இயேசு சிலுவையில் செலுத்திவிட்டார்.  இயேசு சிலுவையில் நமக்காக செலுத்திய இந்த ஆசீர்வாதங்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலும் அதை பயன்படுத்த வேண்டும். நானும்  “அரண்களை உடைப்பது எப்படி” என்னும் FRP வகுப்பில் பங்கேற்பதற்கு முன்பு என்னுடைய பிள்ளைகளைப்பற்றியும் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும் அதிகமாக கவலைப்பட்டேன். என்னுடைய எண்ணங்களை கர்த்தருடைய  வல்லமைமிக்க கைகளில் ஒப்படைத்த போது அவர் என்னை வழிநடத்த ஆரம்பித்தார்.

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

சங் 46:10

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

ஏசா 41:10

ஜெபம்

பரலோக பிதாவே உமக்கு முன்பாக வருகிறோம், உம்முடைய பிரசன்னத்திற்காக நன்றி செலுத்துகிறோம், நாங்கள் கவலைப்பட கூடாது என்று சொல்லி கொடுத்தமைக்காக நன்றி சொல்லுகிறோம். உம்முடைய வார்த்தையை எப்படி பற்றிக்கொண்டு தியானிப்பது என சொல்லிதாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.

ஆமேன்.

Sol.G. Kamalin Viji

தானியேல் – II

நாள்: 05-06-2022 – தேவ செய்தி

இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; …..தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

மத் 6:24.

வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் சிதறாத(முழு) கவனம் தேவை. உங்களுடைய வேலை, படிப்பு, தொழில் அல்லது வாழ்வில் நீங்கள் செய்யகூடிய எதுவாக இருந்தாலும் பிரிக்கப்படாத கவனம் தேவை. உணவு சமைக்கும்போது கூட நம்முடைய கவனம் வேறு எங்காவது இருந்தால் உணவு சுவையாக இருக்காது. இயேசு நமக்கு இங்கு இதைத்தான் சொல்லுகிறார்.

ஒருவன் உலகப்பொருள் மற்றும் கர்த்தருக்கு ஒன்றாக ஊழியம் செய்ய முடியாது. ஒருவருடைய விசுவாசம் கர்த்தர் மேல் அல்லாமல் செல்வத்தின் மீது வைப்பதைப் பற்றிதான் இயேசு சொல்லுகிறார். உலகப் பொருளை சம்பாதிப்பது தவறு இல்லை ஆனால் உலக பொருட்கள் மீதும் கர்த்தர் மீதும் ஒரே நேரத்தில் நம்பிக்கை வைப்பதுதான் தவறு. ‘ஊழியம் செய்வது’ என்ற வார்த்தைதான் மிக முக்கியமானது.

இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,

             1 திமோ 6:17.

அடுத்த வசனத்தில் பவுல் சொல்லுகிறார், தாராளமாகவும், மனமுவந்தும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; ..கவலைப்படாதிருங்கள்,

மத் 6:25.

எதிர்காலத்தைப்பற்றிய கவலை, சிந்தனை நம்மை பணத்தின் மீது சார்ந்திருக்கச் செய்கிறது, கர்த்தர் நமக்களித்த வாக்குறுதிகளை நம்பாமலும், கர்த்தர் நமக்கு எல்லாவற்றையும் கொடுப்பார் என்ற நம்பிக்கையையும் இழந்து விடுகிறோம்.

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்,

மத் 6:21

மக்களுக்கு நல் வழி காட்டுவது, நற்செய்தியை அறிவிப்பது அல்லது வேதத்தை ஆழ்ந்து தியானிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறோம். உலக செல்வம், பொருட்செல்வம் நம்முடைய மனதில் வரக்கூடாது, நம்முடைய எண்ணம் எல்லாம் கர்த்தருடைய காரியத்தின் மீதுதான் இருக்க வேண்டும். அநேக சபை தலைவர்கள் ஊழியகாரர்கள் இன்று கர்த்தருக்கு ஊழியம் செய்வதாக சொல்லிக்கொண்டிருந்தாலும், அவர்களுடைய கவனம் எல்லாம் பொருட்செல்வங்களை சேர்ப்பது பற்றித்தான் இருக்கிறது. யாத் 20:3 – என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். நம்முடைய சிருஷ்டிகராகிய தேவனுக்கு நாம் ஊழியம் செய்யும் போது பணத்தை தேவனாக்க கூடாது. சாத்தான் தன்னுடைய சாதுர்யமான வழிகளால் கர்த்தருடைய பிள்ளைகளை செல்வத்தின் மீதும் பொருட்களின் மீதும் நம்பிக்கை வைக்கத் தூண்டுகிறான்.

சாட்சி

நான் கர்த்தருக்குள் வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் ஐதராபாத் சென்று சபை ஆராதனையில் பங்கு கொள்ளவும், கர்த்தருடைய பிரசன்னத்தில் இருக்கவும் செல்வது வழக்கம்.  அங்கு இருப்பவர்கள் என்னைப்பார்த்து சொல்வது வழக்கம், நான் ஒவ்வொரு மாதமும் எப்படி வருகிறேன், வருவதற்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறேன்  என கேட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக நான் வேலையை விட்டேன், கர்த்தருக்காக காத்திராமல் எல்லாவற்றையும் இழந்தேன்.என்னுடைய தவறை உணர்ந்து கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டேன் மேலும் கர்த்தர் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தேன். 6 மாதத்திற்குப் பின் கர்த்தர் எனக்கு கதவுகளை திறந்தார். கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளை உலகத்தாரின் இரக்கத்திற்கு விட விரும்பவில்லை மாறாக, இவ்வுலகில் நாம் இருக்கும்போது முழு உள்ளத்தோடும் ஆன்மாவோடும் கர்த்தருக்கு நாம் ஊழியம் செய்ய வேண்டும். கர்த்தர் எனக்கு சொல்லிகொடுத்த இந்த பாடத்திற்காக நன்றி.

ஜெபம்

கர்த்தாவே, நாங்கள் செல்வத்திற்கு அடிமைகளாக வாழாமல் எங்களிடம் இருக்கும் எல்லாவற்றாலும் உமக்கு ஊழியம் செய்ய கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.

Sol.Neha  

தானியேல் –II

நாள் 04-06-2022 – தேவ செய்தி

பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

1யோவா 4:4.

சிலுவையில் இயேசு பெற்ற வெற்றி யோவானை இவ்வாறு அறிக்கையிட வைத்தது, விசுவசிப்பவர்களே நீங்கள் கர்த்தரிடமிருந்து வருகிறீர்கள், எதிரிகளின் பலம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை உங்களில் இருப்பவர் எல்லாம் வல்லவர், வல்லமையிலும், மகிமையிலும், மாட்சி, அதிகாரத்திலும் வல்லவர். தம்முடைய மக்களுடைய இருதயத்தில் அவர் வாசமாய் இருக்கிறார். எனவே அசுத்த ஆவியின் வல்லமையை நம்மால் மேற்கொள்ள முடியும். ஏனென்றால் உலகில் இருக்கும் அவனைவிட நம்முள் இருப்பவர் பெரியவர்.

என்னுடைய வாழ்க்கையில் நம்பிக்கையற்றவளாக நான் இருந்தபோது தேவன் எனக்கு இந்த வசனத்தை எனக்கு காட்டினார். அவருடைய செட்டைகளின் கீழ் என்னை எடுத்து பாதுகாத்தார். நான் கடினமாக உழைக்க என்னை உற்சாகப்படுத்தினார்.  அவர் என் இருதயத்தின் எண்ணங்களை நிறைவேற்றுவார் என்று நான் அவரில் நம்பிக்கை வைத்தேன். சங் 37:4-5- அவருடைய நேரத்தைல் அவர் செய்வார் என்றும் விசுவசித்து காத்திருந்தேன். ஆனால் என் பிதாவாகிய தேவன் மிகவும் சரியான நேரத்தில் சரியான, பிடித்த நல்லதொரு வேலையை எனக்கு கொடுத்தார். அதற்காக கர்த்தருக்கு நான் கோடானகோடி நன்றி சொல்லுகிறேன். நான் ஒரு குதிரையைப் போல தயாராக இருந்தேன் ஆனால் சரியான வேளையில் என் தேவன் எனக்கு வெற்றி தந்தார்.

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.

நீதி 21:31.

தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.

சங் 62:1.

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

சங் 46:10.

கர்த்தரே என் அடைகலம் என்று விசுவசித்தால் நாம் அமைதியாக இருக்க முடியும். நாம்மிடம் இருக்கும் தைரியமும் விசுவாசமும் கர்த்தரிடமிருந்து வர வேண்டும், பணம், பதவி, வல்லமை, புகழ்ச்சி, திறமைகளிடமிருந்து அல்ல. நாமிருக்கும் படகில் இயேசு இருந்தால் எந்த புயலும் நம்மை ஒன்றும் சேதப்படுத்தாது. எல்லா சூழ்நிலையிலும் கர்த்தர் மீது விசுவாசம் வைப்பது நமக்கு அமைதியை தரும். பயம், நம்பிக்கையின்மை, பெருமை, குற்றமனப்பான்மை மற்றும் கவலை போன்ற சிறையிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். கர்த்தருடைய ஞானத்தில் நாம் வளரும்போது நம்முடைய நம்பிக்கை வளரும், நம்முடைய சந்தோஷம், அமைதி, விசுவாசம் வளரும். அவருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி அவரை உயர்த்துவோம்.

ஜெபம்

அன்பு தேவனே, உம்முடைய கிருபை, அன்பு மற்றும் வல்லமையில் என்னை என்றும் வழிநடத்துமாறு இயேசுவின் நாமத்தினால் கேட்கிறேன். உம்மை விசுவசிக்கும்,மற்றும் அன்பு செய்யும் உம்முடைய பிள்ளைகளை உம்முடைய செட்டைகளின் கீழே பாதுகாப்பீராக.

ஆமேன்.

Sol.  Aparajita

தானியேல் – II

நாள்: 03-06-2022 – தேவ செய்தி

அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

லூக் 5:16.

ஜெபம் நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து தோன்றுகிறது, நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டு செல்கிறது மேலும் நம்முடைய ஆத்துமாவில் ஆழமாய் வேலை செய்கிறது. இது உயிருள்ள தேவனை சந்திப்பதால நம்மை உள்ளிருந்து மாற்றுகிறது. நம்மை முழுவதுமாக கர்த்தருக்கு ஒப்புகொடுக்க கூடிய காரியம்தான் இது.

கர்த்தரோடு நமக்கிருக்க வேண்டிய இந்த தொடர்பைத்தான் வேதம் நமக்கு சொல்லிகொடுக்கிறது. மற்ற எந்த வேத புத்தகங்களைவிட, லூக்கா எழுதிய நற்செய்தி ஜெபத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி பேசுகிறது. இதற்கு மாதிரியாக இருப்பவர் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இயேசு ஜெபம் செய்ய நமக்கு சொல்லிகொடுப்பதோடல்லாமல், அவரே தனித்திருந்து ஜெபிக்கிறார். ஜெபத்தைப் பற்றி இயேசு  நமக்கு சொல்லி கொடுத்த சில விஷயங்களை நாம் இங்கு பார்ப்போம்.

