தானியேல் – II

நாள்: 03-06-2022 – தேவ செய்தி

அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

லூக் 5:16.

ஜெபம் நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து தோன்றுகிறது, நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டு செல்கிறது மேலும் நம்முடைய ஆத்துமாவில் ஆழமாய் வேலை செய்கிறது. இது உயிருள்ள தேவனை சந்திப்பதால நம்மை உள்ளிருந்து மாற்றுகிறது. நம்மை முழுவதுமாக கர்த்தருக்கு ஒப்புகொடுக்க கூடிய காரியம்தான் இது.

கர்த்தரோடு நமக்கிருக்க வேண்டிய இந்த தொடர்பைத்தான் வேதம் நமக்கு சொல்லிகொடுக்கிறது. மற்ற எந்த வேத புத்தகங்களைவிட, லூக்கா எழுதிய நற்செய்தி ஜெபத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி பேசுகிறது. இதற்கு மாதிரியாக இருப்பவர் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இயேசு ஜெபம் செய்ய நமக்கு சொல்லிகொடுப்பதோடல்லாமல், அவரே தனித்திருந்து ஜெபிக்கிறார். ஜெபத்தைப் பற்றி இயேசு  நமக்கு சொல்லி கொடுத்த சில விஷயங்களை நாம் இங்கு பார்ப்போம்.

இயேசுவுக்கு ஒழுக்கமான ஒரு ஜெப பழக்கம் இருந்தது – லூக் 22:39

மக்களிடமிருந்து பிரிந்து தனியே ஒர் இடத்தில் ஜெபிக்க செல்வதை இயேசு வழக்கமாக கொண்டிருந்தார். இங்கு இயேசு, அவரை பின்பற்ற நமக்கு சொல்லிகொடுக்கிறார், ஜெபிக்கும் பழக்கம் இருக்க வேண்டும் ஆனால் அதையும் தாண்டி ஒழுக்கமான ஜெப பழக்கம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இயேசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஜெபிக்கும் பழக்கம் உடையவர் – லூக் 5:16

இயேசு அவர் இருக்கும் இடத்திலேயே ஜெபிக்கவில்லை, மாறாக மற்றவர்களிடமிருந்து விலகி, மலைபாங்கான இடத்திலோ, வனந்தரத்திலோ ஜெபிக்க சென்றார். அவர் நமக்கு சொல்லிகொடுப்பது இதுதான், நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் விட்டுவிட்டு கர்த்தருடைய பிரசன்னதிற்குள் நாம் செல்ல வேண்டும்.

தன்னுடைய பிஸியான மற்றும் பிரசித்தமான வாழ்கை மத்தியிலும் கூட  இயேசு நேரம் ஒதுக்கி ஜெபித்தார், லூக் 5:16

நாம் எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும், பிரசித்தமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஊழியத்தை செய்துகொண்டிருந்தாலும் ஜெபத்தில் நேரத்தை செலவிடாவிட்டால் எதுவுமே நன்மை தராது.

வுகள் எடுப்பதற்கு முன்பாக இயேசு அதிக நேரம் ஜெபத்தில் செலவிட்டார், லூக் 6:12

தன்னுடைய பனிரண்டு சீடர்களை தேர்வு செய்வதற்கு முன்பாக இயேசு முழு இரவையும் ஜெபத்தில் கழித்தார். முக்கியமான நிகழ்வுகளுக்கு முன் அவர் இவ்வாறே செய்தார். நம்மையும் அப்படி செய்ய நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

இயேசு மக்களுக்கு மத்தியுலும், தனித்தும் ஜெபித்தார் 8:18

பலபேருக்கு மத்தியிலும், தனித்தும் நம்மால் ஜெபிக்க முடியும். மக்களுக்கு மத்தியில் நாம் ஜெபிக்கும் போது, நம்முடைய ஜெபத்தால் மற்றவரும் ஜெபிக்க தூண்டப்பட வேண்டும். லூக் 11:1 நாம் வாசிப்பதுபோல, இயேசுவின் ஜெபவாழ்கையை பார்த்து சீடர்களும் ஜெபிக்க கற்றுதருமாரு கேட்டுக்கொண்டனர்.

இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் நாம் அவருடைய ஜெப வாழ்க்கையையும் பின்பற்றுவோம். நம்முடைய ஜெப வாழ்க்கையில் பரலோகத்தின் குரல் கேட்க வேண்டும், ஜெபத்தினால் சாத்தானின் தந்திரங்கள் மற்றும் பரிட்ச்சைகளை மேற்கொள்ளலாம், வழிகாட்டுதலை பெற்றுக்கொள்ள முடியும், முழுமையான மாற்றம் வரும், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எல்லா சூழ்நிலைகளையும் தைரியத்தோடு மேற்கொள்ள ஜெப வாழ்க்கை மிக முக்கியம்.

ஜெபம்

கர்த்தவே எங்களுடைய வாழ்கையின் எல்லா பகுதிகளிலும் உம்மை பின்பற்ற கிருபை தாரும். எங்களுடைய ஜெப வாழ்வை புதுப்பித்தருளும், உம்முடைய பிரசன்னத்தில் நேரத்தை செலவிடவும், இந்த வாழ்வை பயனுள்ளதாக மாற்றவும் ஜெபிக்க கற்றுதாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே,

ஆமேன்.

Sol.Shebe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *