நாள் 04-06-2022 – தேவ செய்தி
பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
1யோவா 4:4.

சிலுவையில் இயேசு பெற்ற வெற்றி யோவானை இவ்வாறு அறிக்கையிட வைத்தது, விசுவசிப்பவர்களே நீங்கள் கர்த்தரிடமிருந்து வருகிறீர்கள், எதிரிகளின் பலம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை உங்களில் இருப்பவர் எல்லாம் வல்லவர், வல்லமையிலும், மகிமையிலும், மாட்சி, அதிகாரத்திலும் வல்லவர். தம்முடைய மக்களுடைய இருதயத்தில் அவர் வாசமாய் இருக்கிறார். எனவே அசுத்த ஆவியின் வல்லமையை நம்மால் மேற்கொள்ள முடியும். ஏனென்றால் உலகில் இருக்கும் அவனைவிட நம்முள் இருப்பவர் பெரியவர்.
என்னுடைய வாழ்க்கையில் நம்பிக்கையற்றவளாக நான் இருந்தபோது தேவன் எனக்கு இந்த வசனத்தை எனக்கு காட்டினார். அவருடைய செட்டைகளின் கீழ் என்னை எடுத்து பாதுகாத்தார். நான் கடினமாக உழைக்க என்னை உற்சாகப்படுத்தினார். அவர் என் இருதயத்தின் எண்ணங்களை நிறைவேற்றுவார் என்று நான் அவரில் நம்பிக்கை வைத்தேன். சங் 37:4-5- அவருடைய நேரத்தைல் அவர் செய்வார் என்றும் விசுவசித்து காத்திருந்தேன். ஆனால் என் பிதாவாகிய தேவன் மிகவும் சரியான நேரத்தில் சரியான, பிடித்த நல்லதொரு வேலையை எனக்கு கொடுத்தார். அதற்காக கர்த்தருக்கு நான் கோடானகோடி நன்றி சொல்லுகிறேன். நான் ஒரு குதிரையைப் போல தயாராக இருந்தேன் ஆனால் சரியான வேளையில் என் தேவன் எனக்கு வெற்றி தந்தார்.
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
நீதி 21:31.
தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.
சங் 62:1.

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
சங் 46:10.
கர்த்தரே என் அடைகலம் என்று விசுவசித்தால் நாம் அமைதியாக இருக்க முடியும். நாம்மிடம் இருக்கும் தைரியமும் விசுவாசமும் கர்த்தரிடமிருந்து வர வேண்டும், பணம், பதவி, வல்லமை, புகழ்ச்சி, திறமைகளிடமிருந்து அல்ல. நாமிருக்கும் படகில் இயேசு இருந்தால் எந்த புயலும் நம்மை ஒன்றும் சேதப்படுத்தாது. எல்லா சூழ்நிலையிலும் கர்த்தர் மீது விசுவாசம் வைப்பது நமக்கு அமைதியை தரும். பயம், நம்பிக்கையின்மை, பெருமை, குற்றமனப்பான்மை மற்றும் கவலை போன்ற சிறையிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். கர்த்தருடைய ஞானத்தில் நாம் வளரும்போது நம்முடைய நம்பிக்கை வளரும், நம்முடைய சந்தோஷம், அமைதி, விசுவாசம் வளரும். அவருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி அவரை உயர்த்துவோம்.
ஜெபம்
அன்பு தேவனே, உம்முடைய கிருபை, அன்பு மற்றும் வல்லமையில் என்னை என்றும் வழிநடத்துமாறு இயேசுவின் நாமத்தினால் கேட்கிறேன். உம்மை விசுவசிக்கும்,மற்றும் அன்பு செய்யும் உம்முடைய பிள்ளைகளை உம்முடைய செட்டைகளின் கீழே பாதுகாப்பீராக.
ஆமேன்.
Sol. Aparajita