இயேசுவுக்கு ஒழுக்கமான ஒரு ஜெப பழக்கம் இருந்தது – லூக் 22:39

மக்களிடமிருந்து பிரிந்து தனியே ஒர் இடத்தில் ஜெபிக்க செல்வதை இயேசு வழக்கமாக கொண்டிருந்தார். இங்கு இயேசு, அவரை பின்பற்ற நமக்கு சொல்லிகொடுக்கிறார், ஜெபிக்கும் பழக்கம் இருக்க வேண்டும் ஆனால் அதையும் தாண்டி ஒழுக்கமான ஜெப பழக்கம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இயேசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஜெபிக்கும் பழக்கம் உடையவர் – லூக் 5:16

இயேசு அவர் இருக்கும் இடத்திலேயே ஜெபிக்கவில்லை, மாறாக மற்றவர்களிடமிருந்து விலகி, மலைபாங்கான இடத்திலோ, வனந்தரத்திலோ ஜெபிக்க சென்றார். அவர் நமக்கு சொல்லிகொடுப்பது இதுதான், நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் விட்டுவிட்டு கர்த்தருடைய பிரசன்னதிற்குள் நாம் செல்ல வேண்டும்.

தன்னுடைய பிஸியான மற்றும் பிரசித்தமான வாழ்கை மத்தியிலும் கூட  இயேசு நேரம் ஒதுக்கி ஜெபித்தார், லூக் 5:16

நாம் எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும், பிரசித்தமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஊழியத்தை செய்துகொண்டிருந்தாலும் ஜெபத்தில் நேரத்தை செலவிடாவிட்டால் எதுவுமே நன்மை தராது.

வுகள் எடுப்பதற்கு முன்பாக இயேசு அதிக நேரம் ஜெபத்தில் செலவிட்டார், லூக் 6:12

தன்னுடைய பனிரண்டு சீடர்களை தேர்வு செய்வதற்கு முன்பாக இயேசு முழு இரவையும் ஜெபத்தில் கழித்தார். முக்கியமான நிகழ்வுகளுக்கு முன் அவர் இவ்வாறே செய்தார். நம்மையும் அப்படி செய்ய நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

இயேசு மக்களுக்கு மத்தியுலும், தனித்தும் ஜெபித்தார் 8:18

பலபேருக்கு மத்தியிலும், தனித்தும் நம்மால் ஜெபிக்க முடியும். மக்களுக்கு மத்தியில் நாம் ஜெபிக்கும் போது, நம்முடைய ஜெபத்தால் மற்றவரும் ஜெபிக்க தூண்டப்பட வேண்டும். லூக் 11:1 நாம் வாசிப்பதுபோல, இயேசுவின் ஜெபவாழ்கையை பார்த்து சீடர்களும் ஜெபிக்க கற்றுதருமாரு கேட்டுக்கொண்டனர்.

இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் நாம் அவருடைய ஜெப வாழ்க்கையையும் பின்பற்றுவோம். நம்முடைய ஜெப வாழ்க்கையில் பரலோகத்தின் குரல் கேட்க வேண்டும், ஜெபத்தினால் சாத்தானின் தந்திரங்கள் மற்றும் பரிட்ச்சைகளை மேற்கொள்ளலாம், வழிகாட்டுதலை பெற்றுக்கொள்ள முடியும், முழுமையான மாற்றம் வரும், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எல்லா சூழ்நிலைகளையும் தைரியத்தோடு மேற்கொள்ள ஜெப வாழ்க்கை மிக முக்கியம்.

ஜெபம்

கர்த்தவே எங்களுடைய வாழ்கையின் எல்லா பகுதிகளிலும் உம்மை பின்பற்ற கிருபை தாரும். எங்களுடைய ஜெப வாழ்வை புதுப்பித்தருளும், உம்முடைய பிரசன்னத்தில் நேரத்தை செலவிடவும், இந்த வாழ்வை பயனுள்ளதாக மாற்றவும் ஜெபிக்க கற்றுதாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே,

ஆமேன்.

Sol.Shebe

தானியேல் – II

நாள் 01-06-2022 –  தேவ செய்தி

அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

லூக் 2:28-32

எருசலேமில் சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்.அவர் நீதியும், தேவபக்தியும் உள்ளவனாயும், பரிசுத்த ஆவி அவன் மேல் இருந்தார்.  கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. நம்முடைய வாழ்வு, குழந்தைகள், குடும்பம் மற்றும் சூழ்நிலைகளை குறித்து தேவன் நமக்கு சில வாக்குறுதிகளை கொடுத்திருக்கலாம்

சிமியோன் பொருமையாக காத்திருந்து அதை தன் கைகளால் தொட்டது போல நாமும் அந்த வாக்குறுதிகளை தொடுமாறு காத்திருக்கிறோமா?

அநேக வேளைகளில் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை நாம் கைவிட்டு விடுகிறோம், ஏனென்றால் இதுமுழுமையாக நீண்ட நேரம் எடுத்திருக்கலாம், அல்லது நம்மை சுற்றிஉள்ள சூழ்நிலை அதற்கு எதிராக இருக்கலாம், அல்லது மக்கள் என்ன சொல்கிறார்களோ அதை நம்பி இருக்கலாம்.

என்னுடைய சிறிய மகன் 12 வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது கர்த்தர் எனக்கு ஒரு வாக்குறுதயை கொடுத்தார் – தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தபின் மேற்படிப்பிற்காக என் மகன் வெளிநாட்டிற்கு செல்வான். அவன் 12 வகுப்பில் இருந்தபோது அவன் வெளிநாட்டிற்கு செல்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவன் பயோடெக் பொறியாளாரக படித்துக்கொண்டிருந்தபோது சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது, கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் என்னுடைய வேலையும் போனது, அது மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையாகும். ஆனாலும் கர்த்தருடைய வாக்குறுதியின் மீது விசுவாசம் வைக்க எனக்கு கர்த்தர் கிருபை கொடுத்திருந்தார். நம்பிக்கையில்லாத சூழ்நிலையிலும் சில காரியங்களை செய்ய ஆரம்பித்தேன். அங்குதான் கர்த்தர் தன்னுடைய வல்லமையை வெளிபடுத்துகிறார். பல்வேறு பிரச்சனைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கர்த்தருடைய கிருபையால் என் மகன் அவனுடைய மேற்படிப்பிற்காக கனடா சென்றான். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தேவன் உண்மையுள்ளவராக இருந்தார்.

குழந்தையை துணியில் சுற்றப்பட்டு அதன் தாயின் கையில் இருந்ததை கண்ட சிமியோனுக்கு இது ஒரு கனவாக இருந்திருக்கலாம். குழந்தையை தன் கைகளில் ஏந்தினான் கர்த்தரை ஸ்தோத்தரித்தான், கர்த்தர் வாக்களித்ததை என் கண்கள் கண்டது என்றான்.  அப்போஸ்தலர் நடபடிக்கை, 27 ஆம் அதிகாரத்தில் பவுலின் பயணம் நமக்கு ஞாபகம் இருக்கும், புயல் காற்று மற்றும் கப்பல் உடைந்தது, எல்லா நம்பிக்கையும் இழந்தபோதும் கூட தேவதூதன் பவுலுக்கு என்ன சொன்னான், நீ சாகமாட்டாய், இராயனுக்கு முன்பாக நீ நிற்க வேண்டும் என அவருக்கு நம்பிக்கை கொடுத்தான். அப்போ 27:24 -பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான். இவ்வாறு பவுலோடு பயணம் செய்த 276 பேரும் கப்பல் சேதத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

உங்களுடைய வாழ்விலும் ஒரு மோசமான சூழ்நிலை வந்தால், கர்த்தர் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்துங்கள். கப்பலே உடைந்தாலும் உங்களுடைய உயிருக்கு எந்த கேடும் நேராது.

உங்களுடைய வாழ்வில் கர்த்தர் வாக்குறுதியை கொடுத்திருந்தால், அதை பற்றிக்கொள்ளுங்கள், அதை பாருங்கள், அதற்கு எதிராக சூழ்நிலைகள் இருந்தாலும், நிச்சயமாக கர்த்தருடைய நேரத்தில் அது நிறைவேறும்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய கடைசி வார்த்தைவரை நீர் உண்மையாய் இருக்கின்றீர், நாங்கள் பொருமையாக காத்திருக்கவும், உம்மில் விசுவாசம் வைக்கவும் எங்களுக்கு உதவி செய்யும்.  சிமியோனைப் போல பரிசுத்த ஆவியானவர் எங்களுடைய வாக்குறுதியில் எங்களை வழிநடத்துவாராக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே,

ஆமேன்.

Sol.Lalitha Menon  

தானியேல் – II

நாள்: 02-06-2022 – தேவ செய்தி

உங்களுடைய நிலம் மற்றும் மக்களுக்காக ஜெபியுங்கள்

  1. நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
  1. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
  1. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

1திமோ 2:1-3.

சாட்சி

சென்னையில் உள்ள மணப்பாக்கம் என்ற இடத்தில் நான் வசித்து வருகிறேன். சமீபத்தில்தான் நாங்கள் இங்கு இடம் பெயர்ந்தோம்.  எங்களுடைய வீட்டிற்கு முன்பாக இருக்கும் காலி இடத்தில் 5 அடி உயரத்திற்கு குப்பை கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இப்படியே பல ஆண்டுகள் இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த குப்பை மேட்டின் மீது என் கைகளை உயர்த்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பித்தேன், இந்த குப்பை மேடு உடனே காலி செய்யப்படுவதாக, இந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும், யாரு இங்கு குப்பைகளை கொட்ட கூடாது என்று. ஒரு மாதத்திற்குள் மாநகராட்சியினர் வந்து குப்பைகளை அகற்றினர். தேவன் என்னுடய ஜெபத்தை கேட்டார் என்ற் மகிழ்ச்சி என் இருதயத்தை நிறப்பியது. அடுத்த இரண்டு மாதத்தில் கபடி விளையாடும் மைதானமாக அது மாற்றப்பட்டது. இந்த பகுதிகளில் இருக்கு இளைஞர்கள் தினமும் கபடி விளையாட இங்கு வருகின்றனர். என்னுடைய விண்ணப்பத்தை தேவன் கேட்டு இந்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தும் இடமாக மாற்றிய தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்

2நாளா 7:14.

நாம் பாரத்தோடு அவருடைய முகத்தை தேடினால் அவர் நம்முடைய நிலத்தை சுகமாக்குவார், மக்கள் மீது அவருடைய கிருபையை பொழிவார், மேலும் நாம் வாழும் இடத்தில் அமைதியை தேவன் கொண்டுவருவார்.

நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

1பேது 2:9.

கர்த்தர் நம்மை ராஜரீகமான ஆசாரியக்கூட்டம் என்று அழைக்கிறார்.  திறப்பில் நின்று மக்களுக்காக ஜெபிப்பதுதான் ஒரு ஆசாரியனின் வேலை. ராஜரீகமான ஆசாரியர்களாகிய நாமும் மக்கள்ளுக்காகவும், நாம் வழும் இடத்திற்காகவு, நாட்டிற்காகவும் ஜெபிப்பது நமது கடமையாகும்.

சமீப காலமாக எல்லா நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.  போர், நோய், மற்றும் துயரங்களைப் பற்றி கேள்விப்படுகிறோம்.

இதற்காக திறப்பில் நின்று ஜெபிப்பது  நமது கடமை அல்லவா?

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, அனைத்து மக்களும்  உம்முடைய கிருபை மற்றும் அமைதியால் நிறப்பப்படுவார்களாக. ஆட்சிசெய்பவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஞானத்தால் நிறப்பப்படுவார்களாக. கர்த்தருடைய இரக்கம் மற்றும் கருணை மக்களுடைய இருதயங்களில் ஊற்றப்படுவதாக, இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம்,

ஆமேன்.

Sol. Camilia Theodore, Chennai.